ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென கபே எனப்படும் தோதல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தனிநபர் சுதந்திரத்தை மிகவும் மோசமான முறையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாதித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான அடக்குமுறைச் சட்டமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.கால வரையறையின்றி சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய இந்த சட்டம் பயன…
-
- 0 replies
- 361 views
-
-
எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள். Published on August 23, 2015-9:39 am · No Comments கடந்த 17ஆம் திகதிவரை இலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலும் தேர்தல் ஆரவாரங்கள் பிரசாரங்கள் மிகத்தீவிரமாக நடைபெற்றன. லண்டன், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், ஒஸ்ரேலியா, உட்பட ஐரோப்பிய நாடுகள் எங்கும் கூட்டங்களும் தேர்தல் பிரசாரங்களும் என்று அமர்க்களமாகவே காணப்பட்டது. லண்டன் கனடா, ஒஸ்ரேலியா நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் என எங்கும் இந்த தேர்தல் ஆரவாரமாகத்தான் காணப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. என்…
-
- 29 replies
- 2k views
-
-
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 09:08.25 AM GMT ] தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் …
-
- 0 replies
- 503 views
-
-
சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கி தமிழீழத்தை ஏற்படுத்தும் திட்டத்தை ஐ.தே.க. முன்னெடுக்கிறது சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கி சர்வதேச அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து தமிழீழத்தை ஏற்படுத்தும் திட்டத்தை ஐ.தே. கட்சி முன்னெடுப்பதாக குற்றம் சாட்டிய உதய கம்மன்பில எம்.பி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் ‘‘சதி” யின் ஒரு அங்கமே ஐ.தே. கட்சியின் தேசிய அரசுப் பொறியாகும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ‘‘மஹிந்த” அணி ஆதரவாளர்களின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; 1988 ஆம் ஆண்டு இந்தியா, …
-
- 2 replies
- 586 views
-
-
பிரபாகரனுக்கு சிலை அமைப்பதற்காக சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனராம்! [Wednesday 2015-08-26 07:00] பிரபாகரனின் சிலை அமைக்கப்பட வேண்டுமென்பதற்காக வடக்கிலிருந்து சிங்களவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என்று பியகம சுசில தேரர் தெரிவித்தார். பிட்டகொட்டே பாகொட வீதியில் தூய்மையான ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் ஆலோசகர் பியகம சுசில தேரர் இவ்வாறு தெரிவித்தார். தேரர் இங்கு மேலும் உரையாற்றுகையில்- வடக்கிலுள்ள ஹசலக காமினி என்ற நாட்டுக்காக உயிர் நீத்த சிங்கள இளைஞனின் சிலை உடைக்கப்பட வேண்டும். இராணுவ நினைவுச் சின்னங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என நல்லாட்சிக்காக குரல் கொடுத்த பௌத்த குருமார் மற்றும…
-
- 1 reply
- 563 views
-
-
சுமந்திரன் மாவை சரா எவ்வாறு உள்ளே? அருந்தவபாலன் சுரேஸ் மதனி எவ்வாறு வெளியே? உள்ளிருந்து ஒரு தகவல்! August 22nd, 2015 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும் போது பாரிய மோசடியை அரசாங்க உயர் அதிகாரிகளின் துணையோடு மாவைறும் சுமந்திரனும் செய்து முடித்து யாழ்ப்பாண மக்களையும் சக வேட்பாளர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்த உயர் அதிகாரியின் மூலம் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத இந்த அதிகாரி தெரிவித்த தகவல்களை நாம் இங்கே தருகிறோம்.அதிகாலை 10 மணியலவில் சகல விருப்பு வாக்கு எண்ணும் பணி நிறைவடைந்து அவற்றின் பெறுபேறுகள் சம்பந்…
-
- 14 replies
- 1k views
-
-
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை? - பொலிஸ் விசாரணையில் இரகசியத் தகவல்கள் அம்பலம்[Wednesday 2015-08-26 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பல்வேறு தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. திட்டமிட்டு கடத்தப்பட்டு எக்னெலிகொடவைப் படுகொலை செய்திருந்தால் அத்திட்டத்தின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளார்கள் என்றும் என்ன நோக்கத்துக்காக அவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தொடர்பிலும் தொடர்ந்தும் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் அவரது கொலை எந்த தினத்தில், எங்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது போன்ற விடயங்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கைது செய்யப…
-
- 0 replies
- 872 views
-
-
ஜெனிவாவில் இராஜதந்திர நகர்வுகளுக்குத் தயாராகிறது அரசாங்கம்! [Wednesday 2015-08-26 07:00] யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. விசேடமாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதாக அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதி ர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இல ங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழு அதில…
-
- 0 replies
- 452 views
-
-
