Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா கலந்து கொண்டார். அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் கடந்த ஞாயிற்கு கிழமை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுனில் பெரேரா வெளியிட்ட கருத்தினால் குழப்பமான நிலை ஒன்று ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் அரசியல் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அவரை தாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த மதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை நீக்க வேண்டும். இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …

  2. இந்தியா மீதான குற்றச்சாட்டு – நழுவுகிறார் மகிந்த அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததற்கு, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வே காரணம் என்று குற்றம்சாட்டி வந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு மகிந்த ராஜபக்ச செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில், “2015 தேர்தலில் உங்களின் தோல்விக்கு, இந்தியாவே குறிப்பாக, ‘றோ’ அமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தீர்கள். எப்படி இருக்கிறது?” என்று மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சிரித்துக் கொண்டே, “உங்களுக்குத் தெரியும், நான் கடந்த காலத்துக்குள் செல்வதற்கு விரும்பவ…

    • 3 replies
    • 500 views
  3. எங்கள் மக்களின் காணியை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது! சம்பந்தன் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளும் தற்போது இல்லை. இந்த நிலையில் எங்கள் மக்களுடைய காணிகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என்று எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணிப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, படைத்தளபதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித…

  4.  'ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்' -எஸ்.நிதர்ஸன் “இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படையினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, வட - கிழக்கு மாகாணங்களில், மக்களின் காணிகளில் அமைந்துள்ள படைமுகாம்களுக்கு காணி உரிமையாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தில், புதுவருடத்தை ஒட்டி சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளு…

  5.  நூல் விநியோகம் இடைநிறுத்தம் -எஸ்.என்.நிபோஜன் "கரை எழில்" நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக, அந்நூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக, கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால், வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில், 'கரை எழில்' எனும் நூலும் வெளியிடப்படுவது வழமை. ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில், 'கிளிநொச்சியும் மலையக தமிழர்களும்' எனும் தலைப்பில், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரையும் வெளிவந்திருந்தது. குறித்த…

  6. கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது யாழ்ப்பாணம், சாவகச்சேரி குடாரிப்பு பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவை கடத்த முயன்ற நபரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குநித்த நபர் 6.265 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தும் போது கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபரையும் மோட்டார் சைக்கிள் மற்றும் கேரள கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/19154

  7. எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ள…

  8. அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது விடுதலைப்போராட்டத்தில்…

  9. குப்பை மேடு சரிவு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/19056

  10. மக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும்: வியாழேந்திரன் I மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்க திராணியற்றிருக்கும் அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கிலே உள்ள சில அரசியல் தலைமைத்துவங்களின் அரசியல் சுயநலப் போக்கு காரணமாக மக்களின் காணிகளை இழக்க வேண்டியேற்பட்டுள்ளது. முன்…

    • 0 replies
    • 230 views
  11. காணாமல்போனோர் அலுவலகம் குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி விரைவில் முடிவெடுப்பார் – கருணாசேன ஹெட்டியாராச்சி காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்கும் சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் தமக்குள்ள ஆட்சேபனைகள் குறித்து 15 பக்கங்களடங்கிய ஆவணத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் அதற்கு விர…

  12. அம்பாந்தோட்டை துறைமுகம் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் – ஜப்பான் வலியுறுத்தல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பயன்பாடு, திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டியதும், சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதும், சிறிலங்காவின் நிலையான அபிவிருத்திக்கு முக்கியமானது என்று சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டணிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 12ஆம் நாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை ரோக்கியோவில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ஜப்பானியப் பயணத்தை முடித்துக் கொண்டு, சிறிலங்கா பிரதமர் கடந்த ஞாயிற்றுக…

    • 0 replies
    • 164 views
  13. அரசாங்கம் உத்தரவிட்டால் காணிகளை விடுவிக்கத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டால், பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த சந்திப்பு ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி தம்மிடம் இவ்வாறு குறிப்பிட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த…

