Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘டயஸ்போரா’ யுத்தத்துக்கு தயாராகும் அறிகுறியே புலிகள் மீதான தடைநீக்கம் யுத்தங்களால் பெரிதும் பாதிப்புற்றது பெண்களே; எதிர்கால சந்ததிக்காக நாட்டைப் பாதுகாப்போம் - ஜனாதிபதி புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி சூழலையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்பி வருகின்ற நிலையிலேயே ஐரோப்பிய யூனியன் தற்போது புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இந்த திருப்பம் தொடர்பில் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். எமது அரசியல்வாதிகள் சிலர் ஐரோப்பா விற்கான விஜயத்தினை …

  2. Out of media player. Press enter to return or tab to continue. 'தமிழீழத்தை கைவிடுவது குறித்த ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது' 21 அக்டோபர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:12 ஜிஎம்டி தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே, மிகவும் நியாயமாக தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்று கூறியுள்ள சம்பந்தன் அவர்கள், ஆனால், அதன் பின்னரான படிப்படியான அரசியல் நிகழ்வுகள் காரணமாக ஒன்றுபட்ட இலங்கை…

  3. அமெரிக்காவின் பிரபல பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமாகிய லயனல் ரிச்சி கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது . குறித்த இசை நிகழ்ச்சி இலங்கையின் முன்னணி நிறுவனமான எக்சஸ் இன்டர்நேஷனல் கம்பனியின் இருபத்து ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றது. இலங்கைக்கு முதன்முதலாக வருகை தந்த லயனல் ரிச்சி யின் இசை நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் V.I.Pக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆட்கள் தெரியாமல் பலர் சென்றுள்ளனர் ஜனாதிபதியின் பாரியார் உறவுக் காறர்கள் பிள்ளைகள் என பலரும் சென்றுள்ளனர் அதில் முஸ்லீம் காங்ரஸ் தலைவர் மற்றும் பல அரசியல் பிரபலங்கள் என பலரும் இருட்டில் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். http://www.jvpnews.com/srilanka/8441…

  4. தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு தலைநகர் உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது, ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார்' என்ற வாசகத்துடன் ஒருவகையான சுவரொட்டி உரிமை கோரப்படாத நிலையில் ஒட்டப்பட்டுள்ளது. 'புலி தடை நீக்கியது! பின்னணியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்?' ஏன்ற வாசகத்துடன் மற்றுமொருவகை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு சிலுமின பத்திரிகை உரிமைகோரியுள்ளது. இவ்விரண்டு சுவரொட்டிகளும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் மீதான தடையை கடந்த வியாழக்கிழமை (16), ஐரோப்பிய ஒன…

  5. (மயூரன்) யாழ்ப்­பா­ணத்தில் கடந்த ஞாயி­றன்று காலை பெய்த மழையின் போது நல்லூர் வீர­மா­காளி அம்மன் ஆலய சூழலில் மழை­யுடன் மீன் குஞ்­சு­களும் தரையில் வீழ்ந்­துள்­ளன. ஆலய சூழலில் 30 தொடக்கம் 40 மீன்கள் வரை தென்­பட்­ட­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­தனர். அத்­துடன் மீன்­களில் சில­வற்றை ஆலய வழி­பாட்­டிற்கு வந்த மக்கள் எடுத்துச் சென்­றதை அவ­தா­னித்­த­தா­கவும் தெரிவித்தனர் - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=7372#sthash.0Y2ygL9r.dpuf

  6. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்சவிற்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதான ´பாரத ரத்னா´ விருதுவழங்குவது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு ஜனதா கட்சியின் தேசிய தலைவர் சுப்ரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த காரணத்திற்காக இந்த விருது மகிந்த ராசபக்சவிற்கு வழங்கப்பட வேண்டுமென சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கும் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/news/34727/57//d,article_full.aspx

  7. 30வருடப் போராட்டத்திற்கான பிரச்சினையைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். புனித பாப்பரசரின் வருகையை அரசியலாக்கப்பார்க்கிறார்கள். உலக சமயத்தலைவரொருவரின் விஜயத்தை அரசியலாக்க யாரும் அனுமதிக்கமுடியாது. ஜரோப்பிய ஒன்றியம் புலித்தடையை நீக்கியதற்கு நான்தான் காரணமென ஒரு இணையத்தளம் செய்தியை வெளியிட்டுள்ளது. எனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும்இல்லை. நான் அதுபற்றி கனவில்கூட நினைக்கவில்லை. அங்கு இது தொடர்பாக வழக்கு வைத்தது கூட எனக்குத் தெரியாது. வெறும் ஊகத்தில் எழுதுகிறார்கள். இவை இன்னுமின்னும் இடைவெளியை அதிகரிக்கத்தான் உதவுமே தவிர பிரச்சினைகளைத் தீர்க்க ஒருபோதும் உதவாது. நல்ல சிந்தனைகள் செயற்பாடுகள்எப்போதும் நன்மையில்…

