Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன் போது பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அவருக்கும், சந்திரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் கீழ் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவும், கிழக்கு மாகாண சபையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அளுநர்களை மாற்றவும் இணங்கப்பட்டுள்ளது. ஆனால் 13ம் திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எந்த தீர்வையும் தற்ப…

    • 8 replies
    • 1.2k views
  2. ஜெனீவாவில் மங்கள சமரவீர இலங்கை போரின்போது நடந்த பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையரின் விசாரணை அறிக்கையின் கருத்துக்களை இலங்கை அரசு உருவாக்கவிருக்கும் உள்ளக புலனாய்வு மற்றும் நீதிக்கட்டமைப்பு பயன்படுத்தும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐநாவின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். இன்று திங்கட்கிழமையன்று ஜெனீவாவில் துவங்கிய ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையத்தின் இருபத்தி எட்டாவது அமர்வில் பேசிய இலங்கை அமைச்சர், இலங்கை அரசு உள்ளக புலன்விசாரணை மற்றும் நீதிக்கட்டமைபுக்களை உருவாக்கவிருப்பதாக கூறினார். அந்த அமைப்புக்கள், ஐநா மன்ற மனித உரிமை ஆணையரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை கணக்கில் எடுத்துச் …

    • 0 replies
    • 407 views
  3. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளது என அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வுகளில் உயர்மட்ட கூட்டமொன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாற்றம் ஏற்படுத்த இலங்கைக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை பர்மா போன்ற நாடுகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மெய்யான மாற்றத்தை ஏற்படுத்த ஒர் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் புரிந்து கொண்டுள்ளதாகவும், மீறல்களில் ஈடுபடுவோர் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குற…

    • 1 reply
    • 387 views
  4. சீன நீர்மூழ்கிகள் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு புதிய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று சீனா எதிர்பார்ப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சீன நீர்மூழ்கிகள் இனிமேல் சிறிலங்கா எல்லைக்குள் நுழைய இனிமேல் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பீஜிங்கில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து இன்று பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுங்யிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், சீன நீர்மூழ்கி ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடச் சென்ற போதே, வழியில் விநியோகத் தேவைக்காக சிறிலங்காவில் தரித்து நின்றதாக, கடந்த ஆண்டு சீன இராணுவம் தெரிவித்திருந்ததைச்…

  5. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து செயற்பட்டு கொழும்பு மற்றும் கல்கிசை குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 2009 ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுமார் ஆறுவருடங்களின் பி;ன்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலியின் சிறுப்பிட்டி மேற்கினை சேர்ந்த குணரட்ணம் கஜேந்திரன் (கஜன்-துமிலன்) என்பவர் 2009 ம் ஆண்டினில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக 2012ம் ஆண்டிலேயே வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணையின் போது சந்தேக நபரால் வழங்கப்பட்டதாக கூறப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூ…

  6. அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ம் திகதி இந்திய பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் பிரதமர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைய அதிகாரம் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காணி காவல்துறை அதிகாரங்கள் மற்றும் 13ம் திருத்தச் சட்டம் குறித்து பேசப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://globaltamil…

  7. முல்லைத்தீவிலுள்ள கோத்தபாய என அழைக்கப்படும் முகாம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2008 இல் தெகிவளையில் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் தொடர்ச்சியாவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக 2011 இல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. காணமற்போன மாணவர்கள் குறிப்பிட்டகோத்தபாய கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து நீதிமன்றத்தை விசாரணைசெய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காணமற்போன மாணவர்கள் முல்லைத்தீவில் உள்ள கோத்தபாய கடற்படை முகாமிலிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக…

  8. இராணுவத்தினர் வசம் இருக்கும் விவசாய அமைச்சுக்கு சொந்தமான பண்ணைகளையும் கூட்டுறவு சங்க கட்டடங்களையும் விடுவித்துத் தாருங்கள் என்று மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். உணவுப்பாதுகாப்பை கூட்டுறவு அமைப்புகளின் ஊடாக உறுதி செய்யும் நோக்கிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று கடந்த 28 ஆம் திகதி யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்இ கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், கூட்டத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சரிடம் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ' வடபகுதிக்கு இப்போது…

