Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முதலமைச்சர் வேட்பாளர் இழுபறி மீண்டும் TNA யின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிற்போடப்பட்டது 13 ஜூலை 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றிரவு 8மணியளவில் (12.07.2013) ஆரம்பமாகி நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிர…

  2. வடக்கில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள இராணுவத்தினரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22212

    • 0 replies
    • 339 views
  3. யாழ்ப்பாண காவல் நிலையங்களில் விசேட பிரிவுகள் 13 ஜூலை 2013 யாழ்ப்பாண காவல் நிலையங்களில் விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல காவல் நிலையங்களிலும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு இந்த விசேட பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. தமிழ் பேசும் காவல் துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் சகல நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. 24 மணித்தியாலங்களும் இந்த விசேட காவல்துறைப் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது…

  4. வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியமில்லை – அரசாங்கம் 13 ஜூலை 2013 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் கட்சிகள் உள்நாட்டு கண்காணிப்பு பொறிமுறைமை குறித்து நம்பிக்கை கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தீய நோக்கங்களின் அடிப்படையிலேயே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு கோரி வருவதாகவும், குறிப்பாக வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈட…

  5. வடக்கு தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 13 ஜூலை 2013 வட மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பார்களை ஈடுபடுத்தப் போவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முக்கியமான தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது வழமையானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தல்களில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் அல்லது ஈடுபடுத்தக் கூடாது என எந்தவிதமான நியதிகளும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.' http://www.globaltamilnew…

  6. மஹியங்கனை நகரில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் அரபா மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரமழான் காலத்தில் முஸ்லிம்களின் இராக்கால வணக்கமான தராவிஹ் தொழுகை முடிந்த பிறகு சுமார் இரவு 11.10 மணியளவில் ஐந்து அல்லது ஆறு பேர் கொண்ட குழுவொன்று குறித்த மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா மீது கல் வீசியுள்ளனர். இதனால் பள்ளிவாயலின் நான்கு ஜன்னல் கண்ணாடிகளும், ஒரு கதவின் கண்ணாடியும் சேதமாகியுள்ளதுடன் பள்ளியின் உற்பகுதிக்குள் பன்றி இறைச்சியையும் வீசியுள்ளனர். பள்ளியின் கழிவறைப் பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மஹியங்கனை பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பொலிசார் பள்ளிவாயலில் காவல் கடமையில் ஈடுபட்டுள்…

    • 6 replies
    • 833 views
  7. வடமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் சென்றுள்ளார். சாவகச்சேரி பிரதேச மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவ விடுதிகளைப் பார்வையிட்டதோடு அங்கிருந்த சிறுவர்களை தூக்கி ´வாங்க மச்சான் வாங்க´ என்ற பாடலைப்பாடி மகிழ்வித்தார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22185

    • 0 replies
    • 297 views
  8. வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கானத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22142

    • 0 replies
    • 291 views
  9. பொதுபல சேனா, இராவணா சக்தி ஆகிய அமைப்புக்களை சட்டரீதியாக தடைசெய்யும் முயற்சிகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க களமிறங்கியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22136

    • 0 replies
    • 399 views
  10. நுவரெலியா மாவட்டத்தில், நான்கரை கோடி ரூபா செலவில் சீதைக்கு கோயில் கட்ட இந்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. காத்தல் கடவுளான கண்ணனின் பத்து அவதாரங்களின் ஒன்றாக இராமனை இந்துக்கள் வழிப்படுகிறார்கள். இராமன் அவரது மனைவியான சீதையின் சரிதம் கூறுகின்ற இதிகாச புராணமே வால்மீகி எழுதிய இராமாயணமாகும். அதில் இலங்கையின் அரசனான இராவணனால் சீதை கவரப்பட்டு இலங்கையின் மலைக்காடுகளில் சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையின் கற்பின் மீது மக்கள் முன்வைத்த சந்தேகத்தை தீர்க்க 'அக்கினிப் பிரவேசம்' செய்த இடம் இலங்கையின் நுவரெலியாவை அண்மித்த பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 'சீதா எலிய'…

  11. -எஸ்.கே.பிரசாத் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாவகச்சேரி பிரதேசத்திற்கான அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா இந்த அலுவகத்திற்கச் சென்று அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/74787-2013-07-12-15-14-36.html

  12. நாளை இரவு 8.40 பிரான்சின் அரசு தொலைக்காட்சியான பிரான்ஸ் 2 சனலில் Envoyé Spécial என்ற தலைப்பில் சிறீலங்கா பற்றிய ஆவணப்படம் ஒன்று காண்பிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் சிறீலங்காவின் உல்லாச பயணம் போருக்கு பிந்திய நிலைமைகள் பற்றி விபரணங்களும் தேசியத்தலைவர் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி செய்திகளும் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது. இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு பணிபுரியும் சில சிங்கள ஊடகவியலாளர்களின் உதவி பெறப்பட்டதாகவும் அறிய முடிந்தது. பிரான்சிலுள்ளவர்கள் குறிப்பாக இளையோர் தவறாது இந்த ஆவணப்படத்தை பார்த்து 'உண்மைகளை திட்டமிட்டு மறைத்தல்' 'தவறான வரலாற்றை கூறுதல்' சிறீலங்காவுக்கு உல்லாசப்பயணம் செய்யும்படி பிரெஞ்சு மக்களை துண்டும் விதத்தில் காட…

    • 9 replies
    • 1.1k views
  13. (ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சம்பந்தர் நேற்று வியாழன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்) இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் நேற்று வியாழக்கிழமை அவரை சந்தித்துப் பேசினார். இது தவிர, காணி விடயங்கள், மக்களை அவர்களின் ஆரம்ப இடங்களிலேயே மீளக்குடியேற்றுதல் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே முடக்குதல் அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளி்ட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட…

