ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
மடு பிரதேசத்தில் சூரிய சக்தி மூலம் ஒளிரும் வகையில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகள் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனிலால் உத்தியோக பூர்வமாக திறந்து மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். வரப்பிரகாசம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.பீட்டர்,எம்.ராசசிங்கம் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். இத்திட்டத்தின் மூலம் மின்சார வசதிகள் அற்ற கிராமங்களான தட்சனா மருதமடு, கீரி சுட்டான், முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் எனபதும் குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=119893512604876007
-
- 2 replies
- 487 views
-
-
தமிழர்கள் மீது இராசயன குண்டை பயன்படுத்தினோம் - இலங்கை இராணுவத்தின் வாக்குமூலம் https://www.facebook.com/video/video.php?v=10203273912746866
-
- 2 replies
- 578 views
-
-
இந்த இணைப்பில் video உள்ளது. யாராவது நேரடியாக யாழில் இணைத்து விடுங்கள். http://nofirezone.org/jeyakumari
-
- 1 reply
- 525 views
-
-
கூட்டமைப்பை பதிவு செய்யப்போவதில்லை – லண்டனில் மாவை! “தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்” இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விருந்துபசார நிகழ்வொன்றின் போது தெரிவித்தார் என லண்டன் செய்திகள் தெரிவித்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று முன்தினம் லண்டன் சென்றார். அங்கு நடைபெற்ற இராப்போசன விருந்துபசார நிகழ்விலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார என லண்டன் செய்தகள் தெரிவித்தன. ‘ரெலோ’ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தங்கள் இயக்கத்தை கலைக்கப் போகிறார்கள் எனக் கூறியி…
-
- 5 replies
- 949 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்துக்கள், எம்மை வன்முறையாளர்களாக சித்திரிக்கும் முயற்சியா? என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றிருந்தது. இதன்போது கூட்டமைப்பிலுள்ள முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்தியங்கமுடியாது. என முதலமைச்சர் கூறியிருக்கும் கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையி…
-
- 1 reply
- 549 views
-
-
தென்மராட்சி பளை, வேம்பொடுகேணிப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்தார். இன்று சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் இருப்பு கேகரிப்பதற்காக சென்றபோது மிதிவெடியில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் பாலாவி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த ஹலோரஸ்ட் பணியாளரான 33 அகவையுடைய டி.நாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/news/34323/57//d,article_full.aspx
-
- 0 replies
- 359 views
-
-
சிறிலங்காவின் மீனவர்களுக்கு சொந்தமான படகு ஒன்று தமிழகத்தின் தங்கச்சிமடம் கடற்பரப்பில் கரையொதுங்கி இருக்கிறது. இதில் இருந்து இரண்டு பேர் தப்பி சென்றதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். கியு பிரிவு காவற்துறையினர் படகினை மீட்டுள்ளனர். எனினும் அதில் பயணித்த இருவர் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது வடபகுதியில் இருந்து தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/34332/57//d,article_full.aspx
-
- 0 replies
- 536 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் எல்லைப்புற கிராமங்களில் இராணுவ ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பட்டிப்பலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் தாம் அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்ததாகவும், இதன் போது அங்குள்ள மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுகின்றமை மற்றும் சிங்கள குடுயேற்றம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தம்மிடம் முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்த பின்னர், சிறிலங்காவின…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழம் அல்ல என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர் சர்வதேச தொடர்பாளராக இருக்கின்ற நிர்மலன் அவர்கள் உரையாற்றியது தொடர்பான சர்ச்சைக்கு பிரித்தானியா தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.ரவிக்குமார் அவர்கள் தீபம் தொலைக்காட்சி நிகழ்காலம் நிகழ்ச்சிக்கு வழங்கிய கருத்து. ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ தனித்தமிழீழம் என்கின்ற இலட்சியத்தைக் கைவிடுமாறு கோர எந்தவித உரிமையும் கிடையாது.அதிலே உறுதியான நிலைப்பாட்டில் பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளது. https://www.facebook.com/video/video.php?v=1386622014961061
-
- 0 replies
- 356 views
-
-
இவ்வாறு தெரிவித்தார் கனடா நாட்டில் இருந்து வருகை தந்த சீ.ஐ.பீ.சீ வங்கியின் முகாமையாளரும், பிரபல எழுத்தாளரும், கலைஞருமான திரு.பரமானந்தம் ஸ்ரீஸ்கந்தன். நல்லூர், அரியாலை சயன்ஸ் அக்கடமியின் பரிசளிப்பு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், இன்றைய மாணவச் சமூகத்திற்கு விஞ்ஞான தொழிநுட்ப ரீதியிலான பல்வேறு வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. அவற்றை உலக மயமாக்கலுக்கு ஏற்ப அவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்தல், வயது முதிர்ந்தவர்களை மதித்தல் என்பதெல்லாம் எமது வாழ்க்கையின் முன்னேற்றப் படிகள். அவையெல்லாம் எமக்குக் கிடைக்கும் அருளாசிகள். நாம் கற்கும் காலங்களில் ஊ…
