ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143354 topics in this forum
-
சட்டமா அதிபர் திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியன ஜனாதிபதியிடம் ஒப்படைக்க படவேண்டும் : மனோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியது போன்று, சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ்வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு, நீதி அமைச்சின் கீழ்வரும் சட்டமாதிபர் திணைக்களம் ஆகியவை அவரிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். அவரும் அவற்றை பயன்படுத்தி, கடந்த ஆட்சியின் குற்றவாளிகளை மூன்று மாத காலத்துக்குள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவு, சட்டமாதிபர் திணைக்களம் ஆகியவற்றை என்னிடம் ஒப்படையுங்கள். நான் மூன்று மாத கா…
-
- 0 replies
- 142 views
-
-
“18 அமைச்சர்கள் ஒன்றிணைந்த எதிரணியில் இணைவர்” அரசாங்கத்திலுள்ள 18 அமைச்சர்கள், செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஒன்றிணைந்த எதிரணியில் இணையவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இன்று (6) தெரிவித்தார். நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதைத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/18-அமைச்சர்கள்-ஒன்றிணைந்த-எதிரணியில்-இணைவர்/175-200102
-
- 5 replies
- 563 views
-
-
புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும் புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (06) பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில…
-
- 5 replies
- 440 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 07-07-2017
-
- 0 replies
- 119 views
-
-
கனடாவின் 150ஆவது பிறந்த தின நிகழ்வு தாயகத்திலும் கனடாவின் 150ஆது பிறந்த தினம் யாழ்ப்பாணத்திலும் கொண்டாடப்பட்டது. கனடாவின் ஸ்காபரோ-கில்வூட் தொகுதியில் புறோகிறசிவ் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குப் போட்டியிடும் குயின்ரஸ் துரைசிங்கம் மற்றும் கனடிய தமிழர் நிவாரண அமைப்பினர் இணைந்து இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்கினர். இளவாலையில் இயங்கும் வசதியற்ற சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையத்தில் வாழும் சிறுவர் சிறுமியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 150 இளையவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. கனடாவுக்கு நன்றி கூறும் வழிபாடுகளும் நடைபெற்றன. அதேவேளை, பல்லாயிரக்கணக்கான கனடியர்கள் கனடாவின் தலைநகர் ஒட…
-
- 0 replies
- 249 views
-
-
’சிறு குழுவினரிடம் பொறுப்பைக் கையளித்தமையே குற்றம்’ "ஒரு சிறு குழுவினரிடம் முழுப்பொறுப்பையும் கையளித்தமையே நாம் செய்த பெரும் குற்றமாகும் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்" என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், ஊடகங்களுக்கு நேற்று அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விடுக்கும் அவசர அழைப்பு இதுவாகும். உணர்ச்சிவசப்பட்டும், பொய் அறிக்கைகள் மூலமும் பாதிக்கப்படாது, உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது எனவும் அதில் குறிப்பி…
-
- 0 replies
- 247 views
-
-
‘பௌத்தத்துக்கான முன்னுரிமையை ஒழிக்க இடமளியேன்’ வழிநடத்தல் குழுவில் ஆராயப்படும் விடயங்கள் அரசமைப்பு சபைக்கு முன்வைக்கப்படும். எமக்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு அவை குறித்து தொடர்ந்து ஆராயப்படுகிறது. அவற்றை நாம் வெளியிடவில்லை. பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ தயாரில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று (06) தெரிவித்தார். “பௌத்த மதத்துக்குத் தொடர்ந்தும் முதலிடம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் ஜனாதிபதியும் இருக்கிறோம் என்று குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து மகா சங்கத்தினருக்கும் அறிவித்திருக்கிறோம்” என்றும் அவர் இதன்…
-
- 0 replies
- 227 views
-
-
சட்டமூலம் ‘வாபஸ் இல்லை’ வலுக்கட்டாயமாகக் காணாமல் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலத்தை, அரசாங்கம் வாபஸ் பெறவில்லை என்றும், அந்த சட்டமூலம் பிறிதொரு தினத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (05) கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “இந்தச் சட்டமூலம் தொடர்பில் பத்திரிகைகள் சில தவறான செய்தியை, இன்று (வியாழக்கிழமை) பிரசுரித்துள்ளன. புதன்கிழமை சமர்ப்பிக்கவிருந்த மேற்படி சட்டமூலத்தை, அரசாங்கம் வாபஸ் பெற்றுகொண்டுவிட்டதாக செய…
-
- 0 replies
- 183 views
-
-
என்ன மக்காள் உங்கட அரசியலமைப்பு சரிவராது போல அது ஓர் அமைதியான ஊர். ஆலயத்தின் முன்றலில் அகன்று விரிந்து நிழல் பரப்பும் ஆலமரம். மரத்தின் பருமனும் விரிசலும் பழமையின் அடையாளமாகக் காட்சி கொடுத்தது. ஆலமரத்தின் கீழ் மூன்று பேர் குத்தியிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஆலமரம் மட்டு மல்ல அந்த மூவரும் முதியவர்கள்தான். அமைதியான சூழலில் இவர்கள் என்னதான் கதைக்கிறார்கள் என்று அறிய மனம் அவாக் கொண்டது. மரத்தில் மறைந்து நின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுவது என்று அங்கிருந்த பெரியவர் ஒருவர் கூற, மற்றவர் எப்படி என்று சொல்லுங் களன் என்றார…