  8. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. செயற்பாட்டு அரசியலில் களமிறங்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேர்தலில் நிச்சயமாக போட்டியிடப் போவதாகவும் மக்கள் இதற்கு ஆயத்தமாக வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் பொதுபல சேனா இயக்கத்தின் பௌத்த பிக்குகள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது. மாகாணசபைகளிலோ அல்லது பாராளுமன்றிலோ பொதுபல சேனா பிக்குகள் அங்கம் வகிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் ஆயத்தப்படுத்தப்பட்டு வருவதாக கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசாங்கத்தின் ஆதரவு சக்த்தியாக இருந்த ஹெல உறுமயவும் ம…

  9. வட மாகாணசபையின் ஆலோசனைகளைப் பெறாது கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப் பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது சட்டத்துக்கு முரணானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அரச காணிகளை பராதீனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்ற போதிலும், அவ்விடயத்தில் குறித்த மாகாணசபையின் ஆலோசனையைப் பெற்றே அதனை மேற்கொள்ள வேண்டும். எனினும், கிளிநொச்சியில் காணி உறுதி வழங்கலின்போது சட்டம் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. வடமாகாண சபையிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டமூலம் இங்கு சமர…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியானதல்ல என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அரசியல் ரீதியாக தீர்மானிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்மானமானது நீதிமன்றின் தீர்மானம் எனவும், சட்ட ரீதியானது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு தொடர்பிலான புரிதல் மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பானது முழுக்க முழுக்க ஓர் சட்ட ரீதியானது என குறிப்பிட்டுள்ளது, அரசியல் பொறிமுறைமையும், நீதிமன்றப் பொறிமுறைமையும் தனித் தனியாக இயங்குவதே ஆரோக்கியமான …

  11. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கொழும்பு:- இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணையாளர்களிடம் தன்னிடமுள்ள வீடீயோ ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்களையும் தான்சேர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். என்னிடமுள்ள, ஆதாரங்களை ஐ.நா சர்வதேச விசாரணைக்ழுவிடம் வழங்குவதற்க்கு நான் தயாராகவுள்ளேன், இது குறித்து நான் மகிழ்ச்சி கொண்டுள்ளேன், விரைவில் நான் அதனை செய்யவுள்ளேன், இது நேர்மையான சர்வதேச விசாரணை , எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதிநடவடிக்கைகளுக்குவழிவகுக்க கூடும், எமது வீடீயயோக்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை என எம்மை விமர்சனம் செய்யும் இலங்கை அரசாங்கமும், அதன் இராணுவமும் குற்றம்சாட்டிய …

  12. மனைவி அணிந்திருந்தாரா? அல்லது எங்கேனும் அடைவு வைத்திருந்தாரா? சுமந்திரன் கேள்வி- ஜனாதிபதி மஹிந்தவினால் கிளிநொச்சியில் வைத்து பொதுமக்கள் சிலரிடம் மீளளிக்கப்பட்ட தங்க நகையானது இறுதி யுத்;தத்தில் அவரால் களவாடப்பட்டதா? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாயக்; கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கே இவ்வாறு குற்றஞ்சாட்டிய அவர் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்து ஜந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவர் அந்த நகைகளினை எங்கு வைத்திருந்தார் என்பதை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அந்த நகைகளினை…

  13. ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் திருமணம் மிக எழிமையாக நடத்தப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.தே.கவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் மற்றும் பா.உ கரு ஜெயசூரிய ஆகியவர்கள் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடும் கொழும்புத் தகவல்கள் அரச தரப்பு தொடர்பில் தகவல்கள் எதையும் குறிப்பிட வில்லை. : http://www.canadamirror.com/canada/32820.html#sthash.lV9BAFPY.dpuf

    • 0 replies
    • 399 views
  14. மகிந்த ராஜபக்ஷவினால் மூன்றாம் தவணைக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. இதற்கான காரணத்தை சரியான தருணம் வரும் போது அறிவிக்கவிருப்பதாக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறி இருக்கிறார். ஏற்கனவே இரண்டு தவணைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்று சிறிலங்காவின் அரசியல் அமைப்பை மகிந்தராஜபக்ஷ மாற்றி அமைத்தார். எனினும் அவர் தமது இரண்டாவது தவணையின் போதே அவர் இதனை மாற்றி அமைத்த நிலையில், மூன்றாம் தவணைக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதியை இழந்துள்ளதாக சரத் என் செல்வா முன்னதாக அறிவித்திருந்தார். இதனை சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கமும் உறுதி செய்திருக…

  15. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் இலங்கைக்கு இன்னமும் வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணி்ப்பாளர் சத்யா ரொட்ரிகோ தெரிவித்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனவே இந்திய பிரதமர் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் செய்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு எந்த விடயத்தையும் இலங்கைக்கு இன்னும் வழங்கவில்லை. தகவல்கள் வெளிவந்ததும் நாங்கள் அறிவிப்போம் என்றார். இலங்கைக்கு இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர…

  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இலங்கை துறைமுக அதிகாரிகாரசபையின் பணிகளை பார்வையிடும் நோக்கில் அங்கு செல்ல முயன்ற ஐக்கியதேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் வளங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்வதற்காக அதிகார சபையின் பயிற்சி கல்லூரி அமைந்திருக்கும் பகுதிக்குள் செல்ல முயன்ற வேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கும்பலொன்று தங்கள் மீது கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டதாகவும்,வாகனங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது நாடாளுமன்ற …