-
- 0 replies
- 181 views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது கப் ரக வாகனத்திற்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு 500ரூபாய் போலி தாள்கள் இரண்டை வழங்கியதாக கூறப்படும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு பிரதேசத்தைச்சேர்ந்த 30 வயதான ஒருவரையே நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவரிடமிருந்து 500 ரூபாய் போலி தாள்ளொன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். http://www.pathivu.com/news/34330/57/500/d,article_full.aspx
-
- 0 replies
- 268 views
-
-
மன்னார் நீதிமன்றம் உத்தரவிடாத நிலையில் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத சடலம் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக குறித்த சடலம் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் வங்காலை கடற்படை முகாமிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் கடந்த 03-09-2014 அன்று சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியது.குறித்த சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி தே.பி.சிந்தாத்துரை குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்காக மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் இரண்டு வாரங்களுக்கு வைக்குமாறும் அடையாளம் காணாது விட்டால் சடல…
-
- 0 replies
- 342 views
-
-
அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர்,யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளையில் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி, நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குறியது என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, மேல் நீதிமன்றில் வாதிட்டார். யாழ். அச்சுவேலி வடக்கு அச்சுவேலியை பிறப்பிடமாகக் ;கொண்டவரும் வடமராச்சி கிழக்கு மருதங்கேனியில் கிராம சேவை உத்தியோகத்தராக கடமைபுரிந்த நாகலிங்கம் மதனசேகர் என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு வாதிட்டார். 2008ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் மாதம் 16ஆம் திகதி, கொழும்பு ப…
-
- 0 replies
- 481 views
-
-
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விசேட குழு ஒன்றை உருவாக்கவிருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கொள்ள முடியாது. அவர்கள் தமிழ் மக்களையும், உலகத்தையும் ஏமாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக, அரசாங்கத்துடனும், ஏனைய தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விசேட குழு ஒன்றை உருவாக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக எதிர்கட்சி மாத்திரம் இன்றி, ஆளும் கட்சியிலும் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் கூறியு…
-
- 0 replies
- 307 views
-
-
சிறிலங்கா விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை அனைத்துலக சமூகத்திற்கு கிடையாது என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். புனித பாப்பரசரைச் சந்திக்க இத்தாலி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு சிங்கள மக்களைச் சந்தித்து உரையாற்றும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். அனைத்துலச நாடுகளில் சில நாடுகள் சிறீலங்காவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது. ஆகையால், உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்…
-
- 0 replies
- 248 views
-
-
இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து, அங்குள்ள அரச சார்பற்ற அமைப்பான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பெரும் கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களுக்கான மொழிபெயர்ப்பின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், சாட்சிகளுக்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்கிடமாக இருப்பதாகவும், விசாரணையில் கேட்கப்படும் கேள்விகள் சில பதில்களை நிர்ணயித்து விட்டு அதனை பெறும் நோக்கில் கேட்கப்படுவது போல இருப்பதாகவும், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பைச் சேர்ந்த பாக்கியஜோதி சரவணமுத்து,…
-
- 0 replies
- 249 views
-
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை சர்வதேசத்துக்கு கிடையாது! – என்கிறார் ஜனாதிபதி மஹிந்த [saturday 2014-10-04 19:00] இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இத்தாலியில் இலங்கை மக்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது. உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை…
-
- 0 replies
- 175 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக வடக்கில் வாழும் சிங்கள பௌத்த பெண்ணொருவர் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், நாவற்குளி மகா வித்தியாலத்தில் சிங்கள மொழி பாட ஆசிரியையாக பணியாற்றும் பள்ளியகுருகே ஆஷா தமயந்தி என்ற சிங்கள பெண்ணே இவ்வாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரே சிங்கள கிராமமான நாவற்குளியில் ஆஷா தமயந்தி வசித்து வருகிறார். வட மாகாணத்தில் முதல் சிங்கள சமாதான நீதவான் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை நீதியமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. http://www.nilavaram.com/news/world-news/srilankan-news/35729-2014-10-04-09-35-08
-
- 3 replies
- 621 views
-
-
பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கான விஜயத்தை ஒத்தி வைக்க வேண்டுமென சமூகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திடீரென ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், பாப்பாண்டவரின் விஜயம் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளது. பாப்பாண்டவரின் விஜயத்திற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அது மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் அமைந்துவிடும் என சுட்டிக்காட்டியுள்ளது. பாப்பாண்டவரின் இலங்கை விஜயத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சார உத்தியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் தோதல்கள் நடத்தப்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக…
-
- 0 replies
- 206 views
-
-
மண்டூர் நிருபர்: சமம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழாவின் இறுதிநாளான இன்று சரஸ்வதி பூசை நடாத்துவதற்காகவேண்டி இந்து சமயத்தினைச்சேர்ந்த ஒவ்வொரு உத்தியோஸ்தர்களிடமிருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு விழாநடத்துவற்காகவேண்டி மண்டபத்தினை கேட்டபோது இங்கு இவ்வாரான பூசைகள் செய்யமுடியாது என பிரதேச செயலாளர் மறுத்துள்ளதாக இங்கு தொழில் புரியும் உத்தியோஸ்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தாங்கள் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இவ்வாண்டு சரஸ்வதி பூசை செய்யவேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட இந் து சமயத்தினை சேர்ந்த உத்தியோஸ்தர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு பூசை செய்வதற்கான மண்டபத்தினை கேட்டபோது அதனை தர முடியாது என பிரதேச செயலாளர் மறுத்துவிட்டார். - http://thinakkural.lk/artic…
-
- 6 replies
- 589 views
-
-
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்தால் நாட்டின் தலைமையைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம்! – என்கிறார் சுமந்திரன். [saturday 2014-10-04 08:00] தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்தால் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்ற சோபித தேரரின் கருத்தில் உண்மை இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர் என்று கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே சுமந்தி…
-
- 1 reply
- 604 views
-
-
வடக்குக்கும், தெற்குக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேலும் வலுவூட்ட யாழ்தேவி ரயில் மாத்தறைக்கு வரவேண்டுமெனவும் ருஹுணு குமாரி ரயில் யாழ்ப்பாணம் வரை செல்லவேண்டுமெனவும் கரையோர ரயில் பயணிகள் சங்கம் ரயில்வே திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தச் சங்கத்தின் தலைவரான குணபால வித்தாரணவின் கையொப்பத்துடனான இந்தக் கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதிக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும், ரயில்வே பொது முகாமையாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் தலா 60 ஆசனங்களைக் கொண்ட எட்டு பஸ்கள் தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்கின்றன எனவும் அவற்றின் மூலம் நாளாந்தம் சுமார் 400 – 450 பயணிகள் இரு வழிகளிலும் பயணித…
-
- 4 replies
- 741 views
-
-
புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை மகிந்த ராஜபக்ச சந்திந்துள்ளார். இன்று வத்திக்கானில் அமைந்துள்ள பாப்பரசரின் வாசல் ஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கான பாப்பரசரின் வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை மகிந்த ராஜபக்ச பாப்பரசரிடம் கையளித்துள்ளார். இதேநேரம் பாப்பரசருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பாப்பரசரின் இலங்கைப் பயணம், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. பாப்பரசரின் இலங்கைப் பயணம் நீதியையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக உழைப்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பரசருடனான சந்திப்பில், மகிந்த தம்பதிகளு…
-
- 1 reply
- 936 views
-
-
வீ.ஆனந்தசங்கரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புக் கோரும் வகையிலான கடிதம் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆதந்தசங்கரி எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, தற்போது நான் வகிக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவி திரு..அ.அமிர்தலிங்கம் அவர்கள் 1989ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக வகித்து வந்ததாகும். அகிம்சையையும், சகிப்புத்தன்மையையும் மிக வலுவாக முன்னெடுத்தமைக்காக யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் 2006ம் ஆண்டுக்கான ´மதன்ஜித்சிங்´ விருது எனக்கு கிடைக்கப்பெற்றது. 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வகித்து வந்துள்ளேன…
-
- 2 replies
- 581 views
-
-
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் தான் எந்தகட்சியென்பது தெரியவில்லையென கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன். எனினும் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் என்னால் சேர்ந்திருக்கமுடியாது. ஆகவேதான் நான் கொள்கை ரீதியில் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார். அவ்வாறானால் வடமாகாணசபை தேர்தலின் போது அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து வந்தால் போட்டியிடுவதாக கூறி போட்டியிட்டிருந்தீர்களேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வரன் நீங்கள் ஆட்களைக் கொலைகள் செய்தவர்கள். உங்களுடன் கூட்டு சேரமுடியாதெனவும் தெரிவித்தார். யாழில் நேற்ற…
-
- 2 replies
- 481 views
-