ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா. சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென உதய கம்மன்பில உள்ளிட்ட 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசுரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிபிசி தமிழோசையிடம…
-
- 5 replies
- 1k views
-
-
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறவுகளை பார்வையிடச் செல்லும் பெண்களிடம் சிறை அதிகாரிகளினால் பாலியல் இலஞ்சம் கேட்கப்படுவதாக கைதிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறைக்கைதியொருவரின் மனைவி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தான் தனது கணவரைப் பார்வையிடச் செல்லும் போது, தன்னிடம் பணம் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாகவும், இதனால் தான் மிகுந்த மனவேதனையுடன் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=140253&category=TamilNews&lan…
-
- 0 replies
- 644 views
-
-
தெல்லிப்பழை பிரதேசத்தில் முறையற்ற கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பன அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரையில் 30 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றபோது இவர் இவ்வாறு கூறினார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை, தெல்லிப்பழை, இளவாலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 30 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பல பெண்களை ஒரு நபரே கர்ப்பம் தரிக்க வைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. முற…
-
- 0 replies
- 305 views
-
-
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பாக கருணா தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று ராணுவ உயரதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக பல தகவல்களை கருணா அண்மையில் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் தொடர்பாக கருணா வெளியிட்ட கருத்தை முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா உடனடியாக மறுத்திருந்தார். குறித்த நேர்காணலில் இந்தியப்படையினரின் ஒரு பிரிவு வவுனியாவில் நிலைகொண்டிருந்ததாகவும், ரேடார் நடவடிக்கைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அவர்களே மேற்கொண்டதாகவும் கருணா தொடர்ந்தும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகவும் தற…
-
- 74 replies
- 4.7k views
-
-
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணமானது சுய நினைவிழந்தமை, உடல் உறுப்புக்களின் தொழிற்பாடுகள் செயலிழந்தமை மற்றும் நெருப்பால் ஏற்பட்ட காபன் மொனக்சைட் வாயுவை சுவாசித்ததன் விளைவாக ஏற்பட்டது என முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, விஷேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த சமர சேகர நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தார். வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தனது இறுதி அறிக்கையை மன்றில் சமர்ப்பித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வழக்கானது ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட திகதிப் படி நேற்றைய தினம் காலை 9.30 மணியள…
-
- 0 replies
- 293 views
-
-
இலங்கை அனுபவம் : புவிசார் அரசியல் போட்டியை கையாளுவதற்கான ஒரு அமெரிக்க படிப்பினையா?SEP 11, 2015 | 2:16by புதினப்பணிமனைin ஆய்வு கட்டுரைகள் இலங்கை அரசியலை வெறுமனே சிங்கள மேலாதிக்கமாகவும் அதற்கு எதிரான தமிழர் போராட்டமாகவும் சுருக்கிப் பார்த்தால், இலங்கையின் அரசியல் நிலைமைகள் எந்தளவு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் உடையது என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் போகும். இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் விடயங்களை சர்வதேச உறவுகளின் பின்புலத்தில் விளங்கிக் கொள்வதாக இருந்தால், இரத்தம் சிந்தலின்றி, அதிகார சக்திகள் எவ்வாறு தங்களின் நலன்களை வெற்றிகொள்ள முடியும் என்பதற்கான ஒரு சிறந்த படிப்பினையாக இலங்கை விளங்குகின்றது. இது பற்றி பார்பதற்கு முன்னர், புவிசார் அரசியல் என்றால் என்ன என்பதை பற்…
-
- 0 replies
- 2.2k views
-
-
