ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
நல்லூரில் மணற்சிற்பம்:- யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் ஆலய சூழலில் செய்யப்பட்ட மணற்சிற்பம். இந்த மாணவர் உற்சவகாலத்தில் தினமும் இவ்வாறு மணற்சிற்பங்களை வடிவமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/36785
-
- 0 replies
- 184 views
-
-
துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார் - கே. கண்ணன் யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு காரணமான குழுவின் தலைவர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்க…
-
- 0 replies
- 190 views
-
-
விசேட அதிரடிப் படையால் கொக்குவில் இளைஞர் கைது! கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் 21 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/19466.html
-
- 1 reply
- 414 views
-
-
38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன. கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். http://newuthayan.com/story/19632.html
-
- 0 replies
- 215 views
-
-
புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். http://www.virakesari.lk/article/23174
-
- 0 replies
- 164 views
-
-
வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்டவேளை, முச்சக்கர வண்டி புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். எனவே, இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரத்தினை இன்று காலை 8.30 மணியளவில் மற…
-
- 0 replies
- 290 views
-
-
‘கிழக்கை மு.கா கைப்பற்றும்’ எம்.எம்.அஹமட் அனாம் “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் யாரும், எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையைக் கேட்காமல் பதவி துறந்தார்” என்று, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதுடன் மட்டுமன்றி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை உள்ளுராட்சி தேர்தலில் கைப்பற்றும…
-
- 2 replies
- 417 views
-
-
கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சுமனரத்ன தேரர் தமிழ் மக்களின் உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அத்துமீறி முஸ்லீம் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போவதாக மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிடும் போது அதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சி செய்யப்படுவதாக அவர் சாடியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இதுவரை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பார…
-
- 11 replies
- 864 views
-
-
‘நாடகங்களைத் தவிர்த்து காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’ “அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் அம்மக்களது பாவனைக்கு வழங்கப்படாதுள்ள நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். கேப்பாப்புலவு மக…
-
- 1 reply
- 204 views
-
-
உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது” என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ள…
-
- 16 replies
- 2.1k views
-
-
காணாமற்போனோர் அலுவலகத்தை திறக்க இன்னும் வழியைக் காணோம் வேண்டும் என்றே தாமதிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் சீற்றம் காணாமற்போனோர் தொடர்பான அலுவல கத்தை அமைப்பதற்கான பணிகள் மேலும் தாமதம டைந்து வருவது மனித உரிமைகள் செயற்பாட் டாளர்களை விசனம் அடைய வைத்துள்ளது. இது வேண் டும் என்றே செய்யப்பட்டு வரும் நடவடிக்கை என்றும் அவர்கள் சீற்றம் காட்டி னர். இந்த அலுவலகத்தை நல் லிணக்க அமைச்சுக்குப் பாரப்படுத்தும் வர்த்த மானி அறிவித்தல் விடுக் கப்பட்டபோதும், அலுவ லகத்தை அமைப்பதற் கான வர்த்தமானி அறி வித்தல் அந்த அமைச்சின் அமைச் சர் என்ற வகை யில் அரச தலைவரால் இன்னும் விடுக்க…
-
- 0 replies
- 174 views
-
-
‘5 மாணவர்கள் கடத்தலுக்கும் அரசே பொறுப்புக்கூறவேண்டும்’ தெஹிவளையில், கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள, 5 மாணவர்களையும் கடற்படையினரே கடத்தி, சித்திரவதை முகாமில் தடுத்து வைத்திருந்தனர் என்பது மனுதாரர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதனால், இந்தக் கடத்தலுக்கு அரசே பொறுப்புக்கூறவேண்டும் என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தெஹிவளையில் வைத்து, 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று இரவு 10 மணியளவில், கடந்தப்பட்ட ஐந்து மாணவர்களில் மூவர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு மனு மீதான எழுத்துமூலமான சமர்ப்பணத்திலேயே மேற்கண்டவாறு கோ…
-
- 0 replies
- 199 views
-
-
சிற்றூழியரை அடிப்பதற்கு முயற்சி:’ஐ.ஜி.பியின் வீடியோ வைரலானது’ பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, (ஐ.ஜி.பி) பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை, அடிப்பதற்கு முயன்ற சம்பவம் தொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியின் பிரகாரம், தன்னுடைய வலது கையையை அடிப்பதற்காக உயர்த்தும், பொலிஸ்மா அதிபர், அந்த ஊழியரை அடிக்கவில்லை. எனினும், இரண்டொரு தடவைகள் கடுமையாக எச்சரித்ததன் பின்னர், அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றுவிடுகின்றார். இந்தச் சம்பவம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடுமையான நடந்துகொண்ட நான்காவது சம்பவமாகுமென சுட்டிக்காட்டி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் த…
-
- 0 replies
- 195 views
-
-
வடக்கு சுகாதார துறையின் அபிவிருத்திக்கான வெளிநாட்டு நிதியுதவி திரும்பிச்சென்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்கவேண்டும். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாரிய சுகாதார அபிவிருத்தி திட்டத்திற்காக நெதர்லாந்து அரசு ஒப்புதல் வழங்கிய பதிநான்காயிரம் மில்லியன் ரூபா நிதி திரும்ப சென்றால்; அதற்கான முழுப்பொறுப்பை முதலமைச்சர் அவர்களே ஏற்கவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா சேமமடுவில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (14.06) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித…
