Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'ஜனாதிபதியை நாடுவதனை விடுத்து வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும்' - சம்பந்தன் 03 நவம்பர் 2013 வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. இதனால் நாம் வேறு வழியைத் தான் பார்க்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலி.வடக்கில் வீடழிப்பை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தொலைபேசி மூலம் கோரியிருந்தார். இதற்கமைவாக வீடழிப்பை நிறுத்துமாறு ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சம்பந…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது 03 நவம்பர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. வடக்கு வாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும்பான்மை பலமுள்ள வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டால், கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்குவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். உத்தியோகப்பற்றற்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் வடக்கு கிழக்கில் இணைந்து கடமையாற்ற முடியும் என அவா குறிப்பிட்டுள்ளார். htt…

  3. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கை பற்றியது மட்டுமல்ல – பிரித்தானியா 03 நவம்பர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கை பற்றியது மட்டுமல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தை, முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளதாகவும் அவருக்கு ஆதரவாக பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் பங்கேற்க உள்ளதாகவும் சிரேஸ்ட அமைச்சர் ஹியூகோ செவர் (Hugo Swire) தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகள் தொடர்பிலும் அமர்வில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தங்க வெளிச்சத்தில் குளிப்பாட்டும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். காணாமல்போத…

  4. எம் தமிழ் உறவுகளே..! - தமிழ்த் தேசியம் என்பது...? [sunday, 2013-11-03 16:55:02] எம் மத்தியிலுள்ள - உறக்க நிலையும் - ஒற்றுமையீனமும் - நாட்டுக் கொரு அல்லது குழுநிலை அரசியல் செயற்பாடுகளை விட்டு - ஒன்று பட்ட தமிழினமாக - தமிழர் தாயகத்திற்காக - எல்லோரும் இணைந்து செயற்படவேண்டிய காலமிது. நாம் அமைதிகொள்ளும் ஒவ்வொரு கணமும் - சிங்கள ஆட்சியாளனின் அடக்கு முறை அரசியலுக்குள் அழிந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து - தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கும் - தாயக விடுதலைக் கும் உழைத்திட இன்றே அழைக்கிறோம். தமிழ்த் தேசியம் என்பது - மக்கள் சமுகம் சார்ந்த உரிமை இதை வென் றெடுக்க வேண்டிய பொறுப்பும் - அவசரமும் - தேவையும் ஒவ்வொரு தனி மனிதரிடமும் உண்டு என்பதை ஏற்று அதற்கு …

    • 0 replies
    • 516 views
  5. November 3, 2013 இலங்கையில் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற் கட்சியின் தலைவர் மிலிபேண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத நடுப் பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும், அவருக்கும் இடையில் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை கூறினார். இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய விடயங்களை காரணம் காட்டி இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்…

  6. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணம் திடீரெனக் கைவிடப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி வரவுள்ளதாகவும், அவர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனி உள்ளிட்ட பலரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போல, கோத்தாபய ராஜபக்ச இன்று புதுடெல்லி செல்லவில்லை. http://www.paristamil.com/tamilnews/view-news-MzAzNzY2MDA4.htm#.UnWAO_kWKnY

    • 10 replies
    • 1.2k views
  7. November 3, 2013 தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா அவர்கள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான வீடியோ ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 31-10-2013 அன்று வெளியிட்டுள்ளது. இவ் வீடியோகாட்சி இசைப்பிரியா யுத்தம் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவோ, காணாமல்போகவோ இல்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. கைதியாக உள்ள ஒரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இர…

  8. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான் சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாச்சாரம் தெரியாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றை நாம் எதிர்க்கின்றோம் என காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்தார். யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. அதில் வடக்கு முதல்வர் இங்கு பணியாற்றி வருகின்ற சிங்கள பொலிஸார் தமிழ் மக்களுடைய கலாச்சாரம் தெரியாதவர்கள் அவர்களை அரசு திருப்பி பெறவேண்டும் என கோரியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் முகமாகவே இதனை அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு முதலமைச்சரின் கருத்து தொடர்பில் பொலிஸ் ஊடகப…

  9. "பிரபாகரன் இல்லாத உலகத்தையே எப்போதும் எதிர்பார்த்தேன் சுயநலத்திற்காக புலிகளுக்கு துதி பாடியதில்லை" 02 நவம்பர் 2013 ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான ஏது – டக்ளஸ் ஆளும் கட்சியின் தேர்தல் வியூகக் குறைபாடுகளே வட மாகாணசபைத் தேர்தல் தோல்விக்கான பிரதான ஏதுவென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சிறந்த தேர்தல் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உட்பூசல்கள் மற்றும் தேர்தல் வியூகக் குறைபாடுகளே பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்டமை…

