Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை பதற்றமடையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்தில் அதிர்வுகள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=140666&category=TamilNews&language=tamil

  2. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கொகோ கோலா விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னான சங்கிலியனின் சிலையானது யாழ். மாநகர சபையால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் கௌரவமிக்க மன்னரான சங்கிலியனின் சிலையானது போற்றப்படக் கூடிய வகையில் இருக்கும் நிலையில், சிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் இவ்வாறு விளம்பர பதாகை பொருத்தப்பட்டுள்ளது. மாநகர சபை அனுமதி பெறப்பட்டு இது பொருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மாநகர சபை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவ்வாறு பொருத்த…

  3. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் படுகொலை செய்ததாக ஐநா மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. அதில், இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல் உசேன்‌ இன்று தாக்கல் செய்தார். அதில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளிட்டோரை இலங்கை இராணுவம் படுகொலை செய்தது. சர்வதேச அளவில் இலங்கையில்தான் அதிகம…

  4. தமிழின இனப்படுகொலைக்கு வலுவான சர்வதேச நீதி விசாரணை ஒன்றை இந்திய அரசாங்கமே தீர்மானமாக முன்னெடுக்க வேண்டும் என தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஈழத்தமிழர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக இந்திய அரசாங்கமே வலுவான ஒரு சர்வதேச விசாரணையை தீர்மானமாக முன்னெடுக்க வேண்டுமென தமிழக சட்டமையில் தீர்மானம் ஒன்று தமிழக முதலமைச்சர் ஜெயராம் ஜெயலிலதா கொண்டு வந்தார். இத் தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சருக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக தாம் நெஞ்சார்ந்த நன்றிக…

  5. 2009 செப்டெம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இருக்கும்போது எனது மகனை கடத்தி விட்டார்கள். ஐ.நாவில் முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறேன். புதிய அரசாங்கம் வந்தாலும் வேலையில்லை. மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவாகவே அவர்கள் பேசுகிறார்கள். எனது மகனை கோத்தபாய ராஜபக்ச தான் கடத்தியுள்ளார் என்பது நன்றாகவே தெரியும் என முஸ்லிம் பெண்ணொருவர் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். நாம் மனித உரிமைகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? (தமிழில் முழு விளக்க ஆவணப்படம்) புலிகள், அரசு இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை (முழுமையாக தமிழ், சிங…

  6. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையினைக் கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையினையும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார்! அத்துடன், இரு விடயங்களும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான விடயங்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இன்றைய தினம் குறித்த இரு விடயங்கள் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், வரவேற்றும் உள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். அதாவது இலங்க…

  7. மத்தளையில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்: மீண்டும் ஆரம்பிக்குமா விமானப் போக்குவரத்து? [ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 10:58.00 AM GMT ] மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. மிக நீண்டநாட்களாக மத்தளை விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான நிலையத்தை மூடிவிட தேசிய அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. அத்துடன் விமான நிலையத்தின் விமானப் பொதிகள் களஞ்சியத் தொகுதியை நெல் களஞ்சியப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மிக நீண்ட நாட்களின் பின் ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று இன்று மத்தளையில் தரையிறங்கியுள்ளது. லண்டனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி…

  8. ஐ.நா விசாரணை அறிக்கையின் சுருக்கம் – முழுமையாகSEP 16, 2015 | 12:43by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் அறிக்கையின் சுருக்கம், ஆங்கிலத்தில் 19 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பகுதி 261 பக்கங்களில் உள்ளது. இந்த அறிக்கையின் சுருக்கத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இன்று ஜெனிவாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அவரது அறிக்கையின் தமிழ் வடிவத்தை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்துங்கள்- 281310514-Sri-Lanka-Press-Release-16-09-2015-Tamil1 http://www.puthinappalakai.net/2015/09/16/news/9748

