ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
கலைப்படைப்புகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யுமளவுக்கு பொலிசாருக்கு புத்தி கெட்டுப்போயுள்ளதா என்று கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். சிங்களத் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் நாடக மாரய், ஹதஹமாரய் எனும் தொலைக்காட்சித் தொடரின் கலைஞர்கள் பொலிஸ் சீருடைக்கு அகௌரவம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பொலிஸ் மா அதிபரின் முன் அனுமதியின்றி திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளிட்ட எந்தவொரு கட்டத்திலும் பொலிசாரின் சீருடை அல்லது அதனையொத்த சீருடைகளை அணியவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சித் தொடரின் கலைஞர்களுக்கு எதிரான வழக்கை கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுப…
-
- 1 reply
- 411 views
-
-
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவைதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் அதிகாரிகள் 8 பேரை கைது செய்தற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவு மற்று ஆலோசனையின் படி கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 8 இராணுவத்தினர் தாஜூடீனை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கி கொலை செய்து, அவரது காருக்கு போட்டு எரியூட்டியுள்ளமை சம்பந்தமாக பல சாட்சியங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய உயர் மட்ட அரசியல்வாதி ஒருவரின் சாரதியாக பணியாற்றிய இராணுவ அதி…
-
- 1 reply
- 389 views
-
-
இராணுவத்தினரால் கடத்தப்பட்ட மகனை கடற்படை சீருடையுடன் கண்டனர். இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எனது மகன் நயினாதீவில் கடற்படை சீருடையுடன் நின்றார் என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவினால் மக்ஸ்வெல் பரணகம தலைமயில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த அமர்வில் கோப்பாய் , கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவை சேர்ந்த 232 பேர் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த அமர்வில் காணாமல் போ…
-
- 0 replies
- 380 views
-
-
தமிழில் தேசிய கீதம்: எதிர்த்து வழக்கு சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். களனி கல்பொருள்ளயை வதிவிடமாகக்கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர். - See more at: http:/…
-
- 3 replies
- 453 views
-
-
சரணடைந்தபோது சகோதர்கள் இருவரையும் இராணுவத்தினர் கைது செய்தனர் எம்.றொசாந்த் சகோதரன், சகோதரி இருவரும் இறுதி யுத்தத்தின் போது தன்னுடன் சரணடையவந்த போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். எனினும் தற்போது வரை அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என தாயார் ஒருவர் சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள், ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் இன்று சனிக்கிழமை (27) கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்றது. இதில் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிக்கின்றனர். இதில் கலந்து கொண்டு சாட்சியம…
-
- 0 replies
- 420 views
-
-
ராஜிதவை பார்வையிட ஜனாதிபதி சிங்கப்பூருக்கு அவசர பயணம் சுகயீனம் காரணமாக சிங்கப்பூரின் பிரபலமான மலவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை 7.41 மணியளவில் அவசரமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். யுஎல்302 என்ற விமானத்திலேயே ஜனாதிபதி சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த 20 ஆம் திகதி சிங்கப்பூருக்கு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்…
-
- 1 reply
- 494 views
-
-
கலப்புத் திருமணம்: இனச்சுத்திகரிப்பு முயற்சியா? சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒருவராகச் செயற்படுவார் என்று பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டவுடனேயே சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் கடந்த 19ஆம் திகதி நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தெரிவித்த கருத்து, தமிழ் மக்கள் மத்தியில் பாரதூரமானதொரு விவகாரமாக பார்க்கப்படுகிறது. இலங்கையில் கலப்புத் திருமணங்கள் மூலம், அமைதியை ஏற்படுத்தலாம் என்ற கருத்தையே அவர் வெளியிட்டிருந்தார். சாதி, மத, இன அடையாளங்களுக்கு அப்பால், கலப்புத் திருமணங்களைச் செய்வதன் மூலம், நாட்…
-
- 2 replies
- 407 views
-
-
பொது மன்னிப்பு வேண்டாம்; பிணை வழங்குங்கள் - அரசியல் கைதிகள் கோரிக்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுடன் கலந்துரையாட உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார். இன்று பகல் 12.30 மணியளவில் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, தமக்கு பொது மன்னிப்பு வேண்டாம் என்றும் தம்மீது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் தமக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யவோ அல்லது தம்மை பிணையில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கு…
-
- 0 replies
- 321 views
-
-