  9. தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 5 வருடங்களின் பின்னரும் தங்களுடைய தமிழ் மன்னர்கள் குறித்து பாடப்புத்தகங்கள் வாயிலாக எதனையும் அறிய முடியாதுள்ளதாக இலங்கை தமிழ் மாணவர்கள் தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக அவர்கள் சிங்கள மன்னர்கள் குறித்தும்,இலங்கையில் பௌத்தத்திற்கான அவர்களது பங்களிப்பு பற்றியுமே கற்கவேண்டிய நிலையிலுள்ளனர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரையிலான எமது பாடப்புத்தகங்கள் சிங்கள மன்னர்களே இலங்கையின் நியாயமான மன்னர்கள் என தெரிவிக்கின்றன,அவர்களுடைய வாரிசுகளுக்கு மாத்திரம் இலங்கையை ஆளுவதற்கு உரிமையுள்ளது என்றும் அவை குறிப்பிடுகின்றன என கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்…

  10. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்:- லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக இன்றையதினம் 45 குடும்பங்களுக்கு 45 லட்சம் ரூபா பெறுமதியான பணம் வங்கியில் வைப்பிலிட்டு வங்கி கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்காக 1600 மாணவர்களுக்கு 16 லட்சம் ரூபா பணம் வங்கியில் வைப்பிட்டு வங்கிகணக்குப் புத்தகங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் நிறைவுபெறும் வரையில் அவர்களுக்கு மாதாந்தம் இந்த கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கபடும். அத்துடன் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தில் மேலும் பல மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். மாற்றுத்தி…

  11. மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விசாரணையை இடைநிறுத்த 300 மில்லியன் ரூபா இலஞ்சம் MAR 02, 2015 | 1:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட, மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதற்கு, முக்கிய அமைச்சர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க, குறிப்பிட்ட கடல் பாதுகாப்பு நிறுவனம் முயன்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட அவன்ட் கார்டே என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம், கடந்த ஜனவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. அந்த ஆயுதக்களஞ்சியம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில்…

    • 2 replies
    • 492 views
  12. கிழக்கு மாகாண முதரமைச்சருக்கு வழங்கிய ஆதரவை விலக்கியது சுதந்திர கூட்டமைப்பு கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்கிய ஆறு உறுப்பினர்கள் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பாக கு…

  13. மகிந்த அரசின் ஊழல்களை விசாரிக்க அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியாவிடம் உதவி MAR 02, 2015 | 1:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னைய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர், இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, விசாரணைகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். “உலக வங்கி, அமெரிக்க நீதித் திணைக்களம், லண்டனில் உள்ள முக்கியமான மோசடி விசாரணை அலகு மற்று…

    • 1 reply
    • 483 views
  14. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கக் கூடிய மாகாண அமைச்சு பதவிகளைக் கூட முஸ்லிம் காங்கிரஸ் சுவீகரிக்கின்ற நிலையே ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு புதூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலையின் முப்பெரும் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் இந்துமதத்திற்கு எதிராக இருக்குமானால் உடனடியாக அதில் இருந்து நான் விலகுவேன். நாம் எமது சமயத்தில் உறுதியாகவுள்ளோம். எனது சமயத்தினை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன். இந்த நாட்டில் இன்று இந்துக்களுக்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. சிறந்த ஒர…

  15. ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – காலையில் ஜோன் கெரி, பிற்பகலில் மங்களவின் உரை MAR 02, 2015 | 0:54by கார்வண்ணன்in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று இந்தக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இன்று தொடக்கம் 27ம் நாள் வரை நடைபெறவுள்ள 28வது அமர்வில், சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அந்த அறிக்கை ஆறு மாதங்களுக்குப் பிற்போடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தனது உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்…

    • 0 replies
    • 348 views
  16. தமிழ் முஸ்லிம் மக்கள் இலங்கையின் அரசியல் தலைவிதியை பெப்ரவரி 8ஆம் திகதி மீள எழுதி வைத்தனர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் 20 வருடங்களுக்கு மேல் அரசாளும்; திட்டத்துடன் பெப்ரவரியில் மஹிந்த தேர்தலில் களம் இறங்கினார். ஆனால் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் தமிழ் பேசும் மக்கள் முறியடித்துவிட்டனர். தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அலையை சரிவரக் கணித்துக் கொண்ட தமிழ்பேசும் தலைமைகள் குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் தமக்கான அரசியல் பயணத்திற்கேற்ற வகையில் அறுவடையாக்கிக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தலைமைத்துங்களின் சந்தர்ப்பவாத அரசியலால் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றதோ இல்லையே முஸ்லிம் அரசியல் வாதிகளின் அபிலாஷைகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி …

