Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூன்றாவது முறையும் சர்வதேசத்தின் முன் தோற்கப் போகிறது அரசாங்கம்! – மாவை சேனாதிராஜா. [Monday, 2014-02-24 18:12:44] கடந்த 60 ஆண்டுகளில் இடம்பெற்றதை விட, போருக்குப் பிந்திய நான்கு ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற நில அபகரிப்பே அதிகம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தீவகப்பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பரலோக மாதா கோவிலில் பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழர்கள் தமக்கு சொந்தமான இடங்களை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் இராணுவத்தினர் ஆடம்பர விடுதிகளை…

  2. இந்திய-இலங்கை மீனவர்கள் கூட்டு மீன்பிடித் திட்டத்துக்கு இலங்கை அரசு இணக்கம்! [Monday, 2014-02-24 08:49:49] இந்திய மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இலங்கை- இந்திய மீனவர்கள் இருநாட்டு கடற்பரப்புக்குள் தடையின்றி மீன்பிடிக்கக்கூடிய கூட்டுத் தொழில்முறை ஒன்று பற்றி ஆராய தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களை வேறு ஆழ்கடல் பிராந்தியத்திற்கு அனுப்புவதில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனைக்கு இந்த கூட்டுத் தொழில்முறை தீர்வாக அமையும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கை மீனவர்களை பாதிக்காத விதத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து தடையின்றி மீன்பிடித்துச் செல்வதற்கு இதன்மூலம் வழ…

  3. இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை சட்டரீதியாக அணுகவுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டு வைத்துள்ளார். இதனை அடுத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக முதலமைச்சரிடம் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குறித்து வினவிய போது அதனை சட்டரீதியாக அணுகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக இந்திய உச்சநீதிமன்றம் குறைத்திருந்தது. அத்துடன் இவர்களை விடுதலை…

  4. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் இலங்கையின் மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் மர்மமான முறையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டிஸ் பிரஜையான 43 வயதுடைய விசுவலிங்கம் கோபிதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் மந்திகையினை சொந்த இடமாக கொண்ட அவர், பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றிருந்த வேளை, விடுதலைப் புலிகளிற்கு நிதி உதவி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2007 ம் ஆண்டின் மார்ச் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதாகியிருந்தார். இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தொடர்ந்தும் பிரிட்டனிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஏழு வருடங்களாக குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்னிறுத்தப்படாது தடுத்த…

  5. ராஜீவ் கொலை வழக்கு கைதி­க­ளான முருகன், பேர­றி­வாளன், சாந்தன் ஆகி­யோ­ருக்கு தற்­கா­லிக தடையே விதிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, வெற்றி நிச்­சயம் கிடைக்கும் என இவ்­வ­ழக்கில் ஆஜ­ரான பிர­பல வழக்­க­றிஞர் ராம் ஜெத்­ம­லானி தெரி­வித்­துள்ளார். இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், “முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக்கில் தண்­டனை பெற்ற பேர­றி­வாளன், முருகன், சாந்தன் உள்­ளிட்ட 7 பேரை விடு­விக்கும் தமி­ழக முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் நட­வ­டிக்கை பாராட்­டத்­தக்­கது. இவ்­வி­ட­யத்தில், உச்­ச­நீ­தி­மன்றத் தடையை எதிர்த்தும் மத்­திய அரசின் சீராய்வு மனுவை எதிர்த்தும் போராட எல்லா வழி­வ­கை­களும் தமி­ழக அர­சுக்கு உள்­ளன. அவர்கள் விடு­விக்­கப்­பட்­டதன் காரணம், இரண்டு தண்­ட­னைகள் க…

