ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
நோர்வேயில் வசித்துவரும் இலங்கையரின் பிள்ளைகளை பலவந்தமாக சிறுவர் காப்பகத்தில் இணைத்துக் கொள்ளும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும், சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நோர்வேயிலுள்ள இலங்கையைச் சேர்ந்த பெற்றார் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது (Audio) http://tamilworldtoday.com/archives/22933
-
- 0 replies
- 388 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22912
-
- 1 reply
- 535 views
-
-
இந்தியாவின் ‘‘றோ’’ உளவுப் பிரிவின் ஆலோசனையும் சம்பந்தனின் அரசியல் வியூகமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடமகாண சபையின் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதன் பின்னணியாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர குற்றம் சாட்டினார். சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படக்கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப்புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முனைந்துள்ளதாகவே... மேலும்... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=8103:2013-07-17-03-45-09&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 490 views
-
-
மாவை சேனாதிராஜா முதலமைச்சராவதை ஏன் இந்தியா விரும்பவில்லை: ஏசியன் ரிபியூன் இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்று ஆசியன் ரிபியூன் இணைத்தளம் தெரிவித்துள்ளது.இணையத்தளத்தின் ஆசிரியர், தமது ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய உளவு நிறுவனமான ரோ, மாவை சேனாதிராஜாவின் மீது குற்றச்சாட்டை சுமத்தி இந்திய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.இதன்படி, 2004ம் ஆண்டில் மிதவாத தமிழ் தலைவர்களை மாவை சேனாதிராஜாவே விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்திவிட்டார். இந்தியா எச்சரித்தபோதும் மாவை சேனாதிராஜா, இந்த விடயத்தில் மும்முரமாக இருந்ததாக ரோ குறிப…
-
- 7 replies
- 963 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை திருத்தம் ஏதுமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8-ந் தேதி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைக்கான ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவின் கூட்டம் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைமை நிர்வாகி சுப. வீரபாண்டியன், திமுகவின் மு.க. ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …
-
- 1 reply
- 446 views
-
-
நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பெண் விரிவுரையாளரை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான அப் பல்கலையின் மாணவனும் வைத்தியருமான சுரேந்திரஜித்தை தொடர்ந்தும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் நுகேகொட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதே மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார். சந்தேக நபரின் வைத்திய பரிசோதனை அறிக்கையினை நீதிமன்றில் இன்றைய தினம் சமர்ப்பித்த பொலிஸார் சந்தேக நபரை வெளியே விடுவது ஆபத்தானது என சுட்டிக்காட்டினர். சந்தேக நபர் எவ்வேளையிலும் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள…
-
- 1 reply
- 519 views
-
-
வடக்கு மாகாணத்தில் தேர்தல் பணிகளுக்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் எனினும், குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் இராணுவத்தினர் களமிற்கப்படுவர் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=22851
-
- 1 reply
- 358 views
-
-
நாட்டில் தொடர்ந்த பயங்கரமான போர்ச் சவாலை வெற்றிக்கொண்டு, நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த எமது ஜனாதிபதியையும், மற்றும் பாதுகாப்புச் செயலாளரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறும் கெல்லம் மெக்ரேவுக்கு உந்து சக்தியை கொடுத்து செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்ல தெரிவித்துள்ளார். அவ்வாறு இவர்கள் மன்னிப்பு கோரவில்லை என்றால், 22 மில்லியன் மக்களின் சுதந்திரத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என, முழு நாட்டு மக்களின் சாபத்திற்கு உள்…
-
- 2 replies
- 264 views
-
-
வடக்கு மாகாணத்திற்கு தேர்தலை நடத்த தயாராகி வருவதாக அரசாங்கம் காண்பித்தாலும், அங்கு தேர்தல் உறுதியாக நடைபெறுமா என்பது இன்னமும் சந்தேகமாகவே இருப்பதாக வடக்கு மாகாணத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். http://tamilworldtoday.com/?p=22774
-
- 1 reply
- 693 views
-
-
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க..http://tamilworldtoday.com/?p=22737
-
- 1 reply
- 549 views
-
-
இலங்கை அரசுத் தலைவரின் சட்டத்தரணி மொஹான் பீரிஸ், அந்நாட்டின் பிரதம நீதியரசர் பதவியை ஏற்பதைத் தடை செய்யக் கோரும் அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்போவதாக உயர்நீதிமன்றம் நேற்று (16) அறிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=22891
-
- 0 replies
- 293 views
-
-
13ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்காக இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இலங்கைக்னா இந்தியத் தூதுவர் ஜஸ்வந்த் குமார் சின்ஹா விளக்கம் கேட்டுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22883
-
- 0 replies
- 389 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா் 16 ஜூலை 2013 தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா் முதலமைச்சா் வேட்பாளராக சி.வி.விக்னேஸவரன் நியமிக்கப்பட்டமைக்கு யாழ்ப்பாணம் மன்னார் மறை மாவட்ட ஆயா்கள் வாழத்து கூறியுள்ளனா். தமிழ்ததேசிய கூட்டமைப்பின் முதலமைச்சா் வேட்பாளராக சி.வி.விக்னேஸவரன் வரவேண்டும் என தான் ஏற்கனவே கூறியிருந்ததாக மன்னார் ஆயா் இராயப்பு யோசப் தெரிவித்துள்ளர்ர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு நியாயப்படுத்தக்கூடிய ஒருவா் கிடைத்தமை தமிழ் சமூகத்துக்கு பெருமை என்றும் ஆயா் இராயப்பு யோசப் கூறினார். யுத்தம் அழிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சென்றும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்…
