Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிடியாணை பிடிக்கப்பட்டிருந்த ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் பண்டாரவளை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான செந்தில் தொண்டமான், தபால்காரர் பெரியசாமி ஞானசேகரனை கடந்த 3ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. http://www.malarum.com/article/tam/2015/01/12/8055/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8…

  2. யுத்தக் குற்றம் தொடர்பான ஐநாவின் விசாரணைக்கான ஆதரவை அமெரிக்காவும் மேற்குலகும் கைவிடக் கூடாது: 12 ஜனவரி 2015 இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா மேற்கொண்டுள் முயற்சிகளுக்கான தனது ஆதரவை அமெரிக்காவும் மேற்குலகும் கைவிடக்கூடாது என புளும்பேர்க் என்ற பிரபல செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் இலங்கை சீனாவின் உறவை நிராகரித்த இன்னொரு சிறிய ஆசிய நாடாக மாறும் அறிகுறி தென்படுகின்றது. ஏற்கனவே மியன்மார் இவ்வாறு செயற்பட்டடிருந்தது. எனினும் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கையின் தனித்தன்மையை புரிந்துகொண்டாலே அவர்களால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முடியும். சீனாவின் இடத்தை…

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமித்துள்ளார். http://www.jaffnamuslim.com/2015/01/blog-post_427.html

    • 30 replies
    • 3.1k views
  4. தென்மராட்சி வலயப் பாடசாலை ஒன்றில் உயர் தரம் கற்கும் மாணவர்கள் இருவர் உரிய ஆவணங்கள் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்களில் செலுத்தியதால் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டனர். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:- தென்மராட்சிப் பகுதியில் நேற்று தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மாணவர்களைப் போக்குவரத்துப் பொலிஸார் மறித்து ஆவணங்களைப் பரிசோதிப்பதற்காகக் கேட்டுள்ளனர். அவர்களிடம் ஆவணங்கள் இல்லாதாதால் பொலிஸார் இருவரையும் தடுத்துவைத்து விசாரித்தபோது, மதுபோதையில் இருந்த அவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்கள் இருவரும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்னர். விசாரணை செய்த நீதிவான் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த மாணவன…

  5. நோர்வூட் தொண்டமான் மைதானத்திலிருந்து சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களை தாம் கைப்பற்றியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த தகவல்களையடுத்தே அந்த பொருட்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1மணியளவில் கைப்பற்றியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் நீதவானின் உத்தரவுக்கு அமையவே அந்த பொருட்களை கைப்பற்றப்பட்டன. தாம் கைப்பற்றிய பொருட்களில் புளோக்கல் இயந்திரம் 43, கூடாரங்கள், நாற்காலிகள், தகரங்கள் உட்பட இன்னும் பல பொருட்கள் இருந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசாங்கத்து சொந்தமானது என்றால் அவற்றை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கினிகத்தேன…

  6. ஹேக் நகரில் உள்ள சிறைக்கூண்டு தொடர்பான பீதியில் கொழும்பின் ஆட்சியாளர்கள்:- ரிறிவர் கிராண்ட் எழுதிய இந்த கட்டுரையினை தமிழில் தருவது குளோபல் தமிழ் செய்திகள்:- ஆட்சிக்கு மைத்திரிபால சிறிசேன மாறியதானது கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மிகவும் வெற்றிகரமான தேர்தலாக நவீன வரலாற்றில் பதிவாகின்றது. இந்த வாரம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் சிறிசேன ஏற்படுத்திய மாற்றம் ஆனது மிக திறமையான ஹாலிவுட் படைப்பாளியை கூட பொறாமைப்பட வைத்திருக்கும். ஊழல் மிகுந்த, காட்டுமிராண்டித் தனமான, வளைந்து கொடுக்காத, சர்வாதிகார நிர்வாகம் என்ற முகம் சமத்துவமும் கருணையும் உள்ள முகம் போல மாறியிருக்கின்றது. ஒரு பத்திரிகையாளனாக எனது 45 ஆண்டுகள் கசப்பான அனுபவம் உலகில் நடந்தேறும் எவ்வகையான அரசி…

  7. அனைத்துலக விசாரணைக்கு எவரையும் கையளிக்கமாட்டோம் – புதிய அரசாங்கம் JAN 12, 2015 | 0:52by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக எவரையும், அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கமாட்டோம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணையில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றவாளியாக காணப்பட்டால், புதிய அரசாங்கம் என்ன செய்யும் என்று பிபிசி சிங்களசேவை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “போர் ஒன்றின் போது தவறுகள் நடக்கும் என்று சரத் பொன்சேகா கூறியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் …

  8. புதிய அரசின் தேசிய நலன்சார் திட்டங்களுக்கு ததேகூ ஒத்துழைப்பு 'அமைச்சரவையில் சேர்வது பற்றி கூட்டமைப்பு கூடி ஆராயும்': சம்பந்தன்இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் மூலம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குகொள்ள வேண்டும் என்று புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசாங்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றார். இந்த நிலையில், புதிய அரசாங்கத்தின…