    • 0 replies
    • 327 views
  14. நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல யாழ்ப்பாண மக்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடமே வருகின்றார்கள். நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. ஒரு ஆளுநர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (18) மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆளுநரிடம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பது மாகாண சபையினதும்இ மத்திய அரசாங்கத்தினதும் கடமையாகும். எனக்கு அந்த கடமை இல்லை. முன்னர் இவ்வாறான பிரச்சினை தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. தொண்டர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை கோருவதையே அறிந்திருக்கின்றேன். இப்போது 1…

    • 1 reply
    • 267 views
  15. ஜீ. எஸ். பி. வரிச்சலுகை விவகாரம் : இலங்கைக்கு இன்று பெல்ஜியத்தில் பலப்பரீட்சை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை இலங்கை மீண்டும் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று பெல்­ஜியம் - பிரசெல்ஸ் நகரில் ஆரம்­ப­மா­கின்­றது. இதன் போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்­பீட்டு அறிக்கை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. மனித உரி­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் கார­ண­மாக நீக்­கப்­பட்ட ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை மீண்டும் மே மாதத்தில் இருந்து கிடைப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தாக அர­சாங்கம் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளது. …

  16.  ஐரோப்பிய ஒன்றியம் விசனம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கான, இலங்கையின் விண்ணப்பம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு முன்னர், இலங்கையின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையறியும் குழுவொன்று விசனங்களை தெரிவித்துள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்தினுள் தொழிலாளர் உரிமைகள் மீறப்படுதல், பாலியல் தொல்லை, தொழிற்சங்கத் தலைவர்களை வேலை நீக்கம் செய்தல், தொழிற்சங்கங்களுக்குத் தொல்லை கொடுத்தல் உட்பட தொழிலாளர் உரிமை மீறல்களுக்கு முகம் கொடுக்கும் ஊழியர்களை, ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு சந்தித்துள்ளது என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம் கூறியது. ஐரோப்பிய நாடாளுமன்…

  17. கிளிநொச்சி - பளைப்பகுதியில் பொலிஸாரின் செயற்பாடுகள் அத்துமீறி உள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்புக்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பளைப்பகுதியில் வீதி போக்குவரத்து கண்காணிப்புக்களில் ஈடுபட்டு வரும் பொலிஸார் பெண்களை வழிமறித்து அவர்களை நீண்டநேரம் காக்க வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை ஏனைய வாகனங்களை வழிமறித்து உரிய ஆவணங்களை பரிசோதனை செய்துவிட்டு அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை விட பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணை செய்யப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டியள்ளனர். இதேவேளை குடும்பப்பி…

  18. “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த:- “விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச் சொல்லிக் கேட்கவில்லை மாறாக இந்தியா தானே முன்னவந்து பல்வேறு உதவிகளை செய்திருந்தது. சாதகமான வழிகள் ஊடாக பல உதவிகளை வழங்கியிருந்தனர். உண்மையில் அது என்னுடைய போர் இல்லை மாறாக இந்தியாவின் போர்…

  19. அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில் தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர் உரிமையை வலியுறுத்தியும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் உண்ணா விரதமிருந்த நிலையில் உயிர் நீத்த அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அவரது கல்லறையில் நாளை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தநிகழ்வு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் அன்னை பூபதியின் உறவினர்களால் சமாதிக்கு மாலையணிவிப்பு, மலரஞ்சலி, நினைவுச் சுடரேற்றல், அகவணக்…

    • 1 reply
    • 406 views
  20. மோதலை வேடிக்கை பாரத்ததால் கடித்துக் குதறப்பட்டார் இளைஞர் சாவகச்சேரி - வரணி கரம்பைக்குறிச்சிப் பகுதியில் இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை வேடிக்கை பாரத்த இளைஞரை பற்களால் கடித்துக் குதறியுள்ளார் நபரொருவர். கரம்பைக்குறிச்சியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு கடிகாயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் இரு பகதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் ஓடிவந்து அங்கிருந்த இளைஞரை பற்களால் கடித்துக் குதறியுள்ள…

