Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வலுவான கடவுச்சீட்டு தரவரிசை – எதியோப்பியா, வடகொரியாவுடன் இணைந்த சிறிலங்கா எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி. ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (Henley Passport Index) தொடர்பான 2018ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நுழைவிசைவு இன்றி பயணம் செய்யக் கூடிய நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், இதனைச் சார்ந்த பிற தரவுகளின் அடிப்படையிலும், நாடுகளின் கடவுச்சீட்டுகளை ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி தரவரிசைப்படு…

  2. யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல் Report us Suthanthiran 32 minutes ago யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மீது இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவருகின்றது என மாணவர் ஒன்றியம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள், “யாழ். பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புற…

    • 11 replies
    • 1.9k views
  3. அரசியல்வாதிகளுக்கே புனர்வாழ்வு கொடுக்க வேண்டும்! சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த அருட்தந்தை Report us Suthanthiran 9 hours ago புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கே உண்மையில் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

    • 6 replies
    • 973 views
  4. எந்த நாட்டுடன் யுத்தம் செய்ய இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது ;அனந்தி சசிதரன் வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை பாதுகாப்பிற்கு ஏன் ஒதுக்கியுள்ளது? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. மன்னார் பிரதேச சமூக சேவை உத்தியோகஸ்தர் த…

  5. பொலிஸ் மா அதிபர் இராஜினாமாவுக்கு முஸ்தீபு ? பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த அடுத்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு இடம்பாடுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக் காலமாக பாரிய விமர்ஷனங்கள் எழுந்துள்ளமை காரணமாக அவர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. பொலிஸ் மா அதிபருக்கு இதற்கு முன்னர் ஜனாதிபதியும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல் வழங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. தற்போதை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்யுமிடத்து, அந்த பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம். விக்ரமசிங்க அல்லது சந்தன விக்ரமசிங்க ஆகியோர…

    • 0 replies
    • 255 views
  6. ஸ்ரீ ல.சு.கட்சியை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கட்சிக்குள் அழுத்தம் கூட்டரசாங்கத்திலிருந்து விலகுமாறு ஸ்ரீ ல.சு. கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு முன்வைத்துள்ள பிரேரணையை உடன் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதன் பிறகும் இணைந்திருப்பதனால், கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் …

    • 0 replies
    • 434 views
  7. அரசியல் கைதிகளின் விடுதலை – கூட்டமைப்பினதும், வெளி அழுத்தமும் போதாது… October 12, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுக்கும் அழுத்தம் காணாது. அதேபோன்று வெளியில் நடக்கும் போராட்டங்கள் ஊடான அழுத்தங்களும் காணாது என புளெட் அமைப்பின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் தலைமையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கூட்டம் இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , “இந்த அரசாங்கம் எதுவும் விரைந்து செய்யாது என…

  8. இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை: மனோ கணேசன். இந்நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உரிமை இல்லையெனவும், அதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என்றும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அரசமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”டிலான்பெரேரா, எஸ்.பி.திசாநாயக்க போன்றவர்களுக்கு இந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கும், இடைக்கால அரசாங்கம் பற்றி கதைப்பதற்கும் எந்த மக்கள் ஆணையும் வழங்கப்படவில்லை. மக்களினால் நிராக்கரிப்பட்டவர்களே இன்று இவ்வாறு இடைக்கால அரசாங்கம் தொடர்பாக பேசிவரு…

  9. அரியாலையில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி October 12, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சாட்சியமளித்தார். அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமது மகன் இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதா…

  10. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தாம் தலையிட விரும்புவதாகவும், மக்களை காப்பாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். எனினும் மற்றைய தரப்பிலிருந்து இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால் அரசியல் கட்சி என்ற தாம் தீர்மானிக்க தயார் எனவும் அவர் குறிப்…

  11. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்திய பயணத்தின் போது விஜயத்தின் புதுடில்லியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இந்தியாவின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள அதேவேளை, இலங்கையிலும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது அரசியல் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.com/

  12. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. விடுதலை புலிகள் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் ஆணையிட்டவர் அமைச்சராக வெளியில் உள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை செய்விப்பது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் வெளியாகின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை என்கிறார் . ஆனால் அரசியல் ரீதியான தனி சட்டம் ஒன்றின் ஊடாக குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் சிறையில் உள்ளனர். அதனை எடு…

  13. October 12, 2018 Add Comment Share This! யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனுக்கு மரியாதை செலுத்தி தங்களுடைய அஞ்சலிகளைச் செலுத்தியிருப்பதாக தெரிவித்த தமிழக குழுவினர், . இந்த மண்ணுக்கு கலாச்சார ரீதியான பயணமாக தாம் வந்திருந்தாலும் திலீபனுடைய நினைவிடத்திற்கு வந்டைதிருப்பதும், உணர்வை வெளிப்படுத்துவதும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்களுடைய நீண்ட கால உறவையும் வெளிப்படுத்துவதாகவும், அமைதாகவும் அவர்கள் குறிப…