-
- 3 replies
- 764 views
-
-
கூட்டமைப்பினருக்கு சுவாமிநாதன் சவால் “பொருத்துவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டமைப்பினர், தமது கட்சி வீட்டை முதலில் திருத்திக் கட்டவேண்டும். கூட்டமைப்பினர் எப்படித்தான் சத்தமிட்டாலும் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கப்பட்டேதான் தீரும்” இவ்வாறு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பொருத்துவீடு தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால், சபை ஒத்திவைப்பு பிரேரணை நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார…
-
- 2 replies
- 374 views
-
-
விவசாயக் கூட்டம் தொடர்பில் பொய் உரைக்கிறார் முதல்வர் தவராசா பகிரங்கக் குற்றச்சாட்டு விவசாய அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கான கூட்டமொன்றை முதலமைச்சர் ஆரம்பித்து வைத்தபோதிலும் அந்தக் கூட்டத்தை முதல்வரின் தந்திரோபாய மதியுரைஞர் ஒருவரே கூட்டத்தை நடத்தினார். அவ்வாறு கூட்டத்தை நடத்த முடியாது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டி னார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சரை நோக்கி சபையின் எதிர்க்கட்சித்தலைவர் வினாக்களைத் தொடுத்தார். அதில் வடக்கு விவசாய அமைச்சுடன் தொடர்புடைய அத…
-
- 1 reply
- 248 views
-
-
வடக்கு மாகாண சபையில் ஊழல் நடந்திருந்தால் நிரூபிக்கப்படவேண்டும் அவைத் தலைவர் தெரிவிப்பு ‘‘வடக்கு மாகாண சபையில் ஊழல் இடம்பெறவில்லை என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். மாகாண சபையில் ஊழல் நடந்திருந்தால் ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும். அதனை விடுத்துப் பேச்சளவில் மாகாண சபையில் ஊழல் நடக்கிறது என்று வசை பாடக்கூடாது’’. இவ்வாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மிகக் காட்டமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 98 ஆவது அமர்வு கைதடியில் நேற்று ஆரம்பமானது. அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு மாகாண ச…
-
- 0 replies
- 253 views
-
-
யாழ் பல்கலைக்கழக பேராசிரியரின் கேள்விக்கு பதிலளிப்பாரா சம்பந்தன்?
-
- 1 reply
- 341 views
-
-
கிழக்கு மாகாணம் அரபு தேசத்தின் ஒரு மாநிலம் போன்று உருவாகிவிட்டது! கிழக்கு மாகாண சபையில் அரபு மொழி வேடிக்கை பார்க்கும் தமிழ் வேடுவர்களாக இருக்கும் மாதர் சங்க உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் உருவாக்கிய தமிழ் ஈழத்தின் கிளிநொச்சி நகரில் சர்வதேச ராஜதந்திரிகளை ஈர்ப்பதற்கு காரணமாயிருந்த தமிழீழ நிர்வாக கட்டமைப்புகளாக தனியான வங்கி, சட்ட பல்கலைக்கழகம், தொழினுட்ப கல்லூரி, பேருந்து போக்குவரத்து சேவை ,போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமிய மதத்திற்குரிய பெயருடன் அமைனா வங்கி, ரிதிதென்ன பல்கலைக்கழகம், காத்தான்குடி போன்று ஈச்சமரம் கொண்ட புதிய கல்முனை நகர் உருவாக்கம், தொல்பொருள் நிலையம், போன்ற நிர்வாக கட்டமைப்புகள் ஒரு அரபுதேசத்திற்கு உருவாகிவிட்டதை தெளிவாக காட்டுகின்றது. இல…
-
- 1 reply
- 447 views
-
-
மஹிந்த ராஜபக்ச ஆட்சியே தற்போதும் நடைபெறுகின்றது
-
- 0 replies
- 150 views
-
-
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையில் ஒருமித்த நாடு; பௌத்தத்திற்கான முதலிடம் நீக்கம் எனக் கூறி கூட்டு எதிர்க்கட்சியினர் போர்க்கொடி;சபையில் பாரிய சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்பு தொடர்பாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் அரசியலமைப்பு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஐக்கிய இலங்கை என்ற பதம் மாற்றப்பட்டு ஒருமித்த நாடு என்றுள்ளது. பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதலிடத்தினை நீக்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்…
-
- 0 replies
- 186 views
-
-
5 அமைச்சுக்களையும் விசாரிக்கக் கோரும் பிரேரணையில் திருத்தம் முதல்வரின் எதிர்ப்பை மீறி அடுத்த அமர்வில் விவாதம் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதும் தெரிவுக்குழு விசாரணை நடத்தக் கோரும் பிரேர ணையை எடுக்க வேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும், இந்தப் பிரேரணை திருத்தங்களுடன் அடுத்த அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் அறிவிப்பின்போது, மாகாணத் தெரிவுக்குழு அமைக்கக் கோரும் பிரேரணை திருத்தங்களுடன் அடுத்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார். வடக்கு மாகாண …
-
- 0 replies
- 158 views
-
-
மகாநாயக்க தேரர்களை மீறி எதனையும் செய்யமாட்டோம் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியின் தலையீட்டினால் பிரதமருக்கு வலியுறுத்தப்பட்டமைக்கு அமையவே காணாமலாக்கப்படுவதில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தடுக்கப்பட்டது. மக்களின் ஆணையையும் மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டையும் மீறி அரசியலமைப்பு வரப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. சர்வதேச விசாரணையை நிராகரிப்பதும் இராணுவத்தை பலப்படுத்துவதுமே கட்சியினதும் ஜனாதிபதியினதும் உறுதியான நிலைப்பாடு எனவும் அக்கட்சி குறிப்பிட்டது …