  9. இலங்கையின் இரகியங்கள் இராஜபக்ச அரசாங்கம் எப்படி படுகொலைகளை புரிந்த பின் தப்பியது என்ற நூல் எழுதிய அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் அகதிகளுக்கான அட்வகேட் ஆகவும் பணியாற்றிவரும் திறேவோர் கிரான்ட் (Trevor Grant) அவர்களிடம் பதிவு இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் http://www.pathivu.com/news/36870/57//d,article_full.aspx

  10. உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா? Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியாகி உள்ள இலங்கையின் புதிய அமைச்சரவை - சுமந்திரன் அமைச்சர் ஆகிராரா? Cabinet of srilanka : 25 Ministers & 10 Deputy Ministers 1.Min of Finance : Dr. harsha Desilva 2.Min of Defence : General sarath Fonseka 3.Min of Health : Dr. Rajitha Senarathna 4.Min of education : Hon Kabeer hashim 5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa 6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka …

    • 25 replies
    • 2.6k views
  11. ஆட்சியை விட்டுப் போனாலும் நான் கட்சியை விட்டுப் போகமாட்டேன். நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. நேற்று தனது தங்காலை 'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில், வீட்டின் மேற்தளத்திலிருந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள தமது இல்லத்திலிருந்து தங்காலை வீட்டுக்கு காரில் சென்ற மஹிந்த ராஜபக்‌ஷவை வழி எங்கும் மக்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தங்காலை இல்லத்தில் தம்மைத் தேடிவந்து சந்தித்த பௌத்த குருமார் மற்றும் பொது மக்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தினார். அதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பொது மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். “நாட…

  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும், முன்னாள் புனர்வாழ்வு பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார். கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு 10 டார்லி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழக் கூட்டத்தில் குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்வதில் ஆட்சேபம் கிடையாது என கருணா தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவை கட்சி…

    • 3 replies
    • 981 views
  13. இன்று கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையலுவலகத்தில் ஒன்றுகூடிய மத்திய செயற் குழு கூட்டத்தில் முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். மகிந்தவை காண ஆயிரக்கணக்கான மக்கள் வீதியை மறித்து குழிமியிருந்தனர்.இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.கண்ணீர் சிந்தி அழுதனர். மகிந்தவே எங்களுக்கு வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் இங்கு வந்திருந்த மக்கள் அனைவரும் மொறட்டுவ, தெஹிவளை ஆகிய பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக மக்களை அருகிலிருக்கும் பஸ்சுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. http://thinakkural.lk/article.php?local/szybujnrxo7142914101ec4721724bwtopc52b48a7b6ccc6f5a76f1fzcor9#s…

  14. மைத்திரியின் அமைச்சரவை இன்று நியமனம் JAN 12, 2015 | 0:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அமைச்சரவையை, அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தனது 100 நாள் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக 14 அமைச்சர்களை மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளார். அவரது அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் இடம்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, முன்னர் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அது 35 ஆக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்க அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், பிரதிஅமைச்சர்…

  15. நள்ளிரவு சதித்திட்டம் – மகிந்த, கோத்தா மீது விரைவில் விசாரணை JAN 12, 2015 | 0:08by கார்வண்ணன்in செய்திகள் அதிபர் தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்து விட்டுத் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட சதித்திட்டம் குறித்து, புதிய அரசாங்கம் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலின் ஆரம்ப கட்ட முடிவுகளில் தாம் தோல்வியடைந்து வருவதை உணர்ந்து கொண்ட மகிந்த ராஜபக்ச, சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை தக்கவைக்க முயன்றதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்கவிருப்பவர் என்று கருதப்படும் மங்கள சமரவீர…

  16. வன்னேரிக்குளத்தையும் தேவன் குளத்தையும் தனித்தனியாக புனரமைப்பதற்கான திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. நிதி கிடைத்ததும் இவ்விரு குளங்களும் புனரமைக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.விகிர்தன் சனிக்கிழமை (10) தெரிவித்தார். கிளிநொச்சி வன்னேரிக்குளத்தினையும் பூநகரியின் தேவன்குளத்தையும் இணைத்து நீர்த்தேக்கமொன்றினை உருவாக்கும்படி வன்னேரிக்குளம் மற்றும் ஜெயபுரம் கிராம மக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டத்தில் 1954ஆம் ஆண்டு வன்னேரிக்குளம் உருவாக்கப்பட்டது. இக்குளத்தின் மூலம் 375 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்புக்கு தற்போது நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. பூநகரியின் தேவன்குளம் ஜெயபுரம் கிராம மக்கள் பயன்…

  17. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்- இரண்டாகப் பிளந்தது சுதந்திரக் கட்சி:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளதுடன், கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளராக ஜனக பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் யாப்பிற்கு அமைவாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான…

