Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களே இவ்வாறு வழிபட்டுள்ளனர் இந்நிலையில் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தளபதி ஒருவர் ஆலய வழிபாட்டிற்காக அங்கு சென்றிருந்தார். இதன் போது காணாமல் போனோரின் உறவுகள் தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு கண்ணகி அம்மன் முன்னிலையில் கண்ணீர் வடித்து அழுதுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த குறித்த இராணுவத்தளபதி காணாமல்போனோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், ஆறுதல் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.…

    • 1 reply
    • 474 views
  2. இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்த பிரித்தானிய படையினருக்கு எதிராக தமிழ்ப் பெண் முறைப்பாடு! [Monday 2017-08-14 09:00] பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சி வழங்கிய பிரித்தானியாவின் RUC படைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணொருவர் அயர்லாந்தில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. 1986 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு விசேட அதிரடிப் படையினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரித்தானிய RUC படையினர், இலங்கை விசேட அதிரடிப் படையினருக்கு பயிற்சி வழங்கியமையினால் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டதாக அ…

    • 2 replies
    • 385 views
  3. ஜேர்மனியில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. குறித்த பெருவிழா ஜேர்மனி கேவலார் திருப்பதியில், நேற்று நடைபெற்றதுடன், இதில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் கலந்து கொண்டிருந்தார். இந்த திருயாத்திரையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த பெருவிழாவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மன்னார், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்களும் பங்கேற்று திருப்பலியை ஒப்புக்கொடுத்திருந்தனர். …

    • 3 replies
    • 868 views
  4. கடும் வாகன நெரிசல் : மடுவில் மக்கள் அவதி வருடாந்த மடுத்திருவிழா இன்று காலை 9 மணியளவில் முடிவுற்ற போதிலும் பொலிஸார் தமது கடமைகளை பொறுப்புடன் செய்யாத கராணத்தினால் பாரிய போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக, மடுத்திருவிழாவிற்கு சென்ற யாத்திரிகர்கள் சுமார் 3 மணி நேரமாக வாகன நெரிசலில் சிக்கி அவதியுறுகின்றனர் என தெரிவித்தார். http://www.virakesari.lk/article/23177

  5. பாதாள உலக கேஷ்டிகளை கட்டுப்படுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் விஷேட படையணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சினால் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீப் தலைமையில் இந்த படையணி உருவாக்கப்படவுள்ளது. இந்த பொலிஸ் படையணிக்கு பல திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. http://www.ceylonmoors.com/

    • 0 replies
    • 332 views
  6. தமிழ் மொழி படுகொலை செய்யப்படுகிறதா.?: மக்கள் விசனம் பதுளை மாகாண வைத்தியசாலை பல் சிகிச்சைப் பிரிவில் பல் நோயாளிகளின் வழி காட்டலுக்காக மும் மொழிகளிலும் தொங்க விடப்பட்டுள்ள பலகையில் தமிழ் மொழி படு கொலை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பல்லின சமுதாய நாடான இலங்கையில் தமிழ் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பொது இடங்களில் இவ்வாறு தமிழ் மொழியானது படுகொலை செய்யப்பட்டுள்ளமையானது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்க விடயமுமாகும். இங்கு மட்டுமல்ல நாடளாவிய ரீதியில் வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகைகளில் தமிழ் மொழியானது படுகொலை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் அதிகாரிக…

  7. நல்லூரில் மணற்சிற்பம்:- யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் ஆலய சூழலில் செய்யப்பட்ட மணற்சிற்பம். இந்த மாணவர் உற்சவகாலத்தில் தினமும் இவ்வாறு மணற்சிற்பங்களை வடிவமைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/36785

  8. துன்னாலை அமைதியின்மை: குழுவின் தலைவர் கைதானார் - கே. கண்ணன் யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு காரணமான குழுவின் தலைவர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்க…

  9. விசேட அதிரடிப் படையால் கொக்குவில் இளைஞர் கைது! கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் 21 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/19466.html

