Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு முயற்சித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷிரோமி பெரேராவிடம் தெரிவித்தனர். இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர்கள் இந்த தகவலை தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவர், இந்த வழக்கில் அரசதரப்பு சாட்சியாக்கப்பட்டவராவார். அவரை இலங்கைக்கு கொண்டுவர சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இந்த வழக…

  2. வெளிவிவகார அமைச்சில் காணப்படும் பலவீனம் மற்றும் குறைபாடுகளால், சர்வதேச அளவில், இலங்கை அபகீர்த்திக்கு உள்ளாகியிருப்பதாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கருத்து வெளியிட்ட அவர், இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு வெளிவிவகார அமைச்சு உரிய முறையில் பதிலளிக்கவில்லை. சட்டத்திற்கு அமையவே அரசாங்கம் போரை முன்னெடுக்க முயற்சித்தது. ஐ.நா அதிகாரிகள் சாட்சியாளர்களாக இருந்தனர். எனினும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று சுட்டிக்காட்ட அரசாங்கம் தவறியுள்ளது. அமைச்சர் விமல் வீரவன்ஸ, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது விமர்சனங்களை …

  3. ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேரடி சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக, "முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், எனக்கும், ஐக்கிய இலங்கை வட்டத்துக்குள், அ முதல் ஃ வரை அனைத்தையும் அலசும், முக்கிய கலந்துரையாடல்" என மனோ கணேசன் தனது டுவீடர் சமூக தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதல்வர் விக்னேஸ்வரனுடனான சந்திப்பில் பல்வேறு பரஸ்பர சமகால முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் உரையாடினோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், நமது ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் பங்களிக்கும் என்றாலும் பொது வேட்பாளர் தொ…

    • 4 replies
    • 583 views
  4. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதவான் நோட்டீஸ்- கொழும்பு, கொம்பனித்தெரு, மோகன் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் தேசிய ஊழியர் சேவைச் சங்கத்தின் இருவருக்கும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களான, ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், அஜித் பெரேரா மற்றும் நலின் பண்டார ஆகியோரை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார். கொழும்பு துறைமுகத்திலுள்ள பாதுகாப்பு கல்லூரியொன…

  5. இலங்கை அரசாங்கத்திற்க்கு நாட்டின் வடபகுதியிலேயோ அல்லது வேறு எந்தப்பகுதியிலோ தனது படையினரை வைத்திப்பதற்கு உரிமையுண்டு. சாதாரண சூழ்நிலைகளில் இது குறித்து எவரும் இது குறித்து கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்கள், விடுதலைப்புலிகளும், அரச படையினரும் வடபகுதியில் கடந்த 25 வருடங்களாக யுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களில் 100.000 பேர்வரை இருதரப்பிலும் உயிரிழந்தனர். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு,யுத்தத்தில் தமது குடும்பத்தவர்களையும்,வாழ்வாதாரத்தையும், சொத்துக்களையும் இன்னும் பெருமளவு விடயங்களையும் இழந்த வடபகுதி மக்கள் அதிலிருந்து மீளவில்லை. கடந்த 5 வருடங்களில் அரசாங்கம் பொதுத்துறையை மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்…

  6. வங்காலையில் குழியில் இருந்து பீறிட்டுப் பாயும் நீரூற்று! – எந்நேரமும் வற்றாமல் பாயும் அதிசயம். [Thursday 2014-10-23 19:00] மன்னாரில், வங்காலை, இரத்தினபுரி கிராமத்தில், சிறிதாக தோண்டப்பட்ட குழியொன்றில் இருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுக் கிளம்பியுள்ளது. வங்காலையூடாக நானாட்டான் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலத்தைப் புனரமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்தே தொடர்ச்சியாக நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. பாலத்தை புனரமைப்பு செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிக்கு அருகாமையில் பரிசோதனைக்காக குழியைத் தோண்டிய போது தொடர்ச்சியாக நீர் பாய ஆரம்பித்தது. நிலத்தடி நீரே ஊற்றாக 24 மணி நேரமும் பாய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் குறித்த…

  7. காணாமற்போனது ரணில் - பிரபா போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதி! [Friday 2014-10-24 09:00] 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதி காணாமற்போயுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2002ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் மூலப் பிரதி அரசாங்க சமாதான செயலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த மூலப் பிரதியே காணாமற்போயுள்ளது. ஆவணத்தில் காணப்படும் உண்மையான விடயங்கள் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால் ஆவணம் தொலைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள…

