ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
அதிகாரங்களுக்கும் ஆட்சிகளுக்கும் உட்பட்ட தமிழர்கள் தமக்கென்று ஒரு வெளியுறவுக்கொள்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தி ஒன்றிற்கு கருத்துரைத்துள்ள அவர், நாடு ஒன்றை கொண்டிருக்காத போதும் ஒரு தேசியம் என்ற அடிப்படையில் வெளியுறவு கொள்கை ஒன்றை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலக அரசியல் நிலை மாறிவருகின்ற நிலையில் தமிழகத்துடன் ஈழத் தமிழர்கள் ஒத்துழைப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை காங்கிரஸை விட பாரதீய ஜனதாக்கட்சி தேசியத்துவத்துடன் கூடிய வகையில் தமிழர் பிரச்சினையை பார்க்கிறது என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார். இந்தநில…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 40,000 முதல் 50,000 அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஐ.நாவின் இரண்டு பிரகடனங்களில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை, அதன்படி தொடர்ந்து ஐ.நாவுடன் இணைந்து செயற்பட்டுவருவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைமை இயக்குநர் கே.கமகே தெரிவித்தார். இதன்படி, இலங்கைக்குள் வருகின்ற வர்த்தக சரக்கு கொள்கலன்களில் தேடுதல் நடத்தும் சிறப்பு வேலைத்திட்டமொன்றை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே, இந்திய - இலங்கை பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளிடையே அண்மையில…
-
- 0 replies
- 330 views
-
-
வாழைச்சேனை - மீராவோடை பவுசி மாவத்தையில் குடும்பஸ்தஸ் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக பொலனறுவை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று பகல் அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காவத்தமுனை பாடசாலை வீதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் நாசர் (வயது 38) என்பர் மீராவோடை பவுசி மாவத்தை வீதியில் வைத்து ஐந்து பேர் சேர்ந்து தாக்கியதில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்தார். மீறாவோடை பவுசி மாவத்தையில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்கு வந்து விட்டு அருகில் உள்ள சில்லறைக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போதே குறித்த சந்தேகநபர்கள் கோடாரிப் பிடியால் தாக்க…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி எமது தமிழீழ கொள்கையில் வழிதவறி போகாமல் தொடர்ந்து பயணிப்போம் என தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பின் செம்பியன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் http://www.pathivu.com/news/33405/57//d,article_full.aspx
-
- 0 replies
- 527 views
-
-
புலிப்பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் அவா்கள் தெரிவித்துள்ளார். கோவையில் வைத்து அவா் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.. தமிழ் தேசிய கூட்டமைப்பினை சோ்ந்தவா்கள் இந்திய பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்கள் தமிழா்களின இன கலாசார அடையாளங்கள அழிக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள் அதற்கு சிறீலங்கா இனபிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று மோடி அவா்கள் தெரிவித்துள்ளார். அது எத்தகைய அரசியல் தீர்வு என்று அவா் விளக்கவேண்டும் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழா்களிடையே எந்த வகையான அரசியல் தீர்வு காணவேண்டும் என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இத…
-
- 0 replies
- 400 views
-
-
ஐநாவின் பாதுகாப்பு சபையினை நேரடியாக விமர்சித்த ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி.பிள்ளை! ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக்கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார். சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம்பட்சமாக கருது செயற்பட்டதாக அவர் விமர்சித்திருக்கிறார். தற்குக் காரணம், ஐநா பாதுகாப்புச்சப…
-
- 0 replies
- 367 views
-
-
ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்:- 24 ஆகஸ்ட் 2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கூட்டத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் 69ம் பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். ஜப்பானிய பிரதமரும், சீன ஜனாதிபதியும் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னரே ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக கடந்த தடவை நடைபெற்ற ஐக்…
