Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிக்க 35 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைக்கிறது பெப்ரல்! [Monday 2014-11-17 09:00] ஜனாதிபதித் தேர்தலில் 35 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. குறித்த கண்காணிப்பாளர்கள் பல்வேறு நாடுகளின் தேர்தல்களின் போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு நன்கு அனுபவம் பெற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைக்கு பங்களாதேஷ், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இரண்டு வார காலம் இலங்கையில் தங்கியிருந்து தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் ப…

  2. விமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ. 10கோடி நட்டம் திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014 04:40 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில், இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்களால் 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தால் 10கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சுதந்திர ஊழியர்சங்க ஊழியர்கள், 5 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த புதன்கிழமை(05) காலை முதல் சுமார் மூன்றுமணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை சுதந்திர ஊழியர்சங்கத்தைச்சேர்ந்த ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், புதன்கிழமை காலை முதல் விமான நிலையத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது. 10,000 ரூப…

  3. அரசாங்கம்- அமைச்சர்கள்- புலனாய்வாளர்கள்- படையினருடன் இணைந்து மாபியாக்களாகும் தமிழ்அதிகாரிகள் சிலர்: 17 நவம்பர் 2014 கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலையும் துலங்கும் மர்மங்களும்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், தமிழீழ காவற்துறையின் முன்னாள் வீரருமான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலை தொடர்பில் பல முக்கிய தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளது. தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை இவர் துணிந்து செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரம…

  4. யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை(15) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் தற்போது காளான் கொள்வனவுக்குரிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் காளான் உற்பத்தி தொழில்நுட்பம் மிக இலகுவானதாக காணப்படுகின்றது. காளானை உற்பத்தி செய்ய பலர் ஆர்வம் காட்டுவதால் இதற்குரிய பயிற்சிகளை வழங்கும் படி கோரியிருந்தனர். அதற்கமைவாக வருகின்ற 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முழு நாள் பயிற்சி வகுப்பு இடம்பெறும். 50ற்கும் மேற்பட்டவர்கள் இப் பயிற்சி நெ…

  5. அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்! அனந்த கிருஷ்ணன் முன்னை நாள் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சரும் மு.கருணாநிதியின் உறவினரும் தாயாநிதி மாறனுக்கு இந்திய இந்திய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 2 G அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கலாநிதி மாறன் மற்றும் ஆறு பேருக்கு இந்த அழைப்பணையை அனுப்பி வைத்தது. இந்திய நிறுவனமான Aircel இற்கும் மலேசியத் தமிழரான அனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்கும் (Maxis) இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஊழலில் தொடர்பாகவே இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. இந்தியாவின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான CBI இன் விசாரணைகளின் போது கலாநிதி மாறன் மற்ற…

    • 3 replies
    • 1.3k views
  6. இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆயினும், இந்த நடவடிக்கை மாகாணசபை உறுப்பினர்களிடையே குழப்ப நிலையை உருவாக்கும் என்றும், அவ்வாறு வழங்குவதாக இருந்தால் எல்லா உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வழங்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம், எட்டு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படுமானால், அவற்றை உறுப்பினர்கள் யாரும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி சபை உறுப்பினர்களுக்கு மொட்டைக் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வடமாகாணசபை உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்று, பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது, சபையின் 38 உறுப்பினர்…

  7. 3 பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யக்கூடியதை பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் – மாகாண – உள்ளுராட்சி சபைகளையும் கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் TNAயால் ஏன் செய்ய முடியாது? மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்தில் ஜே.வி.பி குதிக்கலாமென்ற சாரப்பட வெளியான செய்தி திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்ட ஒன்றாகும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டில் நிலவிய மோசமான பொருளாதார நிலை மக்களை போராட்டத்திற்கு தள்ளியது. தற்போது அதே போன்று மோசமான பொருளாதார நெருக்கடியினை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அவ்வகையில் மக்களை அணிதிரட்டி அவர்களது உரிமைகளிற்காக ப…

  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நலிவடைந்த, பலவீனமான காரணிகளே அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு காரணமாக இருப்பதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் வடபகுதி மாத்திரமன்றி அனைத்து மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். சிறுவர்கள்கூட கடன்காரர்களாக இருக்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, எம் நாட்டின் சாபக்கேடு. இன்று இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தினை கையாளும் போது, காணி மற்றும் உற்பத்திகள் அனைத்தும் பல்தேசிய கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது. எ…

  9. -எஸ்.தியாகு 'ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள இந்நிலையில் சிறுபான்மை கட்சிகள் யாருக்கு தமது ஆதரவை வழங்குவது என்ற பல்வேறு கேள்விகளுடன் இருக்கின்றார்கள். எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்காக இந்த அரசாங்கம் அதிகளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற செய்ய வேண்டிய தேவை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு' என தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து மலையக மக்கள் முன்னணி எற்பாடு செய்திருந்த கூட்டம் பதுளை, ஊவா மாகாண சபை கேட்போர் கூட மண்டபத்தி…

