Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்கா செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனேடியக் கிளை நாளை ஒழுங்கு செய்துள்ள ஒன்றுகூடலில், இரா.சம்பந்தன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து அவர்கள் வரும் 12ம் நாள் அமெரிக்கா செல்லவுள்ளனர். வொசிங்டனில் அவர்கள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும், இதுதொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் தி…

  2. கனடாவிற்கு நேற்று மாலை விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நாளை கனடா ரொறன்ரோவில் நடைபெறவுள்ள மக்களுடனான சந்திப்பு நிகழ்வில் கலந்துவிட்டு ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிர்வரும் 12ம் திகதி செல்லவுள்ள இவர்கள் அமெரிக்க இராஜாங்க செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் மற்றும் இலங்கையின் அரசியல் நிலை குறித்து இச்சந்திப்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனேடியக் கிளை ஒழுங்…

  3. சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அரச, இராணுவ பயங்கரவாதங்கள் காரணமாக தாயகத்தில் வாழ முடியாத நிலையில் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று அங்கு பிரஜாவுரிமை பெற்றுத் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகள் தற்போது தமது பூர்வீக தாயகத்திற்கு திரும்பியிருக்கின்றனர். புலம்பெயர் தேசத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பருவகால விடுமுறையைப் பயனுள்ளதாக களிப்பதற்காகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் தாயத்திற்கு வந்திருக்கின்றனர். பல வருடங்களாக காணாமல் இருந்த தமது ஊர் உறவுகளை நேரில் பார்த்து இவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தாயகத்தில் கால் பதித்துள்ளமையால் இவர்கள் இரட்டிப்பு சந்தோசத்தில் த…

    • 2 replies
    • 518 views
  4. வெளி மாவட்ட மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளியைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு வந்து கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் புகுவதால் கிளிநொச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு தடை விதிக்குமாறு கோரியும் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மாணவர்கள் சார்பாக சில மாணவர்களுடன் இணைந்துள ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிப்பதற்காக குறைந்தளவான வெட்டுப்புள்ளி கிளிநொச்சி மாவட்டத்திற்கே வழங்கப்படுகின்றது. இந்தச் சந்தர்ப்பத…

    • 1 reply
    • 404 views
  5. வேளாங்கண்ணியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயன்ற 49 ஈழத் தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவ்வப்போது முகாம்களில் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயற்சிக்கின்றனர். தற்போது வேளாங்கண்ணியில் இருந்து 49 பேர் படகு மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர். அவர்களை பொலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நாகை குற்றப்பிரிவு பொலீசார் விசாரணை நடத்தி வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95057/language/ta-IN/article.aspx

    • 1 reply
    • 499 views
  6. வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் காணிகளை பெருமளவில் இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். படையினர் குறித்த காணிகளிலிருந்து வெளியேறிய போதிலும் அந்தக் காணிகளை பொதுமக்களுக்கு பயன்படுத்த இன்னமும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தி என்ற பெயரில் அரசாங்கம் பாரியளவில் காணிகளை சுவீகரித்…

    • 1 reply
    • 343 views
  7. அபிவிருத்தி நடவடிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் விரும்பவில்லை : வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை தமிழ் அரசியல்வாதிகள் விரும்பவில்லை என அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இராணுவம் சாதாரண மக்களின் காணிகளை கைப்பற்றவில்லை. விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் காணிகளையே இராணுவத்தினர் கைப்பற்றினர். காணி ஒன்றின் உரிமையை உறுதிப்படுத்த மக்களும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. தமிழ் மக்கள் மீள்குடியேற்றுதில் இருந்த பிரதான தடை கண்ணி வெடிகளாகும். தமிழ் மக்கள் அபிவிருத்தியை மாத்திரமே கேட்கவேண்டும் என கூறியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/artic…

    • 1 reply
    • 370 views
  8. இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இவ்வாறான வழிமுறையை கையாளும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இந்திய பகிஷ்கரிக்க வேண்டும் என்ற அழுத்தங்களை கொடுக்க இந்த அமைப்புகள் தமிழக அரசியல் கட்சிகளை பயன்படுத்தி வருகின்றன. முக்கியமாக பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்…

    • 1 reply
    • 470 views
  9. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தேர்தல் கால அறிவுறுத்தல்களை தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்வி எங்கள் மூலதனம். பரீட்சை எழுதுகின்ற எமது மாணவர்களின் எதிர்கால வாழ்வு எங்கள் தேசத்தில் மிகவும் அடிப்படையானது. அந்த வகையில் இது தேர்தல் காலம் எனினும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எமது மாணவர்கள் இப்பரீட்சையில் தமது முழு ஆளுமைத்திறனையும் வெளிப்படுத்தி சித்தி பெற வேண்டும் என்பது எமது அவா. இதனைக் கருத்திற் கொண்டு எமது வேட்பாளர்கள் தமது தேர்தல் கால பிரசார நடவடிக்கைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். மாணவ மாணவியரின் நலன் கருதி அவர்கள…