  9. உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட வெளிநாட்டு மணப்பெண் நேற்று இரவு கடத்தபட்டோரால் பெண்ணின் வீட்டில் விடப்பட்டார். இதனைதொடர்ந்து இக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டிதுறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கனடா நாட்டில் இருந்து வந்த 28 வயது யுவதிக்கு திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்லையில் நேற்று முன்தினம் இரவு குறித்த யுவதி வீட்டிற்குள் இருந்த வேளை ஹயஸ் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் வீட்டில் இருந்தோரை தாக்கி விட்டு மணப்பெண்னை கடத்திச் சென்றுள்ளனர். வந்தவர்கள் கறுப்பு துணியினால் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்தனர் என்…

  10. மனித உரிமை ஆணையாளரினால் கொண்டுவரப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பேரவையின் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் உசைன் இலங்கையின் இறுதி போர் குறித்தான அறிக்கை ஒன்றினை சபைக்கு இன்று சமர்ப்பித்துள்ளார். குறித்த அறிக்கை தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த விடயங்களுக்கு இன்று தீர்வு கி…

  11. ஆட்சி மாற்றம் இராணுவத்திற்கும் நன்மை! சிலநேரம் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படாதிருந்தால் மகிந்த ராஜபக்சவின் ஆக்கிரமிப்பில் நாடு இருந்திருந்தால் எமது இராணுவ வீரர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நின்றிருப்பர் என்று மின்சக்தி மற்றும் எரிகச்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து இலங்கை இராணுவம்மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அதை நிரூபிக்கும் ஆதாரங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். சில சர்வதேச ஊடகங்கள் தனிப்பட்ட வியாபார நலன் கருதியும் ஒரு சில தனிப்பட்டவர்களின் தூண்டுதலினாலும் பொய்யான புகைப்படங்களையும் காணொலிகளையும் தயாரித்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அவை உண்மைக்குப…

  12. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவி சோனியா காந்தி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான தரப்புக்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. வெகு விரைவில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பினை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இருவரும் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123995/language/ta-IN/article.aspx

  13. இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ள போதிலும் விசேட நீதிமன்றம் குறித்து எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான உரிய பொறிமுறைகளை ஏற்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும், ஐ.நாவின் பரிந்துரைகளிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்,என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/t…

  14. ஐநா மனித உரிமை ஆணையாளர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றதாக தற்போதைக்கு நாங்கள் கருதவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் ராட் அல்குசைன் தெரிவித்துள்ளார். கண்மூடித்தனமான எறிகணை வீச்சு, சட்டவிரோத படுகொலைகள்,பலவந்தமாக காணமற் போகச்செய்யப்படுதல், மிகசேமாசமான சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு.சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் உட்பட பாரிய குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. மனித குலம் முழுவதற்கும் கடும் கரிசனையை ஏற்படுத்தக்கூடிய விபரங்கள் இந்த அறிக்கை மூலம் வெளியாகியுள்ளன. புலம்பெயர் தமிழர்கள் உட்பட சகலசமூகத்தினரும் இந்த அறிக்கையை மறுத்தல் என்ற நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அங்கீகரித்தல் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாடுக…

  15. யாழ்ப்பாணம், நல்லூர் மாநகர சபைக்கு நல்லூர் திருவிழாவின் மூலம் 1 கோடியே 49 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லூர் திருவிழாக்காலச் செயற்பாடுகள் இம்முறை மிக சிறப்பாகவும் ஒழுங்கு முறையாகவும் நடைபெற்றிருக்கின்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இம்முறை 13லட்சம் அதிகமாகி 1கோடியே 49லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கின்றது. இத்திருவிழாவில் இம்முறை 348 கடைகள் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் 237 கடைகளே வழங்கப்பட்டிருந்தன. கச்சான் கடைகளுக்கு ஆகக்குறைந்த தொகை 10 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை 45 ஆயிரம் ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இனிப்புக் கடைக்கு ஆகக்குறைந்த தொகை 28 ஆயிரம் ரூபாவும் ஆகக் கூடிய தொகை ஒரு …

  16. [ செவ்வாய்க்கிழமை, 15 செப்ரெம்பர் 2015, 11:57.23 AM GMT ] தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாகவும், அதனால் தேவையற்ற போலி பிரச்சாரங்களை சிலர் முன்னெடுப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமையால், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும், எனக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறு இருப்பினும், அவ்வாறான எதிர்ப்புகள் கூட்டமைப்புக்குள் தனக்கு ஏற்ப…