-
- 9 replies
- 989 views
-
-
வடக்குத் தேர்தலில் அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இராணுவம் முழுமையாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22865
-
- 0 replies
- 359 views
-
-
மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரணைக்குளத்தில் (ஈரளக்குளம்) மீன் பிடியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மீனவர்கள் அதிகளவிலான பைற்றர் ரக மீன்களை பிடித்து வருகிறார்கள். உண்பதற்கு உகந்ததற்ற மேற்படி பைற்றர் மீனினமானது மிகவும் அதிகளவிலே வலைகளில் படுவதால் தாங்கள் பெரும் சிரமத்தினை எதிர் கொள்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பில் ஆராய பிரதேச செயலாளர் உதயசிறிதர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன் ஆகியோர் குளத்திற்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் பைற்றர் தொல்லையிலிருந்து மீனவர்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்தவதாகவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/local.php?vid=5913
-
- 1 reply
- 559 views
-
-
கடந்த வாரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பிரான்ஸ் திரைப்பட நிகழ்வில் ('flying fish") பறக்கும் மீன்கள் என்ற திரைப்படம் பகிரங்கமாக திரையிடப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டிற்குள் அந்த திரைப்படத்தை திரையிடுவதற்கு தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர்நாயகம் லக்ஷ்மன் உருகல்ல தெரிவித்துள்ளார். மேலும் http://tamilworldtoday.com/?p=22777
-
- 0 replies
- 591 views
-
-
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமென கூறும் No Fire Zone விவரணப்படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரேவுக்கு ஒத்து ஊதும்... மேலும், http://tamilworldtoday.com/?p=22754
-
- 0 replies
- 715 views
-
-
ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை செப்டெம்பர் 30 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார். சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார். இந்நிலைய…
-
- 2 replies
- 639 views
-
-
வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும் அரசியலில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது, தமிழ் பேசும் மக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வட மாகாணத்துக்குரிய முதலமைச்சர் வேட்பாளருக்கான அனைத்து தகுதிகளும் த. தே. கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு இருந்தும் அரசியலில் ஈடுபடாத முன்னாள் நீதியரசரை தெரிவு செய்துள்ளமை தமிழ் …
-
- 0 replies
- 1k views
-
-
நடைபெறவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க..http://tamilworldtoday.com/?p=22720
-
- 2 replies
- 496 views
-
-
கடந்த காலங்களில் நடந்ததை முற்றாக மறந்துவிட்டதாகவும், இன்று வாழ்வது மாத்திரமே தேவையாக இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். மேலும்,
-
- 4 replies
- 883 views
-
-
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் நடைபெற்றுள்ளது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வடக்கு, மத்திய மற்றும் வட மேல் ஆகிய மாகாண சபை தேர்தல்களில் மரச் சின்னத்தில் போட்டியிடப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார். எனினும் வட மாகாண சபை தேர்தலில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் அது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார். எனினும் அது தொடர்பாக இதுவரை எந்தவித கோ…
-
- 0 replies
- 526 views
-
-
கிளிநொச்சியில் முதற் தடவையாக சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதிவரை கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் நளின் ஆட்டிகல தெரிவித்தார். வட மாகாண விவசாயிகளுக்கும், மக்களுக்கும் சிறந்ததொரு சந்தர்ப்பத்தை உருவாக்கும் நோக்குடனே இந்த கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே தலைமையில் நடைபெற்றது. சுமா…
-
- 0 replies
- 562 views
-
-
வன்னியில் கனகராயன்குளத்தில் தொடர் நடக்கும் தொடர் களவுகள் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளன. தனியார் வீடுகளிலும் அரச அலுவலகங்களிலும் என்று கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 12 களவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 14மே; திகதி ஒரே நாளில் நான்கு இடத்தில் களவுகள் இடம்பெற்றுள்ள சம்பவம் மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. அண்மையில் கனகராயன்குளம் பாடசாலை ஆசிரியர் ஒருவரது வீட்டில் பகற்கொள்ளை நடந்துள்ளது. வேலைக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு கள்வர்கள் பகலில் இலக்கு வைக்கின்றனர். தனிப்பட்டவர்களின் வீடுகளில் நடந்த இந்த களவுச் சம்பங்களைத் தொடர்ந்து சில அரச அலுவலகங்களிலும் களவுகள் இடம்பெற்றுள்ளன. கிராம சேவகர் அலுவலகம் உடைக்கப்பட்;டு களவுச் …
-
- 0 replies
- 368 views
-
-
"என்னைப் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும். அதுவரை நான் உணவருந்த மாட்டேன். அரசு எனக்கு தீர்வுபெற்றுத் தராவிட்டால் நான் எனது உயிரை மாய்த்துக் கொள்வேன்' எனத் தெரிவித்து தமிழ் அரசியல் கைதி ஒருவர் 10 நாள்களாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார் என சிறைச்சாலை வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள எஸ்.கேதீஸ்வரன் (வயது22) என்ற கைதியே இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். காடுகளில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு நீர் ஆகாரம் வழங்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு கேதீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவர் மொனராகலை நீதிமன்றம் ஊடாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெல்லாவளி மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் தாய், தந்தை அற்ற…
-
- 0 replies
- 300 views
-