ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர் [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2016, 04:02.16 AM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்க…
-
- 0 replies
- 246 views
-
-
ஆபாசப்பட இணையத்தளங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும்! ஆபாசப்படங்கள் மற்றும் காமக்கதைகளைப் பரப்பும் இணையத்தளங்கள் முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டும். அத்துடன் உயர்வகை மதுபானம், விலை மாதர்களின் செயற்பாடுகள் என்பவற்றுக்கும் கடுமையான இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு மக்கள் கருத்தறியும் அமர்வில் பங்கேற்ற சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். கே.தவராஜா என்ற குறித்த பொதுமகன் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, குற்றம் செய்பவர்களுக்கு பிணையற்ற ஒரு வருட கால சிறைத்தண்டனை வழங்குவதுடன், இரண்டு வருடங்களுக்கு நாட்டின் கடற்கரைகளை அழகுபடுத்தும் …
-
- 3 replies
- 665 views
-
-
யாழில் கழிவுப் பொருள்களை சேகரிப்பதற்கான தொட்டிகள்! யாழ். மாநகர சபையால் நகரப்பகுதிகளில் கழிவுப் பொருள்களைச் சேகரிப்பதற்கான தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடுதலாக நடமாடும் பகுதிகளில் அவை வைக்கப்பட்டுள்ளன. கடதாசிக் கழிவுகள் மற்றும் உக்கும், உக்காத கழிவுகள் என வேறாக்கி மக்கள் இந்தக் கழிவு சேகரிக்கும் தொட்டிகளில் போட வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/8922
-
- 4 replies
- 572 views
-
-
பிரகீத் வழக்கில் புதிய திருப்பம் – அரச சாட்சிகளாக மாறிய முன்னாள் புலிகள் இரகசிய வாக்குமூலம் FEB 17, 2016 | ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் அரசதரப்பு சாட்சியாக மாறியுள்ளனர். பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் அரசதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர். இவர்களை அரச…
-
- 0 replies
- 282 views
-
-
ஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள்! சம்பந்தன் வலியுறுத்தல் [ ஞாயிற்றுக்கிழமை, 14 பெப்ரவரி 2016, 02:27.14 AM GMT ] ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்தது. போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா இணக்கப்பாட்டின்…
-
- 38 replies
- 1.9k views
-
-
சமஸ்டி மறுக்கப்பட்டால் தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும் ; பொது அமைப்புக்கள் எச்சரிக்கை! புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சமஸ்டி உரிமை மறுக்கப்பட்டால் தனிநாட்டையே தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதன்போது கருத்துக்களை முன்வைத்த பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு வழக்கப்படும் தனிநாடு தமிழீழமாக அமைய வேண்டும் இதற்க…
-
- 4 replies
- 685 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றுதல் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக யாழ். கச்சேரியில் நேற்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின்போது, தமது கட்சியின் சார்பாக ஆலோசனைகள் அடங்கிய மஹஜர் நேரடியான விளக்கங்களுடன் கையளிக்கப்பட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் போதுமென தமது கட்சி கருதுவதாகவும், நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாயின் அதற்கு தமது ஆதரவை வழங்குவ…
-
- 2 replies
- 563 views
-
-
அது போன மாசம்! இது இந்த மாசம்!! யாழ்ப்பாணத்தம்பி சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. மகிந்தரிட்ட அமைச்சர் மனோ கணேசன் சரியான ஒரு கேள்வியை கேட்டுப் போட்டார். ஓ.. முந்தி மகிந்தர் மேடையலிலை ஏறினால் தமிழிலை கதைக்கிறவர் எல்லே? தமிழிலை எண்டால் தமிழிலை கதைக்கிறேல்லை... தமிழை கொலை செய்யிறது. மகிந்தர் தமிழ் கதைக்க வெளிக்கிட்டு தூசனங்களை எல்லாம் சொல்லி சிரிச்சதை ஆரும் மறக்க ஏலாது. நல்ல இன்டடைமன்ட்தான். யூடியூப்பிலை மகிந்தர் தமிழிலை கதைச்சதுகள் நல்ல ஓட்டம்... பாக்க சந்தோசமாய் இருக்கும்... அப்பிடி.. அண்டைக்கு தமிழிலை மேடையிலை தமிழிலை கதைக்கிறன் எண்டு காட்டினவர் இண்டைக்கு தமிழிலை தேசிய கீதம் எண்டதும் தமிழீழம் எண்டு ஏன் குதி…
-
- 0 replies
- 413 views
-
-
வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! நல்லாட்சியில் நம்பிக்கை இழப்பு! நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரொய்ட்டர் செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த வருடத்தில் மட்டும் சுமார் மூன்று பில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்…
-
- 0 replies
- 238 views
-
-
