Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "கட்சியின் தலைமையிடம் கேட்கவேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள்" சுரேஷ் பிரேமசந்திரன்: கட்சியின் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள் என ஊடகவியலளார்கள் மீது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன். கடும் சீற்றத்துடன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா ?…

    • 3 replies
    • 766 views
  2. [ ஞாயிற்றுக்கிழமை, 27 டிசெம்பர் 2015, 03:28.44 PM GMT ] தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி இல்லை அது அரசாங்க கட்சி என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். பெயரளவிலேயே எதிர்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கிறார். அவர் அரசாங்கத்துடன் இணைந்த வகையிலேயே செயல்படுகின்றார். அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு இருக்கிறது. சர்வதேச விசாரணை உள்ளிட்ட இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர் என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/show-RUmtzCRbSWkv3I.html

    • 3 replies
    • 683 views
  3. வரலாற்றில் இடம் பிடிப்பாரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ? கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகத் தமது சொந்த நிலங்களை, தொழில்களை இழந்து முகாம்களில் கையேந்தி வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகளை அரசு தட்டிக்கழித்தே காலத்தைக் கடத்துகின்றது. வலி.வடக்கு மக்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையால் மூடப்பட்டு, தமது சொந்தக்காணிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேசம் வடக்கின் விவசாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. எவரது உதவிகளையும் எதிர்பாராது தமது சுய உழைப்பின் மூலம் செல்வாக்குடன் வாழ்ந்த இந்த மக்கள் தமது சிறிய தேவைகளுக்குக்கூட அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்குத் திட்டமிட்டே தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் நிலங்களில் உல்லாச விடு…

    • 3 replies
    • 615 views
  4. அரசியல் தீர்வை எட்டும் சந்தர்ப்பத்தைக் குழப்பக் கூடாது – இரா. சம்பந்தன் DEC 27, 2015 அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாக்கியிருக்கும் சூழலில் அதனைக் குழப்ப எவரும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். “யாழ்ப்பாணத்தில் அண்மையில் தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டதாக அறிகிறேன். ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று வகை நோக்கங்களைக் கொண்டதாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 1) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு 2) ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையாக முழுமையாக அமுல்படுத்தப்படுவது 3) தமி…

  5. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கும் மகிந்த அணி மகிந்த ராஜபக்ச சார்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அபே ஸ்ரீலங்கா பெரமுண“ அல்லது “அவ ஸ்ரீலங்கா ப்ரொன்ட்“ (எமது இலங்கை முன்னணி) என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்குதற்கு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஹிந்த சார்ப…

  6. [ ஞாயிற்றுக்கிழமை, 27 டிசெம்பர் 2015, 10:39.18 AM GMT ] தேசிய இனப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் அதற்கு ஒரு தீர்வை காணமுடியாது இருப்பதற்கும் பிரதான காரணம் தமிழ் தலைமைத்துவங்களிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் பதவி பேராசைகளும் குரோத எண்ணங்களுமேயாகும். தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில் தமிழ் மக்கள் என்றுமில்லாத வகையில் பாரிய இழப்புக்களை சந்தித்து, இன்றும் அதிலிருந்து மீள முடியாதவர்களாக துன்பப்பட்டிருக்கும் நிலையிலும் கூட, தமிழ் மக்களை அடகு வைத்து வியாபாரம் செய்யும் ஒருசில தமிழ் தலைமைத்துவங்களின் போக்கில் எந்தவிதமான மாற்றத்தையும் காணமுடியாத நிலைமைகளே இருந்து வருவதாக தமிழ்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தேசிய இனப்பிரச்சினை ஆயுத மோதலாக உரு…

  7. தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கப்டன் விமலசேன கைது ரக்பி வீரர் வாசிம் தாஜூடீனின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கப்டன் விமலசேன என்பவரை கைதுசெய்துள்ளதாக இராணுவ தளபதி கிறிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத்தால் மேற்கொள்ளப்படட் உள்ளக விசாரணைகளின்போது விமலசேனா குறித்து தெரியவந்துள்ளது,யாழ்ப்பாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கப்டன் திசா குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன, அவரிற்கு நிச்சயமாக வேறு பெயர் ஏதாவது இருக்கவேண்டும். நாங்கள் கப்டன் திசா என்பவர் குறித்து உள்ளக விசாரணையை மேற்கொண்டுள்ளோம். இதன்போது கப்டன் விமலசேன என்பவரை இனம…

  8.  அம்பாறையில் மினி சூறாவளி -கனகராசா சரவணன்,எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக 02 கடைகள் மற்றும் 06 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டதுடன், 02 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காற்றுடன் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில், சுமார் அih மணித்தியாலயம் வரை வீசிய மினி சூறாவளியினால் விநாயகபுரம் சிவன் கோவிலை அண்ட…