  6. இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதாகக் கூறி செயற்படும் 'ஒன்லைன் மூல இந்திய விஸா விண்ணப்பப் படிவம்' என்னும் இணையத்தளம் இந்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட இணையத்தளம் இல்லையென யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் திங்கட்கிழமை (24) தெரிவித்துள்ளது இது தொடர்பாக துணைத்தூதரகத்தினால் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'ஒன்லைன் மூல இந்திய விசா விண்ணப்பப் படிவம்' என்னும் தலைப்புடனான https://india-visa.co/index.php என்னும் முகவரியை உடைய இணையத்தளம் ஒன்று இயங்குவது பற்றி தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தளமானது இந்தியாவுக்கான சுற்றுலா, வணிக மற்றும் நீண்டகால நுழைவுச்சீட்டு பெற்றுக் கொடுப்பதில் சிறப்புத் தேர்…

  7. பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு நடுவண் அரசை கண்டித்து சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் . நாள் : 25/02/2014, செவ்வாய்கிழமை நேரம் - காலை 11.மணி இந்திய நடுவண் அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டிப்போம். ஏழு தமிழர்களை சிறையில் இருந்து விடுவிப்போம் என்ற முழக்கத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த , தமிழர் முன்னேற்றக் கழகம் அதிமான் , ,மறத்தமிழர் சேனை பிரபாகரன் , தமிழர் பேரரசுக் கட்சித் தலைவர் கெ.கணேசன், தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிச்சாமி ,பெருமாள் தேவன் தேவர் ஆராய்சி மையம் , அக்னி வேளாளர் கூட்டமைப்பு தமிழ் மணி தமிழ்த் தேசியக் குடியரசு கட்சி, திருமாறன் தாய் மண் மீட்பு இயக்கம் மற்றும் ,சுந்தரமூர்த்தி தமிழர் விடுதலைக் களம் உள்ளிட்ட பல அமைப்புகள் கலந்து கொள…

  8. சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர், பபுவா நியுகினியில், அவுஸ்ரேலிய நடத்தும் மனுஸ் தீவு தடுப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றுவது தெரியவந்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தில் முன்னர் கொம்பனி கட்டளை அதிகாரியாக இருந்த தினேஸ் பெரேரா என்ற அதிகாரியே, மனுஸ் தீவு தடுப்பு நிலையத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான, ஜி4 எஸ் பாதுகாப்பு நிறுவனத்தினால், அந்த தடுப்பு நிலையதின் பதில் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக வலைத்தளம் ஒன்றில் தினேஸ் பெரேரா தனது சுயவிபரங்களை வெளியிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவுஸ்ரேலிய மனிதஉரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தகவல் ஒன்றையடுத்து, அவுஸ்ரேலிய ஊடகங்கள் தினேஸ் ப…

  9. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சமர்ப்பிக்கத் தயாராகி வரும் அமெரிக்க, பிரித்தானிய இராஜதந்திரிகள், சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா அளித்து வரும் ஆதரவு குறித்து கவலையடைந்துள்ளனர். ஐ.நா கூட்டத்தொடருக்கான தயார்படுத்தல்களுடன் தொடர்புடைய, வட்டாரங்களை மேற்கோள்காட்டி அவுஸ்ரேலிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் நிலைப்பாடு, அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகளுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதக் கூட்டத்தொடரில், அவுஸ்ரேலியா மோசமான அதிர்ச்சியை அளிக்கலாம் என்று இராஜதந்தரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். “அவுஸ்ரேலியா மோசமான அதிர்ச்சியை இந்த ஆண்டு கொடுக்கலாம். இணை அனுசரணை வழங்கத் தவறுவது மட்டுமன்றி, தீர்மானத்தைப் பலவீனப்படுத…

  10. முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வரும் உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வரும் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகள் இந்நாட்டில் இருக்கும் வரை சிறுபான்மையினரின் உயிருக்கு எந்தவொரு உத்தரவாதமும் இருக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான விஜித தேரர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த எனக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் என்றுகூட பார்க்காது பொது பலசேனா கொலை அச்சுறுத்தல் விடுத்தது. இந்த அச்சுறுத்தலுக்கு பயந்து சுமார் 6 மாத காலமாக தலைமறைவாகவே வாழ்ந்து வருகின்றேன். எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகக் கூறி பொது பல சேனாவுக்கெதிராக மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறைப்பாடொன்றை செய்ததுடன் அவ்வமைப்பை…

