Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பழையவாடி எனும் பழம் பெரும் தமிழ் கிராமத்தில் சிங்கள பாராம்பரிய நடனத்தை பெண்கைள கொண்டு ஆடவைத்து வட மாகாண ஆளுனரை மகிழ்வித்துள்ளார் வவுனியாவை சேர்ந்த பிரபல வர்த்தகர். இந்திய தூதரகத்தின் அனுசரணையுடன் பழையவாடி கிராமத்தில் மதுரை மல்லிகையினை தோட்டமாக செய்ய முயற்சிகள் மேற்கொண்டு நேற்று மாதிரி பண்ணை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண விவசாய அமைச்சிற்கு தெரிவிக்கப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இவ் விவசாய பண்ணையில் வட மாகாண ஆளுனர், இந்திய துணைத்தூதர் நடராஜ், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ரோகண கமகே ஆகியோர் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் அங்கு வந்தவர்களை மகிழ்விப்பதற்காக நாதஸ்வர இசையுடன் சிங்கள பெண்களை வரவழைத்து நடனமாடி மக…

  2. இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான ‘சீபா’ ஒப்பந்தம் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்பட வில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடக முக்கியஸ்தர்களை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். சீபா ஒப்பந்தம் தொடர்பில் ஊடகங்கள் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. பிரதமரின் இந்திய விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவை மிகவும் பொறுப்பற்ற செயலாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் அலுவலகமோ அல்லது ஜனாதிபதி அலுவலகமோ இது பற்றி ஆராய வில்லை.ஊடகச் செய்திகளை வைத்துக் கொண்டு அரசுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எந்த ஒப்பந்தமானாலும் நாட்டுக்கு வெளிப் படுத்…

  3. கலப்பு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்SEP 19, 2015 | 1:12by நித்தியபாரதிin செய்திகள் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு போர்க் குற்றங்களை உள்ளடக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடந்த புதனன்று வெளியிட்டது. 2009ல் முடிவடைந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் ‘மிகப் பயங்கரமான வன்முறைகள் மற்றும் மீறல்கள்’ என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ‘பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில…

  4. எவ்வாறான விசாரணையை விரும்புகின்றீர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் கேட்கக் கூடாது– கலம் மக்ரே:- எவ்வாறான விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையை மட்டுமே கூறி வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தமது கருத்துக்களை நிராகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான ஆத…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 06:40.37 PM GMT ] [ பி.பி.சி ] தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை யுத்த களத்தில் தோல்வியடையச் செய்து நாட்டை மீட்டதற்காக தான் வருந்துவதாகவும், அதன் காரணமாகவே இப்பொழுது என் மீது போர்க்குற்றங்களை சுமத்துகின்றார்கள் என அவர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையை தாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் ஒரு குளிர்சாதன அறைக்குள் இருந்து க…

  6. பருத்தித்துறை முனை பகுதில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்றைய தினம் காலை போராட்டம் ஒன்றினை நடாத்தி இருந்தனர். இந்திய இழுவை படகுகள் அத்துமீறி உள்நுழைந்து பருத்தித்துறை மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், வலைகளையும் அறுத்து நாசமாக்கியும் வருகின்றது. இன்றைய தினம் அதிகாலை பருத்தித்துறை முனைப்பகுதி கடல் பிரதேசத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இழுவை படகுகள் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களின் வலைகளை அறுத்து நாசமாக்கி யுள்ளனர். அது தொடர்பில் உடனடியாக முனை பகுதியில் உள்ள கடற்படை முகாமில் மீனவர்கள் முறைப்பாடு செய்த போதும் அவர்கள் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிவித்தே மீனவர்கள் கடற்படை முகாமை முற்றுகை…

  7. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மைப்படுத்தி பதற்றமான அரசியல் சூழ்நிலையொன்றை, தமிழ்த் தேசிய அரங்கில் ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் சில தரப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, வட மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து, எப்பாடுபட்டாவது சி.வி.விக்னேஸ்வரனை அகற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புக்களை முன்னெடுக்கும் தரப்புக்களிடம் வெளிப்படுவது அதுதான். தமிழ் மக்கள் தமக்கான அரசியல் பாதையை சீராகக் கட்டமைப்பது தொடர்பிலான அக்கறையை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்ற இன்றைய கால கட்டத்தில், வட மாகாண முதலமைச்சரை முன்னிறுத்திய பதற்றமான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமை காலம் காலமாக தமிழ் மக்களை நோக்கியும் அவர்கள் முன்னெடுத்த அரசியல் ப…