    • 3 replies
    • 546 views
  17. சீனாவின் 5 பில்லியன் டொலர் கடன்கள் குறித்து பேச பீஜிங் செல்கிறார் சிறிலங்கா நிதியமைச்சர் MAR 01, 2015 | 9:54 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பீஜிங் செல்லவுள்ளார். இரண்டு நாள் பயணமாக சீனா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். 1.5 பில்லியன் டொலர் செலவிலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட முன்னைய ஆட்சிக்காலத்தில், அபிவிருத்தித் திட்டங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் குறித்து மீளாய்வு செய்யப் போவதாக மைத்திரிபால …

  18. உள்நாட்டு விசாரணை செப்ரெம்பருக்குள் முடியாது – சிறிலங்கா அரசு கூறுகிறது MAR 01, 2015 | 10:09 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் நிறைவடையாது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னதாக, உள்நாட்டு விசாரணை குறித்த கட்டமைப்பு மற்றும் சட்டங்கள் தான் உருவாக்கப்படும். வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக, சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வது கடினமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விசாரணைகளுக்கு காலஅவகாசம் அளிக்கும் வகைய…

  19. சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கமாட்டோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர FEB 27, 2015by கார்வண்ணன்in செய்திகள் சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சீனாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பீஜிங்கில் இன்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதையடுத்து, இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதே, மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார். “சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், மீளாய்வு செய்யப்படும் சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக,…

  20. சீன நீர்மூழ்கிகளை மீண்டும் சிறிலங்கா வர இடமளியோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர FEB 28, 2015 | 12:54by கார்வண்ணன்in செய்திகள் சீன நீர்மூழ்கிகள் கடந்த ஆண்டைப் போல மீண்டும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அனுமதிக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சீன பிரதமர் லி கிகியாங், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இன்று பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவைப் போல, சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா துறைமுகத்தை அணுக புதிய அரசாங்கம் அனுமதிக்கும…

  21. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது செப்டெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ள நிலையில், நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த ஐ.நா. பேரவையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை வடக்கிற்கு வருகின்றனர். இங்கு வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிவில் சமூகத்தினரை இந்தக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். நேற்றுமுன்தினமும் நேற்றும் கொழும்பில் தங்கியிருந்த இந்தக் குழு…

    • 0 replies
    • 905 views
  22. இராணுவத்தினர் வசம் இருக்கும் விவசாய அமைச்சுக்குச் சொந்தமான பண்ணைகளையும் கூட்டுறவுச் சங்கக் கட்டிடங்களையும் விடுவித்துத் தருமாறு மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். உணவுப் பாதுகாப்பை கூட்டுறவு அமைப்புகளுக்கு ஊடாக உறுதி செய்யும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்.பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வட பகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அ…

  23. சம்பந்தனும் சுமந்திரனும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சென்றது அவர்கள் இருவரின் தனிபட்ட விடயம்-சுரேஷ் 8fc349503f6878fcee18db59d5ae6f81

    • 13 replies
    • 1k views
  24. இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் மீது நடிகர் சரத் குமார் குற்றச்சாட்டு இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் மீது பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையத்தில் தரவேற்றம் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களே அதிகளவில் தமிழகத்தில் திரையிடப்படும் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்து, அவற்றை இணையத்தின் ஊடாக தரவேற்றம் செய்வதாக தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்காக தாம் குரல் கொடுத்து வருவதாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் …

  25. விடுதலைப் புலிகளின் கோட்டைக்கு எதற்காகச் செல்கிறார் மோடி? – ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ MAR 01, 2015 | 10:51by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளது, தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்தியாவின் ‘ஹிந்துஸ்தான் ரைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யக் கூடும். வரும் 12-ஆம் நாள் மொரிசியசில் இருந்து இந்தியப் பிரதமர் கொழும்பைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது. மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் கைது செய்யப்பட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.