  10. 38 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன. கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். http://newuthayan.com/story/19632.html

  11. புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். http://www.virakesari.lk/article/23174

  12. வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிஸார் குவிப்பு வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்டவேளை, முச்சக்கர வண்டி புகையிரதத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். எனவே, இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரத்தினை இன்று காலை 8.30 மணியளவில் மற…

  13. ‘கிழக்கை மு.கா கைப்பற்றும்’ எம்.எம்.அஹமட் அனாம் “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் யாரும், எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. கடந்த முறை நாங்கள் தனித்துக் கேட்டோம். தைரியமாகத் தனித்துக் கேட்க எடுத்த முடிவு தான் அதை முறியடிக்க ஏறாவூரிலே தலைமையைக் கேட்காமல் பதவி துறந்தார்” என்று, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார். “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதுடன் மட்டுமன்றி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையை உள்ளுராட்சி தேர்தலில் கைப்பற்றும…

    • 2 replies
    • 417 views
  14. கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சுமனரத்ன தேரர் தமிழ் மக்களின் உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அத்துமீறி முஸ்லீம் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போவதாக மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிடும் போது அதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சி செய்யப்படுவதாக அவர் சாடியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இதுவரை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பார…

  15. ‘நாடகங்களைத் தவிர்த்து காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்’ “அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய சுத்தியுடன் முன்வர வேண்டும்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் அம்மக்களது பாவனைக்கு வழங்கப்படாதுள்ள நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். கேப்பாப்புலவு மக…

  16. உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக யாழில் சுவரொட்டி -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் தென்னிந்திய பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு எதிராக, யாழ்.நகரின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியில் வெலிங்டன் திரையரங்கு அமைந்திருந்த மைதானத்தில் இன்று, இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, உன்னிகிருஷ்ணன் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னி எங்கள் மண்ணில் இன்னிலை பாட முடியாது” என, அந்தச் சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ள…

    • 16 replies
    • 2.1k views
  17. காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்தை திறக்க இன்­னும் வழி­யைக் காணோம் வேண்­டும் என்றே தாம­திக்­கப்­ப­டு­வ­தாக மனித உரி­மை­கள் ஆர்­வ­லர்­கள் சீற்­றம் காணா­மற்­போ­னோர் தொடர்­பான அலு­வ­ல கத்தை அமைப்­ப­தற்­கான பணி­கள் மேலும் தாம­த­ம டைந்து வரு­வது மனித உரி­மை­கள் செயற்­பாட் டா­ளர்­களை விச­னம் அடைய வைத்­துள்­ளது. இது வேண் டும் என்றே செய்­யப்­பட்­டு­ வ­ரும் நடவ­டிக்கை என்­றும் அவர்கள் சீற்­றம் காட்­டி னர். இந்த அலு­வ­ல­கத்தை நல் லி­ணக்க அமைச்சுக்குப் பாரப்­ப­டுத்­தும் வர்த்­த மானி அறி­வித்­தல் விடுக் கப்­பட்­ட­போ­தும், அலு­வ ல­கத்தை அமைப்­ப­தற் கான வர்த்­த­மானி அறி வித்­தல் அந்த அமைச்­சின் அமைச் சர் என்ற வகை யில் அரச தலை­வ­ரால் இன்­னும் விடுக்­க…

  18. ‘5 மாணவர்கள் கடத்தலுக்கும் அரசே பொறுப்புக்கூறவேண்டும்’ தெஹிவளையில், கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ள, 5 மாணவர்களையும் கடற்படையினரே கடத்தி, சித்திரவதை முகாமில் தடுத்து வைத்திருந்தனர் என்பது மனுதாரர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் சாட்சியங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதனால், இந்தக் கடத்தலுக்கு அரசே பொறுப்புக்கூறவேண்டும் என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தெஹிவளையில் வைத்து, 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று இரவு 10 மணியளவில், கடந்தப்பட்ட ஐந்து மாணவர்களில் மூவர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, ஆட்கொணர்வு மனு மீதான எழுத்துமூலமான சமர்ப்பணத்திலேயே மேற்கண்டவாறு கோ…