-
- 5 replies
- 415 views
-
-
சிறீலங்காவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டு வந்த பாக்கிஸ்தானியா் கைது! திகதி: Aug 24, 2014 | இணைத்தவர்: மாலதி சிறீலங்காவில் அதிகளவான போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டு வந்து காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முதன்மையான சந்தேக நபா் நாபரான பாக்கிஸ்தானியா் ஒருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். சிறீலங்காவின் ஒருகொடவத்தை மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் தொடர்பிலான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதுடன், காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கராச்சியில் இருந்து நேற்றிரவு அவர் கொழும்பை சென்றுள்ளாா் கட…
-
- 0 replies
- 256 views
-
-
ஆட்சி மாறினாலும் இந்தியாவின் கொள்கையில் மாற்றமில்லை! - என்கிறார் டாக்டர் சாரி ஷேசாத்திரி [sunday 2014-08-24 09:00] இலங்கையில் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு குறித்த பேச்சுக்களை முன்னெடுக்கும்படி இந்தியப் பிரமதர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய அரச தரப்பு தெரிவித்திருப்பது, ஆட்சி மாறினாலும் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையில் மாற்றமில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளிவிவகாரத்துறை கொள்கைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாரி ஷேசாத்திரி ராமானுஜன் தெரிவித்திருப்பதாவது- இந்திய அரசு மாறிவிட்டது என்பதற்காக இலங்கை குறித்த வெளிவிவகார…
-
- 4 replies
- 385 views
-
-
23.08.2014 சனிக்கிழமை மiலை 6 மணிக்கு சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு 550 ற்க்கு மேற்ப்பட்ட மக்களோடு மிக எழுச்சியோடு நடைபெற்றது. தமிழ் இனத்தின் தேசவிடுதலைக்காக தங்கள் இனிய உயிர்களை அற்பணித்த மாவீரச்செல்வங்களுக்கு சுடர்வணக்கம் ஏற்றப்பட்டு அகவணக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிறேம்கோபாலோடு இணைந்து ஒஸ்லோ கலைஞர்கள் வழங்கிய மாவீரர் வணக்க நடனம், டென்மார்க் கலைஞர்கள் வழங்கிய நடனம், பாரிஸ் நகரில் சதிகாரர்களின் துப்பாக்கி சூட்டில் வீரமரணத்தை தழுவிய கேணல் பருதி அவர்களின் நினைவு நூல் மற்றும் நோர்வேயில் வாழ்ந்து வருகின்ற இளம் படைப்பாளி மாளவி சிவகணேசனின் என் தாய்நாட்டில் நான் முகவரி அற்றவளா என்ற நூல் வெளியீடுகளும், இதனைத்தொடர்ந்து பிறேம்கோபால் கீர்த்தி பிறேம்கோபால் ஒஸ்லோ கலைஞர்கள் இணைந…
-
- 0 replies
- 691 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த சுப்ரமணியம் சுவாமி, இலங்கை அரசாங்கத்தினாலேயே மூக்குடைபட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதிக்கு அவர் காட்டிய விஸ்வாசத்தின் காரணமாக, அவர் கூறிய விடயங்களுக்கெல்லாம் இலங்கை அரசாங்கம் தலையாட்டும் என்று நம்பி இருந்தார். இந்த நிலையில் தமிழக மீனவர்களுக்கு தீர்வினை வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த சுவாமி, மூன்று வருடங்களுக்கு வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரி இருந்தார். ஆனால் இந்த யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன் சுப்ரமணியம் சுவாமியின் இந்த யோசனையை இராஜதந்திர யோசனையாக கணிப்பிட முடியாது என்றும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது. http:…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு. இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தில் ''நாய்க்கடிக்கு'' உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால், அவர்களைக் கவனித்து சிகிச்சையளிப்பதற்கென விசேட பிரிவொன்று யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாத்திரம் ''நாய்க்கடிக்கு'' உள்ளாகியவர்கள் நாளாந்தம் 40 பேர் சிகிச்சைக்கு வருவதாக அந்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா கூறுகின்றார். பொதுவாக ''நாய்க்கடிக்கு'' உள்ளாகி வருபவர்களுக்கு விபத்து பிரிவு விடுதியிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அங்கு விபத்துக்களில் காயமடைந்து வருபவர்களை முதலில் கவனி…
-
- 2 replies
- 610 views
-
-
