ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
சிறிலங்கா அரசால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்குப் பகுதியில் கடந்த 11 மாதங்களில் 295 படுகொலைகளும் 176 ஆட்கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதற்கு சிறிலங்கா படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களுமே காரணம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
அம்பாறையில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொலை [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 13:57 ஈழம்] [ம.சேரமான்] அம்பாறை மாவட்டத்தில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக் கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ( Puthinam)
-
- 53 replies
- 9k views
-
-
கிழக்கு, சப்ரகமுவ, மத்திய மாகாண சபைத் தேர்தலில் 33,36,417 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இவர்களில் 11,97,678 பேர் வாக்களிக்கவில்லை.இவர்களில் 21,38,739 பேர் மாத்திரமே வாக்களித்தனர். இவற்றிலும் 1,26,427 வாக்குகள் செல்லுபடியற்றதாகவே கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களிலும் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 3,336,417 அளிக்கப்பட்ட வாக்குகள் – 2,138,739 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 126,427 செல்லுபடியான வாக்குகள் – 2,012,312 மாகாண அடிப்படையில் வாக்காளர் பதிவும், அளிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட வாக்கு விபரம் வடமத்திய மாகாணம் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 900,873 அளிக்கப்பட்ட வாக்குகள் – 5, 80, 938 (64.49%) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 28,010 (…
-
- 0 replies
- 559 views
-
-
-
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய கணினிச் சமூகத்தின் தகவல் தொழில்நுட்ப பட்டத்தை (BCS IT)பெற்றுள்ளார். இவரே உலகில் தகவல் தொழில்நுட்பத்தில் ஆகக்குறைந்த வயதில் பட்டம் பெற்றவராவார். இவர் எட்டு வயதில் இருக்கும் போதே, இவர் கபொத சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் ஏ தரச் சித்தியைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன், எட்டு வயதிலேயே கணினி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்…
-
- 4 replies
- 923 views
-
-
11 வயது இலங்கைச் சிறுவன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் : 09 ஜூலை 2013 11 வயதான இலங்கைச் சிறுவன் ஒருவன் அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியதனால் இவ்வாறு சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஸ்மானியா ஹோபார்ட் முகாமிற்கு அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி புர்க்கே விஜயம் செய்துள்ளார். குறித்த தடுப்பு முகாம் சிறுவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார். 11 வயதான இலங்கைச் சிறுவனை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறி…
-
- 0 replies
- 268 views
-
-
11 வயதுச் சிறுமி மீது வன்கொடுமை – கிளிநொச்சியில் தாய் உட்பட மூவர் கைது! கோப்புப் படம் கிளிநொச்சி, சாந்தபுரத்தில் சிறுமி ஒருவரைக் துர்நடத்தைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் இருவரும், சிறுமியின் தாயும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது 11 வயதுடைய சிறுமி தான் 3 வயதில் இருந்து துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 423 views
-
-
குற்றம் சுமத்தப்பட்ட நபர் 11 வருடகால வழக்கு விசாரணையின்பின் விடுதலை ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கொன்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 2000 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுக்கப்பட்ட நபர் ஒருவரை 11 வருடங்களின்பின் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது. சந்திரகுமார் ரொபர்ட் புஷ்பராஜ் எனும் நபருக்கு எதிரான வழக்கு கொழும்பிலும் நீர்கொழும்பிலும் பல நீதவான்கள் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் 11 வருடங்களாக விசாரிகக்ப்பட்டது. இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ, சந்தேக நபரை நேற்று விடுதலை செய்தார். இச்சந்தேக நபர் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி சுனில் ரா…
-
- 1 reply
- 831 views
-
-
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று(15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அதற்கமைய அனுராதபுரம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலக பிரிவின் அம்பகஸ்வெவ புராதன விகாரை, புத்தளம் தங்கொட்டுவ பிரதேச செயலக பிரிவின் பொதுவடன புராதன விகாரை, அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான மெத்தேகம விகாரை, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர விகாரை, திருகோணமலை குச்சவௌி பிரதேச…