  19. சிற்றூழியரை அடிப்பதற்கு முயற்சி:’ஐ.ஜி.பியின் வீடியோ வைரலானது’ பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, (ஐ.ஜி.பி) பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை, அடிப்பதற்கு முயன்ற சம்பவம் தொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சியின் பிரகாரம், தன்னுடைய வலது கையையை அடிப்பதற்காக உயர்த்தும், பொலிஸ்மா அதிபர், அந்த ஊழியரை அடிக்கவில்லை. எனினும், இரண்டொரு தடவைகள் கடுமையாக எச்சரித்ததன் பின்னர், அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றுவிடுகின்றார். இந்தச் சம்பவம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடுமையான நடந்துகொண்ட நான்காவது சம்பவமாகுமென சுட்டிக்காட்டி, ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் த…

  20. வடக்கு சுகாதார துறையின் அபிவிருத்திக்கான வெளிநாட்டு நிதியுதவி திரும்பிச்சென்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்கவேண்டும். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாரிய சுகாதார அபிவிருத்தி திட்டத்திற்காக நெதர்லாந்து அரசு ஒப்புதல் வழங்கிய பதிநான்காயிரம் மில்லியன் ரூபா நிதி திரும்ப சென்றால்; அதற்கான முழுப்பொறுப்பை முதலமைச்சர் அவர்களே ஏற்கவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா சேமமடுவில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (14.06) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித…

  21. ’மனித நேயமே நல்லுறவை ஏற்படுத்தும்’ "எங்களிடம், இனவாதமோ, மதவாதமோ இருக்கக்கூடாது. அதற்கு அப்பால் எங்களிடம் மனித நேயம் இருக்க வேண்டும். அதுதான் சரியான நல்லுறவை ஏற்படுத்தும். இனவாதத்தையும் மதவாதத்தையும் இந்த நாட்டிலே அரசியல் செய்வதற்கு வளர்ப்போமானால், இந்த நாட்டை ஆக்கபூர்வமான நாடாகக் கட்டியெழுப்ப முடியாது" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பரிமாற்ற தேசிய நிகழ்வு, மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஈச்சந்தீவில், ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது. அந்நிகழ்வில், தொடர்நது உ…

  22. மைத்திரியுடன் பேசுவதால் பயன் ஏதும் ஏற்படுமா? புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­கள் தாம­த­ம­டை­வது குறித்து, குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இந்­தப் பணி­க­ளில் வேண்­டும் என்றே இழுத்­த­டிப்­பைச் செய்து வரு­வது குறித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி ­டம் முறை­யிட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தீர்­மா­னித் துள்­ளது. ‘‘அர­ச­மைப்பு உரு­வாக்க விட­யத்­தில் அரச தலை­வர் உட­ன­டி­யா­கத் தலை­யி­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­வோம்’’ என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருக்­கி­றார். புதிய அர­ச­மைப்­புப் பணி­கள் தொடர்ந்­தும் திட்­ட­மிட்­டுத் தாம­திக்­கப்­ப­டு­வ­தன் பின்­ன­ணி­யில் கூட்­ட­மைப்பு இந்த…

  23. இளைஞன் சுட்டுக்கொலை; ரயரை நோக்கிச் சுடுமாறு கூறினேன்: பொலிஸ் வாக்குமூலம்! யாழ்ப்பாணம் வடமராட்சியில் கடந்த மாதம் மணல் ஏற்றினார் என்று இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது இளைஞனைச் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரான சஞ்சீவன் வாக்குமூலம் வழங்கியிருந்தார். தனது வாக்குமூலத்தில் அவர்…

  24. சக்தி டிவி செய்திகள் 14 08 2017 , 8PM

  25. “புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.” ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் – விஜயகலா மகேஸ்வரன்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்த…

    • 16 replies
    • 953 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.