கடுவலை நீதிமன்றத்துக்கு படையெடுத்த மஹிந்த ஆதரவு அணியினர் - பிணை மறுப்பை தொடர்ந்து கண்ணீர்விட்டு அழுத ஷிராந்தி ராஜபக்க்ஷ (எம்.எப்.எம்.பஸீர்) சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பண சுத்திகரிப்பு கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் நேற்று கடுவலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அங்கு பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் கூடியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவரது பாரியார் ஷிராந்தி ராஜபக் ஷ ஆகியோர் மன்றினுள் இருந்தவாறு வழக்கு நடவ…
-
- 5 replies
- 471 views
-
-
சாட்டுக்கதைகளை கூறி இழுத்தடிக்காது நிரந்தர தீர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும் கடந்த காலங்களைப் போன்று சாட்டுக்கதைகளை கூறி இழுத்தடிக்காது, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் நிரந்தர தீர்வினை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் 23 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,தமிழ் தேச…
-
- 2 replies
- 351 views
-
-
கறுப்புக் கோட்டுடன் வந்த மஹிந்த ஊடகங்களிடம் பேசவும் மறுப்பு (எம்.எப்.எம்.பஸீர்) சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிக்கை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் வழமையாக அணியும் தேசிய ஆடைக்கு மேலாக சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார். யோஷித்த சார்பு சட்டத்தரணிகள் குழாமில் அவர் இருக்காத போது சட்டத்தரணிகளின் ஆடையிலேயே மன்றினுள் காணப்பட்டார். இந் நிலையில் குறித்த பிணை மனு எதிர்வரும் 29 ஆம் திக…
-
- 1 reply
- 541 views
-
-
யாழில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஜேர்மனி நாட்டு முதியவர்கள் ஜேர்மனி நாட்டில் இருந்து யாழிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்த முதியவர்கள் இருவர் மதுபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த வேளையில், சிறுமி அழுதுகொண்டு வீட்டை விட்டு தப்பியோடி வெளியே வந்த சம்பவம் யாழில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த முதியவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 10வயது சிறுமி, யாழ்ப்பாணத்த…
-
- 8 replies
- 975 views
-
-
காணாமற்போனோரின் பட்டியல் இருப்பது மகிழ்ச்சி -சொர்ணகுமார் சொரூபன் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பில் தங்களிடம் பட்டியல் இருப்பதாக 58ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் ஒப்புக்கொண்டுள்ளமை முதன்முதலாக நடைபெற்ற சம்பவம். இது மகிழ்ச்சியைத் தருகின்றது என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் சின்னத்துரை சசிதரன் (எழிலன்) உள்ளிட்ட 5 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தில் 58ஆவது படைப்பிரிவில் பிரிகேடியர் மன்றில் ஆஜராகி, சரணடைந்தவர்களின் பெயர் விவரங்கள் தங…
-
- 0 replies
- 433 views
-
-
மைத்திரியை ஐ.தே.க பாதுகாக்கும் (எம்.எம் மின்ஹாஜ்) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்களினால் பாதுகாக்க முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் அவரை பாதுாப்போம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டப்ளியூ.ஆர் .டீ. பண்டாரநாயக்க ஆரம்பித்தது ஒரு குடும்பத்தினருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. மைத்திரிபால சிறிசேன விவசாயி என்பதனால் அவரின் தலைமையின் கீழ் செயற்பட மறுக்கீன்றீர்களா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். அநுராதபுரம் மாவட்டத்தில் 600 குடும்பங்களுக்கு வீட்டு கடன் உதவ…
-
- 0 replies
- 395 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு புதிய அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்! தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன் வரைபில் உள்ள விடயங்கள் நாட்டின் புதிய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும் என இந்துமத தலைவர்கள் மற்றும் இந்துமத பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவின் யாழ்.மாவட்டத்திற்கான இரண்டாம் நாள் அமர்வு நேற்றையதினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மேற்படி கருத்தை வலியுறுத்திய இந்துமத தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தையும் அவர்களிடம் கையளித்துள்ளனர். சின்மயா மிஷனின் வதிவிட …
-
- 0 replies
- 353 views
-
-
காற்றுக்கூட உட்புகாத அறையில் எனது மகன்! வருந்துகின்றார் மகிந்த! சிறைச்சாலையில் காற்றுக்கூடப் புக முடியாத விசேட அறையில்தான் எனது மகன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிதி மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில், யோசித தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி பாதுகாப்புப் பிரதேசமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சாரக் கதிரையிலிந்து என்…
-
- 2 replies
- 401 views
-
-