  17. குளோபல் தமிழச் செய்தியாளர்:- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்படுவதனை அரசாங்கம் விரும்பியதாக அரசியல் ஆய்வாளர்களை ஆதாரம் காட்டி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நிதிமன்றத்தினால் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இந்த தடை நீக்கத்திற்கு எதிராக அரசாங்கம் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அரசாங்கம் இவ்வாறு புலிகளுக்கு எதிரான தடையை பெரிதுபடுத்தவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்குவது குறித்து இலங்கை ராஜதந்திர ரீதியில் எவ்வித முனைப்புக்களையும் எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம்…

  18. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர் (வயது 57), பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர், கனடாவை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு செல்வதற்கு முயன்றபோதே அரச புலனாய்வு பிரிவினரால்; தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று செய்தி தெரிவிக்கின்றது. யாழ்ப்பாணம், சாவக்கச்சேரியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை 1மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்த அவர், அதிகாலை 4.45க்கு பயணிக்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 683 விமானத்தின் மூலம் டோஹா ஊடாக கனடா…

  19. மகாராஜாவோ, மக்களோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் உரிமைக்கு உத்தரவாதம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சமூகத்துக்கு தொழில் வாய்ப்புகள் செய்து கொடுக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் முஸ்லிம்களின் வாழிடங்களில் அபிவிருத்தி ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் நாட்டின் நீதி அமைச்சர் என்ற உயர் கௌரவமும் மதிப்புமிக்கதுமான உயர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருப்பதில் அலாதி பிரியம் கொண்டவராகி விட்டார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்! நேரத்துக்கொரு கதை, இடத்துக்கொரு கதை, ஜனாதிபதி முன் ஒரு கதை, மக்கள் முன் ஒரு கதை, சரியோ பிழையோ எல்லாக் கதைகளுமே சரியானது என வாதிடக்கூடிய திறமையும் மொழியாற்றலும் சட்டப் பின்னணியும் கொண்ட நவ…

  20. மன்னார் நுழைவாயிலில் இராணுவத்தின் மரக்கறி விற்பனை நிலையம்- மருந்து தெளிக்கப்படுவதாக முறைப்பாடு மன்னார் நுழைவாயிலில் படையினர் கடந்த டிசம்பர் மாதம் மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றை திறந்து குறைந்த விலையில் மரக்கறிவகைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மன்னார் மரக்கறி விற்பனையாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். மன்னாரிலுள்ள வர்த்தகர்கள் தம்புள்ள உள்ளிட்ட இடங்களில் மரக்கறிகளை கொள்வனவு செய்தே மன்னாரில் விற்பனை செய்து வருகின்றனர், குறிப்பாக இடவாடகை,வரி,செலவுகள் என்பவற்றை கருத்தில் கொண்டே விலைகளை தீர்மானித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் படையினர் திறந்துள்ள மரக்கறி நிலையத்தில் மிகவும் மலிவ…

  21. ஜனாதிபதி தேர்தல் விவகாரம்: பல்முனை சந்திப்புகள் சூடுபிடிப்பு அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுடைய பங்காளிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்தனியாக சந்தித்துவருகின்றார். இதன் ஒரு கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக…

  22. ஜனாதிபதி தேர்தல் ஜனவரியில் நிச்சயம் நடக்கும்: ரம்புக்வெல ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருட ஜனவரியில் நடைபெறுமென நேற்று திங்கட்கிழமை(20) உறுதிப்படுத்தியுள்ள அரசாங்கம், அதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்குமாறு கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் தேர்தலில் இன, மத வேறுபாடுகளை மறந்துவிட்டு தேசிய நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றும் ரம்புக்வெல கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கிலேயே தமிழீழ விடுதலைப்புலிக்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு …

  23. ரணிலுக்கு மனோ கடிதம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் என்று குறிப்பிட்டு இன்று திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலையக மக்களுக்கு 50,000 வீடுகளை கட்டி தருவதாக, கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் போது நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். அதற்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தோட்டத்துறை தரிசு நிலங்களை தொழிலாளர் குடும்பங்களுக்கு குறிப்பாக, தோட்டத்துறை …

  24. இலங்கை பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவுஸ்திரேலிய எச்சரிக்கை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 21 அக்டோபர் 2014 இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாடடுப் பிரஜைகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து எதிர்வு கூற முடியாத நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. வடக்கிற்கு வெளிநாட்டவர்கள் பயணம் செய்வது தொடர்பில் கடந்த 15ம் திகதி இலங்கை அரசாங்கம் வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளின் பின்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடவுச் சீட்டுடையவர்கள் இலங்கையின் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது பாதுகாப்பு அமைச்சின்…

  25. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்ற பிரேரணை வடக்கு மாகாணசபையில் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் தமது உறுப்பினர் பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 'தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இங்கு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும், வட மாகாணசபை அது தொடர்பான தனது பிரேரணையை கடந்த ஐந்து மாதங்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது என்று சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியிருக்கின்றார். 'இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை நடத்திவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.