ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
ஹபரனை தாக்குதல் குறித்து சிறிலங்கா கடற்படையினரும் காவல்துறையினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர். திருகோணமலை கடற்படை தளத்துக்குச் செல்வதற்காக காத்திருந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடிபொருட்கள் நிரப்பிய வாகனம் மோதியதில் இத்தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. சோதனைச் சாவடிகளில் அந்த வாகனத்தை உரிய முறையில் காவல்துறையினர் சோதனை நடத்தாமையினால்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று கடற்படையினர் குற்றம்சாட்ட்யுள்ளனர். "திகம்பத்தன பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. சில கிலோமீற்றர்களுக்கு அப்பால் தம்புள்ள நோக்கிய மிரிஸ்கொனியவ மற…
-
- 0 replies
- 965 views
-
-
சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த விடுதலைப் புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் ? ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 14:24 விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்குவதற்காக சுவிட்சர்லாந்தில் இயங்கி வந்த புலிகளின் 23 நிதி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் 19 மாதங்களாக சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது. இந்த நிதி நிறுவனங்களில் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் 10 பேர் சட்டமா அதிபர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில், சுவிஸ் பொட்போல் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனதாகவும் ஏற்கனவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறித்த நிதி நிறுவனங்களில் பைனோன்ஸ், எனலோட் பைனேன்ஸ் ஆகிய நிறுவனங…
-
- 0 replies
- 1.6k views
-
-
கத்தி திரைப்பட பாடல் வெளியீடு மற்றும் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி மாணவர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் இன்று 12 மணியளவில் மனு கொடுக்கப்பட்டது. ஆணையாளரிடம் கொடுக்கப்பட்ட மனு: கத்தி திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வையும் திரைப்பட வெளியீட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும். கத்தி இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணியளவில் லீலா பேலஸ் விடுதியில் நாளை நடை பெற உள்ளது. அதனை தடுத்து நிறுத்த மாணவர் அமைப்புகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தயாராகி உள்ளது. தி.வேல்முருகன் …
-
- 0 replies
- 908 views
-
-
காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா? காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா? காணாமல் போனவர்களில் பலர் தடுப்பு முகாம்களில் சுயந।ினைவில்லாத நிலையில் காணப்பட்டனர் என்று பூசா தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவகாரம் தமிழர்கள் மத்தியில் பூதாகாரம் எடுத்துக் காணப்பட…
-
- 0 replies
- 266 views
-
-
வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது! யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர், வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் வாள்கள் மற்றும் , கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிசாரிடம் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் கையளித்துள்ளனர். https://athavannews.com/2022/1315200
-
- 0 replies
- 322 views
-
-
பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ... பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது. கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேத விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/32819
-
- 0 replies
- 710 views
-
-
ஈ.பீ.டீ.பீ மற்றும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து தாக்கல் செய்த அனைத்து யாழ்மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத் தரப்பினர் தமது கடசியினுடைய பெயரை தவறாக எழுதியதன் காரணமாக இவ்வாறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது....
-
- 1 reply
- 910 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். முந்தைய நிலைப்பாடே எனது தற்போதைய நிலைப்பாடாகும். நான் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஏற்கனவே கூறி விட்டேன். எனினும் மீண்டும், மீண்டும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏன் திரும்ப திரும்ப கேட்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை எனவும் ஜனாதிபதித் தேர்தல் …
-
- 3 replies
- 434 views
-
-
நாட்டில் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகளுக்கு தட்டுப்பாடு! மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொரு வகை மருந்துப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக 150 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் ஆய்வக பொருட்கள் தற்போது கையிர…
-
- 2 replies
- 256 views
-
-
மாமனிதர் ரவிராஜின் வெற்றிடத்திற்கு சட்டத்தரணி சிறீகாந்தா நியமனம் பெறலாம். நடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மறைவை அடுத்து, தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அடுத்த கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி சிறீகாந்தாவை ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்காக நியமிக்கப்படலாமென சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ,இருந்தும் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவொரு தீர்மானத்தினையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -பதிவு
