Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 9 ஆம் திகதி மாலையே தேர்தல் முடிவுகள் news ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு ஒன்தாம் திகதி மாலையே அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறுகின்றது.இதில்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 வேட்பாளர்களும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.8 ஆம் திகதி இரவே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும். தபால் மூல வாக்குகளின் முடிவுகள் முதலில் வெளியிடப்படும்.இரவு 10 மணியளவில் அந்த முடிவுகள் வெளிவர ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும்,இறுதி முடிவு மறுநாள் மாலையே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டவிரோத தேர்தல் பரப்புரைகள் மற்றும் தேர்தல்…

  2. மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு news மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் விதத்தில் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான குறித்த நபரே இன்று காலை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவர் எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 05 ஜனவரி 2015, திங்கள் 10:55 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=302903778305804742#sthash.97GiunDF.dpuf

  3. ராஜபக்ஷ தோல்வியை சந்தித்து வருகிறாரா? ஆக்கம்- பி.பி.சி செய்திகளிற்காக சாள்ஸ் கவிலாண்ட் 04 ஜனவரி 2015 ராஜபக்சஆதரவாளர்கள்அவரை "ராஜா" என குறிப்பிடுவது வழமை. மஹிந்த ராஜபக்சதான் வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாக மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டியவர் என நம்புகிறார். ஆனால் ராஜபக்சமற்றும் அவரது சகோதரர்களின்கீழ் இலங்கை எப்படியானதொரு ஒரு நாடாகமாறி இருக்கிறது? சென்ற மாதம் ஒரு நாள், ஆறு சோதிடர்கள்சனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் வெற்றிவாய்ப்புக்கள் பற்றி எதிர்வுகூறும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்றை அரச தொலைக் காட்சியில் நிகழ்ச்சியாக செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். அந்த ஆறு சோதிடர்களும் உறுதியாக கூறினார்கள் , சனாதிபதி ராஜபக்ச வருகின்ற தேர்தலி…

  4. மைத்திரியின் பரப்புரை மேடை மீது துப்பாக்கிச் சூடு – 3 பேர் காயம் JAN 05, 2015 | 5:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இரத்தினபுரியில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை பரப்புரை மேற்கொள்ளவிருந்து மேடை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேடை அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவித்திகலவில் இன்று காலை 11 மணியளவில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறவிருந்தது. இதற்காக மேடை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமுற்ற 3…

    • 0 replies
    • 419 views
  5. பொது எதிரணியின் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும் நிச்சயமாகக் கிடைக்கும் என்று நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்துக்காக பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டும் இவர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதை வழங்க தற்போதைய அரசும் முன்வரவில்லை. மறுபுறத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டு வரும் முஸ்…

    • 7 replies
    • 594 views
  6. யாழ்ப்பாணத்தில் நாட்டாமை வேலை செய்து வரும் அமைச்சா் டக்கிளஸ்தேவானந்தா பொதுக்கட்சியுடன் சேருவதற்குத் தீா்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்தவுடன் மகிந்த தோற்றால் உடனடியாகக் கட்சி மாறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக அமைச்சர் சந்திரிக்காவுடன் இரகசியமாகத் தொடா்பு கொண்டுள்ளாராம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடங்கி எல்லாக் கட்சிகளும் பொதுக்கூட்டணியுடன் சோ்ந்துள்ள நிலையில் அமைச்சரும் சோ்ந்தால் நிலை என்னவாகும் என அரசியல் அவதானிகள் சிந்தனைவசப்பட்டுள்ளனா். அமைச்சா் பொதுக்கூட்டமைப்பில் இணைந்தால் தான் கொலைகாரியாக மாறவேண்டிவரும் என விஜயகலா மகேஸ்வரன் ரணிலுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளாராம். தனது கணவனைக் கொன்றவ…

    • 6 replies
    • 1.1k views
  7. வணக்கம் கள உறவுகளே! நிறைவேற்று அதிகார சனாதிபதி ஆட்சி முறை ஏற்பட்டது முதல் இன்றுவரை ஆணைப் பெண்ணாக்குவதையோ பெண்ணை ஆணாக்குவதையோ(ஜே.ஆரால் கூறப்பட்டது) தவிர அனைத்தையும் செய்யமுடிந்த இந்த சனாதிபதிகளின் காலத்தில் நடந்த இனஅழிப்பு சொத்தழிப்பு எனப் பல்வேறு அழிப்பு நடவடிக்கைகளுள் எமக்குத் தெரிந்தவற்றை இணைப்போம். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் பலவற்றை மறந்து போகின்றோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் ரீதியான பார்வைகள் தேவைகள் இருந்தாலும் அழிவென்று வரும்போது அனைவருமே எதிர்கொள்ள நேர்ந்தது. இனியும் அதுவே. புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளைக் கடந்தவர் முதல் அண்மைக்காலம் வந்தவர்கள்வரை உள்ளோம். எனவே காட்சிகளை நேரில் கண்டது முதல் தாமே அனுபவித்தவர்களும் இருக்கின்றோம். எனவே பகிர்ந்து கொள்வோ…

