ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
யுத்தத்தின்பொது 1000 பொதுமக்களைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை 10 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆனால் இதே ஐ.நா பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் இழப்புக்கு காரணமாக உள்ள இலங்கை அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை என்பது வெளிப்படடை என்று ரொரன்ரோ ஸ்ரார் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் ரோசி டி மென்னோ எழுதியுள்ள இலங்கை பற்றிய கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கண்ணீர்த்துளி போன்ற ஒரு வடிவத்தில் உள்ள ஒரு தீவே இலங்கை. இங்கு இடம்பெற்ற போரின் போது விழுந்த கண்ணீர்த்துளிகள் எண்ணுக்கணக்கற்றவை. அதே போன்று போரின் போது உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையும…
-
- 1 reply
- 673 views
-
-
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பதற்காக சர்மா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது என்ன விடயங்கள் குறித்து பேசப்பட்டன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98831/language/ta-IN/article.aspx
-
- 3 replies
- 383 views
-
-
காணொளி: இந்தியாவின் இரட்டை அணுகுமுறை தொடர்பில் அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட பெட்டகம் காணொளியை பார்க்க,,,,, http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9966:2013-11-11-16-36-54&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 598 views
-
-
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து சென்னையில் IT ஊழியர்கள் போராட்டம் மேலதிக படங்கள்...விரைவில்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9965:-it-&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 475 views
-
-
"சுமார் 50 ஆயிரம் ஆண்டுக்கு மேல் மூத்த வரலாற்று பெருமையைச் சார்ந்தது தமிழ் இனம். ஆனால் நம் தமிழ் இன மக்களுக்கு இலங்கையில் வாழ இடமில்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இலங்கையில் தனித் தமிழ் ஈழம் உருவாகுவதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்.'' இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தஞ்சை விளார் பைபாஸ்சாலை அருகில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழாவின் இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: நம் இன தமிழ் ஈழ மக்கள் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில், சிங்கள வெறியர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். கொத்து, கொத்தாக குண்டுகள…
-
- 0 replies
- 557 views
-
-
பொது நலவாய மாநாட்டையொட்டி வருகை தந்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலர் இன்று வடக்கிற்கு விஜயம் செய்ய முற்பட்ட வேளையில் வவுனியாவில் நீண்ட நேரம் டுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சனல் 4 வைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்துள்ளனர் என புலனாய்வாளர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்தே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் இவர்களில் சனல்4 வைச்சேர்ந்தவர்கள் இல்லை என்பதனை உறுதி செய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களை வடக்கிற்கு செல்ல அனுமதித்துள்ளனர். கார் ஒன்றில் வடக்கு நோக்கி முதலில் சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களை வவுனியா கல்குணாமடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் சுமார் அ…
-
- 0 replies
- 501 views
-
-
தம்புள்ளை, பத்திரகாளியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் சமரசம் தேவையில்லை என்று கூறி தன்னை சந்திப்பதற்கு தம்புள்ளை பௌத்த பிக்கு மறுத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார். தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் விவகாரம் தொடர்பில் இரு தரப்பினருடனும் பேசி இந்து ஆலயம் அமைப்பதற்கு புதிய இடத்தைப் பெறுவதற்கான விடயங்களில் ஈடுபடுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பந்தப்பட்ட தலைமை பௌத்த பிக்குவான ஸ்ரீ சுமங்கல தேரரை சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரை முதலில் சந்திப்பதற்கு கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்ட பௌத்த பிக்கு பின்பு சமரசம் தேவையில்லை என்று கூறி சந்திக்க மறுத்துவிட…
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கை அரசாங்கம் மற்றுமொரு ஆணைக்குழுவினை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுத் தி;ட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோபள் சமாதான விருதாளரும், தென் ஆபிரிக்காவின் மரியாதைக்குரிய பேராயர் அதி வணக்கத்திற்குரிய டெஸ்மன் டுட்டு தலைமையில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தென் ஆபிரிக்காவில் நிறுவப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் மூலம் தென் ஆபிரிக்காவில் நிலவி வந்த நிற வெறிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் வகையில் அதிகாரங்களுடன் கூடிய ஓர் ஆணைக்…
-
- 3 replies
- 639 views
-
-
