Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கச் சதி – இராஜதந்திரிகளிடம் முறைப்பாடு JAN 02, 2015 | 0:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அடுத்தவாரம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தும், நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக அனைத்துலக சமூகத்திடம் முறையிட்டுள்ளது எதிரணி. எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நேற்று கலதாரி விடுதியில், கொழும்பைத் தளமாக கொண்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தனர். இதன்போது, உரையாற்றிய, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, “யாழ்ப்பாணத்தில் மட்டும், 2000 சிறிலங்கா படையினர், சாதார…

    • 0 replies
    • 347 views
  2. மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழக்கிறார் மகிந்த JAN 02, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர், இந்த தகவலை வெளியிட்டார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, அவர் அறிவித்தார். எனினும், இன்று கட்சி தாவவுள்ள அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அவர் வெளியிடவில்லை. இதற்…

    • 0 replies
    • 470 views
  3. தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயல்ப்படமுடியாது ! தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்றுமஹிந்ததெரிவித்துள்ளார்.நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற் கொண்டவாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்களை மைத்திரியிடம் அடகு வைத்துள்ளது தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு நான் எப்போதும் நண்பன் இந்தியா எனது நேச நாடு அவர்கள் என்னை நம்புகின்றனர் 8ம் திகதிக்கு பின் நான் தான் ஜனாதிபதி எவரும் பயப்பட தேவை இல்லை எனது பின் வாசலுக்கு தமிழ் தேசிய கூடமைப்பு வரத்தான் வேண்டும் ஆகவே நான் சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்லுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://eeladhesam.com/?p=20566

    • 0 replies
    • 603 views
  4. படகு மூலம் இந்தியா சென்ற ஒருவர் சிக்கினார்: இருவர் தப்பியோட்டம் January 1, 2015 12:56 pm இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா சென்ற மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இருவர் தப்பிச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் கியூ பிரிவு பொலிஸார் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவில் இலங்கையில் இருந்து வந்த ஒரு படகில் 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் இறங்கியுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் மற்றைய இருவரும் தப்பி ஓடிள்ளனர். பிடிபட்டவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது31) என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மணிகண்டன் பொலிஸ் நிலையத்தில் கூறியபோது, ´கடந்த 1990–ல் சி…

    • 0 replies
    • 427 views
  5. புலிகளுடனான யுத்தவெற்றியை சித்தரிக்கும் படங்கள் கொழும்பில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்படுகிறது: 01 ஜனவரி 2015 இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடும் எதிர்ப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- விடுதலைப் புலிகளுடனான யுத்தவெற்றியை சித்தரிக்கும் படங்கள் கொழும்பின் பல பகுதிகளில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்படுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரச்சார பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல்ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட அதிநவீன டிஜிட்டல் திரைகளை இந்த படங்களை காண்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர், அந்…

  6. சிறிலங்காவில் எதிர்வரும் 08 ம் நாள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதாவும்,தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று தேர்தல் களத்திலுள்ள அனைத்து சிங்களத் தலைமைகளும் தமிழின அழிப்பின் பங்காளிகளும் இன அழிப்பை நேரடியாக நெறிப்படுத்தி வழிப்படுத்தியவர்களே. தமிழினம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட எமது பல சகோதரிகள் சிங்களப் படைகளால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை ,ஆயிரக்கணக்கான எங்கள் உறவுகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதை, பல ஆயிரம் தமிழ் பெண்கள் வி…

    • 1 reply
    • 439 views
  7. வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு மைத்திரி வாக்குறுதி JAN 01, 2015 | 11:04by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கலதாரி விடுதியில் இன்று காலை வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். “வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், நாட்டில் நீதியான ஜனநாயக சமூக அமைப்பை உருவாக்க வேண்டியது முக்கியமானது. அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை ஒழித்து, சுதந்திரமான, ஆணைக்குழுக்களை உருவாக்கி, நீதித்துறை, காவல்துறை, பொதுச்சேவைகள், தேர்தல் ஆணையம…

    • 0 replies
    • 623 views
  8. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காடுகளில் தேக்கு மரங்கள் அனுமதிப்பத்திரமின்றி வெட்டப்பட்டு கடத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸார், வியாழக்கிழமை (01) தெரிவித்தனர். தேக்கு மரங்களை வாகனங்களில் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த 30ஆம் திகதி 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 3 தேக்கு மரக்குற்றிகளை கன்ரர் ரக வாகனத்தில் கடத்திச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை, நீதவான் எம்.ஐ.வகாப்தீன் 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார். மேலும், கடத்தப்பட்ட தேக்குமரம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேல…