    • 15 replies
    • 1.5k views
  10. நவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/87730-2013-10-31-02-57-53.html

    • 24 replies
    • 1.3k views
  11. இலங்கை கடற்படையால் குமுதினிப் படகில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை இடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கைப் புலனாய்வுத் துறையும் ஈ.பி.டி.பியும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. 1985ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கும இடையில் குமுதினிப் படகில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் மீது இலங்கை கடற்படையினரால் காட்டுமிராட்டித் தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 36 பேர் கடற்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் நினைவு தொடர்பாக நெடுந்தீவு மாவிலி துறைமுகப்பகுதியில் குமுதினி படுகொலை நினைவுத் தூபியும் மண்டமும் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு…

  12. வடக்கில் சோகம் நிறைந்த தீபாவளி - குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் 02 நவம்பர் 2013 இறுதி யுத்தம் நடந்த வடபகுதியில் தீபாவளி தினம் சோக முகத்துடன் காணப்படுகின்றது. கடந்த சில தினங்களின் முன்னர் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இசைப்பிரியா தொடர்பான வீடியோ வடக்கு மக்கள் மத்தியில் தீபாவளி தினமான இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள் பலரும் குறித்த வீடியோக் காட்சியை கண்டு கதி கலங்கிப் போயுள்ளனர். வடக்கில் பட்டாசு கொளுத்தும் வெடிச்சத்தங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புதிய ஆடை வாங்க முண்டியடிக்கும் மக்களை வடக்கு நகரங்களில் காணவும் கிடைக்கவில்லை. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் த…

  13. இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை தொடக்கம் சர்வதேச சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக கடும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த காணொளி வெளிவந்ததால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள முக்கியமான தமிழ் அமைப்புகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளும் எதிர்வரும் 25ஆவது கூட்டத்…

  14. இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொதுநலவாய மாநாட்டின் முதல் நாள் மட்டும் மன்மோகன் சிக் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக புதுடில்லிப் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியால் பிறக் கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதாக சல்மான் குர்ஷித் உறுதியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/87596-2013-10-30-00-17-26.html

  15. இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி அவசியம் - முதல்வர் விக்னேஸ்வரன் [saturday, 2013-11-02 07:58:31] வடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் எழுச்சிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் சர்வதேச நாடுகளின் குறிப்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவி அத்தியாவசியமானது என ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான விசேட தூதுவர் டேவிற் டெலியிடம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் மிக நீண்டகாலம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சிகள் மந்தகதியிலேயே இருந்து வருகின்றது. எனவே இந்த விடயத்தில் ஜரோப்…

    • 0 replies
    • 466 views
  16. கருத்துக்களுக்கு மட்டுமல்ல கருக்களுக்கும் தடை வன்னியில் இருந்து - துவாரகா கலைக்கண்ணன் அமெரிக்க சிறையில் உள்ள பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன. அமெரிக்காவின் கலிபோனிய சிறையில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த 148 பெண்கைதிகளுக்கே கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. அமெரிக்க சிறையில் உள்ள பெண்களுக்கு ஏற்பட்ட நிலையே வன்னியில் சிறந்த வெளிச்சிறையில் வாழும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி ஆகிய இடங்களில் வசிக்கும் இளம் தாய்மார்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. ஐம்பதுக்கு மேற்பட்ட தாய்மாருக்கு அரச வைத்தியசாலை ஊடாக கட்டாய கருத்தடை…

    • 0 replies
    • 445 views
  17. அபிவிருத்தி என்பது இதுதானா? கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு வருவதாயின், இதைவிட அதிக நேரம் எடுக்கின்றது. புதிய அதிவேகசாலை அமைக்கப்பட்டதால் இனிமேல் 20 நிமிடங்களே போதுமானது. கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் இந்த நாட்டின் ஜனாதிபதி தாமே தமது காரை ஓட்டிச் செல்லும் காட்சியைப் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இந்த நாட்டின் முதல் பெண்மணி மனைவி அருகே அமர்ந்திருக்க ஜனாதிபதியவர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானதொரு சூழ்நிலையில் தமது காரைப் படுவேகமாக ஓட்டிச் சென்றிருப்பாரென்பதில் எவரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதை நியாயப்படுத்தும் முகமாக ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்…

  18. வடக்குப் பிரதேசம் யுத்தம் இடம்பெற்றதால் அங்;கு கிரிக்கெட் இருக்கவில்லை என்றும் இப்பொழுது எதிர்காலம் மிகத் தெரிவாகத் தெரிவதாகவும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார். சிரேஷ்ட கிரிக்கெட் வீரரான இயன் போத்தம் கலந்து கொள்ளவுள்ள 160 கிலோமீற்றர் தூர எட்டு நாள் பாத யாத்திரை ஒன்று கிளிநொச்சியில் தொடங்கப்பட்டவுள்ளது. பீபீஸ் பிக் சிறீலங்கா வோக் 2013 என்ற இந்தப் பாத யாத்திரை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் கருத்துத் தெரிவித்தார். வடக்குப் பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களாக யுத்ம் இடம்பெற்றது. அதன…