  9. பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது? – காணாமற்போனோர் விவகாரத்துக்கு புதிய அமைச்சு DEC 26, 2015 காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு வரும் பெப்ரவரி மாதத்துடன் கலைக்கப்பட்டு, இந்த விவகாரங்களைக் கையாள்வதற்கான புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் வரும் 2016 பெப்ரவரி 15ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது. இந்தநிலையில், இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். “காணாமல்போனோரை கண்டறியும் அதிபர் ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லை. …

  10. கூட்டமைப்பு பிளவுபடுவதை தடுக்கும் முயற்சியில் இந்தியா? - சம்பந்தன்- விக்கி சந்திப்பின் பின்னணி. [Sunday 2015-12-27 08:00] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து, வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் பேரவையால் கூட்டமைப்பு பிளவுபட்டு விடும் என்ற விமர்சனங்கள் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நிலையில், இந்தப் பிளவைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளில் இந்தியா களமிறங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடுகள் உச்சக்கட்டம் அட…

    • 0 replies
    • 387 views
  11. சரத் பொன்சேகா கிரீன் அட்டைக்காக மீள விண்ணப்பம் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா அமெரிக்கரின் கிரீன் அட்டைக்காக மீள விண்ணப்பம் செய்துள்ளார். அமெரிக்க கிரீன் அட்டை சரத் பொன்சேகாவிற்கு முன்னதாக வழங்கப்பட்டிருந்தது. அந்த அட்டை கலாவதியானதன் பின்னர் அமெரிக்காவிற்கு அண்மையில் பயணம் மேற்கொள்ள வீசா கோரி விண்ணப்பித்த போது, சரத் பொன்சேகாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் சரத் பொன்சேகா மீளவும் கிரீன் அட்டைக்காக விண்ணப்பம் செய்துள்ளார். சரத் பொன்சேகா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவரது கிரின் அட்டை காலாவதி ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கிரீன் அட்டைக்கான விண்ணப்பம் ஏற்றுக…

  12. 2020ம் ஆண்டு பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் மைத்திரி? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020ம் ஆண்டு பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் வேட்பாளராக போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் சமூக செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என அவர் மீளவும் உறுதியளித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வலுவான நடவடிக்கை…

  13. முதலமைச்சர் தலைமையில் தழிழ் மக்கள் பேரவை இரண்டாவது கூட்டத் தொடர் தழிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று யாழ்.பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றபட்டயுள்ள ஐனாதிபதி முறைமை ஒழிப்பில் தழிழ் மக்களின் உள்ளடங்க வேண்டிய தொடர்பாடல்கள் மற்றும் அபிலாசைகள், மற்றும் புதிய தேர்தல் சட்ட முறையில் எமது மக்களின் விடிவுகள், தேசிய இனத்திற்காக தழிழ் மக்களின் தீர்வு என்றவகையில் தழிழ் பேரவை முன்னெடுக்கும் தீர்மானங்கள், அவற்றின் ஊடாக சட்ட வாக்க முறையில் கொள்கைப் பிரகடனம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டுள்ளன.. இதில் தழிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

  14. தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய மூன்று கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேரவை நியமித்த நிபுணர்குழுவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள சில உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்ப…

  15. முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது 5 சகோதரர்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் யார் கொலையைச் செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும். சகோதரர்களுடன் நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் இந்தவிடயம் தனக்குத் தெரியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், மகேஸ்வரனின் சகோதரர்களுக்கும் அவரது மனைவி விஜயகலாவுக்கும் மகேஸ்வரனை யார் கொலை செய்தார் என்பது தெரியும். தமது வியாபார நோக்கத்துக்காகவும் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அவர்கள்…

    • 10 replies
    • 1.3k views
  16. இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன் DEC 25, 2015 நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது- கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் எவ்வித எழுத்து மூலமான ஒப்பந்தமும் இன்றி நிபந்தனையற்ற ஆதரவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது ஏன்? பதில்: பல எழுத்து மூல ஒப்பந்தங்கள் எமது வரலாற்…

  17. மிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்? - நிலாந்தன்:- சம்மந்தரின் தெரிவே விக்கினேஸ்வரன். தனது தெரிவே தனக்கு எதிராகத் திரும்புவது என்பது ஒரு தலைமைத்துவத்தின் தோல்விதான். என்பதால்தான் விக்கினேஸ்வரன் கட்சிக்கு வெளியே சென்று கருத்துக்கள் கூறியபோதெல்லாம் சம்பந்தர் பேசாமல் இருந்து வந்தார். சுமந்திரனும் விக்கினேஸ்வரனும் பகிரங்கமாக மோதியபோதும் சம்மந்தர் பேசாமல் இருந்தார். விக்கினேஸ்வரனை வெளிப்படையாக எதிர்ப்பதை அவர் ஓரளவுக்குத் தவிர்த்து வந்தார். எனினும் கடந்த மாதம் அவர் மட்டக்களப்பில் வைத்து தனது மௌனத்தை கலைத்தார். விக்கினேஸ்வரன் விரும்பினால் தலைமைப் பொறுப்பை ஏ…