-
- 1 reply
- 319 views
-
-
’மனித நேயமே நல்லுறவை ஏற்படுத்தும்’ "எங்களிடம், இனவாதமோ, மதவாதமோ இருக்கக்கூடாது. அதற்கு அப்பால் எங்களிடம் மனித நேயம் இருக்க வேண்டும். அதுதான் சரியான நல்லுறவை ஏற்படுத்தும். இனவாதத்தையும் மதவாதத்தையும் இந்த நாட்டிலே அரசியல் செய்வதற்கு வளர்ப்போமானால், இந்த நாட்டை ஆக்கபூர்வமான நாடாகக் கட்டியெழுப்ப முடியாது" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற தேசிய நிகழ்வு, மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஈச்சந்தீவில், ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது. அந்நிகழ்வில், தொடர்நது உ…
-
- 0 replies
- 269 views
-
-
மைத்திரியுடன் பேசுவதால் பயன் ஏதும் ஏற்படுமா? புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகள் தாமதமடைவது குறித்து, குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி இந்தப் பணிகளில் வேண்டும் என்றே இழுத்தடிப்பைச் செய்து வருவது குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவி டம் முறையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித் துள்ளது. ‘‘அரசமைப்பு உருவாக்க விடயத்தில் அரச தலைவர் உடனடியாகத் தலையிடவேண்டும் என்று வலியுறுத்துவோம்’’ என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். புதிய அரசமைப்புப் பணிகள் தொடர்ந்தும் திட்டமிட்டுத் தாமதிக்கப்படுவதன் பின்னணியில் கூட்டமைப்பு இந்த…
-
- 0 replies
- 183 views
-
-
இளைஞன் சுட்டுக்கொலை; ரயரை நோக்கிச் சுடுமாறு கூறினேன்: பொலிஸ் வாக்குமூலம்! யாழ்ப்பாணம் வடமராட்சியில் கடந்த மாதம் மணல் ஏற்றினார் என்று இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது இளைஞனைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரான சஞ்சீவன் வாக்குமூலம் வழங்கியிருந்தார். தனது வாக்குமூலத்தில் அவர்…
-
- 20 replies
- 940 views
- 1 follower
-
-
சக்தி டிவி செய்திகள் 14 08 2017 , 8PM
-
- 0 replies
- 304 views
-
-
“புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.” ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் – விஜயகலா மகேஸ்வரன்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்த…
-
- 16 replies
- 952 views
-
-
செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் செஞ்சோலை படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் மட்டக்களப்பு கோப் சென்டர் மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் தீபம் ஏற்றி ஆரம்பிக்கப்பட்டது. வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 61 பேர் உயிரிழந்ததுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குறித்த படுகொலைக்கு நீதிகோரியும், உயிரிழந்த மழலை…
-
- 15 replies
- 2.1k views
-
-
பேரனை தீண்டிய நாகத்தை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற தாத்தா : நாவலப்பிட்டியில் சம்பவம் மூன்று வயது பேரனை தீண்டிய தாக நாகபாம்பை கம்பியொன்றில் சுருக்கு வைத்து பிடித்துக்கொண்டு அதனை முதியவர் ஒருவர் வைத்தியசாலை க்கு கொண்டு சென்றுள்ளார். கலவரத்துடன் காணப்பட்ட முதியவர் குறித்த பாம்பினை மக்கள் கூடி நின்ற இடத்திற்கு தூக்கிக்கொண்டு ஓடியதால் வைத்தியசாலையில் நின்றி ருந்த நோயாளர்கள் ஓட்டமெடுத்த சம்பவமொன்று நாவலப்பிட்டி லக்சபான பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நேற்று காலை பெற்றோர் வேலை க்குச் சென்றிருந்த நிலையில் குறித்த சிறுவன் தனது தாத்தா – பாட்டியின் ப…
-
- 1 reply
- 317 views
-
-
வடக்குப் பிரச்சினைகளை ஐ.நா.விடம் எடுத்துரைத்தார் முதல்வர் வடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும் அலுவலக கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் அவர்கள் உபயோகித்து வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலேய் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பய…
-
- 1 reply
- 237 views
-
-
ரயிலுடன் மோதியது ஓட்டோ – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!! Share கடுகதி தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானது. அதில் இளம் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது. தண்டிக்குளம் பிரதான தொடருந்துக் கடவையில் விபத்து நடந்துள்ளது. முச்சக்கர வண்டி ஒரு கிலோமீற்றர் தூரம் வரை இழுபட்டுச் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். முச்சக்கர வண்டியின் சாரதி தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்தில் இருந்து வெளிக் காயங்கள் இ…
-
- 1 reply
- 478 views
-
-
வல்வைப் படுகொலைகள 28 வருட கால தொடரும் வேதனை.... மனைவியைப் பிணமாகத் தேடிய கணவனும்,கணவனை பிணமாகத் தேடிய மனைவியும்..சோகத்தையும் சொத்துகளையும் இழந்த நாட்கள் அவை! -அமைதிப் படையின் அட்டூழியங்கள்!போராட்ட காலத்தில் சில நினைவில் இருந்து அழியாத நினைவுகள்!– 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் ஊரிக்காடு இந்திய இராணுவ முகாமில் இருந்தும், பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்தும் வெளியேறிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவக்கும்பலுக்குத் தலைமை வசித்தவர்களில் கப்டன் மேனன், கப்டன் கபூர் முக்கியமானவர்களாக இருந்தனர். ஆம்! கப்டன் மேனன் பழிவாங்கும் ஒருகளமாக அன்று வல்வெட்டித்துறையைக் குறிவைத்துச் செயற்பட்டான். அவனுடன் ஊரிக்காடு இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த மேஜர் சுதர…
-
- 5 replies
- 2.4k views
- 1 follower
-
-
”சுய விருப்புடன் பதவி விலக மாட்டேன்” சுய விருப்பத்துடன் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி குறித்த நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மன்னாரில் அமைந்துள்ள அமைச்சின் உப அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டெனீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர் மட்டக் கூட்டம் கட்நத 12 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா அலுவலகத்தில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு எனது …
-
- 1 reply
- 274 views
-