ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
தினேஷ் – மைத்திரி இரகசிய சந்திப்பு? ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன உட்பட மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத் தில் நடைபெற்றுள்ளது. தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமலவீர திசாநாயக்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18888
-
- 0 replies
- 238 views
-
-
-
தாய்நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரித்து வேறுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதென டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்த வெளிநாட்டு சக்திகள் உள்ளிட்ட பல பிரிவினர் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பளை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என அனேகர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்த தயார் என்றாலும், நாட்டின் நிலையான சமாதானம், சுதந்திரம் என்பவற்றை கருத்திற் கொண்டு அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளவும் தயார் என பிரதமர் க…
-
- 0 replies
- 408 views
-
-
ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம் இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது. ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்த…
-
- 6 replies
- 541 views
-
-
"பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரை கண்டு தமிழ் இளைஞர்கள் அஞ்சி ஓடி ஒழித்த காலம் தற்போது மாறி விட்டது" என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எஸ்.எச். அமீர் அலி கூறுகின்றார். நேற்று மட்டக்களப்பு உறுகாமம் பள்ளிவாசலில் நடைபெற்ற மின் பிறப்பாக்கி வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார். அங்கு தொடர்நதும் உரையாற்றிய அவர் ,"பாதுகாப்பு படை தற்போது மக்களைப் பாதுகாக்கும் பணி செய்பவர்கள் எனற யதார்த்தம் தற்போது தமிழ் மக்களாலும் உணரப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே அன்று பொலிஸ் ,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையை வீதியில் கண்டால் ஓடி ஒழித்த தமிழ் மக்கள் இன்று அவர்களுடன் சதாரணமான முறையில் பழகுகின்றார்கள். பயங்கரவாதத்தினால் தமிழர்களும் முஸ்லிம…
-
- 2 replies
- 961 views
-
-
முஸ்லிம் அமைச்சர்-பிரதி அமைச்சர்கள், எம்பிக்கள் அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும்! பேரினவாத சக்திகள் தொடர்ச்சியாக பள்ளிவாசல்களைத் தாக்கி முஸ்லிம்கள் மீது காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள போதிலும் அராசங்கம்.... அவற்றைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்ற இச்சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெ…
-
- 0 replies
- 383 views
-
-
யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு நாட்டில் 100 நகரங்களை பல் பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம் நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. நாட்டில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்…
-
- 6 replies
- 876 views
-
-
பாலியல் குற்றச்சாட்டு: சாட்சிகளை மறைக்கும் முயற்சியில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் July 1, 2021 Share 24 Views விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மாற்றப் பட்டசெங்லடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவருக்கு எதிரான சாட்சிகளை இல்லாமல் செய்யும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்கள் உட்பட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள், காணி ஊழல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 277 views
-
-
(August 01, Jaffna, Sri Lanka Guardian) Information filtering through highly restricted government sources confirms that number of LTTE leaders arrested in the IDP camps immediately after the defeat of the LTTE have been killed after severe torturing in the prisons in the southern Sri Lanka. ‘Over one hundred odd LTTE men have been silently and systematically wiped out by the government death squads’ said one source. The sources said LTTE’s Balakumar (former EROS head), Yogaratnam Yogi, Karikalan and Pulavar Puthuvai were some of those being killed. They were arrested in the IDP camps and taken to Colombo for interrogation. ‘The government is maintaining dumbfou…
-
- 1 reply
- 1.1k views
-
-
லட்சியத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திரள்வோம்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி [Monday 2017-05-01 08:00] தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய்க் குரல் கொடுப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக இன்று அவர் கருத்து வெளியிடுகையில், அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்ப…
-
- 0 replies
- 264 views
-
-
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்; ஜே.வி.பி. “தற்போதைய ராஜபக்ஷாக் களுடைய அராசாங்கத்தின் மக்கள் மீதான அடக்கு முறைகள் துரிதமடைந்து கொண்டிருக்கின்றன. இதற்கான எடுத்துக் காட்டாக நாடாளுமன்ற முன்றலில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது தொழிற் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டமையைக் குறிப்பிடலாம்” என ஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; “தற்போதைய ராஜபக்ஷா க்களுடைய அராசாங்கத்தின் மக்கள…
-
- 1 reply
- 431 views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வழங்கியுள்ள தகவல்களின்படி விடுதலைப்புலிகள் அமைப்பில் மீதமுள்ள பிரதான தலைவர்களான விஸ்வநாதன் உருத்திரகுமார் மற்றும் இளயதம்பி ஆகியோரை சிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 'எஞ்சியவர்களையும் விரைவில் சிக்க வைக்க முடியும் என்பது உறுதி. இவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் அமைப்பு சார்வதேச ரீதியில் வீழ்ச்சியடையும். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்புத் தொடர்பான அறிவைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவொன்று கே.பி.யை கைதுசெய்வதற்காக பல நாட்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அவர் கடநத்த வி…
-
- 4 replies
- 1.6k views
-
-