  11. இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு யாரும் வற்புறுத்தினால் என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட்டால் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று இளம்பெண்களை இராணுவத்திலும், பண்ணை வேலையிலும் இணையுமாறு வற்புறுத்தி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்…

  12. நெடுந்தீவில் நட்சத்திர விடுதியினை அமைக்க மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ களமிறங்கியுள்ளார் 23 பெப்ரவரி 2014 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ் தீவகம்- நெடுந்தீவுபகுதியில் நட்சத்திர அந்தஸ்திலான ஹோட்டலொன்றினை அமைக்க மஹிந்தவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தயாராகியுள்ளார். இதற்கென சுமார் 450 மில்லியனை அவர் ஒதுக்கியிருப்பதாகவும் நீச்சல் தடாகம் மற்றும் திருமண்டபமென அனைத்து வசதிகளுடன் குறித்த ஹோட்டல் கட்டப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. அத்துடன் கடல்வழி தொடர்பு மட்டுமே கொண்ட நெடுந்தீவிற்கு சுற்றுலாப்பயணிகள் வந்து சேரக்கூடியதாக சிறிய அளவிலான ஓடுபாதையுடன் விமான நிலையமொன்றும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே குறித்த ஹோட்…

  13. சர்வதேச விசாரணைப்பொறிமுறையை பலவீனப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா செயற்படுகின்றது:- இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன. எனினும், இந்த தீர்மானத்தை அவுஸ்திரேலியா ஆதரிக்கக் கூடிய சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவுஸ்திரேலியா இவ்வாற இலங்கைக்கு ஆதரவாக செயற்பட திட்டமிட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. இல…

  14. தற்போதைய நெருக்கடி நிலையை அடுத்தே, தென்னாபிரிக்காவின் நல்லிணக்க செயல்முறைகளில் சிறிலங்கா திடீரென ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தென்னாபிரிக்காவின் நல்லிணக்க செயல்முறைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு ஆண்டுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா அரசுப் பிரதிநிதிகள், தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டது. துரதிஷ்டவசமாக, சிறிலங்கா அரசாங்கம் எந்த ஆர்வத்தையோ, உற்சாகத்தையோ காட்டவில்லை. தற்போதைய சூழ்நிலையால், திடீரென தென்னாபிரிக்காவின் நல்லிணக்க செயற்முறைகளின் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளது. கடுமையான அழுத்தங்களினால் தான், திட…

  15. எனது மரணத்திற்கு முன்னர் என் பிள்ளையை பாரத தேசத் தலைவர்கள் இரங்கி விடுதலை செய்ய வேண்டும்:- யாழில் இருந்து சாந்தனின் தாயார் மன்றாட்டம் - நேர்கண்டவர் - தியாகராஜா நிரோஷ்:- எனது கணவர்; மகனைத் தூக்கிலிடப் போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணம் அடையாமல் மகன் என் வசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும். இவ்வாறு சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி வேண்டுகோள் விடுகின்றார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டணையை இந்திய உயர் நீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம்,உடுப்பிட்டில் உள்ள சாந்தனி…

  16. அர்னாபை அலறவைத்த திருமுருகன் காந்தி! Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html

  17. ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது: தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனான அமிர்தலிங்கம் பகீதரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று (19.02.14) சந்தித்துக் கலந்துரையாடினார். கொடூரமான பயங்கரவாத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை பாராட்டிய பகீர்தரன் இனம், மதம் மற்றும் மாகாண பேதமின்றி நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுப்பதனையிட்டு ஜனாதிபதிக்கு அவர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் கீத்தாஞ்சன குணவர்தன் ஆகி…

