Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி! [ செவ்வாய்க்கிழமை, 26 மே 2015, 10:53.07 AM GMT ] புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந…

    • 6 replies
    • 1.5k views
  2. துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்;. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் ஏற்பட இடமளிக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (26) காலை யாழ்ப்பாணத்திற்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின்போது வடமாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்தபோதே இவ்வாறு வலியூறுத்தினார். இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வட மாகாண பாடசாலை மாணவர்களை சந்தித்து உரையாடினார். சுமார் 17 பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொ…

  3. சிறிலங்கா அரசாங்கத்தைக் கவிழ்க்க தருணம் பார்த்துக் காத்திருக்கும் மகிந்த விசுவாசிகள் MAY 27, 2015 | 1:13by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், இது தனது அயல்நாடுகள் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் நடைபெறும் தற்போதைய அரசியல் மாற்றங்கள் இதற்கு மாறுபட்டதாகக் காணப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் கூட்டணி அரசாங்கம் ஏப்ரல் 29, 2015ல் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்ததன் மூலம், ஜனவரி 2015ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு ஆட்சிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிந்திர…

    • 0 replies
    • 420 views
  4. சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வுகளை நடத்த நோர்வே நாட்டிலிருந்து இரு வல்லுநர்களைக் கொண்ட சிறப்புக் குழு நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளது. சுன்னாகம் பகுதியில் இவர்கள் நேரடியான ஆய்வுகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பிரதேசத்து குடிதண்ணீருடன் கழிவு ஒயில் கலந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. உள்ளுரில் நடத்தப்பட்ட நில சோதனைகளில் பார உலோகம் உள்ளிட்ட வேதியல் பொருள்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வடக்கு மாகாண சபையால் வல்லுநர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.தமது சோதனைகளில் பார உலோகம் உள்ளிட்ட பொருள்கள் தண்ணீரில் இருக்கவில்லை என்று அந்தக் குழு இடைக்கால அறிக்கை ஒன்…

  5. கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, வெல்லாவெளி மண்டூரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் அரச பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தரான சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார். வீட்டினில் வைத்து சுடப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையினில் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், சிகிச்சை பயனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.http://www.pathivu.com/news/40388/57//d,article_full.aspx

  6. படையினரின் அச்சுறுத்தல்களையும் மீறி இறந்தவர்களை நினைவுகூர வீரத்துடன் திரண்ட மக்கள் அருட்தந்தை எழில் இராஜேந்திரம் மே 18, 2009 ஐ நினைவு கூர்வதற்கு ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்வது என்பது அச்சமும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பும், நிச்சயமற்ற முடிவும் கொண்ட ஒரு திகில் கதையைப் போன்ற அனுபவத்தைத் தந்தது. இலங்கையில் போர் முடிந்த இந்த ஆறு ஆண்டுகளில் இது போன்று நடக்கும் முதல் நிகழ்வு இது என்பதால் எவரேனும் துணிந்து நிகழ்வுக்கு வருவார்களா என்பது குறித்து கடைசி நொடி வரை எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொறுப்பை நான் ஏற்றிருந்ததால், நிகழ்வுக்கு 3 நாட்கள் முன்னதாக ஏற்பாடுகளைச் சரி பார்க்க நான் முள்ளிவாய்க்கால் தேவாலயத்திற்குச் சென…

  7. தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மாணவி முதலிடம்: [Tuesday 2015-05-26 07:00] இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார். தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிருப்பது …

    • 3 replies
    • 1.3k views
  8. தடையுத்தரவு இருக்கும் தருவாயில் கூட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் விளக்கேற்றி விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணை பெற்று வெளியே வந்தபோது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்துரைத்த ஞானசார தேரர், தற்போது நாட்டிலுள்ள நல்லாட்சிக்கு அமையே நான் நீதிமன்றில் முன்னிலையானேன். ஜப்பான் சென்றிருந்ததால் உரிய நேரத்தில் நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை. எனினும், நல்லாட்சியிலுள்ள சட்டத்தை நாம் மதிக்கின்றோம். எனினும், தற்போது வடக்கில் ஒரு சட்டமும், தெற்கில்…

