ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
கச்சத் தீவை மீட்க வேண்டும்; தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் news கச்சத்தீவைத் திரும்பப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம், எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்கக் கோரும் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்து உரையாற்றினார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவு இலங்கைக்குத் வழங்கப்பட்டமையாகும். தமிழக மீனவர்கள் எவ்வித துன்பங்களும் இல்லாமல் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஏதுவாக கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும். பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு தடுக்காமல் இருப்பதற்கு…
-
- 1 reply
- 524 views
-
-
பாப்பரசரைக் கௌரவிக்க சிறைக்கைதிகளுக்கு விடுதலை! [saturday 2014-12-06 09:00] பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள், நல்லொழுக்கமானவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆகிய அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள், நல்லொழு…
-
- 0 replies
- 317 views
-
-
என்னை மின்சாரக் கதிரைக்கு கொண்டு போக முயற்சிக்கின்றனர்! – ஜனாதிபதி மகிந்த கூறுகிறார். [saturday 2014-12-06 10:00] தம்மை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், 'நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இதனைச் செய்ய முடியாது என்பதால் என்னைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை பெற்றுக்கொடுக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. தம்மை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நி…
-
- 1 reply
- 594 views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக தென் ஆபிரிக்காவில் யுத்தக் குற்றச் செயல் வழக்கு? 06 டிசம்பர் 2014 இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக தென் ஆபிரிக்காவில் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ ஜெனரல் ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்க வாழ் தமிழ் அமைப்பு ஒன்று இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. ஜெனரல் ஸ்ரீலால் வீரசூரிய என்பவருக்கு எதிராக இவ்வாறு யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்த மத விவகார நிகழ்வு ஒன்றிற்காக இராணுவ ஜெனரலும் அவரது துணைவியும் தென் ஆபிரிக்கா விஜயம் செய்துள்ளனர். 1990களில் இரா…
-
- 0 replies
- 702 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்றும் அதேவேளை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் கூறி, இந்த சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான பொதுவேட்பாளரின் திட்டம் என்ன என்று பிபிசியின் சரோஜ் பத்திரன கேட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறுச…
-
- 0 replies
- 345 views
-
-
இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளின் துறைமுகங்களில் சீனா முன்னெடுத்துவரும் உட்கட்டமைப்புத் திட்டங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன் தெரிவித்துள்ளார். சீனாவின் இவ்வாறான நடவடிக்கையால் சில தாக்கங்கள் உண்டாகலாம் என்பதால் இந்த விடயம் குறித்து நாங்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்,என செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட உட்கட்டமைப்புஅபிவிருத்தி திட்டங்கள் என்ன அடிப்படையில் முன்னெடு;க்கப்படுகின்றன,என்பது மிகமுக்கியம் என்றும் தெரிவித்துள்ள அவர் எமது கடற்பிராந்தியத்தில் இடம்பெறும் சகலவகையான நடவடிக்கைகளையும் நாங்கள் நிச்சமாக அவதானிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இந…
-
- 1 reply
- 513 views
-
-
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் உறவினர்கள் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் காணி தொடர்பான பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முல்லைத் தீவில் ஆண்டான்குளம். செம்மலை, நாயாறு, மணவாளன்பட்டமுறிப்பு, கரிப்பட்டமுறிப்பு பகுதிகளில் தமிழர்களின் காணிகள் போரினால், கைவிடப்பட்ட நிலையில் இப்போது பெரிய காடுகளாகி விட்டன. அந்தக் காணிகளை வன இலாகாவினர் எல்லையிட்டு வருவதால் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதேவேளை, கொக்குத்தொடுவாய் பகுதியில் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் நிமால் சிறிப…
-
- 0 replies
- 467 views
-
-
கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானம் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வதாக ரிசாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பதவி விலகியதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கிழக்கு மாகாண சபையின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் அமீர் அலி நியமிக்கப்பட உள்ளார். …
-
- 0 replies
- 490 views
-
-
தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் வாத, விவாத நிகழ்வொன்றின் போது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட பொதுமகன் ஒருவர், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மிரிஹானை பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அழைப்பை மேற்கொண்டவருக்கு எதிராக அமைச்சர் செய்துள்ள பொலிஸ் முறைப்பாட்டுக்கிணங்க வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர், தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதாகவும் இதனால், தானும் டாக்டர் ரமேஸ் பத்திரணவும் அந்த நிகழ்ச்சியிலிருந்து எழுந்து சென்றதாகவும் அமைச்சர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இருப்பினும், மேற்படி தொலைபேசி அழைப்ப…
