Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நியூஸ்பெஸ்ட் ஒன்லைன் அகெடமிக்கு பாரிய வரவேற்பு Jun 26, 2015 Bella Dalima Local 0 நாட்டின் இளம் சந்ததியினரின் ஊடக அறிவை மேம்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நியூஸ்பெஸ்ட் ஒன்லைன் அகெடமிக்கு பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது பதிவு செய்துள்ளனர். நியூஸ்பெஸ்ட் ஒன்லைன் அகெடமியுடன் தொடர்புபட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அதன் கருவிகளைப் பயன்படுத்த முடியும். இதில் ஊடகத்துறைசார் விரிவுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விரிவுரை தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன், பரீட்சைக்கான கேள்விகளும் ஒன்லைன் அகடெமியில் இணைக்கப்படவுள்ளன. http://newsfirst.lk/tamil/2015/06/நியூஸ்பெஸ்ட்-ஒன்லைன்-அ…

    • 0 replies
    • 586 views
  2. வேலுப்பிள்ளையின் மகன் உதித்தெழுந்து இந்நாட்டில் இனவிரிசலை ஏற்படுத்தவில்லை!- மனோ கணேசன் [ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 08:14.41 AM GMT ] வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தோ அல்லது மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்தவில்லை. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது. இதை இந்த நாட்டின் அனைத்து இன அரசியல் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இந்து, பெளத்த கலாச்சார பேரவை விழா, கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. ஹெல உறுமய கட்சி தவிசாளர் அதுரலியே ரத்ன தேரர் எம்பி, அமைச்சர்கள…

  3. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்? பாராளுமன்றம் கலைக்கப் படுவதற்கான பின்னணி என்ன? 26 ஜூன் 2015 குளோபல் தமிழ் செய்திகளின் பிரத்தியேக செய்தியாளர்:- எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்தை கலைப்பது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தப்படுவது குறித்து நாளை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய தேர்தல் செயலகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். வே…

  4. ஊழல் மோசடியானவர்களையும் போதைபொருள் வியாபாரிகளையும் அரசியலில் இருந்து விலக்குவதென்ற நிபந்தனைகளுடன் தேர்தலொன்றின்போது வேட்பு மனுக்களை வழங்கும் அரசியல் கட்சிகள் கருத்தில் கொள்ளவேண்டிய எட்டு முக்கிய அம்சங்களை கொண்ட ஆவணத்தின் மக்கள் ஒப்பம் பெறும் நடவடிக்கையொன்று ஆரமப்pக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 12 ஆந் திகதி பஃவ்ரல் பல சமூகங்களுடன் ஒன்றிணைந்து நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவுசெய்யப்படும் தேர்தலொன்றின்போது வேட்பு மனுக்களை வழங்கும் அரசியல் கட்சிகள் கருத்தில் கொள்ளவேண்டிய எட்டு முக்கிய அம்சங்களை கொண்ட ஆவணத்தை நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் ஏற்று கையொப்பம் பெற்றிருந்தது. தற்போது இவ்வியக்கம் இப்பிரகடனத்தை மக்கள் முன் கொண்டு செல்வதற்காக நாடு பூராகவும…

  5. முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் புளியங்குளம் பகுதியில் முல்லை ஒட்டு என்கின்ற புதிய சிறு கடலை இனம் ஒன்று நேற்று பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டு அதனுடைய விளைச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் வட மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் அமைச்சரின் செயலாளர், விவசாய அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=128454111326468848#sthash.Fk8C3RvP.dpuf

  6. அரச பதவி வகிப்பவர்கள் 60 வயதை அடைந்ததும் ஓய்வு பெற வேண்டும் என்பது சட்டம். இந்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளராக இன்னொருவர் நியமிக்கப்படும் வரை அவர் ஓய்வு பெறமுடியாது. இந்நிலையில் ஆணைக்குழு இன்னொரு தேர்தல்கள் ஆணையாளரை நியமிக்கும் வரை மஹிந்த தேசப்பிரியவே தேர்தல்கள் ஆணையாளராக இருப்பார். மேலும் இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்பதால் மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலிலேயே இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறும் எனக் கூறப்படுகின்றது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=831844112226428750#sthash.IZgqGyWs.dpuf

  7. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றல் வெளியிட்ட கூற்று பிழையானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து தவறானது என மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். பிரதமர் பாராளுமன்றில் வெளியிட்ட கருத்து பாராளுமன்றையும், மக்களையும் பிழையாக வழிநடத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரினால் வாசிக்;கப்பட்ட அறிக்கையை செவி மடுக்கும் எவரும் முன்னாள் ஜனாதிபதிக்கு உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவே உணர்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வாகனங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துமே பயன்டுத்த …

