Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை வந்துள்ள சுவிஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிடியர் பேர்க்ஹோல்டர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் ஒன்றை பயனாளிகளுக்குக் கையளித்ததன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசியுள்ளார். சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான தூதுவர் ஹின்ஸ் வோக்கர், சுவிஸ் வெளிவிவகார திணைக்களததின் ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகத்தின் தலைவரும், அந்த நாட்டின் இராஜாங்க செயலாளருமாகிய ஜோஹனஸ் மெட்டியாசி மற்றும் முக்கியஸ்தர்களும் சுவிஸ் வெளியுறவு அமைச்சருடன் வருகை தந்திருந்தனர். கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அக்கரை கிராமத்தில் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான சுவிஸ் நிற…

  2. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு மோடியை 'நெருங்கிய' இளைஞரால் பெரும் பரபரப்பு!! l யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த போது பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு 20 வயது இளைஞர் ஒருவர் அவரை நெருங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13-ந் தேதி இலங்கை சென்றிருந்தார். பின்னர் 14-ந் தேதியன்று ஈழத் தமிழர்களின் தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு மோடியை 'நெருங்கிய' இளைஞரால் பெரும் பரபரப்பு!! யாழ்ப்பாணத்தின் இளவாலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிக…

    • 1 reply
    • 1.6k views
  3. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியாபாரத்தையோ மேற்கொள்வதுடன் சுதந்திரமாக வாழமுடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் முதன்முறையாக ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மற்றும் பிரதானிகளை சந்தித்த அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இந்த கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- நான் பிரித்தானியாவிற்கு சென்றபோது அங்கு ஈழம் கோருகின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் 300 பேரளவில் ஆர்ப்பாட்டம் செ…

    • 19 replies
    • 1.4k views
  4. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சர்வதேசத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்பாளராகவுமுள்ள திரு. மதியாபரணம் ஏப்பிரகாம் சுமந்திரன் கனடா வருகை தந்துள்ளார் சில தினங்களே கனடாவில் தங்கியிருக்கும் திரு. ஏப்பிரகாம் சுமந்திரன் அவர்கள் கனடாவில் மேற்கொள்ள வேண்டிய சந்திப்புக்களிற்கான முன்னேற்பாடுகளை கனடியத் தூதரகம் செய்து கொடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு நம்பிக்கைக்குரியவராக இருக்கும் திரு. சுமந்திரன் அவர்கள் சர்வதேச நாடுகளினால் தமிழர் பிரச்சினை தொடர்பான நிலைப்பாடுகளை அறிய விரும்பி அழைக்கப்படுகின்றவராகவும், விடயங்களை மதிநுட்பங்களுடனும் திட்டமிடலுடனும் கையாளும் ஒருவராகத் திகழ்கின்றார். க…

  5. சந்தேகநபர்களை 48 மணி நேரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய வழிசெய்யும் குற்றவியல் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததுடன், அந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் நேற்று நடத்தப்பட்டது. இதன்படி இந்த பிரேரணை 53 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெயர்கூறி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 53 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் முன்னிலை சோஷலிசக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார மாத்திரம் எதிராக வாக்களித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.…

  6. அரசியல் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பத் தயாராக உள்ளனர் என்றும், அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும் ஊடக மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனநாயக நாட்டில் ஊடக சுதந் திரம் இருக்கவேண்டும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் தமது கருத்துகளை வெளிப்படையாக முன் வைத்ததால் ஏற்பட்ட அரசியல் அழுத் தம், உயிர் அச்சுறுத்தல்கள…

  7. இலங்கையினால் தடைவிதிக்கப்பட்டுள்ள 16 அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தின் ஒழுங்கு விதிகள் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது, அதற்கு பணம் வழங்குவதை நிறுத்துவது, கறுப்புப் பணப் பரிமாற்றம் மற்றும் அதனோடு தொடர்புடைய தரப்புக்களை தடுப்பதற்கான சட்டவிதிமுறைகள் 2012 ஆம் ஆண்டு ஐ.நா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலிபான் அறிக்கை அமைப்புகளுடன…