    • 1 reply
    • 392 views
  10. ஜனாதிபதியின் புதிய இணைப்பாளர் ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது நியமனக் கடிதத்தை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான சிவராஜா, இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். http://tamil.adaderana.lk/news.php?mode=head&nid=1308

    • 4 replies
    • 695 views
  11. இராணுவத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளை கோரும் முனைப்புக்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். வெலிவேரிய தாக்குதல் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருந்தது. இராணுவத்தினரும் காவல்துறையினரும் தனித் தனியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்தி வருவதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். படைவீரர்களின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் இராணுவத்தின் நன்மதிப்பிற்கு குந்தக…

    • 2 replies
    • 474 views
  12. ஈழப்பொர் - தெரியாத நிகழ்வுகள்:.. ஈழப்போராட்டத்தில் நடந்த பல நிகழ்வுகள் எமது விடுதலைபோராட்டத்தை பாதித்திருப்பதை நாம் அறிவோம். ஆணால் அந்த நிகழ்வுகள் பலருக்கு, பொதுவாக போராட்டத்துக்கு ஆதரவு குடுத்த மக்களுக்கு தெரியாது. நான் பலமுறை இது பற்றி நாழில் கிண்டியபோதும், தேசிய நலன் கர்தி யாழ் இதுக்கு அனுமதிக்கவில்லை.. இன்று எமக்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.. கடந்த முப்பது வரிடங்களாக நடந்த எமக்குதெரியத, அரைகுறையாக தெரிந்த விடையங்களி இங்கு அலச விரும்புகிறேன்... தெரிந்தவர்களிடம், எனது முத கேள்வி சூசை பற்றியது.. யாருக்கு என்ன தெரியும்.. நடந்தது உண்மையிலையே படகு விபத்தா? பனங்காய்

  13. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை ஆஸியில் வரவேற்ற முக்கியஸ்தர்கள்! [Thursday, 2013-08-08 16:40:58] சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் முக்கிய பிரமுகரான திரு.நடராசா அவர்கள் வரவேற்றார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவிற்கு வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.சிறிதரன் அவர்களை சிட்னியில் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது அவுஸ்திரேலியா தமிழர் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான திரு.நடராசா அவர்கள் வரவேற்பதையும் அவருடன் …

  14. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளமான தங்க நீர்த்துறை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் இதனை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மேற்படி நீர்த்துறையைப் பாரிவையிடுவதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - நிசல் பதுகே) http://tamil.dailymirror.lk/--main/78285-2013-08-09-11-09-49.html

  15. உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு தெஹியத்தகண்டி, ஹேனானிகல கிராமத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலா அத்தோ வரவேற்றார். இவ்வைபவத்தின் போது ஆதிவாசிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வாழ்வாதாரப் பொதிகள் போன்றன ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டன. இவ்வைபவத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு, வசந்த சந்திரபால) http://tamil.dailymirror.lk/--main/78279-2013-08-09-10-45-15.html

  16. இலங்கை அரசுக்கு சர்வதேசத்தின் நெருக்குதலின் காரணமாக இன்று வட மாகாண தமிழர்கள் எதிர்கொண்டுள்ள தேர்தல் வட கிழக்கு தமிழர்களை பொருத்தவரை மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமான ஒன்றாகும். இத்தேர்தலில் வடக்கு தமிழர்கள் தாயக கோட்பாட்டின் கீழே உள்ளார்கள் என்பதை சர்வதேசத்துக்கு பறைசாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரும் தமிழருக்கும் உண்டு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களின் அறிக்கையில், புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது தாயக தமிழர்கள், தாயகத்தில் வாழ்கின்ற உங்களது உறவுகள், நண்பர்களிடம் இத்தேர்தலின் வாக்களிப்பின் அவசிய தன்மையையும், இதனால் ஏற்படும் நன்மைகளையும் எ…

  17. கடந்த இரு தினங்களாக யாழ் தீவகமான புங்குடுதீவுக் கரையில் ஒதுங்கிய 7 ஆண்களின் சடலங்களும் வெலிவேரியாவில் கோத்தாபாயவின் நேரடி உத்தரவின்பேரில் கொல்லப்பட்ட சிங்கள ஆண்களினுடயவை என்று சிங்கள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் படங்களுடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு கரையொதுங்கிய சடலங்களில் இரண்டைத்தவிர மீதியானவை முழு நிர்வாணமாக இருந்தன என்றும், எவற்றிலுமே துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படவில்லை என்று தெரிவிக்கும் அந்த இணையச் செய்தி, இவை அனைத்திலுமே முள்ளந்தண்டுப்பகுதியில் பாரிய காயம் காணப்படுவதாகவும், சிலவற்றில் நெடுந்தூரம் இழுத்துவந்ததற்கான அடையாளமாக கால்களில் தோலுரிந்து காயம் காணப்படுவதாகவும் கூறுகிறது. மேலும் சில சடலங்களில் கால்ப் பெருவிரல்கள் ஒன்றாகக் கட்டப்பட்டிருந…