  8. வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் உள்ள மல்லாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் என்பன கலக்கின்றன என அறியப்பட்ட நிலையில் இந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மல்லாகம் பகுதயில் உள்ள கிணறுகளில கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் என்பன கலப்பது சம்பந்தமாக ஆராயும் கூட்டம வலி.வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில தெல்லிப்பழை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பொது சுகாதார பரிசோதகர்கள் வலி.வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் ஆர்.சஜீவன் மற்றும் கிராம அலுவலர்கள், வெளிக்கள அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். கிணறுகளில் ஒயில் …

  9. சாட்சியங்களை அனுப்பும் கால எல்லையை நீடிக்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் அனந்தி கோரிக்கை! [Thursday 2014-10-23 19:00] ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியங்களை அனுப்புவதற்கான காலஎல்லையை நீடித்து உதவுமாறு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹுசைனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கும் காலஎல்லை இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இந்தநிலையில் குறித்த கால எல்லையை மேலும் ஒரு மாதகாலம் நீடிக்குமாறு கோரியே, வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். சாட்சியமளிப்பவர்களுக்கு அச்சுறுத்தல்க…

  10. சட்ட மா அதிபராக யுவன்ஜன வனசுந்தர நியமனம்:- 23 அக்டோபர் 2014 இலங்கையின் சட்ட மா அதிபராக யுவன்ஜன வனசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 28ம் சட்ட மா அதிபராக யுவன்ஜன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் யுவன்ஜன பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 1979ம் ஆண்டு சட்டத்தரணியாக இணைந்து கொண்ட யுவன்ஜன, 1980ம் ஆண்டில் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கடமையில் இணைந்து கொண்டுள்ளார். யுவன்ஜன, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதவான் எஸ்.ஆர்.விஜயதிலக்கவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112850/language/ta-IN/article.aspx

  11. அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரின் பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள்' ஐரோப்பிய ஒன்றியத்தில் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் புலிகளின் மீதான தடை நீக்கப்படவில்லை. 28 நாடுகளை கொண்ட இந்த ஒன்றிய உறுப்பு நாடுகளை புலித்தடை தொடர்பான ஆவணங்களை முன்வைக்கும்படி நீதிமன்றம் கோரியுள்ளது. இதை வைத்துதான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள். இந்த தீர்ப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் ரணில் விக்கரமசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக கூற…

  12. யாழ் விஜய் ரசிகர்களின் கூட்டம் மடை திறந்த வெள்ளம் போல செல்லா திரையரங்கின் இரு நுழைவாயில்களிலும்!!!.. http://www.jvpnews.com/srilanka/84638.html

    • 4 replies
    • 1k views
  13. யாழ். மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் 79 உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார். தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயேஇவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த வருடத்தில் 79 மீனவர்களும் எதிராக 8 இலட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் மீன் பெருக்கமும் தடைப்படுகின்…

  14. காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால விசாரணை அறிக்கையை 2015 பெப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிடவுள்ளதாக ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். மேற்படி விசராணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்த மாதம் வெளியிடுவதற்கு முன்ன தாக உத்தேசித்திருந்தாலும் அதன் விடயப்பரப்பு உள்ளகப் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் விரிப்படுத்தப்பட்டதாலேயே இடைக்கால அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை முல்லைதீவில் நடைபெறவுள்ள மக்கள் அமர்வு முடிவடைந்த பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படவுள்ளன. இதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியும் பெறப்படவுள்ளது. அதே…

  15. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியை ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடபோவதாக பொன்சேகா ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு வாக்குரிமை இல்லை என்று, சட்ட மா அதிபர் திணைக்களம் தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தது. இதனையடுத்து தன்னுடைய மனைவியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர், தீர்மானித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலிலேயே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சி, பிரதான எதிர்க்கட்ச…

  16. பிரபாகரனைக் கொன்று போரை முடிவுக்குக் கொண்டு வர ஐதேக தீட்டிய இரகசியத் திட்டம்! – அம்பலப்படுத்தினார் சஜித். [Thursday 2014-10-23 09:00] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை கொலை செய்வதற்கு, புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களை வழங்கியதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சூரியவெவ ரன்முதுவெவ என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், போர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீட்டம் தீட்டியது. இதற்காக மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும…