-
- 0 replies
- 1.1k views
-
-
Monday, January 31st, 2011 | Posted by admin பருத்தித்துறையில் பாரிய திமிங்கிலம் பருத்தித்துறை முனைக் கடற்பரப்பில் காலை 5.30 மணியளவில் உயிரிழந்த நிலையில் பாரிய திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த திமிங்கிலத்தினது நீளம் 33 அடி, சுற்றுவட்டம் 16 அடி ஆகும். கரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் காணப்படும் திமிங்கிலத்தினை கரையில் முருங்கைக்கற் பாறைகள் காணப்படுவதால் கரைக்கு இழுத்து வருவதில் சிரமம் உள்ளதாகவும், திமிங்கிலத்தினை கரைக்கு கொண்டு வருவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எமது மாவட்ட செய்தி நிரூபர் தெரிவித்துள்ளார். Short URL: http://thaynilam.com/tamil/?p=2420
-
- 0 replies
- 903 views
-
-
கிளிநொச்சி அமர்வில் சர்வதேச ஆலோசனைக்குழு பங்கேற்காதது ஏன்? – கிளம்புகிறது சந்தேகம். [Thursday 2014-10-02 08:00] காணாமற்போனோர் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணை அமர்வுகளில் கலந்து கொள்ளாததால், அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நிபுணர்கள் குழு, கடந்த செப்டெம்பர் மாதம் 27, 28, 29, 30ஆம் திகதிகளில், கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையின் பங்குபற்றவில்லை. இந்த மூன்று வெளிநாட்டு அவதானிகளும் மன்னாரில் நட…
-
- 0 replies
- 339 views
-
-
குச்சவெளி கடற்கரையில் 500 ஏக்கர் நிலரப்பரப்பு 20 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு:- 05 பெப்ரவரி 2011 திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச கடற்கரை பகுதிகளில் 500 ஏக்கர் நிலரப்பரப்பு 20 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 25 ஏக்கர் நிலப்பரப்பை கொள்வனவு செய்ய முடியும் எனவும் ஒரு ஏக்கர் நிலம் 20 மில்லியன் ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 99 வருட குத்தகை அடிப்படையில் இந்த காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் ஒரே தடவையில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர், சுற்றுலா தொழிற்துறையை…
-
- 0 replies
- 728 views
-
-
தீர்வுக்குத் தயார் எனக் கூறிக்கொண்டு தமிழர்களை தீர்த்துக்கட்டுகிறது அரசு! - எஸ்.துரைரட்ணசிங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தயாராகவிருப்பதாக சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டு சிங்கள அரசு இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருமலை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.துரைரட்ணசிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: பல்குழல் பீரங்கிகள், ஷெல்கள், மோட்டார்கள், விமானத்தாக்குதல்கள் மூலம் தமிழ்மக்களும் அவர்களது இருப்பிடங்களும் வகை தொகையின்றி அழிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் இன்று நடப்பது என்ன? ஆட்கடத்தல், காணாமற்போதல், …
-
- 0 replies
- 595 views
-
-
மகிந்தவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை: அதிர்ச்சித் தகவல்! [ பிரசுரித்த திகதி : 2011-02-11 06:00:01 PM GMT ] இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க் குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்கா வாழ் ஈழத் தமிழர்கள் மூவர் தொடுத்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டதுடன், இந்த வழக்கை விசாரித்த நீதிபதியினால் மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இயங்கிவரும் பிரபல வழக்கறிஞர் புரூஸ் ஃபெயின் என்பவரின் மூலம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவினால் சித்திரவத…
-
- 0 replies
- 1.9k views
-
-
அடுத்த பிரதமர் மைத்திரிபால? திங்கட்கிழமை, 13 ஒக்டோபர் 2014 10:01 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என, அரசியர் நிபுணர்கள், அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் பதவியை, மிகவும் பொறுப்பு வாய்ந்த மற்றும் செயற்திறன் மிக்கதொரு அமைச்சர் பொறுப்பேற்பதானது, தேர்தல் காலத்துக்கு மிகவும் அவசியமானது எனவும் அந்நிபுணர்கள் சுட்;டிக்காட்டியுள்ளனர். இதன்பிரகாரம், நாட்;டின் அடுத்த பிரதமராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படலாம் என்றும் அவரின் பெயர் அப்பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பிரதமர் தி.மு.ஜயரத்னவின் பிரதமர் பதவியை…
-
- 0 replies
- 349 views
-
-
நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு.. ராஜபக்ஷேவின் நாடகமா?! 'நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் காரைக்காலில் இருந்து, 18 படகுகளில் 112 மீனவர்கள் கடந்த 12-ம் தேதி கடலுக்குச் சென்றனர். 'எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள்!’ என்று 15-ம் தேதி மதியம், யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் பிடிக்கப்பட்டு, 16-ம் தேதி மாலை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்!’ என்று செய்தி வெளியானது. அடுத்து, 'நாகை மீனவர்களை, ஈழத்து மீனவர்கள்தான் சுற்றிவளைத்துப் பிடித்து, உள்ளூர் போலீஸிடம் ஒப்படைத்தார்கள்..!’ என்று இலங்கைத் தரப்பில் செய்தி வந்தது. எப்போதும் இல்லாதவகையில், 'நாகை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கைத் …
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புடனான இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் துரித முயற்சியினை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது. வெகு விரைவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது. அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஏனைய எதிரணிகளை சந்திக்கும் முயற்சிகளையும் பொது எதிரணிக்கான ஆட்களை ஒன்று திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது தமிழ் மக்களின் ஆதரவினை பெறும் நோக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான சந்திப்புக்களுக்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் …