நிரந்தரமான சமாதானத்தையே இலங்கை விரும்புகின்றது - ஜனாதிபதி நிரந்தரமான சமாதானத்தையே இலங்கை விரும்புகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெறுமனே சமாதானத்தை அன்றி நிரந்தரமான சமாதானத்தையே இலங்கை அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் இளைஞர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால யுத்தம் நாட்டையும் மக்களையும் பாரியளவில் நெருக்கடிக்குள் ஆழ்த்தியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிரந்தரமான சமாதானம் நாட்டின் அபிவிருத்தியை உறுதி செய்ய வழியமைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டை பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். http://www.glo…
-
- 0 replies
- 324 views
-
-
வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி நாளைய தினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் பலாலி கிழக்கு (ஜேஃ253), பலாலி வடக்கு (ஜேஃ254) மற்றும் வலி. கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் வளலாய் (ஜேஃ284) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மீள்குடியமர்வு எப்போது இடம்பெறும் என்பது இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை. எனவே குறித்த மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளைச் ச…
-
- 0 replies
- 442 views
-
-
வலி.வடக்கு மீள் குடியமர்வினை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஏற்பாட்டாளர்களிற்கு இன்று அதிகாலை மாட்டுத்தலைகள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளது. வலி.வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ச.சஜீவன் ஆகிய இருவரதும் தொலைபேசிக்கு அழைப்பினை எடுத்து மிரட்டல்களை விடுத்த நபர்கள் அவர்களது வீடுகளிற்கு முன்னாலும் இன்று காலை மாட்டின் தலையினையும் வைத்துவிட்டு சென்றுமுள்ளனர். சம்பவம் குறித்து தவிசாளர் சோ.சுகிர்தன் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவிக்கையில்;, நேற்று இரவு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்ட நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்த கூடாது என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும் என்று…
-
- 0 replies
- 428 views
-
-
இன்றைய தினம் இடம்பெற்ற வட மாகாண சபை அமர்வின் போது உறுப்பினர்களுக்கு மேசைகளில் வைக்கப்பட்டிருந்த கோப்புகளில் அநாமதேய துண்டுபிரசுரமொன்று வைக்கப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது. இவ்விடயம் தொடர்பாக உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்திருந்தார். வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு இன்று திங்கட்கிழமை (11.11.13) காலை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்ட கோப்புக்களில் 'இரா. தேசப்பிரியன், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றியம், சமூக ஒற்றுமைக்கான மக்கள் பேரவையினால் உரிமை …
-
- 0 replies
- 572 views
-
-
பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழு அதன் கூட்டங்களில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள்பற்றி கூடுதல் ஆழமாக நோக்க தவறியுள்ளது என்பதையிட்டு விரக்தி அடைந்துள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது. 'விசனத்துக்குரிய விடயங்களை விசேடமாக பொதுநலவாய அங்கத்தவர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு மட்டத்தில் பொதுநலவாய நியமங்களை நிறைவேற்ற தவறும் விடயங்களை பொதுநலவாயம் கவனிக்க வேண்டுமென்பதனை பொதுநலவாய அமைச்சர்மட்ட நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் மத்தியில் நாம் வலியுறுத்தியிருந்தோம். ஆயினும், இது நடைபெறவில்லை என்பதையிட்டு நாம் விரக்தியடைகின்றோம்' என சிரேஷ்ட இராஜங்க அமைச்சர் சயீடா வரஸி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கூறினார். ஐக்கிய இராஜ்ஜியம் பொதுநலவாய அமைச்சர்மட்ட நடவடிக்கைக்க…
-
- 0 replies
- 515 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழா தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கூடிய பேனர் வைத்தது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. கோர்ட் அனுமதியுடன் திறப்பு விழா நடத்தப்பட்டது. இந்த விழா தொடர்பாக தஞ்சையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டன. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படங்களும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடை …
-
- 3 replies
- 794 views
-
-
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, தற்போது 112-ஆக உள்ளது. இங்கு வசிக்கும் சுமார் 68 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள். இவர்களில் சிலர் சமீபக் காலமாகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை பயில்கின்றனர். இளங்கலை மற்றும் முதுகலை, தொழில்நுட்பம், பொறியியல் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், படிப்புக்கு ஏற்ற வேலை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. அகதிகள் என்கிற முத்திரையால் உரிய வேலைக் கிடைக்காமல், கிடைக்கின்ற வேலைக்குச் செல்லும் கூலிகளாக இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தல் அகதி…
-
- 4 replies
- 837 views
-
-
