ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
இலங்கை - ஜேர்மனுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கை மற்றும் ஜேர்மனுக்கு இடையில் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு சான்சிலர், ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் கலந்துரையாடவுள்ளார். இதன்படி, இன்று மாலை ஜேர்மன் சான்சிலருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன்போது சான்சிலர் விசேட உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இலங்கையி…
-
- 0 replies
- 576 views
-
-
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள நடேஸ்வரக் கல்லூரியை விடுவிக்க நடவடிக்கை! உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் நடேஸ்வரக் கல்லூரியை விடுவித்து மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைக்கு அண்மையாக இருக்கும் பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இதன்போது அவர் 25 வருடங்களின் பின்னர் நடேஸ்வரக் கல்லூரி அதன் அதிபரிடம் ஒப்படைப்பார் எனத் தெரிகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி உயர்பாதுகாப்பு வலயத்தி…
-
- 0 replies
- 321 views
-
-
பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர், தண்ணீர்ப் பிரயோகம் காயமடைந்த மாணவர்கள், ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று வேலையில்லாப் பட்டதாரிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்துள்ளனர். இதில் காயமடைந்த பட்டதாரிகள், ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14930#sthash.3f3kWrbd.dpuf
-
- 2 replies
- 203 views
-
-
7 வருடங்களின் பின்னர் பேரிரைச்சலுடன் குடாநாட்டில் கிபிர்! : பீதியில் உறைந்த மக்கள்! யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் இன்று விமானப்படையின் கிபிர் போர் விமானம் பறந்ததால் மக்கள் பீதியில் உறைந்து காணப்பட்டனர். போர்க் காலத்தில் தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசி அவர்களைக் கொத்துக் கொத்தாக கொலை செய்த இந்தக் கிபிர் விமானம் தமிழ் மக்கள் மனதில் அச்சத்திற்குரிய வான்படைக் களமாக இடம்பிடித்தது. இறுதிப் போரின்போது வன்னியில் கொத்துக் கொத்தாக குண்டுகளை அள்ளி வீசி மக்களைக் கொலை செய்ததால் இந்த போர் விமானத்தைக் கண்டாலே மக்கள் பெரும் அச்சமடைந்தனர். இந்த நிலையில், இன்று பிற்பகல் 2.10 மணியளவி…
-
- 7 replies
- 727 views
-
-
விக்கியின் கோரிக்கையை ஹுசேன் நிராகரித்தமை எமக்கு பாரிய வெற்றி : சிலரின் கனவு தவிடுபொடியாகியுள்ளது என்கிறது ஐ.தே.க. (ப.பன்னீர்செல்வம்) வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்து உள்ளக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் ஆதரவு தெரிவித்ததன் மூலம் நாம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம். அத்துடன் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட கனவு கண்டவர்களின் நோக்கம் தவிடுபொடியாகிவிட்டது என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் அல் ஹுசேனுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களே என்றும் அமைச்சர் குறிப…
-
- 2 replies
- 440 views
-
-
ராஜபக்சே இதனால்தான் தோற்றார்- கோத்தபயவின் அடேங்கப்பா காரணம்! இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்காமையால், அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வெளிவிவகாரக் கொள்கைகளில், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவை எம்மால் திருப்திப்படுத்த முடியவில்லை. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்தியா அச்சம் கொண்டிருந்தது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்றும், சீனாவுடனான தொடர்புகள் முற்றிலும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்டது என்றும் நாம் அவர்களுக்கு உறுதியளித்திருந்தோம். ஆனால…
-
- 4 replies
- 580 views
-
-
யாழ் குடாநாட்டில் பனங் கள் சீசன் ஆரம்பித்து ஒரு மாதமாகிவிட்ட போதிலும் அதன் விலை குறையவில்லை என பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு போத்தல் பனங் கள் 70 ரூபாவாக விற்பனையாகிறது. கடந்த வருடம் சீசன் காலத்தில் 60 ரூபாவாக குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilcnnlk.com/archives/482719.html
-
- 6 replies
- 995 views
-
-
மாதமொருமுறை சந்திக்க சி.வி-ரணில் இணக்கம் மாதம் ஒருமுறை சிந்தித்து, வட மாகாண விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தீர்மானித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை, அலரி மாளிகையில் இவ்விருவரும் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. - See more at: http://www.tamilmirror.lk/166168/%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-#sthash.aD7a0jfG.dpuf
-
- 2 replies
- 377 views
-
-
மின்சாரக் கதிரையைவிட அதிகமாக தண்டனையை அனுபவிக்கிறேன்! மின்சார நாற்காலியிலிருந்து என்னை காப்பாற்றி விட்டதாக கூறுபவர்கள் அதைவிட அதிகளவான தண்டனையை எனக்குக் கொடுத்து விட்டனர் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நேற்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஊடகவியலாளர்கள் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நாடுகளின் பிடியில் சிக்கி மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்ல விடாமல் நாம் காப்பாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிச…
-
- 2 replies
- 335 views
-
-