  8. பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவு தெரிவித்தமை தியாக வேள்வித் தீ அணைந்துவிட்டதாவென்ற கேள்வியெழுப்பியுள்ளது கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பினில் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவகரன் ஆகியோருடன் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். அதே வேளை தமிழரசுக்கட்சியின் பிரதி தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் உட்பட வடக்கு-கிழக்கிலுள்ள பல கூட்டமைப்பு பிரமுகர்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர். அங்கு உரையாற்றிய இளைஞரணி செயலாளர் வி.எஸ.சிவ…

  9. "மிஸ்டர் பிரபாகரன்''என்று கூறுவதில் தவறேதுமில்லை : மங்­கள 'மிஸ்டர் பிர­பா­கரன்' என்று கூறு­வதில் தவ­றே­து­மில்லை. சிங்­கள மக்கள் எதி­ரி­யையும் நண்­ப­னாக கவ­னிக்கும் மனப்­பான்மை கொண்­ட­வர்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ முதலில் பிர­பா­க­ர­னுக்கு 'மிஸ்டர்' என்று அழைத்­தவர். அதே­போன்று 600 பிக்­கு­களை கொன்ற கருணா அம்­மா­னுக்கு 'மாண்­பு­மிகு அமைச்சர்' என்ற நாமம் சூட்­டி­ய­வரும் மஹிந்­தவே ஆவார் என்று மாத்­தறை மாவட்ட ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். இதே­வேளை ஜன­வரி 9ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டாது. அவர்­க­ளது பாது­காப்பு உறு­திப்­ப­டு…

    • 0 replies
    • 438 views
  10. இலங்கையின் ஐனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துத்தும். இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராகவும் தமிழீழம் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதிய கட்டடிடத்தொகுதியில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/36633/57//d,article_full.aspx

    • 0 replies
    • 563 views
  11. TNAயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் இழுத்து வீழ்த்தி வெளியேற்றப்பட்டார்? 04 ஜனவரி 2015 முல்லைதீவு விசுவமடுப் பகுதியில் பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில் மஹிந்தவிற்கு பிரச்சாரம் செய்ய மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினம் இழுத்து வீழ்த்தி வெளியேற்றப்பட்டார். விசுவமடுச் சந்தியில் நாமல்ராஜபக்ஸவினது ஏற்பாட்டில் இன்றிரவு இப்பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. கண்ணன் என்பவர் தலைமையில் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்யவென மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை…

    • 1 reply
    • 909 views
  12. இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு JAN 05, 2015 | 0:44by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கான கால எல்லை இன்று நள்ளிரவு முடிவுக்கு வந்த பின்னர், எல்லா அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகவோ, அல்லது, எதிராகவோ பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்…

    • 0 replies
    • 411 views
  13. ஜே,வி.பியின் அனுர குமார திசநாயக்காவின் செவ்வி https://www.facebook.com/video/video.php?v=399373063550480

    • 0 replies
    • 328 views
  14. 8ம் நாளுக்குப் பின்னர் எதிரணியில் இருப்பேன் என்கிறார் அமைச்சர் மேர்வின் சில்வா JAN 05, 2015 | 0:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். கிரிபத்கொடவில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் நேற்று உரையாற்றிய அவர், “மகிந்த ராஜபக்ச ஒரு உயர்வான மனிதர். அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று விரும்பிய யாருக்கேனும் வாக்களியுங்கள். வரும் 8ம் நாளுக்குப் பின்னர், எதிரணியில் நான் அமர்ந்திருப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜ…

    • 0 replies
    • 461 views
  15. திரு.பிரபாகரன் என்று அழைத்ததை மறந்து போனாரா மகிந்த? – மங்கள சமரவீர கேள்வி JAN 05, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, திரு.பிரபாகரன் என்று, தேர்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியது குறித்து, சிறிலங்கா அரசாங்கம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தீவிரவாத தலைவரை மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைப்பதா என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர் விசனம் வெளியிட…

    • 0 replies
    • 465 views
  16. தேர்தலில் இராணுவத் தலையீடு குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கவலை JAN 04, 2015 | 15:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரச வளங்களின் பயன்பாடு மற்றும், இராணுவத் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள கொமன்வெல்த் கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் கலாநிதி பாரத் ஜக்டியோ, “தேர்தல் நாளன்றோ, அதற்கு முதல் நாளோ, இராணுவம் பயன்படுத்தப்படுவது குறித்த முக்கியமான கவலை உள்ளது. தேவை எனக் கருதினால், இதுகுறித்து விவாதிக்க இராணுவத்துடன் ஒரு சந்திப்பைக் கோருவோம். அரசாங்க வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது, வன்முறைகள், முறைகே…