காணொளி : பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் திருவிளையாடல்களை அம்பலப்படுத்தும் வீடியோ காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9961:2013-11-11-11-18-39&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 665 views
-
-
சர்ச்சைக்குரிய செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரேவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உண்டாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகவியலாளர் குழுவுடன் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். மக்ரேயுடன், மொத்தமாக 30 ஊடகவியலாளர்கள் பிரித்தானியாவின் சார்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். கலம் மக்ரேக்கு வீசா வழங்குவதில் இலங்கைக்கு எவ்வித சிக்கல்களும் கிடையாது என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வைய…
-
- 7 replies
- 1k views
-
-
CHOGM boycott would 'send a strong message', says Tamil Congress Updated Sun 10 Nov 2013, 1:28pm AEDT Dr Sam Pari from the Australian Tamil Congress has joined former prime minister Malcolm Fraser in calling for Australia to boycott the Commonwealth Heads of Government Meeting in Sri Lanka, amid accusations of torture of Tamil civilians and government-sanctioned abuse of journalists, judges and opposition politicians. http://www.abc.net.au/news/2013-11-09/chogm-boycott-would-send-a-strong-message---tamil/5080922
-
- 1 reply
- 712 views
-
-
சவூதி அரேபியாவின் தமாம் நகரிலுள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்திற்கு அருகில் சுமார் 400 இலங்கையர்கள் தஞ்சமடைந்துள்ளதாக சவூதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பும் நோக்கில் கடந்த 10 நாட்களாக தாம் அங்கு தங்கியிருப்பதாக குறித்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் தம்மால் இலங்கைக்குத் திரும்ப முடியாமல் போனதாக குறித்த இலங்கைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல அடிப்படை தேவைகள் இன்றி கடந்த 10 நாட்களாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்களுக்கு அமையவே குறித்த இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அழைக்க முடியும் என இலங்க…
-
- 1 reply
- 378 views
-
-
குடாநாட்டில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு தூபமிடப்படுகிறது-தர்மலிங்கம் சித்தார்த்தன்- 10 நவம்பர் 2013 உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது. இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வலி வடக்கில் காங்கேசன்துறை தொகுதி முழுவதும் உள்ளடங்கலாக இளவாலை வரையில், சுற்றியுள்ள நிலப்பரப்பினை இராணுவம் தமக்குள் வைத்துள்ளது, அரசாங்கம் இன்றைய நிலையில் யுத்தம் முடிவடைந்து விட்டது என திரு…
-
- 1 reply
- 565 views
-
-
காணொளி : இலங்கை பிரச்சனை தொடர்பாக NDTV இல் இடம்பெற்ற அனல் பறக்கும் விவாதம் காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9952:-ndtv-&catid=1:latest-news&Itemid=18
-
- 7 replies
- 809 views
-
-
உண்மையை கண்டறியும் நோக்கில் இலங்கை வரும் அவுஸ்திரேலிய, மலேசிய, நியூசிலாந்து பிரதிநிதிகள் [Thursday, 2013-11-07 08:31:31] அவுஸ்திரேலியாவின் செனட் சபை உறுப்பினர் லீ றைனன், நியூசிலாந்து மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு உண்மையை கண்டறியும் நோக்கில் விஜயம் செய்யவுள்ளனர். அவர்கள் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கைக்கு வருகை தந்து, அந்தந்த நாடுகளில் தங்களின் அறிக்கைகளை சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் அரசியல் தஞ்சம் கோரிகள் குறித்த விபரங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் அவர்கள் முழுமையாக ஆராய்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. தமது விஜயம் தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று…
-
- 6 replies
- 847 views
-
-
இலங்கையில் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு எதிர்வரும் 15ஆம் திகதி மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி கருத்து வெளியிட்டார். இலங்கையுடன் தூதரக உறவுகள் இருந்தும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொண்டிருப்பது அடுத்த பிரச்சினை எனவும் அவர் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருக்க எடுத்த முடிவு இலங்கை - இந்திய உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருத முடியாது எனவும் நாராயணசாமி ம…
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப்பெரிய வெடிப்பு! நிலநடுக்க அபாயம் இருப்பதாக எச்சரிக்கை! In the largest outbreak in the sea இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் சி.பி. திசாநாயக்க, இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இலங்கைக்குரிய பூமி பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீட்டர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற…
-
- 1 reply
- 812 views
-
-
காணொளி: இசைப்பிரியாவின் தாயார் சணல்-4 இற்கு வழங்கிய பேட்டி பேட்டியை காண.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9941:----4---&catid=1:latest-news&Itemid=18
-
- 10 replies
- 1.7k views
-