Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சந்திரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் இணைந்து புள்ளி விபரவியல் திணைக்களத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவு இயங்கிய கட்டடத்திலேயே புள்ளி விபரத் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய கட்டடத் திறப்பு விழாவின் பின்னர் புள்ளி விபரத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. மேலும் இந்தக் கலந்த…

  2. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இரத்துச் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தி வரும் எம்.பிக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல ஆதரவாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வீதித் தடுப்புக்களைப் பயன்படுத்தி இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அங்கு தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைப்பதற்கான நீதிமன்ற உத்தரவை தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்குத் தெரிவித்துள்ள…

    • 3 replies
    • 409 views
  3. அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவியை கொடுத்தமை இலஞ்சம் என்றால், அப்பம் சாப்பிட்டதும் இலஞ்சமாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹம்பேகமுவ விஹாரையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்தோம். இன்று, தேசிய பாதுக…

  4. மைத்திரியின் நூறுநாள் திட்டத்தில் மக்களுக்கு கருத்து சுதந்திரம் கிடைத்துள்ளது : விஜயகலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஜனநாயகம் பிறந்து கருத்து சுதந்திரம் மக்களுக்கு கிடைத்துள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நூறுநாள் வேலைத்திட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் நேற்று கொழும்பில் ஒன்றினை அவர் மேற்கண்டவாறு கருத்தை வெளியிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள 7 தேசிய பாடசாலைகளில் பணியாற்றவுள்ள 95 பேருக்கு அடுத்த வாரங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அத்துடன் 250 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் …

  5. நாடாளுமன்ற அமர்வுகள் 27ம் திகதி வரை ஒத்திவைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு விடுத்த பணிப்புரையை அடுத்து நேற்றுக்காலை முதல் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையின் எதிரொலியாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினமும் நாளைய தினமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த 19வது திருத்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றம் மீண்டும் 27ம்திகதி கூடும் போது எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. http://onlineuthayan.com/News_More.php?id=581643989221441777

  6. யா. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்ட்ட பாடசாலை விளையாட்டு மைதான சுற்றுமதில் கையளிப்பும் விளையாட்டு விழாவும் எதிர்வரும் 21.04.2015 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் திரு. ச.கணேஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு. இ.இளங்கோவன் (செயலாளர், ஆளுநர் அலுவலகம், வட மாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ஜீ.வீ. இராதாகிருஸ்ணன் (ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர்), திரு. ரி.ஜோன்குயின்ரஸ் (வலயக் கல்வி அலுவலகம், தீவகம்), திரு. பொ.சிவானந்தராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேலணை), திரு. கா.குகபாலன் (ஓய்வுநிலை பேராசிரியர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் கௌர…

  7. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபாக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்காது அவர் இருக்கும் இடத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டதாரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%…

    • 0 replies
    • 282 views
  8. மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – ஆணைக்குழு தலைவர் இணக்கம் APR 21, 2015 | 3:15by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 24ம் நாள் விசாரணைக்கு முன்னிலையாகும்படி, இலங்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழவினால் அழைப்பாணை விடுக்கப்பட்ட விவகாரம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நாடாளுமன்றத்தில் நடுவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பின…

  9. ஐக்கிய சேதியக் கட்சியினால் மிகவும் திட்டமிட்ட முறையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்ற சந்தேகம் இருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, லஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கேட்டபோதே மகிந்த அமரவீர இதனை ஶ்ரீலங்க மிரர் இணையத்திற்குத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனகூட இதனை அறிந்திருக்கவில்லையெனக் கூறுகின்ற அமைச்சர் மகிந்த அமரவீர, இந்த நடவடிக்கைக்கு எதிராக தான் உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டுள்ளதாக மேலும் கூறினார். http://www.tamil.srilankamirror.com/news/…

    • 0 replies
    • 348 views
  10. ஆணைக்குழுவின் அழைப்பாணை புத்தாண்டுப் பரிசு – என்கிறார் மகிந்த APR 21, 2015 | 2:58by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஹம்பேகமுவ ரஜமகா விகாரையில் நேற்று கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு இப்போது சவால் ஏற்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, புத்தாண்டுப் பிரிசாகும். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியது ஒரு ஊழல் என்று கூறப்படுகிறது. சிறிலங்கா அதிபராக இருந்த…

    • 0 replies
    • 461 views
  11. சூடுபிடிக்கும் சிறிலங்கா அரசியல் களம் – அடுத்தது என்ன? APR 21, 2015 | 2:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு நேற்று இடம்பெற்றதையடுத்து, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி, இன்று 19வது திருத்த யோசனை மீதான விவாதம் ஆரம்பமாகும் என்று ஆளும்கட்சியினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை இதுதொடர்பாக கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. அதில், தேர்தல் முறைமையை மாற்றும் யோசனையை உள்ளடக்காத 19வது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிக்க முட…