    • 2 replies
    • 623 views
  9. புங்குடுதீவு மாணவி படுகொலை : நுவரெலியாவில் அமைதி ஊர்வலம் யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலமும் ஆத்ச சாந்தி நிகழ்வும் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது. புனித சவேரியார் கல்லூரிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இப்பேரணி, நுவரெலியா பிரதான வீதி ஊடாக லோசன் சுற்றுவட்டத்தை வந்தடைந்ததுடன் அங்கு இரங்கல் உரையும் சர்வமத வழிபாடுகளும் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மேற்கொண்டிருந்தார். இவ் ஊர்வலத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான புத்திரசிகாமனி, மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், பாடசாலை மாண…

  10. யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமை இந்நாட்டில் இனி எந்தவொரு யுவதிக்கும் நேரக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். http://www.pathivu.com/news/40350/57//d,article_full.aspx

    • 41 replies
    • 2.6k views
  11. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு திடீரென வருகை தந்துள்ளார். இவரின் வருகையின் நோக்கம் குறித்து எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. எனினும் மு.ப. 10.30 மணிக்கு அவர் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு செல்கிறார் என அறியமுடிகிறது. இதேவேளை ஜனாதிபதி குறித்த செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/05/26/10263/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%A…

    • 5 replies
    • 1.3k views
  12. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, வேம்படி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார். அத்துடன், விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதனூடாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இதேவேளை, மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சி…

    • 8 replies
    • 927 views
  13. உலகத் தமிழர் பேரவையுடன் தென்னாபிரிக்க அமைச்சர் இரண்டு மணிநேரம் பேச்சு! [Tuesday 2015-05-26 07:00] இலங்கை தொடர்பில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் ஒன்றான உலகத் தமிழர் பேரவைக்கும், தென் ஆபிரிக்காவிற்கும் இடையில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவின் சர்வதேச விவகார பிரதி அமைச்சர் நொமான்டியா உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும், உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தலைமையிலான குழுவினரும் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். பிரித்தானியாவின் ட்ரபெக்லார் சதுக்கத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.c…

  14. சரணடையும் புலிகளிற்கு மகிந்த என்னிடம் உயிருத்தரவாதம் தந்தார்:- அம்பலப்படுத்துகிறார் சந்திரகாந்தன்! [Tuesday 2015-05-26 11:00] யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் போராளிகளை, அரசாங்கம் சுட்டுக் கொன்ற விடயம் பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு. விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களின் சரணடைவிற்கு, இலங்கை அரசுடன் இடைத்தரகராக பணியாற்றிய சந்திரநேரு, அது பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புலிகளின் உயிருக்கு உத்தரவாதம் தந்த விடயத்தையும…

  15. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். எவ்வாறாயினும், காவி உடையைக்கு மதிப்பளித்தே பிணை வழங்குவதாகவும், நபரை கருத்திற்கொள்ளவில்லையெனவும், இதன்பின்னர் நீதிமன்றத்தை மதித்து நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், ஞானசா…

    • 0 replies
    • 444 views
  16. கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதை தான் எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இருவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் வாய்ப்பு வழங்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் ஆட்சியிலிருந்த வேளை நடந்து கொண்ட விதத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, எனது ஆதரவு மகிந்த ராஜபக்சவிற்கே, இந்த நாட்டின் முற்போக்கு சக்திகள் அவரின் பின்னால் அணிதிரளும் என எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார் http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/…

    • 1 reply
    • 492 views
  17. அரசாங்கத்தின் போர் முடிவின் நினைவு நாளும் அதன் அரசியலும் - சாந்தி சச்சிதானந்தன்:- கடந்த வாரம் 2009 போர் முடிவின்போது இறந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் வடக்கின் பல பாகங்களில் நடந்தேறின. ஆறு வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக பகிரங்கமாகத் தமது சோகத்தை வெளிக்காட்டவும் சடங்குகளில் பங்கு கொள்ளவும் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற ஜனநாயக வெளியினை சகலரும் உபயோகித்தக்கொண்டதை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆயினும், இந்த வாய்ப்பினை கொழும்பு அரசாங்கம் கையாண்ட முறையினையும் அதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்வினையையும் நாம் சற்றே நோக்க வேண்டியிருக்கின்றது. ஒரு நீண்ட கால யுத்தத்தின்போது தவிர்க்க முடியாதபடி பல அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. அதுவே உள்நாட்டு…

  18. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஸ்டெய்க் மெவருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார். இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 62 வருடங்கள் பூர்த்தியடைகின்ற தற்போதைய நிலையில் ஜேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது முக்கியத்துவமிக்கதாக அமையும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்த…