இலங்கையின் மிகவும் ஏழ்மையான மாவட்டம் முல்லைத்தீவு இலங்கையின் பல பகுதிகள் இன்னும் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ளன என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதேவேளை இலங்கையில் போதிய அளவுக்கு முன்னேற்றம் காண கூடுதல் வாய்ப்புகளும் உள்ளன எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தெற்காசியாவின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் நம்பகத்தன்மையுடன் கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வலுள்ள மனித வளமும் உள்ளன எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் தொடங்கப்பட்டிருக்கும் அரச நிர்வாக சீர் திருத்தங்கள் மேலும் பொறுப்பு கூறுதலுக்கு வழிவகுத்து சிறந்த நிர்வாகத்தை அளிக்க வேண்டும் என்றும் அதன் மூலமே மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை ஏற்பட்டு, ஸ்திரத்தன்மை உறு…
-
- 2 replies
- 531 views
-
-
அதிவேக இணைய சேவை : கூகுள் பலூன் இலங்கை வான்வெளியில் Project Loon என அழைக்கப்படும் அதிவேக இணைய சேவையை வழங்கும் கூகுள் பலூன், அதன் முதல் சோதனையை ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நேற்று திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக இன்று காலை (16) இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது. இந்த கூகுள் பலூன், அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பலூன் வழி இணைய சேவையின் பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ம…
-
- 0 replies
- 528 views
-
-
முல்லைத்தீவில் 2,151 மாற்றுத்திறனாளிகள் போர் மற்றும் விபத்துக்களால் அவயவங்களை இழந்த நிலையில் 2,151 மாற்றுத்திறனாளிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருப்பதாக மாவட்ட புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 480 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 764 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 377 பேரும், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 188 பேரும், துணுக்காய் பிரதேசத்தில் 267 பேரும், வெலிஓயா பிரதேசத்தில் 75 பேரும் உள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது. இவர்களில் அதிகமானவர்கள் குடும்பத் தலைவர்களாகக் காணப்படுகின்றனர். அவயவங்களை இழந்தவர்களின் தொகை அதிகளவில் இருப்பதாக பல்வேறு அமைப்புக்கள் மூலம் மாறுபட்ட புள்ளி விவரங்கள் வ…
-
- 0 replies
- 324 views
-
-
யாழில் மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து யாழ்ப்பாணத்தில் ரயில் கடவையில் வாயில் மூடியிருந்த போது, பயணித்த மூவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக ஒரு வருட காலத்துக்கு இவ்வாறு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வாயில் மூடியிருக்கும் போது, ரயில் கடவைகளில் பயணிக்க முற்படுபவர்களை கைதுசெய்ய ரயில்வே திணைக்களத்தால் விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் முதற்கட்டமாக கடந்த வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி யாழில் கைதுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மற்றும் …
-
- 1 reply
- 560 views
-
-
விஜயவை நினைவு கூற மகிந்தவுக்கு எவ்வித தகுதியும் கிடையாது விஜயவை நினைவு கூற மகிந்தவுக்கு எவ்வித தகுதியும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை செய்யப்பட்ட விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று அவரது பிறந்த இடமான சீதுவையில் அனுஷ்டிக்கப்பட்டது. சந்திரிக்கா குமாரதுங்க, ஜீவன் குமாரதுங்க, பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோர் விஜயவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்…
-
- 0 replies
- 366 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜேர்மன் திருப்தி இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஜேர்மனிய அரசாங்கம் திருப்தி வெளியிட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களை சந்தித்த போது கருணாதிலக்க அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதைய நிலைமைகளை கருத்திற் கொண்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை சலுகைத் திட்டத்தை மீள வழங்க வேண்டுமென ஜேர்மன் கருதுகிறது. குறித்த சலுகைத் திட்டம் மீளவும் இலங்கைக்கு வழங்கப்பட்டால் குறைந்தபட்சம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்…
-
- 0 replies
- 347 views
-
-
சந்தேகத்துக்கிடமானவர்கள் நடமாடுவதை அவதானித்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவும் பொதுமக்கள் அவர்களுக்கு சந்தேகத்துக்கிடமான வகையில் எவராவது நடமாடுவதை அவதானித்தால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அல்லது அல்லது சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு அறிவிக்க வேண்டுமென மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி எஸ்.பி.ரத்நாயக்க தெரிவித்தார். புதிய காத்தான்குடி கிழக்கு 167 பி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று 16 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது மக்களுக்கான நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடிப் பிரசேத்தில் கடந்த சில வாரங்களாக …
-
- 0 replies
- 312 views
-
-
யாழில் ஆரோக்கியத்துக்கான நடைபயணம்! வடமாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் 'ஆரோக்கியத்துக்கான நடைபயணம்' எனும் தொனிப்பொருளிலான ஊர்வலம், யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. தொற்றா நோய்களிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த ஊர்வலம், வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் வரை சென்றது. இதில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட 35ஆவது மாணவர் அணி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுகாதார திணைக்கள பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். …