    • 0 replies
    • 590 views
  12. தற்போதைய அரசியலிலும், ஊடகங்களிலும் நேர்மை இல்லையென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய மட்டத்தில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் சிறுபான்மையினரின் உரிமையை வென்றெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். http://www.tamil.srilankamirror.com/news/item/2286-2015-04-20-15-41-37

  13. இன்னும் மாகாணசபையைத் திருப்தியற்ற ஒரு நிலையில்தான் தமிழ்த்தரப்பும் பார்க்கிறதென தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய சார்வு வடக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள். சிங்களத்தரப்பிலும் அப்படியான உணர்நிலை உண்டு. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் இரண்டு தரப்பிலும் உள்ளனர். இந்த நிலையில் மாகாணசபையில் பங்கேற்போரும் இருக்கிறார்கள். மாகாணசபையை இயக்குவதற்கு முடியும். அதற்கான பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உரையாடல்களை நடத்த வேண்டும். தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயங்களுக்கு அதற்கான வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிப் பல காரியங்களைச் செய்யலாம். அப்படிச் செய்தே இந்த அமைப்பை வலுவுள்ளதாக்க முடியு இப்ப…

  14. நௌருவில் உள்ள 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கம்போடியாவில் குடியேற இணக்கம் APR 20, 2015 | 11:29by கார்வண்ணன்in செய்திகள் நௌருவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், கம்போடியாவில் குடியேற்றப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அகதிகளின் சட்டவாளர் தெரிவித்துள்ளார். கம்போடியாவில் குடியமர இணக்கம் தெரிவித்துள்ள ஏனைய இருவரும் மியான்மார் மற்றும் ஈரான் நாட்டவர்களாவர். அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களை வில் குடியேற்றும், திட்டம் ஒன்றை அவுஸ்ரேலியா முன்னெடுத்துள்ளது. இதற்கான இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், நௌரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் உள்ள அகதிகளுக்கு சலுகைகள…

  15. தமிழர் நிலங்களில் சிங்கள மக்கள் விவசாயம் செய்வதற்கு எதிராக மூதூரில் போராட்டம் திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள் வேளாண்மை செய்யக் கூடியச் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. மூதுர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லையிலுள்ள கங்குவேலி படுகாடு பகுதியுிலுள்ள தமிழர்களுக் சொந்தமான வயல் நிலங்களுக்கு போர் காலத்தில் தமிழ் விவசாயிகளினால் செல்ல முடியாத நிலை …

    • 0 replies
    • 432 views
  16. சொந்தக் காணிகளில் மீளக்குடியேறுவது எப்போது என்று காத்திருக்கும் பரவிப்பாஞ்சான் கிராம மக்கள். ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்ட போதிலும் மேலும் பல பகுதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளமை கவனத்திற்குரியது. தமது சொந்த வாழ்விடங்களை இழந்து மக்கள் படும் அவலம் சொல்லில் அடங்காதது. சொந்தக் காணிகளில் மீளக் குடியேற வேண்டும் என்ற கனவோடு பரவிப்பாஞ்சான் கிராம மக்கள் காத்திருக்கின்றனர். சொந்த நிலத்தை பிரிந்து, வாழ்ந்த வீடுகளை இழந்து அலைவது என்பது மிகவும் துயரமானது. வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காய் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் அழைத்து வரப்பட்ட பரவிப்பாஞ்சான் கிராம மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் அலைகின்றனர…

    • 0 replies
    • 447 views
  17. வட மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த ஆராய்ந்து அடுத்த மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண ஊழல் விசாரணை குழுவின் தலைவரும், மாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமது குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரிக்கும் குழவில் ஏழு பேர் இடம் பெற்றுள்ளார்கள். இந்தக்குழுவின் ஆரம்பக் கூட்டம் கடந்தமாதம் இடம்பெற்றது. இதன்போது ஜனவரி 2010 இல் இருந்து இவ்வாண்டின் மார்ச் வரை நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணையை மேற்க்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது. ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டமைக்கு அம…

    • 0 replies
    • 576 views
  18. இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றினில் சித்திரவதைக்கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுவருகின்றது. யாழ்.குடாநாட்டினில் மட்டும் அது படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவலற்றேயிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்திலும் முன்னதாக சந்திரிகா ஆட்சிகாலத்திலுமென மூவாயிரத்து ஜநூறிற்கும் அதிகமான இளைஞர்,யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்தபோதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் இல்லாதேயுள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.பின்னர் அவர்களிற்கு என்ன நடந்ததென்பது தெரியாதேயுள்ளது. ஆனாலும் ஆக்…