  10. பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சோபித தேரரை மகிந்த, கோத்த அபய ஆகியோர் வியாழன் இரவு சந்தித்து பேசியதாயும் அதன் பின் தேரர் மெளனம் காப்பதாயும் ஆசுப்பத்திரியில் ஜனாதிபதிக்கு விசுவாசமான ஒரு வைத்தியரின் கண்காணிப்பில் பாதுகாக்க படுவதாயும், தேரரின் விகாரை முன் அமைசர் பாதுகாப்பு பிரிவு நிற்பதாயும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுளது. http://www.sundaytimes.lk/141116/columns/alles-plays-double-game-arranges-meeting-between-president-and-ven-sobitha-128237.html

    • 7 replies
    • 793 views
  11. மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போன்று நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்று கூறிய அவர், தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற நிலைமைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக சனிக்கிழமை அன்று “கைதிகளும் மனிதர்களே” என்ற தலைப்பில் மனித உரிமை டிப்ளோமா மாணவர்க…

  12. இலங்கையில் தனது மண்ணுக்காக போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா சி.வி.விக்னேஸ்வரன் மட்டும் தான். அது போன்று அதிக பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கு விக்னேஸ்வரன் சென்றிருந்தபோது, இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பில், தந்தி தொலைக்காட்சி நிரூபர் கேள்வி எழுப்பியபோதே, சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஈழ போராட்டம் எத்தனை காலமாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்கு தெரியுமா? இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 60 வருடங்களாக போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது …

  13. -செல்வநாயகம் கபிலன் இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டு கார் ஒன்றில் கொழும்புக்கு கொண்டு கடத்தப்படவிருந்த செல்லப்பட்ட 81 கிலோகிராம் கேரளா கஞ்சாப் பொதிகளுடன் சந்தேகநபர்களை இருவரை இளவாலை பகுதியில் வைத்து சனிக்கிழமை (15) இரவு கைது செய்ததாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'மாதகல் துறைமுகம் ஊடாக இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி, அவற்றை கொழும்புக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையொன்றில் குழுவொன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது' என்றார். 'இந்த குழுவினரை கைது செய்வதற்காக, வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில், இளவாலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி டி.கே.எஸ்.ஏ.…

  14. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவு எப்படி அரச ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரியவந்தது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது கருத்தை ஜனாதிபதியிடம் 10 ஆம் திகதியே கையளித்தது. எனினும் அரச ஊடகங்கள் அதனை முழுமையாக 9 ஆம் திகதியே வெளியிட்டுவிட்டன. இதனை சாதரணமாக எடுக்க முடியாது என சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல்ஜெயசூர்ய தெரிவித்தார். ஜனாதிபதி சமர்ப்பித்த கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்றம் மூடிய கதவுகளின் பின்னால் வீடியோ கமெராக்களை பயன்படுத்தி விசாரணை நடைபெற்ற நிலையில் எப்படி இவைகள் அரச ஊடகங்களுக்கு தெரியவந்தன என அவர்கேள்வி எழுப்பினார். - http://malarum.com/article/tam/20…

  15. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படலாமென தெரிய வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களாக ஐவரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். மாதுளுவாவே சோபித தேரர், ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய, அர்ஜுன ரணதுங்க, சந்திரிகா பண்டாரநாயக ஆகியோர் இதிலடங்குவர். இதில் மாதுளுவாவே சோபித தேரர், சந்திரிகா பண்டாரநாயக ஆகிய இருவரும் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதேவேளை கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் அங்கீகாரம் தேவை. ஏற்கனவே ஐ.தே.கட்சியின…

  16. நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சில முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சி இன்னமும் உறுதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்…

  17. கிழக்கு மாகாண முதலமைச்சர் முஹமது நஜீப் அப்துல் மஜீத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இந்தப் பிரேரணையை கிழக்கு மாகாண அரசில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸே கொண்டு வரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்தது. கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை சிறப்பாக கொண்டு நடத்தக்கூடிய திறமை முதலமைச்சரிடம் இல்லை என்பதனாலேயே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுகிறது எனக் கூறப்படுகின்றது. எதிர்வரும் 24 ஆம் திகதி கொண்டு வரப்படும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசின் பங்காளிக் கட்சிகளான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவ…