    • 49 replies
    • 2.8k views
  18. பேஸ்புக்கைத் தடை செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு! – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தகவல். [sunday, 2014-02-23 09:26:33] இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். பேஸ் புக் சமூக வலையமைப்பு மற்றும் இணையத்தை பிழையாக பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, நாட்டின் இளைய தலைமுறையினரை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆபாச இணைய தளங்களை முடக்குவதற்கு ஏற்கனவே தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பேஸ்புக் பயன்படுத்திய மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். http://seithy.com/breifNews…

  19. மாயாவிகளையும், பேசாமடந்தைகளையும் புறந்தள்ளி ஆளுமையுள்ள தலைமைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும் மேல் மாகாண சபையின் வேட்பாளருமான மனோ கணேசன் எமது சமூகம் சார்பில் ஊமைகளையா நாடாளுமன்றுக்கு அனுப்புகின்றோம் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். எம்மால் இந்த நாட்டில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆகி விட முடியாது. இந்த பதவிகளை வகிக்க எமக்கு தகைமை இல்லை என்றோ, சட்டத்தில் இடமில்லை என்றோ அர்த்தம் கிடையாது. ஆனால், இந்த பதவிகளை ஒரு தமிழரோ, முஸ்லிமோ அல்ல, ஒரு சிங்கள கிறிஸ்தவர் கூட வகிக்க முடியாது. இதன் காரணம், இங்கே அந்தளவுக்கு எல்லா பெரும்பான்மை கட்சிகளுக்குள்ளும் இனவாதம் புரையோடி போய் இருக்கின்றது. இதன் காரணம் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம்; தமிழர், …

  20. ஆளாளுக்கு அறிக்கை விட்டு அவர்களது விடுதலையை தாமதம் ஆக்காமல் விட்டால் சரி.இந்த அறிக்கை எல்லாம் அவர்கள் வெளியில் வந்த பின் விடலாம் தானே!

  21. இந்தியாவில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்துமாறு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சகல இலங்கையர்களையும் நாடு கடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான வீ.வைத்திலிங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்து வரும் சகல இலங்கையர்களும் நாடு கடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். ராஜீவ் கொலை வழக்குடன் n;தாடர்புடையவர்களை விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசாங்கம் விடுத்த அறிவிப்பினைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் பல்வேறு வழகளில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். …

  22. பாடசாலை மாணவ மாணவியரை நல்வழிப்படுத்தி ஒழுக்கசீலர்களாக உருவாக்க வேண்டுமானால் அவர்களுக்கு முறையான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் . மாறாக , இராணுவ ஒழுக்கக் கோவையினால் அதனை ஏற்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார் . இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 , தரம் 11 போன்ற பதவி நிலைகளுக்குத் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு கேர்ணல் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் போன்ற பதவி நிலைகளை வழங்கி கல்விச் சேவையை இராணுவமயமாக்குகின்றனர் . இது ஏற்புடைய ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது , கல்வி நிர்வாக சேவையில் இவ்வாறான பதவி நிலைகளை வழங்கும் போது அவர்கள் , இராணுவ ஒழுக்கக் கோவை போன்ற கடுமையான செயற்பாடுகள…

  23. ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களை முடக்குவதில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீவிரம்! – கொழும்பு ஊடகம் செய்தி. [sunday, 2014-02-23 18:35:45] அரசாங்க அரசியல்வாதிகளின் சொத்துக்களை முடக்குவதற்கும், பயணத் தடையை விதிப்பதற்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்து அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முனைப்பு காட்டி வருகின்றன. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் அமைப்புக்கள் இந்த முயற்சியை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியளித்தால் ஜனாதிபதி மஹ…

  24. யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்தது – சரத் பொன்சேகா யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தற்காலிக அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட யுத்த நிறுத்தத்தினால், யுத்தம் தோற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கெசல்வத்த பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு உத்தரவிட்டிருந்தார் எனவும், அதற்கு தாம் கடும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.