  8. நாடாவை வெட்டிய இரண்டு பெண்களை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சம்பவம் கடவத்தையில் இடம்பெற்றுள்ளது. கடவத்தை-கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்னர், அங்குவந்த இரண்டு பெண்களும் வீதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருந்த ரிப்பனை (நாடாவை) வெட்டியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படம் அடங்கிய பதாதையை கையில் ஏந்தியிருந்த இருவரும் 'மஹிந்தவுக்கு ஜயவேவா' என்றும் கோஷமிட்டுள்ளார். அவ்வாறு கோஷம் எழுப்பிகொண்டுவந்த பெண்கள் இருவரும் மஹர தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிவேக நெடுஞ்சாலையை வைபவரீதியாக திறந்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட நெடுஞ்சாலைகள் அமைச்சர் …

  9. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்குச் சென்று தேநீர் அருந்திய நிலையிலே அவர் திடீர் உபாதைக்கு உள்ளாகியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'மன்னார் மறைமாவட்ட ஆயரும் அருட்தந்தை ஒருவரும் கொழும்புக்குச் செல்லும் போது, மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அதன் போது அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தேநீரை அருந்திய நிலையிலே மன்னார் மறைமாவட்ட ஆயர் திடீர் சுகயினமடைந்ததாகவும் மற்றைய அருட்தந்தை உயிரிழந்துள்…

  10. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே சர்வதேசத்திற்கு முக்கியம்: கெலும் மெக்ரே [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 12:37.38 PM GMT ] இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சர்வதேசத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் மெக்ரே கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொறுப்புக் கூறல், உண்மையை கண்டறிதல், நீதி, நல்லிக்கணம், அரசியல் தீர்வு போன்றவை அடுத்த முக்கியமான கேள்விகளாகும் என அவர் தெரிவித்துள்ளார். http://…

  11. அதிசயமான ஒரு உண்மை நடக்கப் போகிறது இலங்கையில்..! [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 07:38.51 AM GMT ] இது உண்மை, இது தான் நிதர்சனம், இதுவே யதார்த்தம். இலங்கை நாட்டில் வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள். ஆம்! இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையாக விசாரிக்கவுள்ளது. 2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றியே இவ்விசாரணை அமையவிருக்கின்றது. இது தொடர்பாகவே இலங்கை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளில் இருந்து அதிகம் பேசப்படுகின்றது. அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருந்த ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் அதற்கு எதற்கு தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் என்று தான் எடுத…

  12. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்SEP 14, 2015 | 1:21by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு இன்று தொடக்கம் அடுத்த மாதம் 2ஆம் நாள் வரை- மூன்று வாரங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமாக, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. இன்றைய முதல் நாள் அமர்வில், சிறிலங்கா வெளி்விவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் …

    • 13 replies
    • 2.9k views
  13. வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று திறந்து வைத்துள்ளார். பூநகரி பள்ளிக்குடாவில் கொடுவா மற்றும் பாலைமீன் வளர்ப்புத்திட்டம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையை அண்மித்ததான கடலில் பண்ணைகள் அமைத்து வளர்க்கப்படும் இம்மீன்களுக்குப் புரதத் தீவனத்தை வழங்குவதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடலில் பிடிக்கப்படும் சிறிய மீன்கள் வெய்யிலில் உலரவைத்துப் பண்ணை மீன்களுக்கான தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கருத்திற் கொண்டே மீன்களுக்கான தீவனத்தை உற்பத்தி செய்யும் நவீனஆலை இப்போது பூநகரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் நிறு…

  14. யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் நான்கு அம்ச திட்டம் ஒக்டோபர் மாத மத்தியில் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி ஜனவரி மாதம் தொடங்கி 18 மாதத்திற்குள் உள்நாட்டு பொறிமுறை குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு பொறிமுறையை செயற்படுத்தும் போது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறவுள்ளதோடு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மே…

  15. வடபகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். இன்று நடைபெற்ற மீனவர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும், இத…