-
- 2 replies
- 922 views
- 1 follower
-
-
–வடிவேல் சக்திவேல் 'எமது வட, கிழக்கு தாயகத்தில் 1766ஆம் ஆண்டுக்கு முன்னர் 26,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் இருந்தது. 1976ஆம் அண்டுக்குப் பின்னர் 11,700 சதுர கிலோமீற்றர் நிலம் இருந்தது. தற்போது 2014ஆம் ஆண்டு 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலம் மாத்திரமே உள்ளது. இந்த 11,000 சதுர கிலோமீற்றர் அளவுடைய நிலமும் 2020ஆம் ஆண்டு வருகின்றபோது இல்லாமல் போவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கொக்கட்டிச்சோலை கலாசார ம…
-
- 0 replies
- 299 views
-
-
2006 ஆம் ஆண்டு மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 11,000 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 4,000 பேரே எஞ்சியுள்ளனர் எனவும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் நான்கு முனைகளில் வன்னிப்பகுதியில் படையினர் முன்னேறுவதாகவும், பூநகரியைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கு தரைப்பாதை திறப்பதுதான் முக்கிய நோக்கம் எனவும் கூறியுள்ளார்.. கொல்லப்பட்ட சிங்களப் படையினரின் தொகையைக் கூற மறந்துவிட்டார் போலுள்ளது (இன்னமும் எண்ணி முடியவில்லையோ!) 11,000 Tiger cadres killed, 4,000 remain: Army Chief About 11,000 Tiger guerrillas have been killed since the military launched its campaign to secure the Mavil Aru anicut in July…
-
- 10 replies
- 2.7k views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து அனைத்து மக்களும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்திருந்த போதும், 11,000க்கும் மேலான முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சட்டபூர்வ ஒழுங்குகள் ஏதுமற்ற நிலையில் - கடும் பாதுகாப்புடன் - இரகசிய நலன்புரி நிலையங்களில்� அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் தி டைம்ஸ் [The Times] வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கத்தினர் [ International Committee of the Red Cross - ICRC ] இந்த முகாம்களுக்குச் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்ட கடந்த யூலை மாதத்திற்குப் பின்னர் - அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உண்ம…
-
- 1 reply
- 2.3k views
-
-
11.06.2009 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு பிராங்போட் நகரிலே......... எதிர்வரும் வியாழன் காலை 11.00மணிக்கு யேர்மன் ,பிராங்போட் நகரிலே அமைதிப் பேரணியொன்று நடைபெற உள்ளது.இன்றைய காலத்தின் தேவைகருதி தாயக உறவுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியமானதாகும். தமிழினத்தை படுகொலை செய்தவாறு, தாயகபூமியைக் கபளீகரம் செய்து ஆக்கிரமித்தவாறு, தமிழனத்தினது வாழ்வைப்பறித்து நரகத்துள் தள்ளிவிட்டு, சிறிலங்காவில் எல்லாம் அமைதியாக இருக்கிறது வாருங்கள் சொர்கத்துக்கென உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பெரும் பணச் செலவிலான பாரிய பரப்புரைகளை யேர்மனிய ஊடகங்கள் வாயிலாக முன்னெடுத்து வருகிறது. இந்தப் பொய்ப்பரப்புரையை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைவோம். தமிழினத்தின் அவலத்தை வெளிக்கொணர்வோம். …
-
- 0 replies
- 863 views
-
-
11.9 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 11 கிலோ 900 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 35, 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மாதகல் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/172465/-%E0%AE%95-%E0%AE%…
-
- 0 replies
- 274 views
-
-
110 கிலோகிராம் ஹெரோய்ன்: பிரதான சந்தேக நபர் கைது கடல் வழியாக 110 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான இந்தியப் பிரஜை, கைது செய்யப்பட்டார் . - See more at: http://www.tamilmirror.lk/169403/-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A4-#sthash.xuUTIy8m.dpuf
-
- 0 replies
- 285 views
-
-
கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியிலேயே நிரந்தர மாகத் தங்க வைக்கப்படுவர். சூரியபுரம் காட்டுப் பகுதி அரச காணி என்பதால், அதனை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ந.வேதநாயகன் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நலன்புரிநிலையத்தில்தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த முகாமிலிருந்த மக்கள் படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வந்தனர். இறுதியாக கடந்த செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி மனிக்பாம் முகாம் மூடப்பட்டதால் அங்கு எஞ்சியிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக…