  18. ஹிரியாலவுக்கும் கனேவத்தைக்கும் இடையில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் வட பகுதிக்கான ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கோட்டை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்தெரிவித்துள்ளது. எரிபொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் நேற்று சனிக்கிழமை மாலை தடம்புரண்டதன் காரணமாக கொழும்பை நோக்கிப் பயணித்த ரயில்கள் யாவும் மஹோவ ரயில் நிலையத்தில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன என்றும், கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடம்புரண்ட ரயிலை அகற்றும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன எனவும், இன்று காலை ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம்அறிவித்துள்ளது. - http://malarum.com/article/tam/2014/11/16/6872/%E0%AE%B5%E0%A…

  19. சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் “பிரதீபா பிரபா” விருது எமது கிராமத்தினைச் சேர்ந்தவரும், வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய ஆசிரியருமான திருமதி லோகேஸ்வரன் - அரியமலர் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த மாதம் உலக ஆசிரியர் தினமன்று கொழும்பு - மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் வைத்து அதிமேதகு பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் இவ்விருது வழங்கப்பட்டது. http://www.velanaiuoor.com/2014/11/school_15.html

  20. சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை பற்றிய தகவல்களை சிறிலங்கா முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று இந்தியா விசனம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் சீனாவின் நீர்மூழ்கிகள் இரண்டு தடவைகள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. முதலாவது தடவை, சீன நீர்மூழ்கி கொழும்பு வந்து சென்ற பின்னர், கடந்த ஒக்ரோபர் மாதம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியும், இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலும் இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்தனர். இதன்போதும், இதற்கு முன்னரும், சீனக் கடற்படைக் கப்பல்களின் வருகைகள் தொடர்பாக தமக்கு முன்கூட்டியே தகவல்களைத் தருமாறு சிறிலங்காவிடம் இந்தி…

  21. இந்தியாவுக்கு இலங்கை ஆயுதங்களை விற்பனை செய்ததா என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகொரளை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தலதா தலதா அத்துகொரளை எம்.பி, இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்விகளை கேட்கின்ற போதும் அவர் பதிலளிப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார். இதனையடுத்தே சபாநாயகர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதிலளிக்குமாறு பணித்தார். http://seithy.com/breifNews.php?newsID=120575&categ…

    • 3 replies
    • 377 views
  22. மன்னாரில் கொலைசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் தனிபட்ட விரோதம் காரணமாக கொலைசெய்யப்பட்டதாக கூறும் இலங்கை காவற்துறை, சந்தேக நபர்கள் 3 பேரையும் கொலை செய்யப் பயன்பட்ட ஆயுதத்தையும் கண்டு பிடித்துள்ளதாக கூறுகிறனர். http://www.sundaytimes.lk/141116/news/3-arrested-in-connection-with-ex-ltte-cadres-killing-in-mannar-128337.html

  23. அரசியல் சாசனம் பற்றி வன்னி, மலையக பொதுமக்கள் கவலைப்படுவதில்லை – பொதுபல சேனா குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு அரசியல் சாசனம் பற்றி வன்னி அல்லது மலையக பொதுமக்கள் கவலைப்படுவதில்லை என பொதுபல சோன இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 17ம், 18ம் மற்றும் 13ம் திருத்தச் சட்டம் பற்றி பொதுமக்கள் பற்றி பொதுமக்களுக்கு பெரிதாக கவலையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன திருத்தங்களை விடவும் பொதுமக்களுக்கு வேறும் பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் வாழ்வது தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை…

  24. மன்னார், வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தனிப்பட்ட குரோதத்தினால் நிகழ்ந்த கொலை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண முன்னரே, சிறிலங்கா காவல்துறை இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறையின் பதில் பேச்சாளர் ருவான் குணசேகர, இந்த வழக்கில், சிறிலங்கா காவல்துறையினர் திருப்புமுனை ஒன்றை எதிர்பார்த்திருப்பதாகவும், அது குற்றவாளிகளைக் கைது செய்ய வழிவகுக்கும். தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. சில பாகங்கள் இல்லாத, ஒரு ரி-56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. அதுவே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.” என்ற…

  25. சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ள நிதி உதவிகளில், 98 வீதமும் கடன்கள் தான் என்றும், வெறும் 2 வீதம் மட்டுமை நன்கொடைகள் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர், சிறிலங்கா அரசாங்கம் சீனாவிடம் இருந்து பாரியளவிலான கடன்களை அதிக வட்டிக்குப் பெற்று வருகின்ற அதேவேளை, சீனா சிறிலங்காவில் பாரிய கருத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சீனாவுடனான சிறிலங்கா அரசாங்கத்தின் இராஜதந்திர உறவுகள்,சிலருக்கு நன்மையளிப்பதாக இருக்கின்ற அதேவேளை இந்த உறவுகளில் வெளிப்படைத்தன்மை ஒன்றைக் காண முடியாதுள்ளது. சிறிலங்காவில் கருத்திட்டங்களின் மூலம் சீன ஆதிக்க நிலை மேலோங்கி வருவது தொடர்பாக புதுடில்லி கவனம் செலுத்திய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.