    • 5 replies
    • 559 views
  8. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகவியலாளர்களும் உறவுக்கார பங்காளிகள். இந்த உறவிலே நட்பு, அன்பு, பற்று, பாச உணர்வுகள் இருக்கும். அதேபோல் கோபம், சண்டை, வருத்த உணர்வுகளும் இருக்கும். இதை நான் இன உணர்வை அடிப்படையாக கொண்டு செயற்படும் தமிழ் ஊடகவியலாளர்களிடையிலும், தமிழ் அரசியல்வாதிகளிடையிலும் காண்கிறேன். தலை நிமிர்ந்து செயற்படும் ஊடகவியாலாளர், அரசியலர் மத்தியில் இந்த உணர்வு பரிமாற்றங்கள் சகஜம். இதன்மூலம் இவர்கள் இயங்குகிறார்கள் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. கொழும்பில் இருந்தே மிகப்பெரும்பாலான தமிழ் ஊடக நிறுவனங்கள், தம் நாடு தழுவிய பணிகளை முன்னெடுக்கின்றன. எனவே ஜனநாயக தேர்தல்களில், கொழும்பில் வாழும் தமிழ் மக்களின் பேரதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவன் என்ற ம…

  9. பிரபுத்துவ நிலையிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரினால் பில்லியன் கணக்கான நிதி சட்டவிரோதமாக துபாய் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதுடன் அதனை மீளப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜீத சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது குறித்து மேலும் விளக்கிய அமைச்சர், அரச வளங்கள் மற்றும் நிதிகளை மீளப்பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்படுவதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை அமைப் பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்துள்ளதுடன் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இலங்கையர் அல்லது வேறு நபர்களால் சட்டவிரோதமாகப் பெற்…

  10. வடக்கில் நிலைத்திருக்கும் இராணுவத்தினரை அகற்றுவீர்களா? இல்லையா என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். வானொலி செய்தி சேவை ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நிலைக்கொண்டுள்ள இராணுவத்தை அகற்றுவது தொடர்பாக ஸ்தீரனமான முடிவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்க வேண்டுமென அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வடக்கில் உள்ள இராணுவத்தை அகற்றுவதில்லை என வணக்கத்திற்குரிய மதகுருமார்களிடம் அறிவித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் என்னிடம் அவர் இவ்வாறானதொரு கருத்தை கூறவில்லை. இது தொடர்பாக தெளிவான பதில் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

    • 1 reply
    • 543 views
  11. தேநீரில் மயக்க மருந்து கொண்டு வர்த்தகர் ஒருவர் அணிந்திருந்த பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று மாலை நெல்லியடிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் நடைபெற் றுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்துக்கு வந்த இருவர் வர்த்தகருடன் சிநேகமாக உரையாடியுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் தேநீர் வாங்கிவரு மாறு மற்றவர் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார் அவரும் அருகில் உள்ள தேநீர்சாலையில் "கிளாஸ்' வாங்கி இன்னொரு கடையில் தேநீர் வாங்கி அதனுள் மயக்க மருந்தைக் கலந்துள்ளார். தேநீர் கடை உரிமை யாளர் குறித்த நபரிடம் என்ன கலக் குகிறாய் என்று கேட்டபோது சம ஹன் என்று பதிலளித்துள்ளார். அந்தத் தேநீரைப் பருகியதும் கடை உரிமையாளர் மயக்கம் அடைந்துள்ளார். அதனையடுத்து அவர் அணிந்…

  12. போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மறுகுடியமர்வு என்பது பெரும் சிக்கலாகவே இருக்கிறது “யாழ்ப்பாணத்தில் இருக்கவே பிடிக்க வில்லை; வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால், பி.காம். பட்டப்படிப்பை முடிக்க மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுவேன்” என்கிறார் பி. ஆல்பிரட் (23). ஆல்பிரட்டின் குடும்பம் இலங்கையை விட்டு 1998-ல் தமிழகத்துக்குச் சென்றது. ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் முகாமில் தங்கியது. இலங்கையில் போர் முடிந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் நாடு திரும்பியது. “நான் ராமநாதபுரத்தில் படித்தேன்; என்னுடைய நண்பர்கள் அனைவரும் அங்கிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் எனக்கு யாரையும் தெரியாது. தமிழ்நாட்டில் நீண்ட காலம் இருந்துவிட்டுத் திரும்பிய நான், தம…