-
- 1 reply
- 482 views
-
-
நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற – மூன்று மீனவர்களைக் காணவில்லை- உறவினர்கள் அந்தரிப்பு!! நாவாந்துறைப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு படகில் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவந்துறை வடக்கைச் சேர்ந்த ஜோன் மல்கன் விமல் (வயது––44), செபமாலை அலெக்ஸ் (வயது-–35), மகேந்திரன் ரூபன் (வயது-30) ஆகியோரே காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் மாலை நாவந்துறை கடலிருந்து படகில் மூவரும் புறப்பட்டுள்ளனர். நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு…
-
- 0 replies
- 272 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணத்தை சேகரிக்கும் வகையில் கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (ஜன 17) கொழும்பு கோட்டையில் உண்டியல் குலுக்கி பண சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன்போது திரட்டப்பட்ட 1,810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்க தேவையான ஏற்பாடுகளை குறித்த கலைஞர் முன்னெடுத்துள்ளார். நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்துமளவுக்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் …
-
- 2 replies
- 771 views
-
-
புலிகளுக்கு உதவிய 7 பேரது வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உளவுத் தகவல்கள் வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 7 பேரினது வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலிகளுக்கு இராணுவ புலனாய்வுத் தகவல்களை வழங்கிய சந்தேகத்தின் பேரில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 6 இராணுவ உத்தியோகத்தர்களையும் சட்ட விரோத வைத்தியர் ஒருவரையும் கைது செய்து பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றிடம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே, நீதிமன்றம் சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்குமாறு சம்பந்தப்பட்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது By VISHNU 26 JAN, 2023 | 04:05 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) படகொன்றின் மூலமாக 49 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் முவரும் கடந்த 25 ஆம் திகதி அதிகாலைவேளையில் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் படகொன்றின் மூலமாக பயணித்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களிடம் மேற்கொண்ட சோதனையிட்டுள்ளனர். இந்த சோதனையையடுத்து, அவர்கள் 49 கிலோ கிராமும் 906 கிராமு…
-
- 5 replies
- 577 views
- 1 follower
-
-
சிறிலங்கா முப்படையினரின் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து அறிக்கை:- மனிதஉரிமைகளுக்கான ஆசிய நிலையம். இலங்கையில் பொலிஸ், இராணுவம், கடற்படை என்பன இணைந்து தமிழ் மக்களுக்கெதிராக பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளதுடன் பாதுகாப்புப் படையினர், கண்மூடித்தனமான தாக்குதல்களையும் படுகொலைகளையும், தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும் 2005 ஆம் ஆண்டு அதிகளவில் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஆசிய நிலையம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 13 ஆம் திகதி புதுடெல்லியில் வைத்து இந்த நிலையம் வெளியிட்ட 2005 ஆம் ஆண்டுக்கான சார்க் நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான தரப்படுத்தல் முறையிலான ஆய்வறிக்கையிலேயே இவ்வமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 806 views
-
-
வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் நுழையும் ரஷ்யா [saturday, 2011-03-05 12:23:16] 'ஜன செவன' திட்டத்தின் கீழ் குறைந்த செலவிலமைந்த வீட்டுத் திட்டமொன்றை ரஷ்யாவின் நிதியுதவியுடன் இலங்கையில் கட்டுமானப் பொறியியல் சேவைகள், வீட்டுத்திட்ட மற்றும் பொது வசதிகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. ரஷ்யாவின் முன்னணிக் கட்டுமான நிறுவனமான எம்.எஸ்.கே பொறியியல் நிறுவனத்தினது பிரதிநிதிகள் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்து குறிப்பிட்ட இந்தத் திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடியிருக்கிறார்கள். 'ஜன செவன' என்ற இந்தத் திட்டத்தின் கீழ் 2512 வீடுகள் வர்த்தகத் தேவைகளுக்காகவும் 1,000 வீடுகள் குறைந்த வருமானத்தினைக் கொண்ட குடும்பங்களுக்காகவும் நிர்மாணிக்கப்படுமென…
-
- 0 replies
- 698 views
-
-
இறுதி நேரத்தில் தமது கட்டளை மையத்தை தாக்கியழித்த விடுதலைப் புலிகள்! [ பிரசுரித்த திகதி : 2011-03-13 06:24:21 AM GMT ] கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற சமரில் விடுதலைப்புலிகள் தமது கட்டளை மையமாக பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத இரும்புத்தகடுகள் பொருத்தப்பட்ட மிகப்பெரும் பாரஊர்தியை இறுதி நேரம் அவர்கள் தகர்த்துவிட்டு சென்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னிச் சமரில் விடுதலைப்புலிகள் நடமாடும் கட்டளை மையத்தையே தமது பிரதான கட்டளை தளமாகக் கொண்டிருந்தனர். எனவே தான் சிறீலங்கா வான்படையினராலும், ஆழ ஊடுருவும் படையினராலும் அவர்களின் பிரதம கட்டளை மையத்தை தகர்த்து போரை விரைவாக முடிக்க முடி…
-
- 0 replies
- 1.7k views
-