  14. இலங்கையில் வாழாத இலங்கையர் (என்.ஆர்.எஸ்.எல்) என்ற அமைப்பின் பிரதிநிதிகளை வடக்கு மாகாண ஆளுநர் லண்டனில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். லண்டனில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுவரும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்றுமுன்தினமிரவு குறித்த அமைப்பினரை லண்டனில் அமைந்துள்ள இம்பேறியல் சைனா விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சந்திப்பில் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டரசு மலர்ந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய அவர்கள் ஆளுநர் தமிழ் மொழியில் பேசுவது மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்சினைகள் மீது கொண்டுள்ள அக்கறையையும் …

    • 1 reply
    • 742 views
  15. யாழில் அதி நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகள் அமைக்கப்படவுள்ளன… October 11, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்க உள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். அது குறித்து மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடா நாட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை(விற்பனை நிலையம்) அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். தற்போது கொடிகாமம் இராமாவில் பகுதியில் அதிநவீன வசதி வாய்ந்த கள்ளு தவறணை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து கைதடி , நுணாவில் பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய இடங்களிலும் அமைக்க ந…

    • 9 replies
    • 1.3k views
  16. குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை அபகரிக்க எடுத்த முயற்சிக்கு தீர்வு குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி ஆலய நிர்வாக சபையினர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தமது ஆவணங்களை சமர்பித்தன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆலயத்திற்கு சொந்தமான காணி மற்றும் அங்கு தொல் பொருள் திணைக்களத்துடன் தொடர்வுடையதாக கூறப்பட்ட கற்துாண் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்ட தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் குச்சவெளி பொலிஸார் ஆகியோர் தமக்கு குச்சவெளியில் உள்ள இன்னுமொரு தொல் பொருள் சின்னங்களுடன் தொடர்புடைய காணி தொடர்பாகவே முறைப்பாடு வந்துள்ளது.…

    • 1 reply
    • 368 views
  17. காரைநகரில் சிவன் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பிரதேச சபை – ஐந்து நட்சத்திர விடுதிக்கு அனுமதி : October 1, 2018 காரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு அண்மையில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளது. காரை. புனித மண்ணில் சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் காவல்துறையினரினர் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவுக் கூட்டங்களுக்குள் சிறப்புவாய்ந்த காரைநகர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகின்றது. பிரசித்தி பெற்ற ஈழத்துச் சிதம்பரம் என்ற சிவன் ஆலயத்துடன் ஏராளமான ஆலயங்க…

    • 21 replies
    • 2.1k views
  18. துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை : மேல் நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு மனு, இன்று (11), பிற்பகல் 2.30 மணியளவில் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு, பி…

    • 0 replies
    • 238 views
  19. போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி போராட்டம் September 28, 2018 கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றிய போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதிகோரி, இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கவேண்டுமெனவும், போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://globaltamilnews.net/2018/97512/

  20. போலி நாண­யத் தாள்­களை அச்சிட்ட நிலையம் முற்றுகை- யாழ்ப்பாணத்தில் இருவர் கைது!! பதிவேற்றிய காலம்: Oct 12, 2018 போலி நாண­யத் தாள்­க­ளு­டன் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் இருந்து ஒரு லட்­சத்து6 ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் நேற்று பொன்­னா­லைச் சந்­தி­யில் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த இரு­வர் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­கள் காரை­ந­க­ரில் இருந்து வந்­த­போதே இடை­ம­றிக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளி­டம் மேற்­கொண்ட சோத­னை­யில் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த ஒரு­வ­ரி­டம் இருந்த…

  21. மைத்திரி நினைத்தால் மட்டுமே மகிந்த பிரதமராக முடியும்… October 12, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸவை பிரதாராக்க கூடிய ஒரே ஒரு வழிமுறை அது மட்டும் தான் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/99144/

  22. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளே… October 12, 2018 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருப்பதாகவும், ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் இன்றுவரை நடக்கவில்லை எனவும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய விடுதலை குறித்தும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் நேற்று (11.10.18) முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறிய முதலமைச்சர் “தமிழ் அரசியல் க…

  23. வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது… October 11, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… தீபாவளி வியாபாரத்திற்கு வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு சாவகச்சேரி நகர் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது என சாவகச்சேரி வணிகர் மன்றம் விடுத்த கோரிக்கையை நகர சபை ஏற்றுக்கொண்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வியாபாரங்களை முன்னெடுப்பதனால் நிரந்தரமாக சாவகச்சேரி நகர் பகுதியில் வியாபாரம் மேற்கொள்ளும் உள்ளூர் வியாபாரிகள் நஷ்டங்களை எதிர்நோக்குவதனால் , வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என நகர சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த விடயம் சா…

  24. இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி! எல்லை நிர்ணய அறிக்கை மீதான மீளாய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இரண்டு மாதங்களில் மாகாண சபை தேர்தல் இடம்பெறும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சுயாதின தேர்தல் ஆணைக்குழுவிற்கும், கட்சி தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அனைத்து கட்சிகளும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தவே எதிர்பார்க்கின்…

  25. மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகளை தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பார்வையிட்டது… October 11, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று (11.10.18) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னாருக்கு சென்று மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இடம் பெற்று வருகின்ற மனித எலும்புக்கூடு அகழ்வு பணியை பார்வையிட்டனர். சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு ‘மக்கள் கண்காணிப்பகம்’ பொது அமைப்பின் பிரதி நிதிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.