வியத்தகு சாதனை புரிந்த இலங்கை மருத்துவர்கள் பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளனர் இலங்கை மருத்துவர்கள். காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேல்கொள்ளபட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின் குறிந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட விஷேட மருத்துவ உடையின் உதவியுடன் நிமிர்ந்து சாதாரண மனிதர்களை போல் நடக்க முடிகின்றது. இந்த சத்திரசிகிச்சைக்கு முன் அசங்க பியமால் என்ற அந்த மாணவன் ஒரு பக்கமாக சாய்ந்து தான் நடப்பார். இந்த வருடம் கா.போ.த சாதாரணத் தர பரீட்சை தோற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சத்திர சிகிச்சைய…
-
- 11 replies
- 749 views
-
-
தாத்தாவை தாக்கிவிட்டு தாயாரால் கடத்தப்பட்ட ஜந்துவயதுச் சிறுமி, கிளிநொச்சியில் அவலம்… கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை முன்பள்ளியிலிருந்து தனது தாதாவுடன் வீடு திரும்பிக் காண்டிருந்த சிறுமி இனந்தெரியாத உந்துருளியில் பின் தொடர்ந்த இரண்டு நபர்களால் கடத்திச்செல்லப்பட்ட சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அம்பாள்குளம் பகுதியைச்சேர்ந்த லிங்கேஸ்வரன் கிசானி எனும் சிறுமி முன்பள்ளி முடிந்து தனது அப்பாவின் அப்பாவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பின் தொடர்ந்த இரண்டு நபர்கள் சிறுமியின் தாதாவை தாக்கி விட்டு சிறுமியை தூக்கிச் சென்றுள்ளனர். உடனடியாக சிறுமியின் தந்தை மற்றும் தாதா ஆகியோர் ப…
-
- 4 replies
- 625 views
-
-
2009ம் ஆண்டு இறுதியுத்தம் காரணமாக சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் பரம்பரை சொத்துக்களை முள்ளிவாய்க்கால் வரை எடுத்துச்சென்று இறுதியில் கைவிடப்பட்ட பொருட்கள் இராணுவத்தினரால் திதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையை தற்பொழுதும் காண முடிகின்றது. தமிழ் மக்களின் உடமைகள் அழிக்கப்பட்டிருந்தாலும் ஒரு இனம் கொடூரமான முறையில் அழிக்கப்பட்ட அடையாளங்கள் இன்னமும் அழிந்துவிடாமலே இருக்கின்றது. ; அந்தவகையில் மக்கள் வாழ்ந்த இடங்கள் போர்க்களங்களாக மாறியபொழுதும் மக்கள் பூக்களை சுமந்திருக்கின்றார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இன்று மதியம் முள்ளிவாய்க்கால் மக்களின் வாழ்விடங்களின் நிலைமை பற்றி அறிய எமது செய்தியாளர் அ…
-
- 5 replies
- 729 views
-
-
அமெரிக்க உதவித் தூதுவர் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம்! இலங்கைக்கான அமெரிக்க உதவி தூதுவர் அன்ரூவ் சிமன் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் அமெரிக்க ஆசிய பசுபிக் பிராந்திய கட்டளை பணியகத்தினால் 52 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் மற்றும் புனரமைக்கப்பட்ட விவசாய,விஞ்ஞான கூடங்கள் ஆகியவற்றை திறந்து மாணவர்களின் பாவனைக்கு கையளித்தார். நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல், கரைச்சி கோட்டக்கல்வி அதிகாரி அமிர்தலிங்கம் பாடசாலையின் …
-
- 0 replies
- 245 views
-
-
காணாமல் போனோர் தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணைகள் யாழில்! காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் விசாரணை அமர்வுகளை ஆரம்பித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பரணகம ஆணைக்குழு 2ஆம் கட்ட விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்த நிலையில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு அமர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் நடத்தப்படாத பிரதேச செயலக பிரிவுகளுக்கான விசாரணை அமர்வுகள் இன்றிலிருந்து எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய பிரதே…
-
- 0 replies
- 299 views
-
-
FCID யினால் 23 பேர் கைது 27-02-2016 10:58 AM Comments - 0 Views - 26 நிதிமோசடி விசாரணைப்பிரிவினால் Financial Crimes Investigation Department நேற்று 26ஆம் திகதி வரையிலும் 23பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 23 பேரில், பிரபல அரசியல்வாதிகள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களும் அடங்குகின்றனர். இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஒருவருடம் நிறைவடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.tamilmirror.lk/167013/FCID-%E0%AE%AF-%E0%A…
-
- 0 replies
- 306 views
-
-
ரவிராஜ் கொலைக்கு 5 கோடி பணம் வழங்கிய கோத்தபாய ராஜபக்ச [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2016, 02:07.56 AM GMT ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி ரியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வசந்த ஊடாக கருணா தரப்பிற்கு பணம் வழங்கப்ப…
-
- 0 replies
- 504 views
-
-
இந்த நாட்டில் பிரஜாவுரிமைச் சட்டம் 1948ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அதற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதனாலேயே தமிழ் அரசுக் கட்சியினை தந்தை செல்வா தோற்றிவித்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு உரையாற்றிய அவர், http://www.tamilwin.com/show-RUmuyCRaSWerzF.html
-
- 2 replies
- 1.6k views
-
-
வடக்கு மீனவர்களை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளது அரசாங்கம்: தினேஷ் குணவர்தன [ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2016, 04:03.13 AM GMT ] இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கமுடியாத நிலையிலேயே புதிய அரசு இருக்கின்றது. ஐரோப்பியாவுக்கு அடிபணிந்து எமது நாட்டு மீனவர்களை ஆபத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். மீன்பிடி, நீரியல்வள சட்டமூலத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம…
