ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
Published on September 26, 2013-11:31 am · No Comments திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா என்ற மேதாவி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது. (1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்த மகிழ்ச்சிக்கு அப்பால் விக்னேஸ்வரன் குறித்த ஐயப்பாடுகளே விஞ்சி நிற்கின்றது. வட ம…
-
- 1 reply
- 765 views
-
-
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வு நடத்தப்படக் கூடாது - சர்வதேச மன்னிப்புச் சபை 28 செப்டம்பர் 2013 இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடத்தப்படக் கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் இதனால், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடத்தப்படுவதனை தடை செய்ய வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை விவகாரத்தில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு தலைமைத்துவத்துடன் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து, பொதுநலவாய நாடுகள் அமைப்பு வெட்கப்படக்கூடிய வகையில் மௌனம் காத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த கால குற்றச் செயல்களுக்கு தண…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவு வழங்கியதுடன் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, வெனிசுவேலா ஆகிய நாடுகள் இலங்கையை கடுமையாக ஆதரித்து கருத்துக்களை முன்வைத்தன. அதேவேளை இலங்கை அரசாங்கம், மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் மனித உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற ஊக்குவிப்பதாக இந்தியா தெரிவித்தது. புனரமைப்பு, கண்ணிவெடி அகற்றல், மீள்குடியேற்றம் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் சாதனைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பை முள்ளிவாய்க்காலில் வைத்து அழித்தது போல் அதன் அரசியல் பிரிவhன தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆயுதப் போராட்டத்தில் அடைய முடியாத நோக்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் இராஜதந்திர ரீதியாக அடைய முயற்சித்து வருகிறது என்றும் இதன் முடிவுகள் நாட்டை நெருக்கடியான நிலைமைக்குள் கொண்டு செல்லும் எனவும் அவர் தெரிசித்துள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாம். அதற்கான காலம் வரவில்லை என்று ஆறு மாதத்திற்கு முன்னர் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன? அது விடுதலைப் புலிகளின் அரசி…
-
- 0 replies
- 457 views
-
-
விக்னேஸ்வரன் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உலக நாடுகளின் ஒத்துஐழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் என வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியிட்டிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்குவதனை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால், கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைவாக நிறைவேற்றப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தில் க…
-
- 0 replies
- 353 views
-
-
வடமாகாணசபை நிதி துஸ்பிரயோகங்கள் தொடர்கின்ற நிலையினில் அந்நிதியினை பயன்படுத்தியே மஹிந்தவிற்கான வாசஸ்தலம் யாழ்ப்பாணத்தினில் அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வலி.வடக்கினில் உயர்பாதுகாப்பு வலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கீரிமலை பிரதேசத்தினில் வரலாற்று பெருமை மிக்க நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்டி சுமார் மூன்று மாடிகளை கொண்டதாக இவ்வாசஸ்தலம் அமைக்கப்பட்டு வருகின்றது. முற்று முழுதான சிறீலங்கா படையினரின் கட்டுமானப்பிரிவுகளே கட்டுமானப்பணிகளினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.மறுபுறத்தே இங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களிற்கு திரும்ப அனுமதிக்கப்படாதுள்ளதுடன் அவர்களது காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சிகள் தொடர்கின்றன. எனினும் இக்கட்டுமானப்பணிகளிற்கு பெருமளவில…
-
- 0 replies
- 319 views
-
-
மாவீரர்களுக்கு கிடைத்த வெற்றி! அனந்தி எழிலன் சிறப்பு பேட்டி இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார். வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன். நக்கீரன் என்றதும், "உங்கட பத்திரிகையை நிரம்பப் பிடிக்கும்' என்றார், மகிழ்ச்சி பொங்க. கேள்விகளை முன்வைத்த…
-
- 5 replies
- 903 views
-
-
முகப்பு செய்திகள் கட்டுரை விளையாட்டு இந்தியா உலகம் தொடர்பிற்கு செய்தியாளர்கள் தேவை தொல்லை ஒன்று கழிந்தது- வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சி Published on September 27, 2013-8:33 am · No Comments வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளுக்கு பெரும் தொல்லையாக இருந்த சிவாஜிலிங்கம் வடமாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் தொல்லை ஒன்று கழிந்தது என வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாராட்டு தீர்மானம் ஒன்றையும் வல்வெட்டித்துறை நகரசபை கடந்த 24ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராகக்…
-
- 0 replies
- 695 views
-
-