-
- 1 reply
- 426 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவே எனது பிரதான எதிரி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்திரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மைத்திரிபாலவை வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சந்திரிக்கா, மைத்திரிபாலவை விடவும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மிகவும் பொருத்தமானவர் என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், கட்சிப் பொறிமுறைமையைக் கொண்ட ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங…
-
- 0 replies
- 836 views
-
-
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் இனந்தெரியாத நபர்களினால் கிழித்து வீசப்பட்டுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 3வது முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு கிழித்து வீசப்பட்டுள்ளன. http://seithy.com/breifNews.php?newsID=122076&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 447 views
-
-
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் மருதனார்மடத்தில் உள்ள விவசாய பயிற்சிக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக நலன்புரி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் மற்றும் வாடகை வீடுக…
-
- 0 replies
- 352 views
-
-
யாழ்.மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வாரத்தை முன்னிட்டு தொழில் முயற்சியாளர்களுடனான ஏற்றுமதி வியாபாரம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று யாழ். ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தொழில்நுட்பத்தின் எற்றுமதி வியாபாரத்தினை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் அவற்றின் ஊடாக இலங்கை அடைந்துள்ள மாற்றங்கள், எமது நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் மட்டத்தில் ஏற்படுத்தப்படும் அறிவு சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் விரிவுரைகள் இடம்பெற்றன. மேலும் இந்த நிகழ்வில் யாழ். மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத்தின் ஏற்றுமதி வியாபார கற்கை நெறியினை பயின்று வரும் மாணவர்கள்,தகவல் தொழில்நுட்ப முயற்சியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். http://onlineuthayan.c…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தோற்கடிக்கும் நோக்கில் வெளிநாட்டுச் சக்திகள் முயன்று வருவதாகக் கூறும் ஆளூம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஒரேநாளில் பெருந்தொகையான அந்நியச் செலாவணி இலங்கை ரூபாவாக மாற்றப்பட்ட விடயம் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறது. இந்தத் தகவலை கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன வியாழக்கிழமை வெளியிட்டார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், சுமார் 25 கோடி இலங்கை ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் ஒரே நாளில் நான்கு தடவைகள் மாற்றப்பட்டுள்ள விடயம் அரசாங்கத்த…
-
- 1 reply
- 361 views
-
-
கொழும்பு-7 இல் பதற்றம் வெள்ளிக்கிழமை, 05 டிசெம்பர் 2014 15:29 மாணவர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு பேரணியினால், கொழும்பு-7, வாட்பிளேஸ் மற்றும் நகர மண்டப பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/135495--7--.html
-
- 0 replies
- 527 views
-
-
ஐஸ்கிறீமில் அரசியல் இல்லை; நல்ல சுகாதாரமே எமது இலக்கு யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமோ அரசியலோ இல்லை நல்நோக்கமே உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 59 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்களுக்கு மாத்திரம் தடைவிதிக்கப்பட்டமை அரசியல் உள்நோக்கம் உள்ளது எனவும் விசாரணை மேற்கொண்டு பாதிக்…
-
- 1 reply
- 412 views
-
-
காரைநகரில் அமைக்கப்பட்டிருந்த வேணன் உவர்நீர்த்தடுப்பணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கையினை எடுக்குமாறு கோரி நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேசத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு தடுப்பணை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. மழை பெய்யத் தொடங்கிய நாள் முதல் இதுவரை காலமும் தேங்கியிருந்த நன்னீர் குறித்த பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள சிலரினால் குறித்த தடுப்பணை உடைக்கப்பட்டமையால் நேற்று முதல் நன்னீர் கடலுக்குள் சென்று கொண்டிருப்பதுடன் நீர்மட்டமும் குறைந்துள்ளது. எனவே சேகரிக்கப்பட்ட நீர் கடலுக்குள் சென்றமையால் எதிர்வரும் ஆண்டு பொதுமக்களு…
-
- 5 replies
- 710 views
-
-
வெள்ளி, டிசம்பர் 5, 2014 - 09:07 மணி தமிழீழம் | சயந்தன் அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்க அவுஸ்திரேலிய அரசு முடிவு! அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டம் நேற்று செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கு ஆதரவாக 34 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் கிடைத்தன. எனவே புதிய விதிகளின்படி தஞ்சம் கோரும் அகதிகள் 3 தொடக்கம் 5 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். அத்துடன் இவர்கள் தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்று பப்புவாநியூகினி, நவ்றூ தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான அகதிகள் அந்நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள…