-
- 0 replies
- 403 views
-
-
காணிகளை சூறையாட இடமளிக்க முடியாது ; அரசாங்கத்திடம் கூட்டமைப்பு திட்டவட்டம் [ Saturday,27 February 2016, 03:19:02 ] வடக்கு, கிழக்கு பகுதிகளை துரித கதியில் அபிவிருத்தி செய்வது அவசியமாகும். எனினும் அபிவிருத்திகள் என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. எமது மக்கள் இப்போதும் தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத நிலைமையும் காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் முதற்கட்டமாக எமது மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு தெரிவித…
-
- 0 replies
- 428 views
-
-
தமது பூர்வீக நிலப்பரப்பை அடையாளம் செய்யவே வடகிழக்கு மக்கள் விரும்புகின்றனர்! இலங்கையின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது கருத்தறியும் அமர்வுகளில் தமது தாயகப் பரப்பு எவ்வாறு அடையாளப்படுத்தப்படவேண்டும் என்பதை வடகிழக்கு மக்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். காலம் காலமாக ஈழத் தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் அடிப்படையிலும் அவர்கள் சந்தித்த அழிவுக்கள், ஒடுக்குமுறைகளை கருத்தில் கொண்டும் தமது உரிமைக்கான அபிலாசைகளை இதில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சம உரிமையை வழங்க சிங்களப் பேரினவாத அரசுகள் மறுத்தபோதும் ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்பு செய்ய முற்பட்டபோதும் தனி நாடு குறித்த கோரிக்கை உருப்பெற்றது. இதற்காக ஈழ இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போ…
-
- 0 replies
- 433 views
-
-
வடமாகாண சபையில் ஆளும் கட்சிக்குள் உச்ச தொனியில் இரு மணி நேரம் கருத்து மோதல் வடமாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இரண்டு குழுக்களாக பிரிந்து சுமார் இரு மணி நேரம் கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது கடந்த அமர்வில் விவசாய அமைச்சர் மீது 11 குற்ற சாட்டுகள் முன் வைக்கப்பட்டு பிரேரணை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணையை மாகாண சபை பதிவேட்டில் (ஹன்சால்டில்) இருந்து நீக்க வேண்டும் என கோரி முதலமைச்சருக்கு எட்டு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பி இருந்தனர். எனவே அந்த பிரேரணையை…
-
- 4 replies
- 750 views
-
-
யாழில் கடல் நீரை நன்னீராருக்கும் திட்டத்துக்கு எதிராக ஆர்பாட்டம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மேள்கொள்ளப்படவுள்ள கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டிருக்கின்றது. அந்தப் பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசடைந்து செல்வதுடன், அங்கு நிலத்தடி நீர்வளம் குறைந்திருப்பதனால் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச கடற்பரப்பில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை ம…
-
- 1 reply
- 510 views
-
-
புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம் -குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டப…
-
- 10 replies
- 759 views
-
-
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் –அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நீதி விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெறுகின்றது என்பதனை உறுதி செய்ய சர்வதேச பங்களிப்பு அவசியமானது எனக் கருதினால் அதனை ஏற்றுக்கொள்ளத்தயார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டனில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறைமையின் போது சர்வதேச நீதவான்களாக இருக்கலாம், இரசாயன பகுப்பாய்வாளர்களாக இருக்கலாம், விசாரணையாளர்களாக இருக்கலாம் அல்லத…
-
- 1 reply
- 338 views
-
-
கலேவல பிரதேசத்தில் கை, கால்களை தூக்க முடியாமல் , ஒழுங்காக நடக்க முடியாமல் இருந்த ஒரு சகோதரிகள் இருவர் வெறும் 8 மணித்தியாலத்தில் குணமாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள நாட்டு வைத்தியர் ஒருவரே இருவரையும் குணப்படுத்தியுள்ளார். வறுமையால் வாடும் குறித்த குடும்பத்தின் பெண் பிள்ளைகள் இருவரையும் , கருணை உள்ளம் கொண்ட பிரதேச அரசியல்வாதியொருவர் குறித்த வைத்தியரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவர் 12 வருடங்களாக கண்டறியப்படாத நோய் நிலையால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரிகளை வெறும் 8 மணித்தியாலங்களில் குணமாக்கியுள்ளார். மேலும் தொடர்ந்து சில நாட்கள் வைத்தியம் செய்தால் முற்றிலும் குணப்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார். http://…
-
- 0 replies
- 494 views
-
-
அரசியல் எம்மை பிரிக்கிறது! வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டு! அரசியலானது எங்களை பிரித்து என்ன குறிக்கோளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறக்க வைத்திருக்கிறது. எங்களுடைய தனித்துவமான அரசியல் கட்சி ரீதியான ஏதோ எண்ணங்கள் எம்மை பிரித்து வைத்திருக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும் நோக்கம் வடமாகாணத்தை விருத்தி செய்வது என்று இருக்கும் போது அதற்கு இடமளிக்காது கட்சி ரீதியிலான பிர…
-
- 2 replies
- 362 views
-