ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வீதியோரத்தில் அரப்பு வைத்த வேலையற்ற பட்டதாரிகள் மட் ட க்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் புதுவருட தினமான இன்று வீதியில் அரப்பு வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சத்தியாகிரக போராட்டம் தொடங்கி இன்றுடன் 53 வது நாளை கடந்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . அரசியல் வாதிகளும் அரசாங்கமும் வீடுகளில் புதுவருடம் கொண்டாடும் போதும் பட்டதாரிகள் வீதிகளில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/19038
-
- 22 replies
- 2k views
-
-
சந்திரபோஸ் சுதாகரன் கொல்லப்பட்டு ஒரு தசாப்தம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் நிலம் என்ற தமிழ் இதழின் ஆசிரியருமான எஸ்.போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகரன் கொல்லப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் ஊடகங்களில் எழுதி வந்த சுதாகரன் வீரகேசரி பத்திரிகையிலும் பணியாற்றியவர். இவர் வவுனியாவில் திருநாவற்குளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2007, ஏப்ரல் 16ஆம் திகதி இரவு இனந்தெரியாத கொலையாளிகள் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈழத் தமிழ் இனத்தின் குரல்களை ஒழிக்கும் ஒரு கொடுஞ்செயலாக இவரது கொலை கருதப்படுகிறது. இவரது வீட்டுக்குச் சென்ற ஆயுதம் த…
-
- 0 replies
- 541 views
-
-
கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திப்பு எஸ்.நிதர்ஷன் காணி விடுவிப்பு மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை உள்ளடங்கலாக வடபகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை திங்கட்கிழமை (17) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பொது மக்களின் காணிகளை முப்படையினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதனை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருந்தும் இதுவரையில் விடுவிக்காத நிலையில் மக்கள் தாங்களாவே போராட்டங்களை ஆரம்…
-
- 0 replies
- 291 views
-
-
77ஆவது அகவையில் இராயப்பு ஜோசப் ஆண்டகை எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் அதி மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினமான இன்று (16), தனது 77 ஆவது அகவையில் காலடி எடுத்துவைத்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய காலப்பகுதியில், நாட்டில் இடம் பெற்ற போர் தொடர்பில், சர்வதேசத்தைத் திசை திருப்பச் செய்து, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையைப் பறை சாற்றியவராவார். மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த போதும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகாகவும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணம் செய…
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கை படையினரிடம் ஐ.நா வின் எதிர்பார்ப்பு இதுவா.? ஐ.நா அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுப்பு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களில் தொடர்புபடவில்லை என்பதை ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், இலங்கையிடம் இதனையே ஐ.நா எதிர்பார்க்கிறது என்றும் குறிப்பிட்டார். ஹெய்டியில் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஐ.நா அமைதிகாப…
-
- 0 replies
- 219 views
-
-
அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ள பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா, எதிர்வரும் 21ஆம் நாள் கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், பிரெக்சிற்குப் பிந்திய உலகின் சவால்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார். ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சராக அலோக் சர்மா பதவியேற்ற பின்னர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். http://www.puthinappalakai.net/2017/…
-
- 0 replies
- 307 views
-
-
ஜப்பான்- சிறிலங்கா இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு இந்தியப் பெருங்கடலில் அமைதியை பாதுகாப்பது என்ற பொதுவான தளத்தின் கீழ், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும், ஜப்பானிய தற்பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை ரோக்கியோவில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ரொமோமி இனாடாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே, இந்தியப் பெருங்கடலில் அமைதியை பாதுகாக்கும் நோக்கில் இரண்டு நாடுகளின் படைகளும் இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது. சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மி…
-
- 0 replies
- 197 views
-
-
தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துகின்ற இரகசிய சதித்திட்டம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறதா? கடந்த 7ம் திகதி பாராளுமன்றில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இக்கேள்வியை எழுப்பியிருந்தார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பினார். காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் 50 நாட்களுக்கு மேலாக கிளிநொச்சி, வவுனியாவில் கொதிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் அதற்குச் சமாந்தரமாக முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமல…
