Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருக்கோவில் கல்முனைப் பகுதிகளில் 100 க்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒட்டுக்குழுவால் கடத்தல்.அம்பாறையில் திருக்கோவில் மற்றும் கல்முனைப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துணை இராணுவக் குழுவினரால் வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இந்த ஆட்கடத்தல் நடைபெற்று வருவதால் கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை வான்களில் ஆயுதங்கள் சகிதம் வருவோர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களையே துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இரவு பகலென நேர காலமின்றி கடந்த மூன்று நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பகுதிகளில் வெள்ளை வான்களில் வந்த துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டுள்…

  2. திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு! June 12, 2021 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இராஜாங்க அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி யோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும், 100 நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருவில, பதவிசிறிபுர …

  3. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கடைசி உறுதிமொழியும் புஸ்வாணமாகிவிட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 100 நாட்கள் வேலைத்திட்டம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமானது. அதன் 100 ஆவது நாள் நாளை வியாழக்கிழமையுடன் (23ஆம் திகதி) நிறைவடைகின்றது. இந்த நூறு நாட்களுக்குள் செய்து முடிப்பதாக புதிய அரசாங்கத்தினால் 24 உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. அந்த உறுதி மொழிகளில் பல நிறைவேற்றப்படாமைலேயே கிடப்பில் உள்ளன. இந்நிலையில், புதிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலமாகும். அந்த சட்டமூல…

  4. 100 நாட்களில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் by : Dhackshala ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 100 நாட்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாட்களில் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளின் சாரம்சம் பின்வருமாறு. ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல். உயர் தரம் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை உறுதி செய்தல் உயர்கல்வி வாய்ப்பினை பெறாத இளைஞர் யுவதிகளை தொழிற் பயிற்சியும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழி…

  5. 100 நாட்களை எட்டியும் தீர்வின்றித் தொடரும் போராட்டங்கள் - சண்முகம் தவசீலன் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 117ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது. 138 குடும்பங்கள், தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு, சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய மக்கள், இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. எனினும்…

    • 1 reply
    • 237 views
  6. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (06) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டம்' என தலைப்பிட்டு, வெள்ளைவான் கலாசாரம், கழிவு எண்ணெய் கலாசாரம், கசாப்புக்கடை அரசியல் கலாசாரம், இலஞ்ச ஊழல் கலாசாரம் ஆகியவற்றை நீக்கி, தமிழ் மக்களுக்கு அச்சமின்றி அடக்குமுறையின்றி, அடவாடித்தனமின்றி, கௌரவமாக, சுதந்திரமாக வாழ வழியமைத்த நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ளது. சுவரொட்டியின் கீழ் வடபகுதி தமிழ் மக்கள் எனக்குறிப்பிட…

    • 1 reply
    • 989 views
  7. நடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது. அதனை ஜனாதிபதி வேட்பாளர்களின் பரப்புரை மேடைகளிலும் பார்க்கக்கூடியதாக இருந்தது. இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான பௌத்த கடும்போக்குவாதத்தைப் பேசியதில் மஹிந்த ராஜபக்சவுக்கு குறைவானவராக மைத்திரிபால சிறிசேன தோன்றவில்லை. தமிழர்களுக்கு எதிராக பெரும்போரை நடத்தி இனப்படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சவை நாமும் தண்டிக்க மாட்டோம், சர்வதேச தண்டனைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம், தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கமாட்டோம் என்று சொல்லியே மைத்திரி ஆட்சியைப் பிடித்தார். அவரின் 100 நாள் ஆட்சி தமிழர்களுக்கு எதுவும் தந்துவிடவில்லை. கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி வடக…

  8. 100 நாள் திட்டத்தின் ஊடாக யாழில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு விரைவில் காசோலை ; ரவீந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக யாழ். மாவட்டத்தில் 3 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 941 பயனாளிகள் மட்டுமே விண்ணப்பங்களை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என மாவட்ட முகாமையாளர் ரவீந்திரன் உதயன் இணையத்தள செய்திச் சேவைக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ். மாவட்டத்திற்கு 3ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. …

  9. 100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது. இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News