“அவர்களுக்குச் சொந்தமான அனைத்தையும் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்”SEP 10, 2015 | 9:29by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமது சிறிய நிலத்தில் மிகவும் மகிழ்வுடன் வாழ்ந்த நாட்களை லக்ஸ்மணன் தர்மராஜினி நினைவுகூருகிறார். ‘நாங்கள் மிகவும் மேன்மையான வாழ்வை வாழமுடிந்தது. ஆனால் இன்று எமது சந்தோசமான வாழ்வு எம்மை விட்டுச் சென்றுவிட்டது’ என தர்மராஜினி தெரிவித்தார். கணவன்மாரை இழந்து வாழும் ஆயிரக்கணக்கான பெண்களில் தர்மராஜினியும் ஒருவராவார். தமது கணவன்மார் மற்றும் உறவுகள் உயிருடன் உள்ளனரா அல்லது இல்லையா என்பது கூடத் தெரியாது இவர்கள் தமது வாழ்நாளைக் கழிக்கின்றனர். கணவன்மாரைப் போரில் பறிகொடுத்த பெண்கள் இன்று எவ்வித தொழில்வாய்ப்புக்கள…
-
- 0 replies
- 561 views
-
-
மினுவாங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பு – மினுவாங்கொட வீதியில், மிரிஸ்வத்த என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிபர் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் மோதியது. இரண்டு பேருந்துகளுக்கும் இடையில், அதிபர் பாதுகாப்புப் பிரிவின் டிபென்டர் வாகனம் சிக்கிக் கொண்டதால், இரு அதிகாரிகள் அந்த இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவர் பின்னர் மரணமாகினர். உயிரிழந்த நால்வரில் ஒருவர் பெண் அதிகாரியாவார். மேலும் 6 அதிகாரிகள் படுகாயமடைந்த நில…
-
- 0 replies
- 362 views
-
-
யாருக்கு விசாரணை....! எதற்காக தயக்கம்....! [ வியாழக்கிழமை, 10 செப்ரெம்பர் 2015, 08:33.38 AM GMT ] ஏதிர்பார்ப்புக்களோடு நடைபெற்ற எட்டாவது பாராளுமன்றத் தேர்தலும் கோலாகலமாக நிறைவடைந்து விட்டது. மூன்று தசாப்தத்திற்குப் பின்னர் தேசிய அரசியலில் அதியுச்ச பதவிகளில் ஒன்றான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பல்வேறு இழுபறிகளின் மத்தியில் தமிழினத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுவிட்டார். தென்னிலங்கையில் வரவேற்பும் கடுமையான இனவாத விமர்சனமும் மேலெழுந்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வட கிழக்கில் கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. புதிதாக அமைந்துள்ள அரசாங்கம் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்குமா என்ற வ…
-
- 0 replies
- 626 views
-
-
[Thursday 2015-09-10 18:00] இலங்கை குறித்த புதிய தீர்மானங்கள் எதுவும் பொறுப்புக்கூறுதல், குறித்த இலங்கை மக்களின் சொந்த தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு அமைந்திருக்க வேண்டும என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களிற்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- செப்டம்பர் 2009 இல் இராஜாங்க திணைக்களத்தில் இணைந்துகொண்ட காலப்பகுதியிலிருந்து இலங்கை விவகாரத்தில் நான் ஆழ்ந்த அக்கறையை கொண்டிருந்தேன்.யுத்தத்தின் இறுதி தருணங்களில் இரு தரப்பும் இழைத்திருக்க கூடிய யுத்த குற்றங்கள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு எனக்கு ஆணைவழங்கப்பட்டிருந்தது. 2009 ஓக்டோபர் நடுப்பகுதியில் நான் இடைக்கால அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன், அதன் …
-
- 0 replies
- 412 views
-
-
[ புதன்கிழமை, 09 செப்ரெம்பர் 2015, 02:08.20 PM GMT ] நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று காலை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களின் ஆலோசனைக்கு அமைய நாடாளுமன்ற பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் படகு ஒன்றில், எடுத்துச் செல்லப்பட்ட பாம்பு தியவன்ன ஓயாவுக்கு அந்த கரையில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. இந்த மலைப்பாம்பு சுமார் 4 அடி நீளமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்த பூச்சாடிக்குள் மாபிலா பாம்பு ஒன்று காணப்பட்டமை குறித்த செய்த…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
கலம் மக்ரே தயாரிப்பில் நீதிக்கட்சி தேடல். ஆவணப்படம் வெளிவந்துள்ளது.தமிழர்கள் போராட்டத்தைக் கை விட்டாலும் மக்ரே விடமாட்டார்.https://vimeo.com/137683777 சப்டைட்டில் ஸ்பானிய மொழியில் இருந்தாலும் உரையாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன.