  17. உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்SEP 15, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் முடிவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், “உங்களின் வேதனைகளை நன்…

  18. இன்று வெளியாகிறது ஐ.நா விசாரணை அறிக்கை! - ஊடக மாநாட்டையும் நடத்துகிறார் மனித உரிமை ஆணையாளர் [Wednesday 2015-09-16 06:00] இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடடத்திய விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. இன்று ஜீ.எம்.ரி நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் வெளியிடுவார். இதையடுத்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடடத்திய விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. இன்று ஜீ.எம்.ரி நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் வெளியிடுவார். இதையடுத்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்…

  19. ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர முயற்சிக்கிறாராம் ரணில்- இந்தியாவிடம் வாக்குறுதிSEP 16, 2015 | 0:40by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒற்றையாட்சிக்குள்- எமது அரசியலமைப்புக்குள் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம் என்று ஆராய்ந்து வருகிறோம்.” என்றும் அவர் இதன் போது குறி…

  20. கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் இரா­ணுவத் தேவைக்­காக சுவீகரிப்பதற்கு, ஒன்­றரை ஏக்கர் காணியை அள­விடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­த­மையால் கைவி­டப்­பட்­டுள்­ளது. கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலு­வலர் பிரிவின் கீழ் கோப்­பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்­ளது. இது 28 பேருக்குச் சொந்­த­மான காணி­யாக உள்­ளது. இக்­கா­ணியில் ஒன்­றரை ஏக்கர் பகு­தியை அள­வீடு செய்­வ­தற்­காக நில அளவை திணைக்­க­ளத்­தினர் வருகை தந்­த­போது காணி உரி­மை­யா­ளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சுகிர்தன், கஜ­தீபன், பரம்­சோதி ஆகியோர் ஒன்­றி­ணைந்­த­மையால் நில அள­விடும் பணி கைவி­டப்­பட்­டுள்­ளத…

  21. அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐ.நா அறிக்கை : மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா அறிக்கை, அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்பமாகிய ஐ.நாவின் 30ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், அதற்கு பொறுப்புக் கூற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் போன்று சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் குறித்தும் இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தினார். 47 உறுப்பு நாடுகள் கல…

  22. மணல் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு உள்ளன. அந்த மரங்களில் தீ பிடித்து அது வேகமாக மற்றைய இடங்களுக்கும் பரவி வருகின்றது. சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அப் பகுதி மக்கள் , பொலிசார், இராணுவத்தினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மணல் காட்டுக்கு சுற்றுலாவுக்கு வந்தவர்கள் சவுக்கு காட்டினுள் சமைத்து சாப்பிட்ட பின்னர் தீயினை உரிய முறையில் அணைக்காமல் சென்றதினாலையே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123978/language/ta-IN/article.aspx

  23. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுமாயின், அவர்களைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிகட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை நாளை வெளியாகவுள்ளது. 'அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன' என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். புதன்கிழமை வெளியாகும் அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், இராணுவத்தினரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அவர்களைக் காக்கும் நோ…

  24. சிறிலங்காவின் முன்னேற்றங்கள் இந்தியாவுக்கு முக்கியமானது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிSEP 15, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னேற்றங்கள், இந்தியாவுக்கும், தெற்காசியாவுக்கும், எமது கடற் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று மதியம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில், “சிறிலங்கா பிரதமரையும் அவருடன் வந்திருக்கும் குழுவினரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறிலங்கா தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற…

  25. துட்டகைமுனு மன்னன், எல்லாள மன்னனை தோற்கடித்த பின்னர் இனங்களின் மனதை சுகப்படுத்தியது போல, 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அன்றைய அரசாங்கம் இனங்களின் மனதை குணப்படுத்தியிருந்தால், நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்காது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். துட்டகைமுனு மன்னன், எல்லாள மன்னனை தோற்கடித்த பின்னர், எல்லாள மன்னனுக்கு நினைவு தூபியை ஏற்படுத்தி, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தினார். எனினும் 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்த பின், கடந்த அரசாங்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டதாக நாட்டிற்கு எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.