ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நடைபெற்றன இந்த நிகழ்வில் மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார பிரதம விருந்தினராக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் , யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர்களின் நடன நாடக கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன் சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய ரீதியில் சிறுவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட பொட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. …
-
- 0 replies
- 415 views
-
-
புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழா மற்றும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வு புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை பாடசாலை அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது. http://onlineuthayan.com/news/741
-
- 3 replies
- 761 views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவிருக்கும் இலங்கை தொடர்பான பிரேரணையில் உள்ள சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரேரணை உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற் கும், நீண்டகாலமாக பிளவுபட்டுப் போயிருக்கும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நல்லதொரு ஆரம்பமாக அமையும். வடமாகாண முதலமைச்சர் என்பதால் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியென்ற ரீதியில், இந்தப் பிரேரணையில் உள்ள சில பலவீனமான விடயங்கள் முழுமையான செயற்பாடு களையும் தோல்வியடையச் செய்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய…
-
- 3 replies
- 386 views
-
-
தந்தையர் தடுப்பில், தனயர்கள் பசியால் அழுகையில் தாயவர் கதறும் அவலம், மண்பீட்பு போரில் மாண்டவர் போக மீண்டவர் உடலில் அவயங்கள் இல்லை அடுத்தவருக்காய் ஆயுதம் ஏந்தியவர் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலைகின்ற அவலம், இத்தனை அழிப்புக்கும் நீதி வேண்டும் என்று ஐ.நாவில் ஈழத் தமிழரின் ஒலம், ஆனால், இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கூட்டம் கட்டவுட்டுக்கு பாலூற்றும் அவலம், இந்தக் காவாலிகளுக்கு சந்தன வாசனை என்னென்று தெரியுமா? ஈழத் தமிழரின் அவலம் புரியுமா? பாலுக்கு அழுகின்ற பாலகர் நிலை புரியுமா? இவர்கள்தானே எங்கள் எதிர்காலம்? யார் எம்மைக் காப்பது? கடவுளா? கட்டவுட்டுகளா? (யாழில் இன்று திரைப்படக் கட்டவுட்டுக்கு பால் வார்ப்பு) - See more at: http://www.newjaffna.com/moreartic…
-
- 10 replies
- 895 views
-
-
யாழ்.வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற்தடவையாக, வருகை தந்து முதல் நிகழ்வாக தந்தை செல்வா சதுக்கத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் யாழ்-கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி எனப்பலரும் கலந்து கொண்டனர். மேலும் இரண்டாவது நிகழ்வாக இன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ்த்தினவிழா. இதில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 5 replies
- 619 views
-
-
[ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 12:48.14 PM GMT ] ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த ஒன்று என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் இன்று வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. 47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இன்றைய தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஆதரித்திருக்கிறது. இந்…
-
- 0 replies
- 719 views
-
-
[ வியாழக்கிழமை, 01 ஒக்ரோபர் 2015, 12:32.10 PM GMT ] ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தீர்மானத்தில், இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. திருத்தங்களின்றி- வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேர…
-
- 0 replies
- 476 views
-
-
தலைகுனியும் குடாநாடு புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியாவின் மிலேச்சத்தனமான படுகொலையுடன் தலை குனிந்திருந்த யாழ். குடாநாடு இந்த வாரம் மீண்டுமொரு மனிதாபிமானமற்ற கோரத் தாண்டவத்தால் மீண்டும் தலை குனிந்திருக்கின்றது. முன்னொரு காலத்தில் திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் அன்பு, ஜீவகாருண்யம், பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுப்பு போன்ற உயர்ந்த விழுமியங்களைக் கைக்கொண்டு வாழ்ந்த ஆசார சீலர்கள் நிறைந்த இடமாக விளங்கியது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் யாழ்ப்பாணம் காட்டுமிராண்டிகளும், பண்பற்ற மனிதர்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசமோ என்று மற்றவர்களை நினைக்க வைக்கின்ற நிலைமைக்கு இட்டுச் செல்கின்றது. அதற்குச் சிகரம் வைத்தாற்போல கடந்த வாரம் யாழ…
-
- 10 replies
- 771 views
-
-
நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் திணைக்களம் நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial…