    • 0 replies
    • 307 views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமுள்ள முல்லைத்தீவை ஆக்கிரமிக்க 100 படையனிகள்- 50 ஆயிரம் படையினர்- 6 ரெஜிமெண்டுகளுடன் செல்லப் போகிறோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் சரத் பொன்சேகா கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 494 views
  11. 2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரின் போது அனைத்துலகச் சட்டங்களை மீறிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைப் பாதுகாப்பதற்காக, மேஜர் தரத்துக்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 100 வரையான சிறிலங்காப் படையினரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கவுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான குற்றச்செயல்களுக்கு இவர்களைப் பொறுப்புக் கூற வைப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரும் அவரது சகோதரரும் தமது ஆட்சியை அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர். மென்போக்கான அறிக்கை ஒன்றை நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பிக்குமாயின், சிறிலங்கா அதிபர், பாதுகாப்புச் செயலர் உள்ளிட்…

  12. 100 பில்லியன் ரூபாயை இழந்தது கொழும்பு பங்குச்சந்தை [புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 03:41 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையான பதிப்புக்களைச் சந்தித்து வருகையில் கொழும்பு பங்குச்சந்தை இந்த வருடத்தில் 100 பில்லியன் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வருடத்தில் சந்தை முதலீடுகள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளது. இந்த வருடத்தின் சந்தை முதலீடுகளின் இழப்பு 100 பில்லியன் ரூபாய்களாகும். கொழும்பு பங்குச்சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை 14 பில்லியன் இழப்புக்களை சந்தித்ததை தொடர்ந்து இந்த வருடத்தின் அதன் மொத்த இழப்பு 104.8 பில்லியன் ரூபாய்களை தொட்டுள்ளது. இது கடந்த இரு வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரும் இழப்…

  13. 100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில். கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நடாத்தும் இலங்கை கிளையின் உலகசாதனை புத்தக வெளியீட்டு நிகழ்வு இம்மாதம் 25.08.2024 ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற இருக்கின்றது. இதன்போது இலங்கை இந்தியா உட்பட நாடுகள் பூராகவும் உள்ள நூற்றுக்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளிவர இருக்கின்றன. இதில் உலக சாதனைக்காக புதிய வெளியீடாக 100 புத்தகங்கள் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்படுவதுடன் பங்குபற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட…

  14. 100 மாணவர்களுக்கு வலைவீச்சு சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார்கள் மற்றும் அங்கிருந்த சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர். இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மாணவர்களில் சிலர், தங்களது சொந்த இடங்களைவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்காக, பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் உயரதிகாரி ஒருவர்…

  15. 100 மில்லி மீற்றருக்கும்... அதிகமான, பலத்த மழை – மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு! நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், நீர் மின் உற்பத்திக்கு நல்லதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL…

  16. 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி! சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகக் கடனை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த மேலதிக நிதியிடல் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொவிட் – 19 மூலோபாய தயார்படுத்தல்கள் மற்றும் பதிலளிப்புகள் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் கொவிட் 19 அவசர பதிலளிப்புக்கள் மற்றும் சுகாதாரத்துறையை தயார்படுத்தல் கருத்திட்டத்திற்காக இந்தக் கடனைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மேலதிக தொகை, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வத…

  17. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காகத் தமிழகத்தில் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் டி.பி.திவாரட்ண கூறினார். வன்னியிலுள்ள மக்களுக்கு எந்த வகையிலான பொருள்கள் தேவையொன இந்தியா தம்மிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட திவாரட்ண, வீட்டுக் கூரைவிரிப்புக்கள், சமைப்பதற்கான கருவிகள், உடுதுணிகள், தற்காலிக கூடாரங்கள் போன்ற பொருள்கள…

  18. 100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு December 18, 2024 10:16 pm யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று (18) அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். நேற்று (17) தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தார். வழக்காளியான வைத்…

  19. 100 மில்லியன் வழங்கியதை பகிரங்கமாக கூறினார்: ஏன் மறைக்கப்பட்ட நிலையில் விசாரணை? : ஐ. தே.க. அரசியல் எதிரிகளை விரட்டி பழிவாங்கும் இந்த முறையை மாற்றியமைப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் தவறவிடமாட்டார்கள் என்று நம்புகின்றோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நவீன் திசாநாயக்கவுக்கு 100 மில்லியன் ரூபா வழங்குவதற்கு முன்வந்துள்ளமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிடவில்லை. எனினும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்கு அமைய அதனை முன்னெடுப்பதையே எதிர்க்கின்றோ…