-
- 0 replies
- 718 views
-
-
யாழில் விற்பனை செய்யப்படும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரிலும் கிரீஸ் மற்றும் கார தன்மை உள்ளதாக தமக்கு அறிக்கை கிடைக்கப்பெற்று உள்ளதாக யாழ்.மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரி த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரினை யாழில் விற்பனை செய்யும் நிறுவனங்களில் இனம் காணப்பட்ட 9 நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்களை எடுத்து அவற்றை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் , 2 நிறுவனங்களின் நீரில் கார தன்மையும் 3 நிறுவனங்களின் நீரில் கிரீஸ் மற்றும் கார தன்மையும் 3 நிறுவனங்களின் நீரில் கிறீஸ{ம் கலந்துள்ளதாக 8 நிறுவனங்களுக்கு எதிராக பாதகமான அறிக்கை கிடைத்துள்ளது. அதனை அடுத்து குறித்த …
-
- 3 replies
- 1.3k views
-
-
நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா உற்சவத்தை எந்தவித தடையுமின்றி நடத்துவதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் ஆரம்பமான நல்லூர் கந்தனின் உற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நடை பெறுகிறது. நேற்றையதினம்வரை புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3 இலட்ச பேர் வரையில் நல்லைக் கந்தனைத் தரிசித்தனர். நாளை நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு இத்தொகை இரட்டிப்பாக இருக்கும் என்றும் அதற்குரிய சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் கூறினார். நல்லைக்கந்தன் ஆலய சுற்றுப்புறத…
-
- 1 reply
- 479 views
-
-
சொர்ணகுமார் சொரூபன் யுத்தத்தால் பெற்றோரை இழந்த நிலையில் வட மாகாணத்தில் மாத்திரம் சுமார் 7,000 சிறுவர்கள் இருப்பதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சராக நேற்று புதன்கிழமை (09) பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'யுத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவயங்களை இழந்த நிலையிலும் பெற்றோரை இழந்த நிலையிலும் பல சிறுவர்கள் உள்ளனர். அவர்களுக்கான நடவடிக்கைகளை எனது அமைச்சின் ஊடாக மேற்கொள்வேன். ஏனைய மாகாணங்களிலுமுள்ள இவ்வாறன சிறுவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பேன்' என்றார். 'சிறுவர்களின் கல்வியானது தற்போது பெரிதும் பா…
-
- 0 replies
- 691 views
-
-
கடந்த வாரம் கடற்கரையில் மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, கனேடிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர் சுதர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து கலந்து கொண்ட சுதர்மா இது தொடர்பான மேலதிக விபரங்களை அளித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyJSUSVjryF.html
-
- 1 reply
- 763 views
-
-
இலங்கையில் கடந்த ஜனவரி 8 ம் திகதி புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழர்களுக்கு எதிரான துன்பங்களும், சித்திரவதைகளும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்படடதன் பின்னரான காலப்பகுதியில் இதுவரையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவத்தினர் செயற்பட்ட 11 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த சம்பவங்கள் வாக்குமூலத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக IBJP என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு சென்று, அங்குள்ள சட்ட வைத்தியர்களிடமும், சர்வதேச வைத்திய நிபுணர்களிடமும் சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளதாக ஆங்கில ஊடகம் …
-
- 0 replies
- 426 views
-
-
யாழ். பல்கலைக்கழக வாழ் நாள் பேராசிரியர் குணரட்ணம் காலமானார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், முன்னாள் விஞ்ஞான பீடாதிபதியும், பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறை ஆகியவற்றின் தாபகத் தலைவருமாகிய வாழ்நாள் பேராசிரியர் கந்தையா குணரட்ணம் இன்று காலை கொழும்பில் காலமானார். கொழும்பு பல்கலைக் கழக பௌதிகவியற்றுறைப் பட்டதாரியாகிய பேராசிரியர் குணரட்ணம், லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் தனது கலாநிதி பட்டம் உட்பட பல உயர் தகைமைகளைக் கொண்ட ஒருவர். பௌதிகவியலில் பல ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு, ஆய்வுக்கான பல விருதுகளையும் பெற்றுக்கொண்ட ஒரு முதுபெரும் கல்வியியலாளர் ஆவார். யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறை, கணினி விஞ்ஞானத் துறைக…
-
- 3 replies
- 2.4k views
-
-