  16. புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் போது, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அதற்கு அப்பால் செல்லாத தீர்வுக்கு தமது கட்சி இணங்குவதாக அமைச்சர் சம்பிக்க ரவணக்க அறிவித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பிக்க ரணவக்கவும் அவரது கட்சியும் கடந்த காலங்களில் மாகாண சபை முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்தது. பிரிக்கப்படாத ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்வு அடுத்த 18 மாதங்களுக்குள் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் ஒற்றையாட்சியை அடிப்படையாக கொண்ட இலங்கைக்குள் அதிகாரத்தை எப்படி பரவலாக்க முடியும் என அரசியலமை…

  17. சிறிலங்காவுடனான இராணுவப் பயிற்சியில் மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லை – என்கிறது சீனாSEP 18, 2015by கி.தவசீலன்in செய்திகள் சீன- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பயிற்சித் திட்டங்களில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேணல் லி செங்லின் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று, புதிதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்ற ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அப்போது கருத்து வெளியிட்ட மூத்த கேணல் லி செங்லின், ”ஆண்டு தோறும் 200 சிறிலங்கா படையினருக்கு சீனாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேவேளை, சிறிலங்காவின் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலும், பட்டலந்த…

  18. கலப்பு நீதிமன்றம் குறித்து ஜனவரியிலேயே தீர்மானம் – மங்கள சமரவீரSEP 18, 2015 | 8:39by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் முன்மொழிந்துள்ள கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பான வரும் ஜனவரி மாதமே முடிவு செய்யப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்- ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் உள்ளக விசாரணை பொறிமுறையை தயாரிப்பதற்காக கட்டமைப்பை உருவாக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை நான்கு பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. முதலாவதாக…

  19. சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதனை ஏற்றுகொண்டுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சட்டரீயாக 89 துப்பாகிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக உறுதியாகியு…

  20. அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில், நாட்டில் இன்று இடம்பெறும் கொலை, கொள்ளை, சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், குற்றச் செயல்கள் அதிகரிப்பு தொடர்பில் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பெரிதும் பேசப்படுகிறது. சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பில் கதைக்கப்படுகிறது. அண்மையில் நான்கரை வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னணியில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுமாறு சமூகத்தில் அழுத்தம் எழுந்துள்ளது. இதற…

  21. மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொட்டாதெனிய சேயா என்ற சிறுமி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தூக்கிலிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படும். மரண தண்டனைக்கு எதிராக ஜெனீவாவில் சர்வதேச நாடுகள் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர் மங்கள சமரவீரவும் இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உலகின் பல நாடுகளில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மரண தண்டனை தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் கருத்தை அவர…

  22. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி எழுத்தாளர் வெற்றிச் செல்வியின் சாட்சியங்களுடன் கவிஞர் தீபச்செல்வன் தொகுத்த வானொலிப் பெட்டகம்

  23. இலங்கை யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை மேம்படுத்தல் ஆகியனவற்றின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அறிக்கையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தரத்திற்கு அமைய குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் யதார்த்தமான நம்பகமான பொறிமுறைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும். யுத்த…

  24. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் வரவேற்றுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நீதி நிலைநாட்டப்படுவதற்கான செயற்பாடுகளுக்கு தான் முழுமையான ஆதரவை வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஐ.நாவுக்கு உதவவேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இந்த நாட்டு மக்களிற்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த பரிந்துரைகள் குறித்து நாங்கள் தேவையற்ற விதத்தில் பதட்டம் அடைய வேண்டிய தேவையில்லை. எங்களால் இந்த விடயங்களிற்கு சுமூகமான முறையில் தீர்வை காணமுடியும். அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள,சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது, ரவிராஜ் படுகொலை, பிரகீத் விவகாரம் போன்றவை நான் இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியிலேயே இடம்…

  25. காணாமல்போக செய்யப்பட்டவர்களை உறுதிப்படுத்தி- 'இல்லாதவர்'- என்ற அத்தாட்சிப் பத்திரத்தை அவர்களின் உறவினர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. யுத்தம், கலவரம், இயற்கை அனர்த்தங்களால் மரணமானவர்களின் உடல்கள் கிடைக்காத பட்சத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் மரணத்தைப் பதிய முடியாது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு 2010 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் காணாமற் போக செய்யப்பட்டவர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=140739&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.