  13. தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் புரிந்த இலங்கையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க ஐ.நா. சபையை வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் செய்த போர் குற்றங்கள், இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த ஐ.நா. சபையை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவில் கையெழுத்துப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. 15 மொழிகளில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற வகைசெய்யும் இந்த மாபெரும் பிரச்சாரத்தை அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ராம்சே கிளார்க், நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபை தலைமை அலுவலகத்துக்கு வெளியே …

    • 0 replies
    • 282 views
  14. ஈழத்தமிழரது தனித்துவ அரசியல் பேரியக்கத்தின் வலுவான தொடர்ச்சியை மீளக் கட்டமைப்போம் – மாற்றத்தின் குரல். ‘மாற்றத்துக்கான குரல்’ என்ற செயற்திட்டம் குறித்த நிகழ்வு இரவு விருந்தாக இரா விருந்து மண்டபத்தில் மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏறக்குறைய 350 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். சரியாக ஏழு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்தன. செயற்;பாட்டாளர்களில் ஒருவரான திரு. குயின்ரஸ் துரைசிங்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திரு. திருமதி. ஸ்ரீஸ்கந்தராஜா தம்பதினரும் திரு. திருமதி. குணநாதன் தம்பதியினரும் திருமதி. ஜோசப் பராராசசிங்கம் அவர்களும் மங்கல விளக்கேற்றினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து திரு. குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களது வரவேற்புடன் இந்த நிகழ்வின் அவசியத்தையும் கு…

    • 2 replies
    • 581 views
  15. இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசே 13ஆவது அரசமைப்புத் திருத்தம், இனப்பிரச் சினைத்தீர்வு மற்றும் பிரதான பிரச்சினைகள் குறித்து பரிசீலனை செய்யும். பொதுத் தேர்தலின் பின்னரே இவை நடக்கும். அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் முகாமையாளர்களை நேற்றுக் காலை சந்தித்துப் பேசினார். அதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://onlineuthayan.com/News_More.php?id=451183927719305139

  16. இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னத்தை மாற்றித் தருமாறு கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ச குறித்த கட்சியிலேயே எதிர்வரும் பொதுதேர்தலில் களமிறங்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இலங்கை தொழிலாளர் கட்சியின் சின்னமாக கங்காரு உள்ளது. இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.பீ.லியனகே கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு வேண்டுகோள் முன்வைத்து இன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்த போது தற்போதைக்கு மயில் அல்லது புறா சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்த…

    • 3 replies
    • 1.2k views
  17. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள 20 ஏக்கர் தனியார் காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் காரணமாக காணிகளை அளவீடு செய்ய வந்திருந்த நில அளவையாளர் குழு, தமது நடவடிக் கையைக் கைவிட்டுச் சென்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பிர தேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள காணியை, இராணுவத்தின ரிடம் கையளிப்பதற்கு நேற்று திட்ட மிடப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட காணி சுவீகரிப்பு அலுவலர் இதற்குரிய முயற்சிகளை மேற் கொண்டிருந்தார். இந்த நடவடிக்கை களை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சரும், காணி அமைச்சரு மான க.வி.விக்னேஸ்வரன் …

  18. சர்வதேச மேற்பார்வையுடனேயே உள்ளக விசாரணைப் பொறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி, தவறான பாதையில் பயணிக்குமானால், மஹிந்த ஆட்சிக்கு நடந்ததே இந்த அரசுக்கும் நடக்கும். அதைக் காண நாம் விரும்பவில்லை. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பரணகம ஆணைக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை. பரணகம ஆணைக்குழுவின் சில அமர்வுகளில் நானும் பங்குபற்…