-
- 11 replies
- 697 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண சபை அரசியல் ரீதியாக செயற்பட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பார்வையிடுவதற்குரிய வசதிகளைக் கொண்டிருக்கின்றது. அதில் வடக்கு மாகாண சபை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. ஆங்கில மொழி மூலம் இணையத்தளத்தைப் பார்வையிடும்போது, வெளியீடுகளுள் நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புள்ளிவிவரங்கள், மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுத் திட்டங்கள் மற்றும் வடக்கு மாகாண சபையின் நிதியியல் அறிக்கை என்று பல்வேறு விடயங்களும…
-
- 2 replies
- 470 views
-
-
DNA மாதிரிகள் பொருந்தவில்லை கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் DNA மாதிரிகள், பொருந்தவில்லை என்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகையால், அவ்விருவரையும் விடுதலை செய்வதற்கு அவர்களை நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து சந்தேகத்தின் பேரில், முதலாவதாக கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளை 2ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.tamilmirror.lk/155466/DNA-…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இந்தியாவும், சீனாவும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்ததை காண முடிந்தது. அமெரிக்கா பிரிட்டன் கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கை தொடர்பில் நேற்று உரைற்றிய போதும் இந்தியாவும், சீனாவும் மௌனம் காத்தன. இந்தியாவினதும் சீனாவினதும், பிரதிநிதிகள் இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டபோதும் விவாதத்தில் உரையாற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=141404&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 350 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்படவில்லை என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானம் சர்வதேச விசாரணையையே வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அரசு தான் அமைக்கும் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு பொதுநலவாய நாடுகளினதும், வெளிநாடுகளினதும் நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வார்த்தைப் பிரயோகம் சர்வதேச விசாரணையை அன்றி வேறு எதனை வலியுறுத்துகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ம…
-
- 0 replies
- 230 views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டவர்களிற்கு நீதி வழங்குவதற்கான US தீர்மானம் வலுவிழப்பு: இலங்கை அரசாங்கத்தை திருப்திப் படுத்துவதற்காகவும், இந்தியாவின் கரிசனைகளை போக்குவதற்காகவும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை வியாழக்கிழமை ஜெனீவாவில் ஏற்றுக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற தீர்மானத்தின் நகல்வடிவில் சர்வதேசநீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுநர்களிற்கான பங்களிப்பு மற்றும் அதிகாரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை அமைப்புகள் இது பாரிய பின்னடைவாகும் என தெரிவித்துள்ளன. இதேவேளை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்ப…
-
- 1 reply
- 383 views
-
-
கிளிநொச்சியில் மழையுடன் சேறும் சகதியுமாகும் உள் வீதிகள்: ஆறு ஆண்டுகள் ஆகியும் புனரமைக்கப்படவில்லை குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் பெய்து வரும் மழையுடன் வீதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மீள்குடியேற்றப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிய பின்னரும் கூட வீதிகள் புனரமைக்கப்படாது மண்வீதிகளாக காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கிளிநொச்சி நகரத்தில் உள்ள வீதிகள் புனரமைக்கப்பட்டபோதும் நகரத்தை அண்டிய உள்வீதிகள் பலவும் இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகள் மழையும் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது. ஒரு பிரதேசத்தின் ஒரு கிராமத்தின் அன்றாட செயற்பாடுகளுக்கு வீதி அவசியமானது. எரிச்சலும் சினம…
-
- 0 replies
- 341 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார். நியூயோர்க் நேரப்படி காலை 9.45 மணிக்கு ( இலங்கை நேரப்படி இரவு 7.30 மணி) அளவில் ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் இந்த உரையில் பெரும்பாலும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் புதிய அரசின் நல்லிணக்க முன்னெடுப்புகள் குறித்த விடயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மஹிந்த அரசில் முக்கிய அமைச்சராக பதவி வகித்திருந்த போதும் ஐ.நா. கூட்டத்தொடர்களில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட்ட குழுக்களில் கூட மைத்திரிபால சிறிசேன…
-
- 1 reply
- 221 views
-
-
மல்லாவியில் விபத்து: 40 பேர் காயம் -சண்முகம் தவசீலன் மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி ஒட்டறுத்தகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிறிய காயங்களுக்குள்ளான ஐந்து பேர், மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்…