-
- 1 reply
- 415 views
-
-
எயிட்ஸ் நோய் என தடை போட்ட பாடசாலை பரீட்சையில் சாதித்து பதிலடி கொடுத்த மாணவி பாடசாலையில் படிப்பதற்கு பல தடைகளை எதிர் கொண்ட மாணவி தவணை பரீட்சையில் முதலாம் இடத்தை பிடித்து பதிலடி கொடுத்துள்ளார்.எயிட்ஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகித்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சில பெற்றோரின் அழுத்தம் காரணமாக மாணவி ஒருவருக்கு கல்வியை இடை நிறுத்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. இந் நிலையில் கனேமுல்லேயிலுள்ள பாடசாலையை சேர்ந்த மாணவி இம்முறை தவணை பரீட்டையில் முதலாம் இடத்தை பிடித்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கனேமுல்ல பகுதியின் ஸ்ரீசுமங்கல பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாண விக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று காணப்படுவதாக தெ…
-
- 2 replies
- 548 views
-
-
இலங்கை இராணுவம் மீது மீண்டும் பாலியல் மீறல் குற்றச்சாட்டு ஹெய்டியில் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறுவர்களை துர்நடத்தைக்கு உட்படுத்தினர் ஹெய்ட்டியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றிய இலங்கைப் படையினர், அங்குள்ள சிறுவர்களைத் துர்நடத் தைக்கு உட்படுத்தினர் என மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சுமார் 130 இலங்கை இராணுவத்தினர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலை ஏ.எவ்.பி. செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.இலங்கையில் நடைபெற்ற இறுதிப் ேபாரின்போது, பாதுகாப்புத் தரப்பினர் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டனர் என்ற …
-
- 1 reply
- 247 views
-
-
அமெரிக்க – சிறிலங்கா இராணுவ ஒத்துழைப்பு: யாருக்குச் சாதகம்? சிறிலங்கா ஒரு சிக்கலான நாடாகும். ஜனவரி 2015ல் மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என நிலாந்தி சமரநாயக்க தனது அண்மைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு வலுப்பட்டுள்ளமையானது, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தியத்தில் செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்ற தனது நீண்ட கால நலன்களை அடைந்து கொள்வதற்கான அமெரிக்…
-
- 0 replies
- 413 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் விரைவில் பேச்சு – மாவை அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் யாழ்; சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் ஏனைய கைதிகளுடன் கலந்துரையாடிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணம…
-
- 6 replies
- 770 views
-
-
யாழில் மண் கல் விற்பனையில் – கொடி கட்டிப் பறக்கும் அதிகாரி – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அராலியூர் குமாரசாமி:- யாழ்ப்பாணத்தில் மண் கல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு அதிகாரியை மேலதிகாரியால் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்றால் இவருக்கு பின்னால் மேலதிகாரிக்கு மேலே யாரோ இருக்கிறார்கள் என்பது உண்மை. மக்கள் இன்னும் மீளக்குடிமர இருக்கும் பிரதேசத்தின் செயலராக இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாகன இலக்கத்துக்கு முன்னால் இருக்கும் எழுத்துப் போல் இவரின் பெயருக்கு முன்னாலும் அந்த எழுத்து இருக்கிறது என்றால் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை பாருங்N;கா. அதனால்த் தான் என்னவோ 2 லொறி 2 டிப்பர் கார் மோட்டார் சைக்கிள் என்று நிறைய வாகனங்களை வாங்கி தனது…
-
- 1 reply
- 668 views
-
-
வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு பேரணி! [Friday 2017-04-14 17:00] புதுவருட தினமான இன்று வவுனியாவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, ஹொரவபொத்தானை வீதி வழியாக சென்று மீண்டும் போராட்ட இடத்தை அடைந்துள்ளது. உறவுகளின் போராட்டத்திற்கு பதில் என்ன? சம்பந்தன் ஐயாவே பதில் சொல்லு உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=180406&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 260 views
-
-
புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார் vanee 17 hours ago தமிழீழம் 12 Views தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர். இதனால்தான் மக்கள் ஒரு புதிய அரசியல்மாற்றத்திற்காக அணிதிரளும் நிலைக்குள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்;திரகுமார்தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பிரதேசத்தில் சமத்துவம், சமூகநீதிக்க…
-
- 0 replies
- 310 views
-
-
சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான் மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது. சிறிலங்கா- ஜப்பானிய பிரதமர்களின் முன்னிலையில், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவரும், ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவரும் இதுதொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஜப்பான் வழங்கவுள்ள 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டங்களாகும். ஒன்று கொடைத் திட்டமாகும். கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக ஜப்பான் 12.957 பில்லியன் யென்னை …