  19. புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி [ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2015, 04:06.18 PM GMT ] இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதுடன் அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். வெலிகந்த பாதுகாப்புப் படைத் தலைமையத்தை இன்று பார்வையிடச் சென்ற ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வாழும் சிலர் இன்னமும் ஈழக்கனவுடன் செயற்படுகின்றனர். அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்க முடியாது என குறிப்பிட்டார். நாட்டின் இறைமை, மக்களின் உரிமை மற்றும் ஜனநாயகம் எ…

    • 26 replies
    • 2k views
  20. வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இன்று வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் முதலாம் திகதி சிறப்பாக இடம்பெறவுள்ளது. இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இன்று மாலை தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டா விநாயகர் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளக்கேற்றப்படும். தொடர்ந்து ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடையும். மறுநாள் பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News…

  21. மன்னார் பாலி ஆறு - இலுப்பைக் கடவைப் பிரதேசத்தில் 9 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இவர்களை பொலிஸார் கைது செய்தனர். கஞ்சாவை வாங்கச் செல்வது போன்று சென்ற பொலிஸாரே குறித்த நால்வரையும் பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் 9 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர். இந்தக் கஞ்சா யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் இதன் மதிப்பு சுமார் 10 இலட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். - http://www.malarum.com/article/tam/2015/05/25/10244/%E0%AE%B0%E0%AF%82-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE…

  22. யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் கடத்தப்பட்ட மாணவி ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. புங்குடுதீவு 4 வட்டாரம் - கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றுப் புதன்கிழமை பாடசாலை விட்டதும் வீடு திரும்பிய மாணவி வீட்டுக்கு வராத நிலையில் அவரின் பெற்றோர் மாணவியைத் தேடியுள்ளனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இந் நிலையில் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மாணவியின் சடலத்தை பொதுமக்கள் கண்டுள்ளனர். அவர்க…

    • 169 replies
    • 17.1k views
  23. யாழில் நடந்தது சில விஷமிகளின் சேட்டையே! பொதுமக்களின் வன்முறையல்ல! க்ளஸ் தேவானந்தா:- செயலாளர் நாயகம் விளக்கம்! யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலும், குற்றவாளிகள் உயர்ந்தபட்ச தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்களது உணர்வு வெளிப்பாட்டு நிகழ்வானது, ஒரு சில சமூக விரோத சக்திகளால் திசை மாற்றஞ் செய்யப்பட்டதே தவிர, இது பொதுமக்களின் வன்முறைச் செயற்பாடுகளல்ல. எனவே, இதனை வடக்கில் மீண்டும் ஆயுத வன்முறையைத் தோற்றுவிக்கும் சம்பவமாக உருவாக்கஞ் செய்யக்கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். …

    • 5 replies
    • 880 views
  24. இலங்கை சிங்கள நாடல்ல ; நீதி அமைச்சரின் கருத்தால் தெற்கில் பெரும் எதிர்ப்பு இலங்கை சிங்கள நாடல்ல. இலங்கையர்களின் நாடென நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷவின் கருத்து தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குடாநாடு முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம் பொலிஸ் இராணுவத்தினரின் தலையீட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இவ்வாறே தமது ஆர்ப்பாட்டத்தை முதலில் ஆரம்பித்தார்கள். மீண்டும் விடுதலைப்புலிகள் தோன்றுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அதற்கு மறுப்புத் தெரிவிக்க…

    • 5 replies
    • 433 views
  25. மாணவி கொலையின் பின்னால் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி; நாடாளுமன்றில் சரவணபவன் எம்.பி புங்குடுதீவு மாணவியின் கொலை ஒரு பாலியல் வேட்கை அடிப்படையில் மட்டும் நடந்த கொலை என்றோ தனி மனித விரோதங்கள் காரணமாக மட்டும் நடந்த கொலை என்றோ நம்பி விடமுடியாது. இந்தக் கொலையின் பின்னால் ஒரு பெரும் உள்நோக்கம் கொண்ட மூலசக்தி இருந்துள்ளது என்றே கருதவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றில் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இன்று நான் இந்தச் சபையில் மிகவும் மனம் நொந்தநிலையிலும் ஆத்மார்ந்த கோபத்துடனும் உரையாற்றவேண்டிய நிலையில் உள்ளேன். புங்குடுதீவிலுள்ள பள்ளி மாணவி ஒ…

    • 3 replies
    • 345 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.