  20. தனது மாகாணசபைத் தேர்தல் பிரச்சார செலவுக்கு 100 ரூபா வீதம் நன்கொடை தருமாறு ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். மேல் மாகாணசபை அமைச்சராகப் பதவி வகித்த இவர் மேல் மாகாணசபைத் தேர்தலில் இம்முறையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிடுகிறார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எந்தவொரு வர்த்தகரிடமும் தாம் நன்கொடை கோரவில்லை எனவும் அது அரசியலில் ஊழல், மோசடியில் ஈடுபட வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பொதுமக்கள் 100 ரூபா நன்கொடை வழங்குவதன் மூலம் சிறந்த ஆட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.se…

  21.  100 ரூபாயைக் கேட்டு 5 மணிநேரம் மலையகத்தலைமைகள் குந்தினர் தலைவர்களின் நாடகம் கோட்டையில் அரங்கேற்றம் படங்களை எடுத்தவுடன் சில தலைவர்கள் மாயம் வாகனத்துக்கும் மேடைக்கும் சிலர் உலாவியே திரிந்தனர் 14 நாட்கள் காலக்கெடுவை விதித்துவிட்டுப் பறந்தனர் -பா.திருஞானம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் சம்பளத்தொகையுடன், நாளொன்றுக்கு 100 ரூபாயை இணைத்து, இடைக்கால நிவாரணத்தொகையாக வழங்குமாறு வலியுறுத்தி, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஐந்தே ஐந்து மணித்தியாலயங்கள் மட்டுமே கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாள…

  22. 100 வயதை எட்டியவர்கள், 15 பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு பரிசுகள்! [Wednesday 2017-07-05 09:00] 100 வயதையும் கடந்த முதியோர்கள் மற்றும் 15 பிள்ளைகளுக்கு மேல் பெற்ற 75 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குச் சன்மானம் வழங்குவதற்கு, தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதியன்று அனுஷ்டிக்கப்படும் முதியோர் தினத்தன்றே, அவ்வாறானவர்கள் கௌரவிக்கப்பட்டு, அவர்களுக்குச் சன்மானம் வழங்குவதற்கும் அந்த செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குறிப்பட்ட தகுதிகளைக் கொண்டிருக்கின்ற முதியோர்கள், தங்களுடைய விவரங்களை, அருகில் உள்ள பிரதேச செயலாளர் காரியாலத்தில், இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு, தேசிய முதியோர் செ…

    • 0 replies
    • 340 views
  23. 100 வயதைக் கடந்த 258 பேர் இலங்கையில் இலங்கையில் சிரேஷ்ட பிரஜைகளில் 100 வயதைக்கடந்த 258 பேர் வாழ்வதாக சிரேஷ்ட பிரஜைகள் செயலகப் பணிப்பாளர் சுவித்த சிங்கபுலி தெரிவிக்கின்றார். இந்த நிலை நாட்டின் சுகாதார துறையின் தன்மையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் வேகமாக வயதானவர்கள் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிக்கின்றது. 2040 ஆம் ஆண்டளவில் வயதானவர்களின் எண்ணிக்கை சனத்தொகையில் ஐந்தில் ஒரு வீதமாக அதிகரிக்குமெனவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25157

  24. 100 வருட நிறைவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியுடன் 100 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பெருந்தொகையில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக் கால பெறுமதியில் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/24923

  25. -ரஞ்சித் ராஜபக்ஷ, ஆர்.ராஜேஸ்வரன் 100 வருடங்கள் பழமையானது என நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற மூவர் ஹட்டன் பொலிஸாரால் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் வெள்ளி மற்றும் பித்தளை ஆகிய உலோகங்களைக் கலந்து செய்யப்பட்ட இந்த புரதான வாளை, சுமார் 36 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாளினை விற்பனை செய்யப்போவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு சிவில் உடையில் சென்று வியாபாரி போல் நடித்து சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களையும் தோண்டி எடுக்கப்பட்ட வாளையும்இன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.