இராவண மன்னரை சிங்களர் என்று கருதி வரும் சிங்கள இனவாதிகள், அவர் குறித்து ஆய்வுகளை ஆரம்பித்திருக்கின்றன. இலங்கை தொல்பொருள் திணைக்களம் இந்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. அண்மையில் அல்தமுல்லை பகுதியில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொல்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இவை இராவணர் காலத்துக்கு உரியவை என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் இராவணரின் இரும்பு பயன்பாடு தொடர்பில் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/33401/57//d,article_full.aspx
-
- 0 replies
- 421 views
-
-
-பொ.சோபிகா வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணம் வந்து நகைகளை பறிகொடுத்தவர்கள் எவ்வளவு நகைகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஹான் டயஸ் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களின் நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அண்மைக் காலங்களில் அதிகமாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட நகைகள் 35, 40 பவுண்களுக்கு அதிகமாகவே இருப்பதாக முறைப்பாடுகளில் நகை உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன. இருந்தும், வெளிநாட்டிலிருந்து வருபவர்…
-
- 3 replies
- 510 views
-
-
மோடியுடனான சந்திப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக பிரயோகிக்க உத்தரவிடுமாறு கோருவோம்" TNA இன்று கூறுகிறது:- இந்தியப் பணயம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் விமர்சனங்களும் கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். 13 ஆவது திருத்தச்சட்டத்தை தும்புத் தடியாலும் தொட்டுப் பார்க்கமாட்டோம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமூல்படுத்துவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதனை இலங்கை அரசாங்கத்துடன் பேசித் த…
-
- 2 replies
- 419 views
-
-
இலங்கை அதன் கடலோர கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கு உதவுமுகமாக அதற்கு கண்காணிப்பு கப்பல்களை வழங்குவது குறித்து ஜப்பான் ஆராய்ந்து வருவதாக அந்த நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் எண்ணெய்கப்பல்கள் பயணிக்கும் இந்துசமுத்திர கடற்பாதையின் பாதுகாப்பை பலப்படுத்துவதும் குறிப்பிட்ட கப்பல்களை வழங்குதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விஜயத்தின் பின்னரே எத்தனை கப்பல்களை வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள ஜப்பான…
-
- 0 replies
- 305 views
-
-
தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை தங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் ஊடாக தொழில் வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, குறித்த பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளார். பொலியத்தை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணம் பெற்றமை சம்பந்தமாக 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சந்தேக நபரான இந்த பெண் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் பணத்தை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தை பிரதேசம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tam…
-
- 3 replies
- 402 views
-
-
சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழுவினர் இந்தியா செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி கடும் சீற்றமடைந்து, தனது கடும் அதிருப்தியை தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்தாராம். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- கூட்டமைப்பு குழுவினரின் இந்திய விஜயம் குறித்து அரசாங்கத்துக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இது குறித்து தான் ஏமாற்றம் அடைந்திருக்கிறார் என்றும் ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊடாக சம்பந்தனுக்கு வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம், தன்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டது என்றும், கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர்; அரசாங்கத்திற்கும் அவர்களுக்குமிடையிலான முறுக…
-
- 1 reply
- 663 views
-
-
அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!!! https://www.youtube.com/watch?list=PLOrkKJBmKB7oviYH3OJ4VK73nwhJJG2Iy&v=3qQdRx6LQTk#t=1181