Published on September 26, 2013-10:07 am · No Comments வட மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் மாகாண அமைச்சரவைக்கு பொருத்தமான, தொழில்சார் புலமை பெற்றவர்களை அமைச்சர்களாக நியமிக்க எண்ணியுள்ளது. இலங்கை அரசியல் யாப்பின் படி, மாகாண சபையொன்றுக்கு முதலமைச்சர் பதவி நீங்கலாக நான்கு அமைச்சரவை பதவிகள் உருவாக்க அதிகாரம் உள்ளது. இது தவிர தவிசாளர் ஒருவரையும் மாகாணசபை உறுப்பினர்களின் தெரிவு மூலம் நியமிக்க முடியும். மாகாணசபை கலைக்கப்பட்டாலும் அடுத்த மாகாணசபை பதவி ஏற்கும் வரை தவிசாளர் பதவியில் இருப்பார் என இலங்கை அரசியல் யாப்பின் மாகாணசபை சட்டம் கூறுகிறது. உதாரணமாக வடகிழக்கு மாகாணசபையின் தவிசாளராக சூரியமூர்த்தி பதவி ஏற்றிருந்தார். வரதராசபெருமாள் தலைமையி…
-
- 0 replies
- 446 views
-
-
பண்டாவின் தனிச்சிங்களச்சட்டம் சரியானதே: சந்திரிக்கா 27 செப்டம்பர் 2013 தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா அன்றைய காலத்தில் சிங்கள மக்களின் நன்மை கருதியே தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்தார் என்றும் அது சரியானதொரு திட்டமே அன்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமரதுங்கா தெரிவித்தார். எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது அவரது நினைவிடத்தில் வைத்து உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது தந்தை சிறுபான்மை இனத்திற்கு எதிராக தனிச்சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 400 வருடங்கள் இருந்த நாடு விடுதலையடைந்த பொழுது நாட்டின் எண்பத…
-
- 3 replies
- 691 views
-
-
-ரொமேஷ் மதுசங்க, லொசேறியன் லெம்பட் மன்னார் முருங்கன் புராதன ரஜ மஹா விகாரையிலுள்ள புத்தர் சிலைகள் நான்கு உட்பட சுமார் ஆறு சிலைகள் இனந்தெரியாதநபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/83830-2013-09-26-11-19-29.html
-
- 13 replies
- 1.3k views
-
-
- எம்.எஸ்.எம்.நூர்தீன் 'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது. அடுத்த ஆண்டு(2014) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. அந்த தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முக்கியமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் சுமார் 53000 வாக்குகள…
-
- 3 replies
- 536 views
-
-
வாழைச்சேனை மீனவர்களின் வலையில் 1,500 கிலோ கிராம் எடையுடைய புலிச்சுறா வகையான மீனினம் ஒன்று சிக்கியுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகிலிருந்த மீனவர்களின் வலையிலேயே குறித்த மீனினம் சிக்கியுள்ளது.இவ்வாறு சிக்கிய மீன் 24 அடி நீளமும், 15 அடி அளவான சுற்றளவையும் கொண்டுள்ளது. இந்த மீன் ஏலத்தில் விடப்பட்டு 69,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7359
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் நேற்றைய தினம் பேரவை அமர்வில் கருத்துக்களை முன்வைத்துள்ளன. இதன்போது மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகள் இரண்டு தரப்புகளாக பிரிந்து இலங்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, நோர்வே, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் என்பன இலங்கை குறித்த நவநீதம் பிள்ளையின் அறிக்கையை வரவேற்றுள்ள நிலையில் நவநீதம் பிள்ளையின் அறிக்கைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளன. எனினும் பாகிஸ்தான், பிலிப்பின், ஜப்பான் போன்ற நாடுகள் இலங…
-
- 6 replies
- 930 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்தில் பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவாவின் கடற்பரப்பில் படகு விபத்துக்குள்ளானது. அதிகளவானவர்கள் பயணித்த காரணத்தினால் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படகு விபத்துக்குள்ளான 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் படகுப் பயணிகளை திருப்பி அனுப்பி வைக்கும் திட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலிய அதிகாரிகள் இரண்டாவது புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைக்க முயற்சித்துள்ளது. புகலிடக் கேரிக்கையாளர்கள் தொடர்பில் அப்போட் அ…
-
- 0 replies
- 411 views
-
-
நியூசிலாந்து அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் ஆதரவு தேவைப்படுவதாக, நியூசிலாந்து தெரிவித்துள்ளது. 2015 - 2016ம் ஆண்டு காலப்பகுதிக்கான சுழற்சி முறைமை பாதுகாப்புப் பேரவை உறுப்புரிமைக்காக நியூசிலாந்து போட்டியிடுகின்றது. அமெரிக்காவின் நியூயோர்க்கில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உலகின் முக்கிய தலைவர்கள் நியூயோர்க்கில் கூடியுள்ளனர். எந்த நாட்டுக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இதுவரையில் தீர்மானிக்கவில்லை எனவும், நியூசிலாந்தின் கோரி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு, புளுமென்டல் வீதியில் வைத்து சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலக்கத்தகடு பொறிக்கப்படாத காரொன்றில் வந்த இனந்தெரியாத சிலர் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மேற்படி நபர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/83936-2013-09-27-13-01-29.html
-
- 0 replies
- 484 views
-
-
பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் - ஹெல உறுமய : 27 செப்டம்பர் 2013 வேலுப்பிள்ளை பிரபாகரனை விட சி.வி. விக்னேஸ்வரன் மிகவும் பயங்கரமான ஆபத்தான நபர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பிரபாகரனின் போர் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி எனினும் விக்னேஸ்வரனின் ராஜதந்திர முன்னணி கண்ணுக்கு புலப்படாத, மோதலில் ஈடுபடாத முன்னணி. கண்ணுக்கு தெரிவதும், மோதலில் ஈடுபடுவதும் இலகுவானது. எனினும் கண்ணுக்கு தெரியாத முன்னணியுடன் அதற்கு எதிராக செயற்படுவது இலகுவான காரியமல்ல. எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்றவகைய…