  8. சிங்கள அரசின் இந்த அட்டூழியங்களை தட்டிக் கேட்காத அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னமும் செயல்படுகிறார்கள் எனக் கூறுவது சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு துணை நிற்பதற்குச் சமம். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் சுமார் 5 லட்சம் ஈழத் தமிழர்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக இருக்கின்றனர். சொந்த ஊருக்கே, சொந்த வீட்டுக்கோ திரும்பிச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. அவர்களது விவசாய நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. மேலும், சிங்கள அரசு கைது செய்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கதி என்ன என்பதே தெரியவ…

    • 2 replies
    • 592 views
  9. கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:00.29 PM GMT ] தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை மௌனிப்புச் செய்தது. அதன் பின் இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தல…

  10. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில், தனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கும் அதனை வலியுறுத்துவதற்கும் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். “நாடு இன்று ஒருவிதமான குழப்பத்திற்குள் இருந்து வருகின்றது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். போர் நிறைவடைந்த பின்னர் சிறிலங்காவுக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனிடம் அன்றைய அரசாங்கம் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. அத்துடன் அனைத்துலக நாடுகளிடமும் அதே வ…

  11. இலங்கையில் கடந்தவருடம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பல மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2014 மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பாரிய மனித உரிமை மீறல்கள்குறித்து தகவல்கள் வெளியாகின. சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என அரசாங்கத்தினால் கருதப்பட்டவர்கள்,தாக்கப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர். பலவந்தமாக காணமற்போகச்செய்தல் காணப்பட்டது. இதேபோன்று கண்மூடித்தனமாக கைதுசெய்து தடுத்துவைத்தல்,இவ்வாறு தடுத்து வைக்கப்பட்வர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுதல், பாலியல் துன்புறுத்தல் போன்றவையும் காணப்பட்டன. படைய…

    • 0 replies
    • 428 views
  12. புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன் புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய அவர்கள் விரும்புகின்றனர். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்கள், ஐக்கிய இலங்கைக்குள் செயற்படவே விரும்புகின்றனர். ஆனால், அவர்களைப் புலிகள் என்று சித்தரித்து அவ…

    • 11 replies
    • 721 views
  13. இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமை அமைப்பும் படுகொலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ஐ.நா.வின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஆதரித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு இடைக்கால அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப்…

    • 1 reply
    • 1.2k views
  14. FM Samaraweera said, pointing out that the then Defence Secretary Gotabhaya Rajapaksa too was involved in the post-war South African initiative. Senior South African representatives dealt with both the previous government and the UK headquartered Diaspora grouping Global Tamil Forum (GTF), FM Samaraweera recalled accusing what he called the Abharamaya gang of politicising and undermining the reconciliation process. Minister Samaraweera referred to President of the GTF Rev. Father S.J. Emmanuel as well as its UK based spokesperson Suren Surendiran as Diaspora representatives engaged in the reconciliation efforts http://www.island.lk/index.php?page_cat=article-details&amp…

    • 4 replies
    • 1.3k views
  15. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகின்ற நிலையினில் யாழிலும் மாணவர்கள் விழிப்பு ஊர்வலங்களை நடத்தியுள்ளனர். போதை இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் 1987 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இது கருதப்படுகிறது. "போதை" சமூகத்தை அழிக்கும் ஒரு "அரக்கன்'. போதைப்பொருளால், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பம் மற்றும் சமுதாயமும் சீரழிந்து போகிறது. இதுதான் அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடி. சிலர் இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். போதைப்பொருள் பயன்பாடு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, …

  16. புலிகளின் அச்சுறுத்தல் இல்லை! - இராணுவப் பேச்சாளர்[Thursday 2015-06-25 19:00] இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு குறித்து நாம் தொடர்ந்தும் அவதானமாக இருக்கின்றோம். சிலர் குறிப்பிடுவது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இலங்கையின் புலனாய்வாளர்கள் இது தொடர்பான தகவல்களை திரட்டி கொடுத்துள்ளனர். நாம் இது தொடர்பில் மிகவும் உன்னிப்பா…

  17. 25-06-2015 06:40 PM -எஸ்.சசிக்குமார் கிராமப்புறங்களிலுள்ள பாடசாலைகளில் பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் நகர் புறங்களிலுள்ள பாடசாலைகளில் தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். செல்வாக்குகள் காரணமாகவே சில ஆசிரியர்கள் தேவையான இடங்களுக்கு இடம்மாற்றம் பெற்றுக்கொண்டு செல்கின்றனர். எனவே இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்ககூடாது என்று கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு தகவல் தொழிநுட்ப அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார். திருகோணமலை வலயக்கல்வி அலவலகத்தின் நித்திலம் சஞ்சிகை வெளியீடும் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (23) உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்வி…