  9. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் தமது தரப்பைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்…

  10. னாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்கள் மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை பகல் ஆரம்பமாகின. இந்த விநியோக பிரசார நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், ஆர்.துரைரெட்ணம், கோ.கருணாகரம்(ஜனா), இ.நித்தியானந்தம், ஞா.கிருஷ்ணப்பிள்ளை, எம்.நடராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இவர்கள் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள், பஸ்நிலையம், பொதுச் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விளக்கங்களையும் வழங்கினர். http://www.malarum.com/article/tam/2015/01/01/7828/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%A…

  11. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார். த மிழ்த் தேசியக் கூட்டமைப்பின், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து தியாகராசா, யாழ் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி நிரஞ்சன் கிருசாந்தி, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் நடராஜா நிரஞ்சன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கதிரேசு சுபாஸ்கரன், இராசையா ராஜசேகரம், பாக்கிய நாதன் பார்த்தீபன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாவியுள்ளனர். தமிழ்த் தேசியக் …

  12. உயர் கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க பொது எதிரணியுடன் இணைந்துகொண்டார். அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் இணைந்து கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திகொண்டிருக்கின்றார். - http://www.tamilmirror.lk/136833#sthash.g2BtwGe1.dpuf கம்பஹா மாநகரசபை பிரதிமேயர் அஜித் பஸ்நாயக்க, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/136835#sthash.ZfJZYNnB.dpuf

    • 1 reply
    • 540 views
  13. மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தலாம் என மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து அச்சம் வெளியிட்டுள்ளார். பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனவரி 9 ம் திகதி அமைதியான முறையில் பதவிவிலகுவார் என்பதை என்னை போன்ற பலரால் நினைத்துப்பார்க்க முடியாதுள்ளது. இதன் காரணமாக என்ன நடக்கும் என்பது குறித்து கரிசனைகள் உள்ளன. வடகிழக்கில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவார்கள் என எதிபார்க்கிறேன். 2013 மாகாணசபை தேர்தலிலும், அதற்கு முந்தைய தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது. 2005 இல் இது இடம்பெற்றது …

    • 5 replies
    • 494 views
  14. அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம், புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் எழுந்திருக்கும் கேள்விகளுக்கான எமது நிலைப்பாட்டை முழுமையான தமிழ்த் தேசியத்தின் விடுதலை நோக்கிய நிலையில் இருந்து அறிவிக்கின்றோம். எமது நிலைப்பாடு என்பது நீண்டகால நோக்கின் அடிப்படையில், எமக்கு எமது மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில், அவர்களின் அரசியல் வேணவாவை பிரதிபலிக்கும் வகையில், நாடுகள் வாரியான மக்கள் அவைகளுக்கு இடையேயும் மற்றும் பல்வேறு தரப்புகளுடனும் மேற்கொண்ட கலந்து…

  15. மர்மப் பயணம் மேற்கொள்ளும் சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு தடைவிதித்தது சிறிலங்கா JAN 01, 2015 | 1:00by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முதலீட்டுச்சபையின் அங்கீகாரத்துடன், சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் 10 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள், சிறிலங்கா துறைமுகத்தில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்தன. இந்தக் கப்பல்களின் மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 10 வீதத்தை, சிறிலங்கா கடற்றொழில் அமைச்சுக்கு வழங்க வேண்டும் என்றும், சிறிலங்கா துறைமுகம் வழியாகவே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்ட…

  16. நாடுதிரும்பினார் சம்பந்தன்! யாருக்கு ஆதரவு? - கூடுகின்றது கூட்டமைப்பு: [sunday 2014-12-28 13:00] எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவை அறிவிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை கூடிப்பேசவுள்ளது. இக்கூட்டம் கொழும்பில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் மத்திய குழுவினர் தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேவேளை யாரை ஆதரிப்பது என்ற முடிவினை மேற்கொண்ட பின்னர் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்குமு…