பிரபாகரனுக்கு விளக்கேற்றுவோர் மஹிந்தவுக்கும் ஏற்றுகின்றனர் கூட்டு எதிரணியில் உள்ள எவருக்கும் உயிராபத்து இல்லை என்கிறார் அமைச்சர் மங்கள (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உலகில் எஞ்சியுள்ள தமிழ் அடிப்படைவாத குழுக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளக்கேற்றும் அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக் கும் இன்னுமொரு விளக்கை ஏற்றும் தகவல் கள் எமக்கு கிடைத்திருக்கின்றன என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார். கூட்டு எதிரணியினரை அந்த அடிப்படைவாதக் குழுக்கள் உயிரை கொடுத்துக் காப்பாற்றுவார்கள் எனவும் அமைச்சர் புன்னகையுடன் குறிப்பிட்டார். பாரா…
-
- 0 replies
- 494 views
-
-
தமிழர்களுக்கு சோறு, பிரியாணி கொடுப்பாரே தவிர உரிமைகள் எதனையும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடுக்க மாட்டார் என்று சிங்கள இனத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை வெளிவரும் 'குமுதம் றிப்போட்டர்' ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் இன்றைய உண்மை நிலை என்ன? "இலங்கையில் இன்று அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்தாலும் கூட உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட முடியாத அளவிற்கு கட்டுப்பாடு இருக்கிறது. 'சண்டே லீடர்' என்…
-
- 13 replies
- 1.2k views
-
-
வடமாகாண பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகள் மகிழ்ச்சி அளித்தாலும் அதனை மதிப்பீடு செய்வதற்காக நான் இலங்கை வரவில்லை. உள்நாட்டில் மனித உரிமைகளின் தற் போதைய நிலைவரத்தை மதிப்பீடு செய்வதே இலங்கைக்கான எனது விஜயத்தின் நோக்கமும் கடமையும் ஆகும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். யாழ்.நூலகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்த ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தை பார்வையிட்டதுடன் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பிரதி செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் ஆகியோரின் தலைமையில் வட மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளித்தார்கள். இதன் போது உரையாற்…
-
- 1 reply
- 510 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். எதிர்கட்சியின் துணைத் தலைவர் Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம். பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய ப…
-
- 0 replies
- 272 views
-
-
விக்கியின் செயற்பாடுகள் இனவாதத்தின் உச்சகட்டம் (ஆர்.யசி) வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள் இனவாதத்தின் உச்சகட்டமாக அமைந்துள்ளது. மீண்டும் சர்வதேச அழுத்தங்களுக்குள் அரசாங்கத்தை தள்ளி நல்லிணக்கத்தை குழப்பி அரசாங்கத்தை சீண்டிப்பார்க்கிறார் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக தெரிவித்தார். நல்லிணக்க நகர்வில் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வடக்கு முதல்வர் சர்வதேச தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/20015
-
- 0 replies
- 336 views
-
-
நூறு நகரங்கள் அபிவிருத்தியில் வவுனியாவும் இணைவு August 5, 2021 இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பாகவே நாம் கள நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவருட காலப்பகுதிக்கு முன்பாகவே நகரி…
-
- 0 replies
- 445 views
-
-
நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிச் சொல்ஹெய்ம் விடுத்துள்ள கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. செனல்‐4 வில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட வீடியோக் காட்சிகள் தொடர்பில் எரிச் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் ஏமாற்றமளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோர்வே அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களில் ஒருவரான எரிச் சொல்ஹெய்ம் போன்றவர்கள் வெளியிடும் கருத்துக்களை கவனத்திற் கொள்ளாதிருக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். நோர்வே அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் விரைவில் விளக்கம் அளிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக ரீதியில் தெரிவ…
-
- 1 reply
- 703 views
-
-
ஜனாதிபதியினால் மட்டுமே இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் - பசில் ராஜபக்ஷ 08 செப்டம்பர் 2013 ஜனாதிபதியினால் மட்டுமே இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சரினால் வடக்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தினால் கூட வடக்கு இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்த முயற்சி எடுக்கப்பட வேண்டும…
-
- 0 replies
- 372 views
-
-
நியுயோர்க்கில் கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் – பீரிசுக்கு காத்திருக்கும் நெருக்கடி [ வியாழக்கிழமை, 12 செப்ரெம்பர் 2013, 01:23 GMT ] [ தா.அருணாசலம் ] கொமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம், வரும் 26ம் நாள் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொம்ன்வெல்த் மாநாடு தொடர்பாக, உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விளக்கிக் கூறவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் நியுயோர்க் செல்கின்றனர். இதன்போது ஐ.நா தலைமையகத்தில் கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கொமன்வெ…
-
- 0 replies
- 482 views
-
-
வடபகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைத் தடுத்து வைத்திருப்பதன் மூலம் சிறிலங்காவின் அரசியல் அமைப்பை அரசு மீறியுள்ளது எனவும் சட்டத்திற்குப் புறம்பாக அரசு செயற்படுகின்றது எனவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 393 views
-
-
தமிழர் தாயகத்தில் ஒட்டுக் குழுக்களையும் கொலைகாரர்களையும் அகற்றுவதற்கு வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது காலத்தின் கட்டாயம் என இன அழிப்பு கண்காட்சியை நடாத்திவரும் மருதையா லோகநாதன் (கஜன்) ஜெனிவாவின் ஐ.நா முன்றலில் அறைகூவல்.. thankx FB
-
- 0 replies
- 439 views
-
-
மைதானத்தில் அடித்துக் கொலை;தொடர் விசாரணைகள் மேல் நீதிமன்றில் நேற்று ஆரம்பம் வட்டுக்கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தொடர் விசாரணை நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆரம்பமானது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப் பாணக் கல்லூரிக்கு இடையே இடம்பெற்ற வருடாந்தக் கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பத்தலைவரும் பற்றிக்ஸ் கல்லூரின் பழைய மாணவனுமான அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவ…
-
- 1 reply
- 449 views
-