-
- 10 replies
- 1.1k views
-
-
அமைச்சர் ஹக்கீமின் உச்சியில் அடித்த சுவிட்சர்லாந்து அமைச்சர்! - ஜெ.ஸ்ரீரங்கா எம்.பி வெளியிட்ட சுவாரசியத் தகவல். [sunday 2014-08-24 09:00] நீதியே இல்லாத நாட்டில் நீங்கள் நீதியமைச்சராக இருக்க முடியும் என்றால், கடல்வளம் இல்லாத நாட்டில் ஏன் நான் கடல்சார் அமைச்சராக இருக்கு முடியாது? என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பிய சுவாரசியமான சம்பவம் குறித்த தகவலை நாடாளுமன்றில் வெளியிட்டார் ஜெ.ஸ்ரீரங்கா எம்.பி. நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அதாவது, கடல்சார் ஒப்பந்த மொன்றில் கைச்சாத்திடுவதற்காக சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கொழும்பு வந்துள்ளார். அவருடன் நீதியமைச…
-
- 1 reply
- 539 views
-
-
'வடக்கு கிழக்கு நிலைமை பற்றி இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தோம்': ததேகூ இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனை விரைவில் சந்திக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் புதுடில்லியில் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். இலங்கையில் நிலவும் தற்போதைய சூழல் பற்றியும் அதிகாரப்பகிர்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் தங்களின் மதிப்பீடுகளும் எதிர்பார்ப்புகளும் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோட…
-
- 0 replies
- 288 views
-
-
ஜனாதிபதி மகிந்த அமெரிக்கா சென்றார்! - விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட தமிழர்கள். [sunday 2014-08-24 09:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் ஜனாதிபதியின் சகோதரர் டட்லி ராஜபக்ஷ, அண்மையில் இலங்கை வந்திருந்தார். அவருடன் மருத்துவ பரிசோதனைக்காக ஜனாதிபதி நேற்றுக் காலை கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஜனாதிபதி பயணித்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த நான்கு தமிழர்களின் விமானப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வேறு விமானங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் வரை அவர்கள் விமான நிலையத்தில் இக்கட்டான நில…
-
- 3 replies
- 572 views
-
-
கூட்டமைப்பின் இந்தியப் பயணம் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கடும் விசனம்! [sunday 2014-08-24 09:00] பாராளுமன்ற வெளிவிவகாரக் குழுவுக்கு அறிவிக்காமலும் அந்த குழுவின் அனுமதியின்றியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கு சென்றது எவ்வாறு என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதானால் சபாநாயகரின் அனுமதியுடன் பாராளுமன்ற வெளிவிவகாரக் குழு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவ்வாறு எந்த ஏற்பாடுகளும் இன்றி இலங்கை அரசாங்கத்தின் இறைமைக்கு எதிராக இந்தியாவில் கருத்துக் கூறியுள்ளதாக ஹெல உறுமயவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 197 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி அதன் மூலம் நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை ஈ.பி.டி.பி கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து நன்றி தெரிவித்து நரேந்திர மோடிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வை நோக்கி முன்னகர்வதற்கு இருக்கக்கூடிய ஒரே வழிமுறையாகவுள்ள 13ஆவது திருத்தத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னகர்வதுதான். இதையே நாங்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த…
-
- 2 replies
- 383 views
-
-
ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 3 ஆம் திகதி பூங்கா வனமும் 4 ஆம் திகதி கைலாய வாகனமும் 7 ஆம் திகதி சப்பறமும் அதனைத் தொடர்ந்து 8 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும். உற்சவ காலங்களில் பெறு மதிமிக்க ஆபரணங்கள், உடை மைகள் தொடர்பில் அடியார்களை விழிப்பாக இருக்கும் படியும் உற்சவ காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள குடி தண்ணீரை வீண்விரயம் செய்வதை தவிர்க்குமாறும் வாகனம் நிறுத்தும்போது விதி முறைகளைப் பின்பற்றுமாறும் ஆலய பரிபாலனசபையினர் அடியார்களை அறிவுறுத்தியுள்ளனர். கோவிலுக்குள் இடம்பெறும் திருட்டுக்களைக் கண்டுபிடிக்க சி.சி.ரி.வி.கமராக்கள் பொருத…
-
- 0 replies
- 290 views
-