    • 0 replies
    • 610 views
  19. மகிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தினுள் தரையில் அமர்ந்து போராட்டம் APR 20, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றம் கூடியதும், 19வது திருத்தம் மீதான இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது. அதையடுத்து, நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிராக ஐக்கிய மக்…

    • 4 replies
    • 585 views
  20. மோடியின் கனடிய நட்பு ஈழத்தமிழர் விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும்!!! [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 07:56.16 PM GMT ] இலங்கைக்கு விசா மறுக்கப்பட்ட ஈழத் தமிழர் ஆதரவாளரான திரு. பற்றிக் பிரவுனை இந்தியப் பிரதமர் மோடி தனது சகோதரன் என அழைப்பதும், இருவருடைய 10 வருட கால நட்பும் கனடா ஊடகங்களால் வியப்பாகப் பார்க்கப்பட்டது. அதிலும் பற்றிக் பிரவுனின் தனிப்பட்ட விருந்தில் இராஜதந்திர வரப்புக்களை மீறி கலந்து கொண்டு தனது நட்பைப் பிரதமர் மோடி தெரிவித்தார். எனவே ஈழத்தமிழர் விவகாரத்தில் திரு. பற்றிக் பிரவுனின் பங்கு கனமாக இருக்கப் போகிறது என இந்த வார நிஜத்தின் தேடலில் திரு.சுரேஸ் தர்மா தெரிவித்தார். http://www.tamilwin.com/show-RUmtyESdSUjq5I.html

  21. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளரை நாடாளுமன்றத்தில் முன்னிலையாக சபாநாயகர் அழைப்பு APR 20, 2015 | 14:53by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, விசாரணைக்கு அழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அழைப்பாணை விடுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு, எதிர்ப்புத் தெரிவித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 55 பேர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தண்டனை வழங்குதற்கு ம…

    • 0 replies
    • 396 views
  22. சிறிலங்கா படைகள் வெளியேற்றப்பட வேண்டும் – மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம் APR 20, 2015 | 11:07by அ.எழிலரசன்in செய்திகள் தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த இந்த மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், “சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகிய போதிலும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, அர்த்தபூர்வமான வகையில் தீர்க்கப்படவில்லை. தமிழ்ப் பகுதிகளில் போரின் போது நிறுத்தப்பட்ட ஆயுதப் படைகளை விலக்கிக் கொள்ள வ…

  23. யுத்தத்தின்போது தமிழகத்திலிருந்து எழக்கூடிய எதிர்ப்பினை எவ்வாறு இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டது என்பதனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது இராணுவத்தை பொறுத்தவரை அதன் வலுவே மிகமுக்கியமான விடயமாக காணப்பட்டது. எந்த அரசாங்கமும் இதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. யுத்தத்தை வெல்லவேண்டும் என்றால் படையினரின் எண்ணிக்கையை மும்மடங்காக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் நான் தெரிவித்தேன். திறைசேரி பல பிரச்சினைகளை எதிர்கொண்டபோதிலும் இதனை செய்தே ஆகவேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். நாங்கள் பெருமளவு பணத்தை செலவிடவேண்டியிருக்கும் ஆனால் இதனை செய்யாத பட்சத்தில் நாங்கள் வெற்ற…

    • 6 replies
    • 731 views
  24. இரண்டானதா இலங்கை..? டெல்லியில் திடீர் குழப்பம்! வெளியாகும் சிக்கல்கள்! [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 01:22.10 AM GMT ] இந்தியப் பிரதமர் மோடி விரைவாக உலக நாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை சென்று வந்த பின்னர் டெல்லியில் பாரிய குழப்பம். எதனால்...? ஆதாரங்களுடன் விளக்குகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம். இந்திய பிரதமர் நன்கு திட்டமிட்டு உலக நாடுகளுக்கு சென்றதுடன் கனடாவில் நினைத்ததை சாதித்தார். இவ்வாறான திட்டங்கள் எதிர்காலத்தில் பாரிய சவாலாக மாறலாம். சீனா இந்தியா இடையில் முறுகல் ஆரம்பிக்குமா..? எனும் பல விடயங்கள் பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசையில் வெளிப்படுத்துகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்…

    • 0 replies
    • 604 views
  25. காதல் தோல்வி காரணமாக யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் நிசாந்தன் (28) என்ற பல்கலைகழக பட்டதாரி மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்திருந்ததாகவும், பின்னர் அந்தப் பெண் வெளிநாட்டிலுள்ள ஒருவரை திருமணம் செய்ய தயாரானபோது, அவர் அந்தப் பெண்ணுடன் கடந்த சில தினங்களாக கடுமையாக சச்சரவுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளையில் காதலி உறுதியாக இருந்தததையடுத்து, வாலிபர் நேற்று தூக்கில தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். http://deepamnews.com/details.php?nid=3&catid=25687&hit=2 எந்தப் பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. இவரை இழந்து வாடும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.