-
- 2 replies
- 479 views
-
-
பிக்கப் - மோட்டார் சைக்கிள் விபத்து; முன்பள்ளி ஆசிரியை சாவு! விசுவமடுவிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் பரந்தனிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த மகேந்திரா பிக்கப் வாகனமும் பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த மற்றுமொரு முன்பள்ளி ஆசிரியர் ஓரிரு காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் பரந்த…
-
- 0 replies
- 713 views
-
-
மயிலிட்டி மீள்குடியேற்றம் வியாழனன்று இறுதி முடிவு! விமான நிலைய அபிவிருத்தியா? மயிலிட்டி மீள்குடியமர்வா? என்பது தொடர்பில் முடிவு எடுக்கும் மாவட்ட ரீதியிலான கூட்டம், நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மயிலிட்டியில் மக்களை மீளக் குடியமர்த்துவதா? இல்லை பலாலி விமான நிலையம் மற்றும் காங் கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்து அறிவிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பலாலியில் தைப்பொங்கல…
-
- 0 replies
- 232 views
-
-
மாவீரர்களை அங்கீகரியுங்கள்: நினைவுகூர உரிமை கொடுங்கள்! எங்கள் இனத்துக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர புதிய அரசமைப்பில் வழி செய்ய வேண்டும். இவ்வாறு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற 'புதிய அரசமைப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை அறியும் குழுவுக்குத் தகவல் அளித்தார் பொதுமகன் ஒருவர். புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி மூலமான தீர்வே அவசியம். எங்களின் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதில் எங்களை நாங்களே ஆட்சி செய்ய வேண்டும். எங்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் நினைவிடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அவற்றை மீளவும் அதே இடங்களி…
-
- 0 replies
- 216 views
-
-
மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு February 15, 2016 நுவரெலியா - ராகலை - சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் தருமசீலன் புதிய வகையிலான தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார். முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும் இந்த தலை கவசம் முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது. இந்த கண்டு பிடிப்புக்காக மாணவனுக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகத்தினால் கௌரவிக்கபட்டு சான்றிதலும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். இது தொடர்பில் மாணவனிடம் வினவிய போது, எனது விருப…
-
- 9 replies
- 681 views
-
-
தமிழ் பிரதேசத்தில் மேடையில் தமிழ் பேசியவர்களே தமிழ் தேசியக கீதத்தை எதிர்கின்றனர் - அமைச்சர் மனோ தமிழ்மொழி வேண்டாம் என்று கூறும் மகிந்த ராஜபக்சவுக்கு தேங்காய் உடைக்க தமிழ் கடவுள் மாத்திரம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் இது மகிந்தவின் கோமாளிக் கொள்கை என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அரச கரும மொழி ஆணைக்குழுவின் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மொழி உரிமை கொள்கையை அமுல்படுத்தி தமிழ் மக்களின் இதயங்களை முதலில் வென்றுவிட்டே அடுத்த கட்டம் குறித்து சிந்திக்க வேண்டும் என தெரிவித்த அவர் மொழி உரிமை கொள்ளை நடைமுறைப…
-
- 0 replies
- 393 views
-
-
புலம்பெயர் உறவுகளே எமது தாயக பகுதியில் முதலிடுங்கள் -சண்முகம் தவசீலன் புலம்பெயர் தாயக உறவுகளை எமது தாயக பகுதியில் முதலிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அழைப்பு விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புலம்பெயர் புதுக்குடியிருப்பு மண்ணின் மைந்தன் ஒருவரால் அமைக்கப்பட்ட சகல வசதியுடன் கூடிய கோபி வாகன சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் உண்மையிலேயே எமது பகுதிக்கு மிகவும் தேவையான ஒன்று எமது பகுதியை சேர்ந்தவர்கள் இந்த தேவையை புர…
-
- 13 replies
- 1k views
-
-
இலங்கையில் சீதனத்தை தடைசெய்ய நடவடிக்கை வேண்டும்' இலங்கையில் திருமணங்களின் போது சீதனம் வாங்கும் நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்று ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, இலங்கையில் சீதன நடைமுறையினால் தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலேயே பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சீதனம் என்பது பெண்கள் மீது வைக்கப்படுகின்ற தேவையற்ற முன்நிபந்தனையாக உள்ளது என்று பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர் கமலா வாசுகி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழர் பிரதேசங்களில் சில வழக்காறு சட்டங்கள் மூலமாக சீதனம் வாங்குகின்…
-
- 2 replies
- 700 views
-
-
ஜெயலலிதாவுடன் பேச்சு என்ற சொல்லுக்கே இடமில்லை! ஜெயலலிதாவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தாம் தயாரில்லை. இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்வோம். ஆனால் படகுகளை மீளக் கையளிக்கமாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய மத்திய அரசுடனேயே பேச்சு வார்த்தை நடத்துவோம்.தமிழகத்துடன் “பேச்சு” என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் எமது கடற் பரப்பில் அத்துமீறி ரோலர்கள் மூலம் மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றனர். கடற் தாவரங்களையும் அழிக்கின்றனர். இதனால் வடபகுத…
-
- 3 replies
- 707 views
-