-
- 1 reply
- 655 views
-
-
110 கைதிகள் யாழ். சிறைச்சாலையிலிருந்து பிணையில் சென்றனர் (தி.சோபிதன்) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்…
-
- 1 reply
- 396 views
-
-
110 கோடி ஹெரோயின் விவகாரம் : மீள் விசாரணை ஆரம்பம் பாகிஸ்தானிலிருந்து, ஈரானிய மீனவக் கப்பல் ஊடாக நாட்டுக்குள் கடத்த முற்பட்ட போது தென் கடலில் வைத்தும் நீர்கொழும்பு பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்ட 14 வெளிநாட்டவர்களில் 13 பேர் உட்பட 16 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றின் நீதிபதி லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் 14 பேரிடமும் மேலதிக விசாரணை ஒன்றினை சிறையில் வைத்தே மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் மீளவும் நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் அனுமதி வழங்கினார். 110 கோடி ரூபா பெறுமதியான 11…
-
- 0 replies
- 303 views
-
-
110 மில்லியன் டொலர் ஒப்பந்தம் : இலங்கையில் கால்பதிக்கும் அமெரிக்க நிறுவனம் ! உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் சிறிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், வாகனங்களுக்கு சார்ஜ் செய…
-
- 0 replies
- 359 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2000 பெண் போராளிகள் உள்ளிட்ட 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் 17 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மூன்று முகாம்கள் நிரந்தர தடுப்பு முகாம்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
111 ஏக்கரையும் ஒரு வீதியையும் விடுவிப்பதற்கு படை இணக்கம் ஆயினும் திகதி குறித்து இன்னும் முடிவு இல்லை கேப்பாபிலவில் 67 குடும்பங் களுக்குச் சொந்தமான 111 ஏக் கர் காணியையும், வற்றாப் பளை–புதுக்குடியிருப்பு முதன்மை வீதியை யும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் – அரச தலைவர் – தலைமை அமைச்சர் மட்டத்தில் பேசவேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 195 views
-
-
113 எம்.பிக்களுடன் வந்தால்... அரசாங்கத்தினை, கையளிக்க தயார் – அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார் ஜனாதிபதி! 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1274929
-
- 1 reply
- 435 views
-
-
114 கிலோ கேரள கஞ்சாவுடன் இந்தியர்கள் ஐவர் கைது! இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திய இந்தியர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்துக்கொண்டிருந்த மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்திய கடற்படையினர், அதிலிருந்து 114 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இந்த படகிலிருந்து இந்திய மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் பதினைந்து வயது…
-
- 0 replies
- 250 views
-
-
Posted on : Thu Jun 26 8:33:03 EEST 2008 115 கிலோ மீற்றர் தூர முன்னரங்குகளில் உக்கிரமான சண்டை நீடித்து வருகிறது பாதுகாப்பு அமைச்சு செவ்வாயன்று விடுத்த அறிக்கையின் விவரம் வடபகுதியை விடுதலைப் புலிகள் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் படை யினர் மேற்கொண்டுள்ள இராணுவ நட வடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிர தேசங்களில் இராணுவத்தினர் தமது நட வடிக்கைகளை மேற்கொண்டுவரும் அதே வேளை கடற்படையினர் விடுதலைப் புலிகளின் கடல்மார்க்கத் தொடர்புகளை தடுத்து வருவதாகவும் விமானப் படை யினர் வன்னிப் பிரதேசத்தின் உள்ளே இருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை அழித்து வருவதாகவும் பாது காப்பு அமைச்சு…
-
- 0 replies
- 927 views
-
-
115 சிங்கள மாணவர்கள் வவுனியாவிலிருந்து வெளியேறினர் [வியாழக்கிழமை, 30 நவம்பர் 2006, 19:06 ஈழம்] [க.நித்தியா] வவுனியா கல்விக் கழகத்தைச் சேர்ந்த 115 சிங்கள மாணவர்கள், நேற்று புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தங்களைத் தேடி கல்விக் கழகத்துக்கு வந்ததாக தம்மிடம் முறையிட்டனர் என்று கழகத்தின் தலைவர் கே.பேர்னாட் தெரிவித்துள்ளார். தங்கள் உயிருக்கு ஆபத்து என அவர்கள் அச்சப்பட்டதால், நேற்றிரவு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வவுனியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்திடம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார். பின்னர் இன்று இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அனைவரும் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்கள் மீது விடுக்கப்பட்ட மிரட்டல…
-
- 0 replies
- 1.3k views
-