    • 54 replies
    • 3.3k views
  17. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலும், தமிழ் மக்களும் - பேராசிரியர் முருகர் குணசிங்கம் எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி (08.01.2015) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக இரு அதி தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத் தலைவர்கள் பிரதானமாகப் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருமே கடந்த காலங்களில் தமிழர்களையும், தமிழீழ தேசிய விடுதலையையும் அழிப்பதற்கு கைகோர்த்து நின்றவர்கள். மேலும் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முதுகில் குத்தி விட்டு ஜனாதிபதி கதிரையைப் பிடித்தவர் மகிந்த ராஜபக்ச. இப்பொழுது மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்திவிட்டு ஜனாதிபதி கதிரையைப் பிடிப்பதற்கு கிளம்பியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன. இவர்கள் அனைவருமே தந்தையைக் கொன்றுவிட்டு அர…

    • 0 replies
    • 427 views
  18. புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது. விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. எனவே, தமிழரின் பிரச்சினைக்கு 2015 இல் கெளரவமான - நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்களும் நாமும் இருக்கின்றோம். எதிர்வரும் 8ஆம் திகதி நடை…

    • 0 replies
    • 1.2k views
  19. தமிழ் மக்களாகிய நாம் தனி ஈழத்தைக் கோரவில்லை. மாறாக, சுயமரியாதையுடன் வாழும் உரிமையையே கோருகின்றோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் மறை மாவட்ட ஆயரை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆசிபெற்றார். இதன்பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ஆயர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்த நாடு பல இன, சமய, மொழி கலாச்சாரங்களை கொண்ட நாடு. ஆனால், ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற ஆட்சியே இன்று இங்கு இருக்கின்றது. துன்பங்களை தாங்கிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் கருத்துக்கள் இன்றைய ஆட்சியாளர்களின் சிந்தனைக…

  20. சுற்றிவர இராணுவமும் காவல்துறையும் குவிந்திருக்க பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி பிரஸ்தாபித்த வேளைகளில் எல்லாம் ஆர்ப்பரித்த மக்களது உணர்வு எதிரணியினரை இன்று அதிர்ச்சிக்குள்ளாக்கியே இருந்தது. யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனிற்கும் தனக்குமிடையேயான சமாதான பேச்சு பற்றி பிரஸ்தாபித்திருந்தார். அவ்வேளையில் பிரபாகரன் பெயரைச் சொல்லவே திரண்டிருந்த மக்கள் ஆரவாரித்தனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சந்திரிகா சிறிது நேரம் பேச்சை தொடர முடியாது திணறி பின்னர் பின் தொடர்ந்தார். அடுத்து பேசிய முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா …

    • 8 replies
    • 1.3k views
  21. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசி வரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதல் நாள் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையான கரையோர மாவட்டக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அதனை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளார். அதற்கு ஹக்கீம், ஜனாதிபதியின் வாக்குறுதியை எழுத்து வடிவில் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அது தொ…

  22. சிறிலங்கா கொடியுடன், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, சீன மற்றும் ஜப்பானிய மீன்பிடிக் கப்பல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முதலீட்டுச்சபையின் அங்கீகாரத்துடன், சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களின் 10 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள், சிறிலங்கா துறைமுகத்தில் இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்தன. இந்தக் கப்பல்களின் மூலம் பிடிக்கப்படும் மீன்களில் 10 வீதத்தை, சிறிலங்கா கடற்றொழில் அமைச்சுக்கு வழங்க வேண்டும் என்றும், சிறிலங்கா துறைமுகம் வழியாகவே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த்து. எனினும், சீன மீன்பிடிக் கப்பல்கள், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றாலும், வெறும் கையுடன் திரும்புவதாக அ…

    • 0 replies
    • 298 views
  23. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கையின் முன்னாள் கொன்சோல் அதிகாரி பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த பின்னர் இவ்வாறு பாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் இவ்வாறு மைத்திரிபாலவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வரும் பல இடங்களிலும் இவ்வாறு மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதற…

    • 3 replies
    • 603 views
  24. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது. மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதூகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ. தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர…

    • 6 replies
    • 1.6k views
  25. பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம் DEC 31, 2014 | 5:01by கார்வண்ணன்in செய்திகள் அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது. சிறிலங்காவில் அதிபர் தேர்தல் அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். பான் கீ மூன் தவறான அனுமானங்களைச் செய்வதாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், செய்தி வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா 80 ஆண்டுகளாக ஜனநாயக தேர்தல் நடைமுறையை கொண்டுள்ள ஒரு நாட…

    • 5 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.