    • 0 replies
    • 424 views
  17. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பணிகள் ஆரம்பம் news ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைப் பணிகள் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம்,கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டன. 02 ஜனவரி 2015, வெள்ளி 10:15 மு.ப - See more at: http://onlineuthayan.co…

  18. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியினில் இன்றிரவு இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுகுழந்தை உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளான். முன்னதாக அப்பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார்.இதில் சிவராசா(வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு படைமுகாம் முன்பதாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.அதனையடுத்து அவாகள் மீது படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆறு வயதேயான பிறின்ஸி என்றழைக்கப்படும் சதீஸ்குமார் சதுஸிகா(வயது 6) படுகாயமடைந்து …

  19. பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜனநாயக முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க, நவீன் திஸாநாயக்க, புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, இராஜாராம் உள்ளிட்ட பலர் க…

  20. தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்:- 04 ஜனவரி 2015 மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்லைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்? என்பது குறித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்த அறிக்கை முழுமையாக: இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பாரம்பரியமாக நீண்ட காலமாகவாழ்ந்துவரும் தமிழர்களுக்கு,சிங்கள மக்களுக்கு சமமாகஅனைத்து அரசியல் பொருளாதார உரிமைகளை பெற்று வாழும் உரிமை உண்டு. இது மறுக்கப்பட்டது மட்டும் அல்ல தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல இன ஒடுக்கு முறைகள் கடந்த காலத்தில் நடைபெற்றது. ஆனால…

  21. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிரணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களும் அப் பக்கமே சென்றுவிடுவார்கள் என்ற தோற்றப்பாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை என்றும், மூன்றில் ஒரு பெரும்பான்மையே போதுமானது என்றும் சுட்டிக்காட்டினார். அண்மையில் அலரிமாளிகையில் வைத்து வாரப் பத்திரிகைகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ தமது புதிய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும், அப்பட…

  22. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளினை கூட்டமைப்புடன் இணைந்து மேற்பார்வை செய்யவென மைத்திரியின் தேர்தல் பிரச்சார ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் ஒன்பது பேர் யாழ்.வருகை தந்துள்ளனர். அவர்கள் தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். எதிர்வரும் மூன்று தினம் வடக்கில் தங்கியுள்ள அவர்கள் கூட்டமைப்பின் முகவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதல் கட்டமாக இக்குழுவினர் வடமராட்சி பகுதியினில் சந்திப்புக்களினை நட…

  23. எதிர்வரும் எட்டாம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் நிட்சயம் தனக்கே கிடைக்கும் என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலேயே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதால் தமிழ் மக்களும் அரசாங்கத்துடன் இல்லை என அர்த்தப்படாது என்றும் அவர் இன்றைய தினம் வாராந்த பத்திரிகைளுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் தம்முடன் இருப்பதாகக் …

    • 0 replies
    • 390 views
  24. எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சிறிலங்கா அரசஅதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் தொடர்பாக எமது பார்வையை இங்கு பதிவுசெய்கின்றோம். இவை தமிழ்த்தேசிய சிந்தனை வெளியில் தமிழ்மக்களுக்கு இருக்கக்கூடிய கடந்த கால நிகழ்கால எதிர்கால செல்வழிகளை மையப்படுத்திய பார்வையாகவே முன்வைக்கப்படுகின்றன. 1. தற்போது நடைபெறவுள்ள சிறிலங்கா அரச அதிபருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டுமா? ஆம். இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்களவர் தேசம் என இருவேறு தாயகப்பகுதிகள் கொண்ட இரு நிர்வாக அலகுகள் கொண்ட அரசியல் தீர்வே இலங்கைவாழ் அனைவருக்கும் பொருத்தமானதாகும். அதற்கான கோரிக்கைகள் இன்னும் வலுப்பெறவேண்டும். அதனால் ஒற்றையாட்சி அமைப்பைக்‌…

  25. முல்லைத்தீவு தனியார் பேரூந்து நிலையம் சேறும் சகதியுமாக காணப்படுவதன் காரணமாக முல்லைத்தீவு நகரத்துக்கு வருகை தரும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு அருகில் தனியார் பேரூந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் பலர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் சேறும்சகதியும் நிறைந்த பகுதியால் இறங்கியே நகருக்கு செல்லவேண்டிய நிலையுள்ளது - http://www.tamilmirror.lk/136956#sthash.odizNxUs.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.