  17. திருச்சி சிறப்பு முகாமில் இருந்து மூன்று மாதத்திற்கு முன்பு விடுதலையான இலங்கையை சேர்ந்த பட்டுகுணராஜ் த\பெ செபமாலை (வயது 50) அவர்கள் 20.10.2014 அன்று மாலை 3 மணிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் (GH) இயற்கை எய்தினார். இவர் கடந்த இரண்டு வருடமாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார் . உடல் நலக்குறைவுகாரணமாக பலதடவை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தும் அகதிகள் தனித் துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் அவர்கள் மறுத்துவிட்டார். பின் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசியதன் பயனால் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியாளர் அனுமத…

  18. தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி வழிபாட்டு நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(22) அலரி மாளிகையில் இடம்பெற்றன. http://tamil.dailymirror.lk/--main/130637-2014-10-22-14-19-27.html

    • 11 replies
    • 1.4k views
  19. நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர்தான் விமல் வீரவன்ச. அத்தகைய ஒரு சீடி குறுவெட்டு புலிகளின் அலுவலகத்தில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றபட்டது என்றும், அது தற்போது தன்வசம் இருக்கின்றது என்றும் அவர் அப்போது சொன்னார். அதன்பிறகு பாராளுமன்றத்தில் அவரை கண்டு நான் அந்த சீடி குறுவெட்டை எனக்கும் காட்டும்படி கேட்டேன். நான் எப்படி நீச்சல் அடித்தேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், கடைசிவரை அப்படி ஒரு குறுவெட்டை எனக்கு அவர் காட்டவில்லை. அப்படி ஒரு சீடி இருக்குமானால், நான் அரசியலில் …

  20. பல நாடுகளில், தற்போது கனடாவிலும் கூட, அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலுக்கெதிராகப் போரிடுவதற்கு அனைவரும் சரிசமமான பங்குதாரர்களாக ஒன்றுகூட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். கனடாவில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று புகுந்து தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். தலைநகர் ஒட்டவாவில் நடைபெற்ற இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/130659-2014-10-23-05-36-59.html

  21. யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இந்நாள் வரையில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாதத்தில் நேற்று 22ஆம் திகதி வரை 142.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிடைத்த 81.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை விட அதிகமாக இருப்பினும், 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கிடைத்த மழைவீழ்ச்சியை விட குறைவானதாக காணப்படுகிறது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 395.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 301.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அத…

  22. இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா இன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்து சமுத்திரத்தில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாகவே, இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை இந்தியா மேம்படுத்தி வருகிறது. இந்தியாவின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா இன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்தநிலையில் இந்தப் பயணத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இந்திய அரசாங்கம் செயற்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. இதற்கிடையில் இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இந்தியா முயற்சிப்பது குறித்து …

  23. புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பாவின் முடிபு அல்ல ! சட்டப்படியே நடைபெற்றது விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் அரசியல் முடிவு அல்ல எனவும் அது நீதிமன்றத்தின் சட்டத் தீர்ப்பு என ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றம், கடந்த 16 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்து, அவர்களின் நிதியை முடக்கிய ஒன்றியம் எடுத்திருந்த முடிவை இரத்துச் செய்தது. எனினும் விடுதலைப்புலிகளின் நிதி முடக்கம் தொடர்பான இரத்து முடிவானது இன்னும் மூன்று மாதங்கள் பேணப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பில் உள்ள ஐரோப்பி…

  24. புலிகள் மீதான தடை– மேல்முறையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை உதவி. [Thursday 2014-10-23 08:00] ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி அளித்த தீர்ப்பு தொடர்பில் விடுவிக்கப்பட்ட அறிக்கைகளையிட்டு, ஆச்சரியமடைவதாகக் கூறியுள்ள இலங்கை அரசாங்கம், இந்தத் தீர்ப்புத் தொடர்பாக மேல் முறையீடு செய்வதற்கு பிரதிவாதிகளுக்கு உதவவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் பிரதிவாதியாக காட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு பற்றிய அறிக்கைகள், பிழையான எடுகோள்களின் அடிப்படையில் அமைந்தவை என வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் பிரதிவாதிக்கு உதவக்கூடிய விடயங்களை கொடுத்து வந்தது. விடுதலைப் புலிகளின் கோரிக்க…

  25. சிக்கலில் மகிந்த அரசு news ஆளும் கட்சியின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குமாறு பொலனறுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ கரலியத்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.