    • 0 replies
    • 273 views
  18. அப்பாவின் இறுதி வார்த்தை - நாங்கள் சரணடையப் போகின்றோம்! கண்ணீருடன் நடேசனின் மகன்! [ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:15.44 PM GMT ] வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல். சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம் என்றார் தந்தை. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரோடு நடேசனின் மகன் தெரிவித்துள்ளார் முழுமையான நேர்காணல் ஒளிவடிவில் கீழே. http://www.tamilwin.com/show-RUmtyGRYSUfw1B.html

    • 6 replies
    • 1.2k views
  19. தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை பிரதேச சபை நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக முதலமைச்சரினை அழைப்பதா இல்லை மாவை சேனாதிராசாவினை அழைப்பதாவென்ற பிரச்சினையினால் இரண்டுபட்டுள்ளது. நெல்சிப் ஊழல் மோசடி காரணமாக நீண்ட காலமாக கட்டி முடிக்காது அரைகுறையாக உள்ள திக்கம் மானாண்டி சந்தையினை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவினில் உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்படவுள்ள நிலையில் இச்சந்தையினையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற சபைக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக முதலமைச்சரினை அழைக்க வேண்டுமென ஒருதரப்பும் இல்லை மாவை சேனாதிராசாவினை அழைக்க வேண்டுமென மற்றைய தரப்பும் கொடி தூக்கியுள்ளன. முதலமைச்சரினை பிரதம விருந்தினராக அழைப்பதென்ற ஆலோசனைக்கு எத…

  20. 20ஆவது திருத்தம் கூட்டமைப்புக்குப்புப் பாதிப்பில்லை! - ஏனைய கட்சிகளைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு [Thursday 2015-06-25 07:00] புதிய தேர்தல் முறைமையுடனான 20 ஆவது திருத்தமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமாக அமையாவிட்டாலும் கூட ஏனைய சிறிய, சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதகமாக அமைவதாலேயே புதிய தேர்தல் முறையை நாம் எதிர்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.சுமந்திரன் எம்.பி. இங்கு மேலும் க…

    • 4 replies
    • 373 views
  21. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் சாதிப்பவர்கள் :அமைச்சர் ஐங்கரநேசன் வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய அபிவிருத்தி நிறுவனம் மாங்குளம், கண்டி வீதியில் கைப்பணிப் பொருட்களின் காட்சியறை மற்றும் பாரம்பரிய உணவகத்துடன் கூடிய பயணிகள் ஓய்வகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. யு.எஸ்.எய்ட் மற்றும் எஸ்.டி.சி நிறுவனங்…

  22. யாழ்.காக்கைதீவில் மனைவியை தீயிட்டு எரித்த கணவன் கைது! [Thursday 2015-06-25 19:00] மனைவி மீது குப்பி விளக்கை எறிந்து அவர் உயிரிழக்க காரணமாக இருந்த காக்கைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காக்கைதீவைச் சேர்ந்த சிறிதரன் சாந்தினி (வயது 33) என்பவரே உயிரிழந்தார். சந்தேகநபர் கடந்த 20ஆம் திகதி மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டு, மண்ணெண்ணெய்யுடன் கூடிய குப்பி விளக்கை மனைவி மீது எறிந்துள்ளார். எரிகாயங்களுக்குள்ளாகிய மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கணவனைக் கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளன என்றும் ம…

  23. நல்ல பேய்களுக்கு வாக்களிக்கச் சொல்கிறார் மாதுளுவாவே சோபித தேரர்! [Thursday 2015-06-25 19:00] பொதுத்தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை களமிறக்க கூடும். அந்தப் பேய்களில் சிறந்த பேய்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென மாதுலுவாவே சோபித்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆரோக்கியமான அரசியல்வாதிகளை அழைப்பது தொடர்பில் மார்ச் 12 அமைப்பு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மோசடிகாரர்கள், ஊழல்வாதிகள், சிறுவர் துஸ்பிரயோகிகள், கெசினோகாரர்கள், குடுகாரர்கள், போதைப்பொருள், மது வியாபாரிகளுக்கு வேட்பு மனு வழங்கக் கூடாது. இதனை நான் கட்சித்தலைவர்களிடமும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். மக…

  24. மிருசுவில் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழ் பிரஜைகள் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2000மாம் ஆண்டு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வைத்து எட்டு தமிழ்ப் பிரஜைகள் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட குறித்த தமிழப் பிரஜைகளின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் இராணுவ உத்தியோகத்தர்களினால் புதைக்கப்பட்டிருந்தது. எனினும், சம்பவத்தில் உயிர் தப்பி ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதா…

    • 2 replies
    • 467 views
  25. பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்துடன் திருட்டுக்கும்பல் ஒன்றினை இன்று காலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகேஸ் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வரும்போது பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகினர். இதனையடுத்து 11 பேர் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வாக்குமூலத்தினடிப்படையில் பலர் தேடப்பட்டு வருகின்றனர். அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் நேற்று வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவர் திருட்டுக்கும்பலுடனும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.