-
- 3 replies
- 435 views
-
-
குமாரவடிவேல் குருபரன் | K. Guruparan Skip to content Home சுய விபரம் | About ஒளி/ஒலி | Video/Audio நேர்காணல்கள் | Interviews முந்தைய பதிவுகள் சில From the Archives ← வட மாகாண சபை: கடந்து வந்த வருடம் தந்த பாடங்களும் இனிச் செய்ய வேண்டியவையும் தமிழர்கள் பொதுசன வாக்கெடுப்பைக் கோரலாமா? கோருவது எப்படி? Posted on December 4, 2014by rkguruparan (அடையாளம் – கொள்கை ஆய்வுக்கான நிலையத்தினால் ‘தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதில் மக்களின் நேரடி சனநாயகப் பங்கெடுத்தலை சாத்தியப்படுத்தல்: ஸ்கொட்லாந்து, கட்லோனிய பொது வாக்கெடுப்பு அனுபவங்கள் தரும் பாடங்கள்’ எனும் தலைப்பில் 19 நவம்பர் 2014 அன்று யாழப்பாணத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரை தொடர்பில் …
-
- 1 reply
- 721 views
-
-
காங்கேசன்துறை வீதி, யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் வீட்டுக் கழிவுகளைக் கொட்டுவதனால் குறித்த பகுதியில் வசிப்பவர்களும் பயணிக்கும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாநகரசபை எல்லைக்குட்பட்ட குறித்த வீதியின் அருகில் கொட்டப்படும் இந்த கழிவுகளை உண்ணுவதற்காக கட்டாக்காலி நாய்களும் கால்நடைகளும் சண்டையிட்டு கொள்கின்றன சண்டையின் உச்சத்தில் வீதியின் குறுக்காக ஓடி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் நாய்களுக்குப் பயந்தே சென்றுவர வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இதேவேளை மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால் குறித்த கழிவுப்பொருள்களில் நீர் தேங்கி நிற்பதனால் துர்நாற்றம் வீசுவதுடன் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகப் பிரதேச மக்கள்…
-
- 4 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை DEC 05, 2014 | 1:21by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மாகாணசபையின் அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வின் போது, 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான நிதிக்கூற்று அறிக்கையை அவர் சமர்ப்பித்தார். இதன்படி, வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறை மற்றும் மீண்டெழும் செலவுகள் 15,122.4 மில்லியன் ரூபாவாக இருக்கும். இதனை ஈடுசெய்வதற்கு, மத்திய அரசிடமிருந்து 12,800 மில்லியன் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப…
-
- 2 replies
- 450 views
-
-
கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்! யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இராணுவத்தினர்தான் முன்னைய ஆட்சிக்காலங்களிலும் பணியாற்றினார்கள். ஆனால் அவர்களால் சிறப்பாக செயற்பட முடியவில்லை. சரத் பொன்சேகா கூட 38 வருட சேவையை நிறைவு செய்தவர்தான். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் அனைத்தும் சிறப்பாக நடந்தன என கூறியுள்ளார் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச. இலங்கை – இந்திய சமுதாயப்பேரவையின் ஏற்பாட்டில் பாதுகாப்புச் செயலாளருக்கு ஹோட்டல் ஹில்டனில் அளிக்கப்பட்ட விருந்துபசார வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்…
-
- 4 replies
- 982 views
-
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்க்கும் அரசு news ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது. எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும், வாக்குறுதிகளும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும், எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கட்சிகளுக்குள் சிக்கல் நிலவுகிறது என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஓர் ஒப்பந்தத்தையும், ஜாதிக ஹெல உறுமயவுடன் இன்னுமொரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டுள்ளனர். ஸ்திரமான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துகொள்ள முடியாத குழப்பநிலையிலேயே தற்போது எதிரணி இருக்கின்றது. மைத்திரிபா…
-
- 0 replies
- 515 views
-
-
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பாதுகாப்பேன் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தெரிவித்திருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட மறுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு, இது பொதுவேட்பாளர் கூறிய கருத்து என்றும், அதுபற்றி தமிழ்த் தேசியக் சொல்வதற்கு ஒன்றுமில்லை என பதிலளித்துள்ளார். “ஐ.நா விசாரணை பற்றிய விவகாரங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தினால், கையாளப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதம், இதுபற்றிய அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கை குறித்து முடிவெட…
-
- 0 replies
- 424 views
-
-
இரவோடு இரவாக அகற்றப்பட்டது இராமநாதன் சிலை news மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த இராமநாதன் சிலை நேற்று இரவோடு இரவாக வெளிக் கேற்றினைப் பூட்டிவிட்டு பைக்கோ மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் காரணமாகவே அது இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் முன்னிலையில் இந்தச் சிலை நேற்றிரவு அகற்றப்பட்டது. அந்த சிலையை அகற்றுவதற்கு ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அகற்றுவதில் தாமதம் நிலவியது. இந்த நிலையிலேயே நேற்று அது அகற்றப்பட்டது. குறித்த சிலை ஏற்கனவே கால் பகுதியில் உடைந்திருந்தது. அந்தச் சிலை …
-
- 4 replies
- 688 views
-