    • 2 replies
    • 731 views
  14. பதுளை மாவட்டம் மஹியங்கனை அரபா ஜூம்ஆப் பள்ளிவாசல் இனந்தெரியாத காடையர்களால் அடித்து நாசமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22093

  15. -எஸ்.கே.பிரசாத் தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வாவை சாவகச்சேரியில் உள்ள சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரிவித்தார். இன்றைய வருகை தொடர்பில் கேட்டபோது... நான் மக்கள் தொடர்பாடல் அமைச்சர். நான் இங்கு வருவது பிழையில்லை. முப்பது வருடகாலமாக இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மக்கள் பிரபாகரனுக்கு பயந்து வெளியில் வரமுடியாத நிலை காணப்பட்டது. அந்தக் காலத்திலும் நான் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கின்றேன். கடந்த…

  16. முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை அனுஷ்டித்துவரும் வேளையில், மஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது நேற்றிரவு 11.20 மணியளவில் கற்களால் தாக்குதல் நடாத்தியதோடு, அங்கு பன்றி இறைச்சியையும் வீசியெறிந்துள்ள சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவ+ப் ஹக்கீம், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதுபற்றி பள்ளிவாசல் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்த நீதியமைச்சர் ஹக்கீம், மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடனும் கதைத்து அங்கு சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் கூறியுள்ளார். சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் அப் பகுதியில் மின்சா…

  17. ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், செல்லப்பா பத்மநாதனின் 50 வருடகால சமூக, அரசியல் பணிகளைக் கௌரவிக்கும் பாராட்டு நிகழ்வொன்று இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். வடமாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள போதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இன்னமும் இழுபறி நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:/…

  18. ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளரின் இலங்கை விஜயம், இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு ஆகியவற்றை மையப்படுத்தி, மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பல்வேறு வழிகளில் அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22013

  19. 13வது திருத்தச்சட்டத்தில் கைவைப்பதென்ற பேச்சிற்கே இடமில்லை. தேவையாயின் 13 பிளஸோ அல்லது 13 டபிள் பிளஸோ தான் இனி சாத்தியம். இந்திய அரசின் தற்போதய நிலைப்பாடு அதுவே என இலங்கைக்கான இந்திய துணைதூதுவராலய கொன்சிலர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார். வாசு தேவநாணயக்காரவின் செயலாளர் கலாநிதி மோகனினால் எழுதப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பான தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான நூலினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. அங்கு கலந்த கொண்டு சிறப்புரையாற்றிய அவர், அண்மைய இரு நிகழ்வுகள் முக்கியமானவை எனக் குறிப்பிட்டார். ஓன்று பஸில் ராஜபக்ஸவினது இந்திய விஜயம். இரண்டாவதுஇந்திய தேசிய பாதுகாப்பமைச்சின் ஆலோசகர் மேனனினது இலங்கை விஜயம். இவற்றின் போது 13வது திருத்தச்சட…

  20. சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், மனித உரிமை நிலைப்பாடானது மோசமாகக் காணப்படுவதாக, தற்போது பிரித்தானியாவின் புதிய குடிவரவு நடைமுறை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் புகலிடம் கோரிய ஒருவர் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ்ப் புலி உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்பட்டிருப்பின் அதுதொடர்பான முழுமையான விசாரணை தேவைப்படுவதாக தற்போது பிரித்தானியாவால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் தொடர்பான ஆதாரங்களை வழங்கிய தமிழ் புலம்பெயர் ஆர்வலர்கள், தமிழ்ப் புலி உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்கள் கொழும்பு வி…

  21. யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பகுதிகளில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என எஸ்.எஸ்.பி தெரிவித்தார். யாழ்ப்பாணம் காவல்துறை தலமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதன் போதே எஸ்.எஸ்.பி ஜெவ்ரி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பகுதிகளில் காவல்துறையினரின் விசேட நடவடிக்கைகளில் 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 127 பேரும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 99 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் அடிகாயங்களை ஏற்படுத்தினர் என…

  22. தமிழ்நாடு - ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ் சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் ஈழத்தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு மாணவியை அப்பள்ளியில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் தியாகராஜன் என்பவர் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் கொதிப்படைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று (11) மாலை திடீரென பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த பவானிசாகர் பொலிஸ் பொறுப்பதிகார…

  23. எஸ்.கே.பிரசாத் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ டிரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ஜே.லியோ (வயது 21) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/74719-2013-07-12-06-21-34.html

  24. அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர், கிளிநொச்சியில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21912

  25. நோர்வே தூதுவருக்கு ஒரு தேனீர் கூட கொடுக்க மறுத்த சாய்ந்தமருது முஸ்லீம்கள் பொதுபலசேனவிற்கு நோர்வே ஒருபோதும் உதவவில்லை உதவப்போவதுமில்லை. நாம் எப்போதும் உலக சமாதானத்திற்காகச் செயற்பட்டுவருகிறோம். இலங்கையில் கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தை நாமறிறோம். அதன்போது எமது நாடு வகித்த வகிபாகத்தை உலகறியும். எனவே நாம் எப்போதும் சமாதானத்தின்பால் செயற்படுகின்றவர்களுக்கே உதவிசெய்வோம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோச்சென் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைக்கான பேரவையின் அம்பாறை மாவட்ட குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடிய வேளையில்; கூறினார். இச்சந்திப்பு நேற்று சாய்ந்தமருதிலுள்ள பேரவையின் தலைமையகத்தில் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. தூதுவருடன் அபிவிருத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.