  19. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம்பெண்ணை இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சேனல் 4 புதிதாக வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் வழமைபோல மறுத்துள்ளது. சேனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார். 'இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப்புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கர்ணல் தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறுயாருமோ உயிரோடு பிடிபடவில்லை. …

    • 6 replies
    • 1k views
  20. சர்வதேச ஊடகவியலாளர் பேரவையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயப் பணிப்பாளர் ஜாக்யூ பார்க் மற்றும் பேரவையின் உறுப்பினர் ஆகிய இரு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இன்று வியாழக்கிழமை நாடு கடத்தப்படவுள்ளனர். இலங்கைக் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ள இவர்கள் இன்று காலை நாடு கடத்தப்படுவார்கள் என்று மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து, ஊடக கருத்தரங்கு நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே குறித்த இரு ஊடகவியலாளர்களும் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். சுதந்திர ஊடக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் இந்த இருவரும் பங்கேற்றுள்ளனர். இதேவேளை, குறித்த இரண்டு பேரும் கருத்தரங்கு நடாத்துவதற்காக இலங்கை விஜய…

  21. 'வடக்கிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும் – எமது குடும்பங்கள் குடிய அமர்த்தப்படவுள்ளன' 28 அக்டோபர் 2013 'இனியும் நாங்கள் இங்கே குடும்பங்கள் அங்கேயென இருக்கமுடியாது – பிரிகேடியர் நிஸங்க' - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வலி. வடக்கிலுள்ள காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்பட உள்ளன. விரைவில் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாகும். அதன் பின்னர் எமது படையினரது குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட உள்ளன. இனியும் நாங்கள் இங்கே குடும்பங்கள் அங்கேயென இருக்கமுடியாதென தெரிவித்தார் பிரிகேடியர் நிசங்க. வலி.வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியில் நிலை கொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் 513 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான அவர் பத்திரிiகாயளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்த…

  22. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பின் கடற்கரையில் 1.43 பில்லியன் அமெரிக்க டொலரில் கட்டப்படவுள்ள துறைமுக நகரத்தின் அபிவிருத்தித் திட்டமானது, வருகின்ற மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளதுடன், இத்திட்டமானது டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் வியாழனன்று தெரிவித்துள்ளனர். 230 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள துறைமுக நகரத்திற்கான திட்டமானது 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குள் முதலீடு செய்வதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. 230 ஏக்கர் நிலப்பரப்பில் துறைமுக நகரம் ஒன்றைக் கட்டுவதற்கான உடன்படிக்கையானது ஏற்கனவே சிறிலங்கா அரசின் சிறிலங்கா துறைமுக அதிகார சபையுடன் சீன …

  23. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீண்ட காலமாக கோடிகணக்கான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த பிரதான சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேரகொட கங்கானம்கே வீரசிங்க சுனில் எனப்படும் ருவான், ஹெட்டியாராச்சிகே பிரியந்த சுஜூவ குமார, சங்கராஜகே சுனில் சில்வா எனப்படும் சுஜி மற்றும் வட்டருக்க கமகே அத்துல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் நீண்டகாலமாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம் மேற் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் மேற்கொண்ட 12 கொள்ளைச் சம்பவங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மேலதிக புலன் விசாரணைகளை பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருக…

  24. சுழற்சிமுறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். சுழற்சிமுறை இணக்கப்பாட்டின் பிரகாரம் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் பணித்ததுடன் அதற்கு ஒக்டோபர் 31 வரை காலக்கெடு விதித்திருந்ததாகவும், கட்சியின் கட்டுக்கோப்பை மீறி- தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சாய்ந்தமருதில் பிரதேசவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் சிராஸ் மீராசாஹிப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுள் முரண்பாடுகளையும் தேவையற்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்த அவ…

  25. சென்னை: இலங்கை தமிழர்கள் உரிமைபெற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,"காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக முதலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்கள் நிலை பாட்டை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தமிழக மக்களின் மன நிலையையும், வெளி உறவு கொள்கையை கருத்தில் கொண்டு முடிவுகள் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற மாநாடுகளில் பங்கேற்பதன் மூலம்தான் நமது கருத்தை வலியுறுத்த முடியும். இலங்கை தமிழர்கள் உரிமை பெற 13–வது அரசியல் சட்டத்தை அமல்படுத்த இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது நல்லது" என்றார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.