இலங்கையில் மோனோ ரயில் திட்டத்தில் முதலீடு செய்ய மலேசிய ஆர்வம்! [Wednesday 2015-08-26 07:00] இலங்கையில் மோனோ ரயில் போக்குவரத்து, துறைமுக அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, ஹோட்டல் நிர்மாணம் போன்ற துறைகளில் முதலீடு செய்ய மலேசியா ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் வர்த்தக சபையுடன் மலேசியா பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மெகா பொலிஸ் எனப்படும் பாரிய நகர உருவாக்கம், மோனோ ரயில் போக்குவரத்து போன்ற கவர்ச்சிகரமான அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய தற்போது மலேசிய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அனைத்து நிதிக் கொட…
-
- 0 replies
- 387 views
-
-
-
- 0 replies
- 629 views
-
-
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்! - டோனி பிளேயர் வாக்குறுதி [Tuesday 2015-08-25 07:00] இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைய குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித் தானிய முன்னாள் பிரதமர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனைக் கூறியுள்ளார். ஓகஸ்ட் 17ம் திகதி தேர்தலை மிக அமைதியாகவும் நியாயமானதாகவும் நடத்தியமை குறித்தும் பிளேயர் ஜனாதிபதிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்ன…
-
- 4 replies
- 924 views
-
-
விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் நியமனம் தொடர்பில் அரசே முறைகேடான நியமனத்தை உடன் நிறுத்து : கிளிநொச்சி விவசாயிகள் மகஜர் கையளிப்பு வடமாகாணத்தில் நிலவிய விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதில் தமிழர்களுக்கு மிக குறைந்த அளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி விவசாயிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர; சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். இன்று காலை 10 மணியளவில் விவசாயிகள் சார்பில் ஒரு குழுவினர் கிளி.மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் குறித்த மகஜரினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரpடம் கையளித்தனர். மேலும் மகஜரினை பெற்றுக் கொண்ட அரச அதிபர் குறித்த மகஜரினை உரிய கால…
-
- 1 reply
- 510 views
-
-
விபத்துக்களை தடுக்க யாழில் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, மோட்டார் போக்குவரத்து அமைச்சு மற்றும் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளும் விபத்துக்களை தடுத்தல் தொடர்பாக யாழ்.மாவட்ட அரச ஊழியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் உரையாற்றுகையில், யாழ். மாவட்டத்தில் ஆரம்பித்துள்ள இவ்விசேட கருத்தரங்கு ஏனைய 4 மாவட்டங்களிலும் இடம்பெறும். எமது மாகாணத்தில் தற்போது வாகன நெரிசல் கூடியுள்ளமையினாலும் ஒரு சில வீதிகள் பழுதடைந்து காணப்படுவதனாலும் விபத்துக்களுக்கு சாதகமாகவு…
-
- 0 replies
- 383 views
-
-
மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்படும் பொலிஸ் அதிகாரம் நீண்ட சிந்தனை தேவை என்கிறார் : பிரதமர் ரணில் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்படுமென்றவாறான கருத்தைஇ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார். எனினும், பொலிஸ் அதிகாரம் குறித்து நீண்ட சிந்தனை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோருகின்றனரே என வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில், காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும், கிழக்கிலும் தங்களது காணிகளிலிருந்து வெளியேற்…
-
- 0 replies
- 853 views
-
-
சிவாஜியினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை நிராகரித்தார் அவைத்தலைவர் இலங்கை தீவில் உள்ள தமிழ்,சிங்கள மக்களின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சபை அமர்வில் முன்மொழியப்பட்ட பிரேரணை அவைத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. அதன்போது ஆரம்பத்தில் சிவாஜிலிங்கம் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதமாக சபைக்கு வருகை தந்த அவர் குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளத…
-
- 1 reply
- 544 views
-
-
புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார்: நிஷா பிஸ்வால் புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்த அவர், வெளிவிவகார அமைச்சில் வைத்து உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். இங்கு உரையாற்றிய நிஷா பிஸ்வால், ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான வளங்களுக்கான அர்ப்பணிப்புடன், மீள்குடியேற்றத்துக்கும் கல்விக்கும் சம்பூரில் நாங்கள் உதவி வழங்கவுள்ளோம். அத்தோடு, இந்நாடானாது தனது முழுமையான ஆற்றலளவை அடைவதற்கு, இந்த விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் ஜனாதிபதியுடன…
-
- 1 reply
- 405 views
-
-
வடமாகாண சபையில் வினோத போராட்டம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 200 இற்கு மேற்பட்ட தீர்மானங்களுக்கு என்ன நடந்த்து? குறித்த தீர்மானங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளை முன்வைத்து மாகாண சபை உறுப்பினர் ஜீ்.ரி.லிங்கநாதன் விநோத போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இன்று வடக்கு மாகாண சபையின் 33ஆவது அமர்வு கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியபோதே அவர் விநோதமான போராட்டத்தை நடத்தினார். இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இதுவரை நிறைவேற்றப்பட்ட சுமார் 200 சபைத் தீர்மானங்களின் தொடர் நிலை என்ன?இ மீள்குடியேற்றப்பட்டு இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறாமல் இருக்கும் மக்களுக்கான வீடுகள் கிடைக்க எடுத…
-
- 0 replies
- 581 views
-
-
அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது கவனம் : மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுகின்றமையால் அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபை கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதன்போதுஇ வடமாகாண சபையின் உறுப்பினர் ஜயதிலக வடமாகாணத்தில் உள்ள சில ஊடகங்கள் தன்னிச்சையாக அவதூறான செய்திகளை வெளியிடுகின்றன. அதனைத் தடுக்கும் நோக்கில் வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சபையில் வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். அதற்கிணங்க சபைய…
-
- 0 replies
- 381 views
-
-
கடற்புலிகளின் ஆயுதங்களை பார்வையிட்டார் மைத்திரி திருகோணமலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் சென்றுள்ளார். இதன்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படகுகளை ஜனாதிபதி பார்வையிட்டார். அத்துடன் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின்மூலம் துறைமுகப் பகுதியையும் ஜனாதிபதி சுற்றிப் பார்வையிட்டார். மேலும் சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள ஒப்படைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் திருமலை சென்றிருந்தார். அதன்படி குறித்த நிகழ்வையடுத்தே ஜனாதிபதி நேற்று குறித்த இடங்களுக்குச் சென்றுள்ளார். - See more at: http://onlineuthayan.com
-
- 4 replies
- 532 views
-
-
இடதுசாரிகளை ஏமாற்றி விட்டது சுதந்திரக் கட்சி! - புலம்புகிறார் டியூ குணசேகர[Tuesday 2015-08-25 07:00] தேசியப் பட்டியல் நியமனத்தின் போது சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இடதுசாரிகளை ஏமாற்றி விட்டதாக டியூ குணசேகர குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ குணசேகர இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி இணைந்து திருட்டுத்தனமாக தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியுள்ளது. இதன் போது இடதுசாரிகள் முற்றாக புறக்கப்பணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுத…
-
- 1 reply
- 425 views
-
-
கூட்டமைப்பை நாளை சந்திக்கிறார் நிஷா பிஷ்வால்! [Tuesday 2015-08-25 07:00] தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளார். இன்று காலை வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நிஷா பிஷ்வால் வெ ளிவிவகார அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் நாளை காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தில் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வெ…
-
- 1 reply
- 660 views
-
-
மீண்டும் ஐ.ம.சு.மு வசமாகிறது ஊவா மாகாணசபை? - சசிந்திர ராஜபக்ஷவுக்கு முதலமைச்சர் பதவி[Tuesday 2015-08-25 07:00] ஐக்கிய தேசியக் கட்சியின் வசமிருந்த ஊவா மாகாண சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் மீண்டும் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊவா மாகாண சபை முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஊவா மாகாண சபையின் தமிழ் கல்வியமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண அமைச்சர் ரவி சமரவீர, மாகாண அமைச்சர் ஜே.எம்.குமாரதாச, சபை உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க, பத்மலால் குணசேகர ஆகிய அறுவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இந் நிலையில், அவர்களின் வெற்றிடத்துக்கு புதிதாக நியமிக்கப்படவ…
-
- 0 replies
- 340 views
-
-
காணாமற்போனவர்கள் குறித்த நல்ல பதிலை வழங்க கோருகிறார் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த தாய்! [Tuesday 2015-08-25 07:00] மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களினதும் காணாமல்போனவர்களினதும் குடும்பங்கள் தினமும் வேதனையுடனும் கண்ணீருடனுமே வாழ்ந்து வருகின்றன. அவர்களுக்கு காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் நல்ல முடிவு வரும் என்றே வந்துள்ளதாக மூன்று பிள்ளைகளை இழந்த வாழைச்சேனை, புதுக்குடியிருப்பினை சேர்ந்த யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு 3 ஆம் கட்டமாக தமது விசாரணைகளை மேற்கொண்டு மூன்றாவது தினமான நேற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடத்தியது. இந்த விசாரணையில் கருத்து தெரிவ…
-
- 0 replies
- 422 views
-
-
வீதிப் பெயர் பலகையை இடித்துச் சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன் கைது! - பிணையில் செல்ல அனுமதி [Tuesday 2015-08-25 07:00] கல்முனை நகரில் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இடித்து நொருக்கிய டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கல்முனை பிரதான நெடுஞ்சாலையில், ஐக்கிய சதுக்க சந்தியில் இருந்து பொதுச் சந்தை வரையான பாதைக்கு கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த ஒன்பதாம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதினால் அதனைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் மேற்கொண்டிருந்தார்.…
-
- 0 replies
- 531 views
-
-
ஜனாதிபதி வசமானது நான்கு அமைச்சுக்கள் சுற்றுச்சூழல், மஹாவலி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு அமைச்சுகளை தனக்கு கீழ் வைத்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மைத்திரி இவ்வாறு அறிவித்துள்ள நிலையில் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர்கள் எத்தனை பேர் நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமுள்ளன. அமைச்சரவையை 30பேருக்குள் மட்டுப்படுத்துவதற்கு உறுதியளித்திருந…
-
- 3 replies
- 539 views
-