-
- 6 replies
- 881 views
-
-
புத்தாண்டு எமது வாழ்வில் புதியதொரு ஆரம்பமாகட்டும் ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து (நமது நிருபர்) பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்தும் பழைமைவாதப்போக்கிலிருந்தும் விடுபட்டு, புதிய மனிதனாக உருவாக வேண்டும் என்பதே சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். அவ்வாறு புதிய சிந்தனைகளுடன் புதுப்பிக்கப்படுவதனாலேயே புத்தாண்டு எமது வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக கருதப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்க…
-
- 11 replies
- 937 views
-
-
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். சித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும். அடுத்த வருடத்திலாவது தங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் …
-
- 1 reply
- 296 views
-
-
கேப்பாபுலவு மக்கள் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு கடைப்பிடிப்பு: தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்றைய தினம் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு தினமாக அனுஷ்டித்துள்ளனர். கறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கறுப்புடை அணிந்து கறுப்பு சித்திரைப் புத்தாண்டை அனுஷ்டித்துள்ளனர். 0 https://globaltamilnews.net/archives/24103
-
- 0 replies
- 218 views
-
-
பிரித்தானிய அமைச்சர் ஆலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா இலங்கைக்கு வர உள்ளார். எதிர்வரும் வாரத்தில் அவர் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் சந்திப்புக்களை நடத்த உள்ள அமைச்சர் ஆலோக் சர்மா எதிர்வரும் 21ம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் விசேட உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார். https://globaltamilnews.net/archives/24073
-
- 0 replies
- 512 views
-
-
போராடும் மக்களை சந்தித்து வாழ்த்திய இராணுவம்! காணிகளை விட்டு வெளியேற மக்கள் கோரிக்கை முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 55ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பண்டிகைத் திண்பண்டங்களையும் மக்களுடன் பரிமாறியுள்ளனர். எனினும் தாம் புத்தாண்டை கொண்டாடும் நிலையில் இல்லை எனத் தெரிவித்த கேப்பாபுலவு மக்க…
-
- 0 replies
- 461 views
-
-
சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்த அங்கொட லொக்கா பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அண்மையில் களுத்துறையில் சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் படுகொலைச் சம்பவத்துடன் அங்கொட லொக்காவிற்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. அங்கொட லொக்கா தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு ஒன்றிலிருந்து பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பினை ஏற்படுத்தி சரணடைய விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்தோனேசியாவிலிருந்து இந்த அழைப்பு எடுக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 480 views
-
-
மாறும் அரசாங்கங்களும் என்றும் மாறாத அதன் பண்புகளும் இலங்கைத் திருநாட்டின் மகிமை மக்கள் மத்தியில் ஆழ் மனதில் ஏற்பட வேண்டும். இந்தியர்களிடத்தில் உள்ள அந்த தேசப் பற்று இலங்கையர்களிடமும் உருவாக்கப்பட வேண்டும். இலங்கையிலுள்ள சகல சமூகத்தவரும், அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் தேசிய இனம் என்ற சிந்தனை உருவாக்கப்பட வேண்டும் என்பது இன்றுள்ள புத்திஜீவிகளிடத்தில் புதிதாக எழுந்துள்ள பழைய சிந்தனையாகும். இந்த சிந்தனையை புத்திஜீவிகளிடத்தில் உருவாக்கி, அதனை புத்திஜீவிகள் ஊடாக ஒவ்வொரு கிராமம் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என உழைப்பதற்கு திரை மறைவிலும், வெளிப்படையாகவும் பல அமைப்புக்கள் கைகோர்த்து செயற்பட ஆரம்பித்துள்ளன. …
-
- 0 replies
- 151 views
-
-
ஜனாதிபதிக்கு 580 லட்சம் ரூபாவுக்கே கார் வாங்கப்பட்டது, 600 மில்லியன் என்பது பொய் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 600 மில்லியன் ரூபா செலவில் வாகனம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஒரு வதந்தி எனவும், 58 மில்லியன் ரூபாவுக்கே ஜனாதிபதிக்கு வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதி அமைச்சில் இன்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷ செலவு செய்ததில் 2 அல்லது 3 வீதத்தையே தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் செய்து வருகின்றனர். ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு தேவையான வாகனம் வேண்டும் என அவரது பாதுகாப்புப் பிரிவு கே…
-
- 4 replies
- 533 views
-
-
இன்றைய நிலையில் 9 லட்சம் கோடிகளை இலங்கை கடனாக கொண்டுள்ளது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கை நாடும், நாட்டு மக்களும் 9 லட்சம் கோடிகளை கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே. கடந்த காலத்தினால் ஏற்பட்ட திருட்டு கொள்ளைகள் மூலமாகவே இத்தகைய பாரிய தொகையினை இலங்கை தொலைத்துள்ளது. அதே…
-
- 2 replies
- 525 views
-