-
- 0 replies
- 258 views
-
-
திங்களன்று இலங்கை வருகிறார் ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கியநாடுகளின் மனித உரிமை மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான விசேட நிபுணர் பென் எமர்சன் எதிர்வரும் 10 ஆம்திகதி இலங்கை வருகிறார். எதிர்வரும் 14 ஆம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா. நிபுணர் பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அவை எவ்வாறு மனித உரிமையை ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், ந…
-
- 0 replies
- 304 views
-
-
எனது அமைச்சை ஜனாதிபதி கேட்டால் கொடுக்கத் தயார் : சாகல ரத்நாயக்க அழுத்தங்கள் இன்றி நான் சுயாதீனமாகவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் கடமைகளை முன்னெடுக்கின்றேன். ஜனாதிபதி என்னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்பேற்று வேறு அமைச்சுப் பொறுப்பில் என்னை கடமை செய்யுமாறு பணிப்பாரானால் அது தொடர்பில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அந்த அமைச்சிலும் இதே போன்று சிறப்பாக சேவைகளை முன்னெடுப்பேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சார்க் நாடுகளின் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களின் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக்வியலாளர் சந்திப்பில் கலந்துகொன்டு ஊடக்வியலாளர்களின் கேள்விக்கு…
-
- 0 replies
- 239 views
-
-
சிங்களத்தில் சீறிய தமிழ் அமைச்சர்; சிடுசிடுத்த எதிரணி உறுப்பினர்! யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இன்றைய தினம் நாடாளுமன்றில் கடுந்தொனியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் பேசியபோது, எதிரணியைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த நிலையிலேயே அவர் சிங்கள மொழியில் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. எதிரணியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளரான தினேஸ் குணவர்தன உள்ளிட்ட சிலரே இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் ஆத்திரமுற்ர அமைச்சர், “அபிட்ட கத…
-
- 1 reply
- 764 views
-
-
யாழ். பல்கலையில் இராணுவத்தினர் பந்தல் அமைக்கும் பணியில்! யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்றையதினம் இராணுவ வாகனங்களில் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் பந்தல் அமைப்பதற்கான பொருட்கள் கொண்டுசெல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதன்பின்னர், பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களுடன் இராணுவத்தினர் சிவிலுடையில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றர். யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினருக்கு என்ன வேலை? இது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது http://thuliyam.com/?p=72804
-
- 1 reply
- 614 views
-
-
கொழும்பு வந்தார் தமிழிசை! - சிறிதரன்,சிறிநேசன் வரவேற்பு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவி வைத்திய கலாநிதி தமிழிசை சௌந்தர்ராஜன், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை கொழும்பு வந்தடைந்தார். அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிவஞானம் சிறிதரன், ஞா.சிறிநேசன் ஆகியோர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர். தமிழிசை தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/listAllNews.php?newsID=185784&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
அரசியல் லாபங்களை ஒதுக்கி விட்டு மக்களுக்காக மட்டும் பேசுங்கள் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்றைய தினம் -06- நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர், பொருத்து வீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிப்பவர்கள் சற்று சிந்தித்து விட்டு பேச வேண்டும். தெற்கிலும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவ்வாறான நிலையிலும் கூட வடக்கு கிழக்கிற்கு வீட்டுத்திட்டங்கள் எமது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசின் திட்டங்களை குறை கூற வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்க வேண்டியது அவசியம். வீடுகள் தொடர்பில் மக்கள் மூலம் எமக்கு 65,000…
-
- 1 reply
- 456 views
-
-
மகாத்மாக்களை புரியாததால்தான் கிட்டுகள் வேறு மொழியில் பேசினர் in செய்திகள், முக்கிய செய்திகள் July 6, 2017 மகாத்மாக்களின் அகிம்சை மொழியை சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத் தொடங்கினார்கள். என்று வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சாவற்கட்டு மகாத்மா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகாத்மா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், கிட்டு முன்பள்ளி என்ற பெயரே இராணுவத்தின் நெருக்குதல் காரணமாக மகாத்மா முன்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. …
-
- 1 reply
- 693 views
-