  18. தமிழ் மக்கள் பேரவையினை பின்கதவால் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்துவது ஜனநாயக விரோதச் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ‘தமிழ் மக்கள் பேரவையோ வேறு எந்த அமைப்புக்களையோ யாரும் உருவாக்கினால் அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூற முடியாது. மக்கள் தங்களை ஒருங்கிணைத்து சில கருத்துக்களை பரிமாறிக் கொள்வது முக்கியமான ஒரு விடயம். தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக தொடர்ச்சியாக 6 வருடங்களாக மக்கள்…

  19. நத்தார் தினத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை கிடைத்த சந்தோசத்தில் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் கதிர்காமம் நகரில் திரண்டுள்ளதால், பெரும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் கதிர்காமம் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாகும். கதிர்காமம் நகரம் சிறுநகர கட்டமைப்புடன் காணப்படும் நிலையில், இவ்வருடம் அங்கு திரண்டுள்ள பெருங்கூட்டம் காரணமாக உணவு, குடிநீர் மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பில் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வருகை தந்துள்ள தமிழ் பேசும் மக்கள் தங்குமிட வசதிகளைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் பெரும் திண்டாட்டத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. சந்தர்ப…

  20. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பதிலாக புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைக்கு புதிய கூட்டணியில் சுமார் பத்து அரசியல் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதாக விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் ஊடகத் தொடர்பாளர் முஸம்மில் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய, தினேஷின் மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ கட்சி, டியூ குணசேகர கட்சி, நவ சிஹல உறுமய, திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி, போன்ற கட்சிகளே விமல் வீரவன்சவின் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளன. இவற்றோடு முன்ன…

  21. அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரசியல் விவகாரம் பேசியதால் வருகை தந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்து அமைதியின்மை ஏற்பட்டது. கோப்பாய் தொகுதியில் அபிவிருத்தி குறித்து அதற்குட்பட்ட பொது நிறுவனங்களுடனான கலந்துரையாடல் இன்று வலி-கிழக்கு பிரதேச சபை தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, அபிவிருத்தி சம்பந்தமான தங்களது கோரிக்கைகளை இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முன்வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யாழ். மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டிருந்த அரசியல் பிரமுகர்கள் கூட்டத்தில் அபிவிருத்தி நட…

  22. ஒரு அரசியல் அணியின் தலைமைத்துவம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்காக பாரிய திட்டங்களை ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றிய விபரமான அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை அடிப்படையாக கொண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக புத்திஜீவிகளை கொண்டு கிராம மட்டங்களின் கூட்டங்களை நடத்தவும் அந்த அணியினர் திட்டமிட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டப்படி வேலை செய்தல் போன்ற …

  23. Out of media player. Press enter to return or tab to continue. தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்: சம்பந்தன் தமிழ்த் தேசிய மக்கள் பேரவையில் இருக்கும் முக்கியத் தலைவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன். சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் பேரவை என்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு அரசியல் அமைப்பு என்கிற சந்தேகங்களும் விமர்சனங்களும் பரவலாக நிலவிவ…

  24. யாரினதும் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களுக்கு செவிசாய்ப்போம்: மாவை எம்.பி தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல அவர்களின் ஜனநாயக ரீதியிலான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் செவிசாய்க்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இன்று வலி.கிழக்கு பிரதேச சபையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கூட்டத்தின் நிறைவில் ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் தொடர்ச்சியாக அங்கீகாரம் அளித…

  25. உலகில் ஆபத்தான வெடிபொருள் அபாயம் உள்ள பிரதேசம் முகமாலை - ஹலோ ட்ரஸ்ட் உலகில் மிகவும் ஆபத்தான மிதி மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் உள்ள பிரதேசமாக முகமாலை பிரதேசம் உள்ளது என மனிதநேய கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் நிறுனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 13 வருடங்களாக கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் குறித்த நிறுவனம் அண்மையில் முகமாலை பிரதேசத்தில் இரண்டு இலட்சம் மிதி வெடிகளை அகற்றியிருந்தது. குறித்த நிறுவனத்தின் தகவலின் படி ஈராக் அல்லது முகமாலை பிரதேசமா உலகில் ஆபத்தான மிதிவெடி மற்றும் வெடிபொருள் ஆபாயம் உள்ள பிரதேசம் என்பது தொடர்பில் ஆராய்வுகள் இடம்பெற்று வருகிறது எனவும், ஆனால் ஈரர்ககை விட முகமாலை பிரதேசத்திலேயே மிதிவெடி ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.