-
- 1 reply
- 740 views
-
-
வடக்கு மக்கள் சுய விருப்பின் அடிப்படையில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை – சம்பிக்க ரணவக்க 27 செப்டம்பர் 2013 வடக்கு மக்கள் சுய விருப்பின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் மக்களின் மெய்யான விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு மக்கள் வாக்களித்துள்னர் என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்கள் வடக்கு மக்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு, கூட்டமைப்பிற்கு வா…
-
- 1 reply
- 412 views
-
-
சிறிலங்கா: வடக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழருக்கு நல்லதொரு வாய்ப்பு [ வெள்ளிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2013, 09:07 GMT ] [ நித்தியபாரதி ] எந்தவொரு பிரச்சினைகளையும் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடனும், சமூக வரையறைகளுடனும் நோக்காது தெளிவான கல்வியறிவுடன் ஆராய்ந்து பார்க்கின்ற ஆளுமை மிக்க மனிதராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்குகிறார். இவ்வாறு The Asian Age ஊடகத்தின் ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெற்றுக் கொண்ட அமோக வெற்றியானது சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் சமூகத்திற்கு பிரகாசமான நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துவதற்கான ச…
-
- 0 replies
- 628 views
-
-
ஐ.தே.க புதியவர்களை நியமித்து கட்சியை முற்றாக மாற்றியமைக்க தீர்மானம் : 27 செப்டம்பர் 2013 ஐக்கிய தேசியக்கட்சியின் உயர் பதவிகளுக்கு சிரேஷ்ட தலைவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமித்து கட்சியை முற்றாக மாற்றியமைக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவிற்கு பொறுப்புகளும் அதிகாரங்களும் வழங்கப்பட உள்ளன. அவரை மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவில் இணைத்து கொள்வது என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இதனை தவிர சட்டம், அமைதி, ஜனநாயகம், நல்லாட்சி, சர்வதேச அரசியல், ஊடக சுதந்திரம், மனித உரிமை, தகவல் அறியும் உரிமை ஆகிய துறைகளுக்கும் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்…
-
- 0 replies
- 613 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பாரம்பரியத்தை காப்பாற்றியுள்ளது - SLMC ஹசன் அலி 27 செப்டம்பர் 2013 "முஸ்லீம் பிரதிநிதிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டமை TNAயின் முன் உதாரணம்" தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வழங்க முன் வந்துள்ளமை பாராட்டுக்குரியது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் தேர்தல் காலத்தில் பெரிய கட்சி சிறிய கட்சிகளுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என்ற முன்மாதிரைியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காண்பித்துள்ளது. "தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில…
-
- 0 replies
- 506 views
-
-
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது – கனடா 27 செப்டம்பர் 2013 கனடா, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் முழுப் பங்களிப்பையும் வழங்குமா என்பது கேள்விக்குறியே .. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக கனடா குற்றம் சுமத்தியுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் வெளிவிவகார அமைச்சர் மாநாட்டில் பங்கேற்ற கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 68ம் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்திரமாக இந்த மாநாடு நடைபெற்றது. கனேடிய அரசாங்கத்தின் இலங்கை குறித்த நிலைப்பாடு தெளிவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாட…
-
- 0 replies
- 375 views
-
-
பொதுநலவாய நாடுகள் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் - HRW 27 செப்டம்பர் 2013 பொதுநலவாய நாடுகள் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. மனித உரிமை விவகாரங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் வெளிவிவகார அமைச்சர்கள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த எட்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கூட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்த கூட்டத்தின் போது இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தீர்மானம் எடுக்க வேண்டுமென வலி…
-
- 0 replies
- 317 views
-
-
எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புலம்பெயர் தமிழர்களுக்கெதிராக வழிநடத்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். பொதுநலவாய உறுப்பு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்ளுக்கெதிராக குறித்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த முயற்சிகள் எடுக்கப்படவுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மேற்குலக நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குறித்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். எனவே இதற்கான ஒத்துழைப்பை பொதுநலவாய தலைவர் மாநாட்டில் இலங்கை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த மாநா…
-
- 0 replies
- 686 views
-