அமெரிக்காவின் எதிர்காலத் திட்டம் – ரிச்சர்ட் ஆர்மிரேஜ் விளக்கம்SEP 10, 2015 | 2:11by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவுக்கு ஜனநாயகம் எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதைக் காண முடிந்துள்ளதாக, அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயயணம் மேற்கொண்டுள்ள அவர், சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான எதிர்கால உறவுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் மூலம், சிறிலங்காவில் ஜனநாயகத்தின் அற்புதத்தை காண முடிந்தது. அமெரிக்காவின் பார்வையில், நாம் இப்போது தென்கிழக்காசியாவின் மீது கவனம் செலுத்தவுள்ளோம். ஆசியாவிலும் கூட அதற்கான தேவை உள்ளது. ஏனென்றால் நாம் பாரிய ப…
-
- 3 replies
- 742 views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் அட்ங்கிய புதிய ஆவணப்படமொன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் கலம் மக்ரேவினால் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தின் ஊடாக இந்த ஆவணப்படம் முதலில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் தமிழ், சிங்களம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை உள்ளடங்கியதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் இன்னல்களை சர்வதேச சமூகம் செவிமடுக்க வேண்டுமென்ற நோக்கில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆ…
-
- 1 reply
- 484 views
-
-
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழா பேரணி யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இன்று இடம்பெற்ற நுற்றாண்டு விழா பேரணியில் அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். பாடசாலை முன்றிலில் இருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான பேரணி அரசடி வீதி - கே.கே.எஸ்.வீதி - கன்னாதிட்டி வீதி - கஸ்தூரியார் வீதி - நாவலர் வீதி - பிறவுண் வீதி - மீண்டும் அரசடி வீதி வழியாக பாடசாலை மைதானத்தை அடைந்தது. இன்றைய பேரணியில் மாணவர்களின் ஒயிலாட்டம், மயிலாட்டம, குதிரையாட்டம், செம்பு நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. …
-
- 12 replies
- 2.6k views
-
-
புனித பத்திரிசியார் கல்லூரியில் டெனிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முப்பது இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் புனித பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாமதேவா ஞாபகாரத்த டெனிஸ் விளையாட்டரங்கு,நுழைவாயில் ஆகியன இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் கலந்து கொண்டு இந்த விளையாட்டரங்கை திறந்து வைத்தார். மேலும் ஆயரால் யாழ்.மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்கள், மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கான நிதியுதவி செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார். …
-
- 2 replies
- 960 views
-
-
அரசியலமைப்பு சபையில் சம்பந்தன், சுமந்திரன் – ராதிகாவுக்கும் வாய்ப்பு?SEP 10, 2015 | 1:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்புச் சபைக்கு இதுவரை 7 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதன் முதலாவது கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சபையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய மூன்று பிரதிநிதிகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுவின் உப தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதனுக்கு சனிக்கிழமை (05) மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதான பாலத்திலிருந்து நேற்று சனிக்கிழமை காலை, நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் தொடரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர், மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சென்று மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மற்றும் அருட்தந்தையர்களிடம் ஆசிபெற்றார். இதன்போது, வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உற…
-
- 3 replies
- 515 views
-
-
யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களினால் 75 தினங்களில் 48 பேர் மரணமடைந்துள்ளதுடன் 4ஆயிரத்து 850 பேருக்கு எலும்பு முறிவும் 700 பேருக்கு தலையில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளி விபரங்களின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பான பாதிப்பு விபரம் வெளிவந்துள்ளது. குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்குள்ளாகி 6 ஆயிரத்து 300 பேர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து வயதுப் பிரிவு நிலையிலும் உள்ள 4 ஆயிரத்து 850 பேர் எலும்பு முறிவுக்கு உள்ளாகிய நிலையில் அனுமதி…
-
- 1 reply
- 379 views
-