  19. சீகிரியாவின் கண்ணாடிச் சுவரில் பெயரொன்றை கிறுக்கினாரென்ற குற்றச்சாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற யுவதியின் நலனை விசாரிப்பதற்காக அவரின் தயாரான சின்னத்தம்பி தவமணி (61) அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்று சந்தித்திருந்தோம். சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய 5 நிமிடம் என்ற குறைந்த நேர இடைவெளிக்குள் உதய ஸ்ரீ தன் தயாரிடம் கண்ணீருடன் சொன்னது…. ‘அம்மா நான் அறிந்து எந்த தவறையும் செய்யவில்லை. ஏன் இன்னும் என்னை விடுதலை செய்யவில்லை. என்ன தவறு செய்யதற்காக என்னை சிறையில் அடைத்தார்கள்? நீதிமன்றத்தில் அவர்கள் சொன்ன விடயங்கள் எதுவும் எனக்கு புரியவில்லை.” இந்த சம்பவம் தொடர்பாக மேலத…

    • 29 replies
    • 3.2k views
  20. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­ சி­றிசேன, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர ­துங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் எதிர்­வரும் 23ஆம் திகதி வட க்­கிற்கு விஜயம் செய்யவுள்­ளனர். 25 வரு­டங்­களின் பின்னர் பொது­ மக் கள் பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­பட்ட வளலாய் பகு­தியை உத்­தி­யோகபூர்­வ­மாக அவர்­க­ளி­டம் கைய­ளிக்கும் நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­காக இவர்கள் வரு­கை­த­ர­வுள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் புதிய அர­சாங்கம் அமை­யப்­பெற்­றதன் பின்னர் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்கள் மீண்டும் மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­படும் என கூறப்­பட்­டது. அத்­துடன் வடக்கில் இரா­ணு­வத்தின் உயர்­பா­து­காப்­பபு வல­யங்கள் அமைந்­துள்ள நிலப்­ப­ரப்பில் 1100ஏக்கர் ப…

  21. தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் எனும் செயற்­திட்­டத்தை முன்­னெ­டுத்­தலின் போது புலம்­பெயர் சமூ­கத்தை புறக்­க­ணித்துச் செயற்­பட முடி­யாது. அவர்­களும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும். எனினும் அர­சியல் ரீதி­யி­லான சில கார­ணங்­க­ளா­லேயே சில அமைப்­புக்கள் தடை­செய்­யப்­பட்­டன. என்று முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எஸ்.பீரிஸ் நேற்று சபையில் தெரி­வித்தார். தென்­னா­பி­ரிக்க அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்பில் அந்­நாட்­டுக்குள் பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் அவ்­வா­ணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை இலங்­கைக்கு கிடை­யாது என்றும் குறிப்­பிட்டார். …

    • 0 replies
    • 343 views
  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, இந்தக்கொலை சம்பவம் தொடர்பாக மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் முதலாவது நபர் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர் எனப் பொலிசார் தெரிவித்ததாகவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com/breifNews.php?newsID=128537&category=TamilNews&language=tamil

  23. மக்கள் புதிய அரசின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்ற விதத்தில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த ஊடகங்களின் பெயர்களையும் பகிரங்கமாக குறிப்பிட்டார். பிணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர், டெய்லிமிரர்,சண்டேலீடர் மற்றும் மகராஜ நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பிட்ட பிணை விவகாரம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் பதவிவிலக வேண்டும் என செய்திவெளியிட்டதற்காக அவர் டெய்லிமிரரை சாடியுள்ளார். சண்டே லீடரின் உரிமையாளர்களுக்கு பத்திரிகை நடத்துவதற்கான பணம் எங்கிருந்து வந்தது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள…

  24. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார். வடக்கு மாகாண சபையின் 26ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடதொகுதியில் இடம்பெற்று வருகின்றது . இதன்போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டினை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் ஒருவர் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்தவேளையில் மக்களது வரவேற்பு அமோகமாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கவில்லை. மிகவும் குறை…

  25. 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஒரே தாளில் வைத்திருந்த சந்தேகநபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், செவ்வாய்க்கிழமை(17) உத்தரவிட்டார். இது தொடர்பில் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றுவீத பிரிவுக்கு தெரியப்படுத்தி, அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியை சேர்ந்த சந்தேகநபர் கடந்த 16ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், வெளிநாட்டுப்பணத்தை மாற்றுவதற்கு முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரை கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.