-
- 0 replies
- 369 views
-
-
வெறுப்பூட்டும் பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக இலங்கை அறிவிக்க வேண்டும் வெறுப்பூட்டும் பேச்சுக்களை குற்றவியல் குற்றங்களாக அறிவிப்பதற்கும், வன்முறைகள் தூண்டப்படுவதைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹசைன் வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கியிருக்கும் உறுதிமொழிகளை வரவேற்றிருக்கும் அவர், நம்பகமான சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு தற்போதைய இலங்கையின் நீதிக் கட்டமைப்பு பொருத்தமானதாக இல்லையென்பது துரதிஷ்டவசமானது. இதனாலேயே விசேட கலப்பு நீதிமன்றத்தை தமது விசாரணை அறிக்கையில் பரிந்துரைத்திருந்ததாக அல் ஹசைன் தெரிவித்தார். இல…
-
- 0 replies
- 311 views
-
-
பட்டதாரிகள் போராட்டத்துக்கு முடிவுதான் என்ன? வேலையில்லாத பட்டதாரிகள் வடக்கு மாகாண சபை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதாக வெளிவந்த செய்திகள் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது. படித்துவிட்டு வேலை எதுவுமின்றி இருக்கும் இளைஞர்கள் விரக்தியின் எல்லையைத் தொட்டதன் காரணமாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையும் இல்லை, வருமானமும் இல்லை என்றால் கைச் செலவுக்குக் கூடப் பிறரது கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலையில் இவர்கள் உள்ளனர். ஒரு காலத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெற்று விட்டாலே அரச வேலையொன்று நிச்சயம் என்றதொரு நிலை காணப்பட்டது. பட்டதாரிகள் எவரும் வேலையின்றி இருக்கவுமில்லை, வேலை தேடிப்…
-
- 0 replies
- 324 views
-
-
கண்டிக்கப்பட்டார் இலங்கைப் பிரதிநிதி - பகைமைக் கருத்துக்களை வெளியிட்டமைக்கு விசாரணை நீதிமன்றில் பொதுநலவாய வெளிநாட்டு சட்டவாளர்கள் இருப்பர்:- மனித உரிமைகள் சபையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மான முன்வரைவில் இலங்கை அரசுக்கு சார்பாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளபோதிலும், பொறுப்புக் கூறல் தொடர்பாக செயல்படுத்துவதற்கான தீர்மான வடிவின் பகுதி அப்படியே இருக்கின்றது. அது பின்வருமாறு கூறுகின்றது. இலங்கையின் நீதி விசாரணைப் பொறி அமைப்பில் பொதுநலவாய சிறப்பு ஆலோசகர் பணி மனையினதும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டவாளர்கள், அதிகாரம் பெற்ற வழக்கு தொடுநர்கள் போன்றோரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. தீர்மான வாசகத்தில் சர்வதேசம் என்ற சொல் நீ…
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கை குறித்த தீர்மானத்தை அமுல்படுத்த 350,000 அமெரிக்க டொலர் தேவை 01 அக்டோபர் 2015 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த யோசனையை அமுல்படுத்த சுமார் 350,000 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதனை அமுல்படுத்த 337,800 டொலர்கள் தேவை என தெரிவிக்கப்படுகிறது. 2016-2017ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் நிதி ஒதுக்கீட்டில் இந்த தீர்மானம் குறித்த விடயங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே புதிதாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையி…
-
- 0 replies
- 242 views
-
-
யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று யாழில் மாபெரும் நடைபவனி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நான்காவது நாளாக பாடசாலை சமுகத்தால் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://onlineuthayan.com/news/526
-
- 18 replies
- 3.3k views
-
-
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றிவிட்டு சாட்சிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளக விசாரணையை நடத்த அரசாங்கம் தயாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளகப் பொறிமுறை ஏற்புடையதாக அமையாது என்றும் கலப்பு நீதிமன்றம் அவசியம் என்றும் உள்ளக நீதித்துறை நம்பகரமாக இல்லையென்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக…
-
- 5 replies
- 593 views
- 1 follower
-
-
சுன்னாக பகுதியில் தொடரும் அடவாடிகளும், சட்டவிரோத செயல்களும், அதனை கண்டுகொள்ளாத சுன்னாக பொலிசாரும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத செயற்பாடுகளும், அடாவடித்தனங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருவதனால் அப்பகுதிமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். சுன்னாக நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வீதமாக மூன்று மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது வந்த கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்த இரு இளைஞர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்று இருந்தது. அதற்கு முன்னரும் சுன்னாக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்கள், குழு மோதல்கள் , மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் என பல இட…
-
- 0 replies
- 341 views
-