ஜேர்மன் சென்றடைந்தார் ஜனாதிபதி... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் பேர்லினில் அமைந்திருக்கும் Tegel விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை சென்றடைந்தனர். ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ், ஜனாதிபதியும் அவரது பாரியாரையும் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதுடன், ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில் வரவேற்றனர். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) - See more at: http://www.tamilmirror.lk/166191/%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%9F-%…
-
- 27 replies
- 1.6k views
-
-
நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்! இலங்கையின் நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட்டு,சிறு குற்றங்களை செய்தவர்களுக்கு 5 கசையடிகளும் பெருங்குற்றங்களை செய்தவர்களுக்கு 25 கசையடிகளும் வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டார். இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பொதுமகன் ஒருவரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், தற்போது, நாட்டில்…
-
- 8 replies
- 858 views
-
-
நந்திக்கடலில் இராணுவம் மீன் பிடிக்க முல்லை கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர் அத்துமீறல்! முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலால் தமது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை தொடர்கதையாக நீள்கின்றது. தமது கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள முல்லை கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் இதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அற்ற நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கடற்பரப்பின் பெரும்பாலான பகுதிகளில் தென்னி…
-
- 0 replies
- 304 views
-
-
யோஷிதவின் பிணை மனு: 29 ஆம் திகதி பரிசீலனை யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்களையும் எதிர்வரும் 29ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துகொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை பார்வையிடுவதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.tamilmirror.lk/166288/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%9A-%E0%AE%B2%E0%AE%…
-
- 0 replies
- 263 views
-
-
லசந்த வழக்கு - இவர்களைத் தெரிந்தால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் அறிவிக்கும் படி, பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வழக்கின் சாட்சியாளர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் இரு சந்தேகநபர்களின் உருவம் குற்றப் பதிவு பிரிவினரால் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதன்படி இவர்கள் தொடர்பில் சரியான தகவல் தெரிந்தால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 071 - 8591753 071 - 8591770 077 - 3291500 பட விளக்கம் படம் ஒன்று - 35 வயது மதிக்கத்தக்க சுமார் 5 அடி 8 அங்குலம் உயரமுடைவர்,படம் இரண்டு - 40 வயது மதிக்கத…
-
- 0 replies
- 528 views
-
-
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களை அங்கீகரிப்பதாக நியூசிலாந்து அறிவிப்பு! இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களை அங்கீகரிப்பதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்ககமும், மக்களும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 171 views
-
-
எனது நியமனத்தை மக்கள் ஏற்றுள்ளனர்: வடக்கு ஆளுநர் பெருமிதம்! வடக்கு மக்கள் எனது நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால், ஆளுநராகக் கடமையாற்றுவது எனக்குச் சுலபமாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் றெஜினோல்ட் கூரே. நேற்று அவர், கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இதன்போதே, வடக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, போரில் வெற்றி பெற்றபோதும் தமிழ் மக்களின் இதயங்களை இன்னமும் வென்றெடுக்கப்படவில்லை. தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்க வேண்டியது அவசியமானது. வடக்கு மக்கள் எனது…
-
- 0 replies
- 255 views
-
-
கைது செய்வதை தடுத்துநிறுத்துமாறு பசில், மனுத்தாக்கல் தன்னைக் கைது செய்வதற்கான ஆபத்து இருப்பதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஏனைய வழக்குகளுக்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரியும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அடிப்படை உரிமைமீறல் மனுவில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது, திவிநெகும திணைக்களத்தில் நிதி முறைகேடுகள், பணச்சலவை உள்ளிட்ட பல்வேறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தன்னைப் பிரதிவாதிகளாக்கி பல்வேறு வழக்குகள், விசாரணைக்கு உட்படுத…
-
- 0 replies
- 226 views
-