  18. இந்த அரசியல்வாதிகளுக்கு இருக்கிற மாதிரி மறக்கிற வருத்தம் எங்களுக்கும் இருந்தால் எப்படி இருக்கும்? விஜித முனி சொய்சா எண்டொரு மொனறாகலை எம்பி இருக்கிறார். அவர் ஒரு கிழமைக்கு முதல்லை மைத்திரியை கிழி கிழியெண்டு கிழிச்சவர். நீங்களும் பக்கம் மாறுவீங்களோ எண்டு ஒரு நிருபர் கேக்க எங்கடை வீட்டு நாயும் மாறாது எண்டு சொன்னவர். இண்டைக்கு மனிசன் 20 பேரிலை ஒருத்தரா நிண்டு மைத்திரியை புளுகித் தள்ளிறார். மகிந்தருக்கு ஏசுறார். ஞாபக மறதி எண்டொரு வருத்தம் இல்லாட்டி இப்படி எல்லாம் செய்ய ஏலுமே.. ஆ! எங்கடை கிழக்கின்ரை விடிவெள்ளியும் மைத்திரி பக்கமாம்...கடவுளே! கடவுளே..

  19. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரொஜினோல்ட் குரே, சரத் அமுனுகம, பியசேன கமகே, அததாவுட செனவிரட்ன, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பதினைந்து பேர் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார். தற்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரியின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 20 முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் …

  20. நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைச் செலுத்திவந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் தெல்லிப்பழை, ஆனைக்குட்டி மதவடிப் பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த காரைநகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நவக்குமார் நவரஞ்சன் (வயது - 27) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்துவந்த சுன்னாகம் சிவன்கோவிலடியைச் சேர்ந்த தி.பிரகாஷ் (வயது 23) என்பவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போத…

  21. மஹிந்த இராணுவ உதவி கோரியது குறித்து விசாரணை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றுவிட்டதை அறிந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இராணுவத்தை களத்தில் இறக்க முயன்றார் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளர் ரஜித சேனரட்ண குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்தத் தேர்தலில் தான் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொள்வதாக மஹிந்தராஜபக்‌ஷ பகிரங்கமாக அறிவிப்பதற்கு முன்னர், இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக மீது பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று மஹிந்தராஜபக்ஷவின் சார்பில் பேசவல்ல மோஹன் சமரநாயக மறுத்திருக்கிறார். அப்படியான முயற்சிகள் எ…

  22. கொழும்பு : இலங்கையின் புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்களும் 10 இணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வென்று புதிய அதிபராக பதவி ஏற்றுள்ளார் மைத்ரிபால சிறிசேன. இவர் ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தவர்களை பதவி நீக்கம் செய்ததுடன் அந்த பதவிகளில் புதிய நபர்களை நியமித்துள்ளார். மேலும், இலங்கையில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 10 இணை அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நிதி அமைச்சராக கலாநிதி ஹர்ஸ டி சில்வா, பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் சரத் பொன்சேகா, சுகாதார அமைச்சராக கலாநிதி ராஜித சேனாரத்ன, கல்வித் துறை அமைச்சராக கபீர் ஹாசிம். பொது அலுவல்கள் அமைச்சகத்தின் சஜித் பிரேமதா…

  23. மகிந்தவின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியிடம் சரண் JAN 11, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுமாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். சரத் அமுனுகம, அதாவுட செனிவிரத்ன, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜயமுனி சொய்சா, ரி.பி.எக்கநாயக்க, எஸ்.பி.நாவின்ன, சனத் ஜெயசூரிய, கருணா மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர உள்ளிட்டோரே புதிய அரசுடன் இணைய முன்வந்துள்ளனர். முன்னைய தகவல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், மகிந்த ராஜபக்ச அரசின் முன்னாள் அமைச்சர்களுமான, சுமார் 15 நாடாளுமன…

  24. தேசிய அரசில் பங்குகொள்ள அழைக்கிறார் மைத்திரி JAN 11, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன. புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், இன்று முற்பகல் கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடபட்டனர். பின்னர் கண்டி மீரா மக்கம் பள்ளிவாசலுக்கு சென்று சிறப்பு துஆ பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர்கள், அதையடுத்து கண்டி ஸ்ரீ செல்வவிநாகர் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்பின்னர் தலதா மாளிகையின் மாடத்தில் (பத்திரிப்பு) இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் மைத்திரிபால சிறிசே…

  25. "கட்சியின் தலைவர் நானே" - மகிந்த ராஜபக்ஸ - பெரும்பான்மை பலம் எமக்கே உண்டு – சுசில் பிரேமஜயந்த: "கட்சியின் தலைவர் நானே" - மகிந்த ராஜபக்ஸ - பெரும்பான்மை பலம் எமக்கே உண்டு – சுசில் பிரேமஜயந்த: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை பலம் எமக்கே உண்டு என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் அதன் பிரான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பெரும்பான்மை ஆதரவு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு 10 டார்லி வீதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.