  21. வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வு வழங்க முடிவு வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதனை முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான விண்ணப்பக் கோரல்கள் இடம்பெறும் என்று சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டில் நாட்டின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான வகிபாகம் என்னும் தொனிப் பொருளிலான புத்தாண்டு நிகழ்வு இன்று யாழ்ப்பாண மா…

  22. போராட்­டங்கள் நியா­ய­மா­னவை மக்­களின் கருத்­து­க­ளுக்கு முன்­னு­ரிமை எதிர்க்­கட்சித் தலைவர் அறி­விப்பு (ஆர்.ராம்) காணி­களை மீட்­டெ­டுப்­ப­தற்­காக மக்கள் முன்­னெ­டுக்கும் போராட்­டங்கள் நியா­ய­மா­னவை. அவ்­வா­றான போராட்­டங்­க­ளினால் தொடர்ந்து எமது மக்கள் அவஸ்­தைக்­குள்­ளா­வதை நாம் விரும்­ப­வில்லை என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். அத்­துடன் மக்கள் விருப்­பத்தை தாண்டி நாம் எத­னையும் செய்­யப்­போ­வ­தில்லை எனக் குறிப்­பிட்ட சம்­மந்தன் மக்­களின் கருத்­துக்­க­ளுக்கே முத­லிடம் அளிக்­கப்­ப­டு­மெ­னவும் திட்­ட­வட்­ட­மாகத் அறி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்…

  23.  புலிகளின் ஜெயந்தன் அணியைத் தேடி வேட்டை ஏ.எச்.ஏ.ஹுஸைன் தமிழீழ விடுதலைப் புலிகளின், ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றது. அந்தப் படையணியிலிருந்து தப்பிச்சென்று, தென்னிந்தியாவில் தலைமறைவாகி வாழ்ந்தவர்களில் சிலர் நாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்தே, இந்தத் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. ஜெயந்தன் படையணியைச் சேர்ந்தவர்களில் சிலர், மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலேயே, நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தத்தரப்பு தெரிவித்த…

    • 2 replies
    • 400 views
  24. புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் - யாழ்ப்பாணப் பல்கலை சமூகம் தெரிவிப்பு மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­படை வச­தி­கள் இன்­ன­மும் பூர்த்தி செய்­யப்­ப­டா­மல் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதி­தாக பத­வி­யேற்­கும் துணை­வேந்­தர் இந்­தக் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­வார் என மாண­வர்­கள் எதிர்­பார்ப்­ப­தாக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கக் கலைப்­பீட மாண­வர் ஒன்­றி­யத் தலை­வர் ரஜீ­வன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்ததாவது, இப்­போது பல்­க­லைக்­க­ழ­கப் பட்­டப்­ப­டிப்பு முடிந்­த­வு­டன் வெளியே வேலை செய்­வ­தற்கு கணனி மற்­றும் ஆங்­கில அறிவு தேவைப்­ப­டு­கின்­றது. அதனை முறை­யா­கக் கற்­ப­தற்­குத் தனித்­தனி அல…

  25. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் ; ரணில் நாடு திரும்பி­ய­வு­டன் இடைக்­கால அறிக்கை வரும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க நாடு திரும்­பி­ய­வு­டன் இறுதி செய்­யப்­பட்டு கட்­சி­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­காக நாடா­ளு­மன்­றம் அர­சி­யல் நிர்­ண­யச் சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அர­சி­யல் நிர்­ண­யச் சபை­யி­னால் அனைத்­துக் கட்­சி­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக வழி­ந­டத்­தல் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. வழி­ந­டத்­தல் குழு­வின் இந்த மாதக் கூட்­டத்­தில் இடைக்­க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.