  18. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவiணியின் பாராளுமன்றப் பணிக்காலம் எதிர்வரும் 2013-ஒக்டோபர் 1ம் நாளுடன் நிறைவுக்கு வருகிற நிலையில் இரண்டாம் தவணைக்காலத்துக்கான தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் (08-08-2013) வெளியிடப்பட்டுள்ளது. ஓக்ரோபர் 26ம் நாள் சனிக்கிழமை புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ள இத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டணையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் 2013-ஒக்டோபர் மாதம் 1ம் திகதிஇ செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஒக்டோபர் 2ம் நாள் புதன்கிழமை முதல் ஒக்டோபர் 8ம் நாள் செவ்வாய்க்கிழமை வரை தாக்கல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…

  19. அரசாங்கம் காணிகளையும் கடலையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காணி அங்குலத்தையும் அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதுடன், கடலை சீனாவிற்கு விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊடாக அரசாங்கம் 568 ஏக்கர் கடல் பரப்பை சீனாவிற்கு விற்பனை செய்ய உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 182 பில்லியன் ரூபா செலவில் இந்த கடல் பகுதியில் மண் நிரப்பப்பட்டு, நகரமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் குடிநீருக்காக உயிர் துறக்கும் தருணத்தில் யார் எதற்காக இதனைச் செய்கின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டி.ஆர். விஜேவர்தன ம…

  20. ஆறு மாத காலத்திற்குள் இரண்டு மொழிகளிலுமான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம், உச்ச நீதிமன்றில் வாக்குறுதி அளித்துள்ளது. பிரதி சொலிசுட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இரண்டு மொழிகளிலும் அச்சிட்டு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு மொழிகளிலும் தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டு வெளியிடாமையினால் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுவதாக, மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் தனஞ்சய குருகே என்ற நபர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது பிரதி சொலிசுட்டர் ஜெனரல் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்…

  21. வெலிவேரியவில் போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை பயன்படுத்தி, சிறிலங்கா இராணுவத்தின் மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் அழைப்புகளைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. வெலிவேரிய சம்பவம் தொடர்பாக, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐதேக விடுத்துள்ள கோரிக்கை குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போராட்டம் நடத்தியவர்கள் மீது படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சூழ்நிலை தொடர்பாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகமும், சிறிலங்கா காவல்துறையும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றன. காவல்துறைமா அதிபர் இலங்ககோன் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவரிடம், விடுத்த வே…

  22. யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பான லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாத அமைப்பை சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவே வழி நடத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த அமைப்பின் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மீதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்க தயாராகி வருகிது எனவும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடமாகாணசபை தேர்தல் காலத்தில் இந்த பயங்கரவாத அமைப்பை பயன்படுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு …

    • 3 replies
    • 517 views
  23. ஊவா மாகாணத்தில் தோட்டபுறங்களில் காணப்படும் சட்டவிரோத மது பாவனைனைகு;கெதிரான எதிர்ப்;பு ஆர்பாட்டமானது ஊவா மாகாண பெருந்தோட்டப்புற மக்களின் ஏற்பாட்டினால் தோட்ட இளைஞர் யுவதிகளுளின் பங்குபற்றலுடன் ஊவா மாகாண சபைக்கு முன்பாக இன்றைய தினம் 08.08.2013 நடைபெற்றது. இதன் போது சட்ட விரோத மதுவினால் சீரழியும் எமது இளைஞர் சமூகத்தினை பாதுகாப்போம், தோட்டப்புற மக்களை நாசம் செய்யும் சட்டவிரோத மதுபாவனையை ஒழிப்போம், பெருந்தோட்டங்களில் மதுவை ஒழிக்க அனைவரும் ஒன்றினைவோம், கசிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்போம், என்ற பதாதைகளை தாங்கிய வண்ணமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொடியை ஏந்திய வண்ணமும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தோட்ட இளைஞர்கள் பெருமளவில் ஈடுப்பட்டிருந்தனர். மாகாண சமூக நலன்புரி, தோட்ட…

    • 2 replies
    • 724 views
  24. இலங்கை மேமன் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது. (pic by : J.Sujeewakumar) http://www.virakesari.lk/article/local.php?vid=6365

    • 3 replies
    • 350 views
  25. வவுனியாவில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது வேவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல் போயிருக்கின்றமை தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்படு செய்யப்படடுள்ளன. வவுனியா கல்மடு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பூ. சதீஸ் என்ற சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இச்சிறுவன் தினமும் ஆலயம் ஒன்றிற்கு பூசையினை மேற்கொள்ள சென்று வரும் நிலையிலேயே கடந்த 5ம் திகதி சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இதேவேளை 13 வயதான சு. தில்சான் 9 வயதான நா. டிலக்கசன் முதலாக மூன்று சிறுவர்களைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இச்சிறுவர்களை இராணுவத்தினரும் காவல்துறையினரும் மன்னார் முள்ளிக்குளம்…

    • 1 reply
    • 499 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.