ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
புலிகள் என்னை கொலை செய்ய முயற்சித்தனர் – சம்பந்தன் - Part 1 தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 08 ஜூலை 2013 தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மைக் கொலை செய்ய முயற்சித்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் தமது பெயரும் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கட்சியொன்றின் தலைவராக கருதப்படுகின்றீர்கள். நீங்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக முன்னெடுத்த பிரிவினைவாதத்தையே நீங்களும் முன்னெடுக்கின்றீர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. மிகப் பழமையான…
-
- 5 replies
- 870 views
-
-
தங்க ஆபரணங்களை திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஈ.பி.டி.பி.யின் யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவுக்குப் பொறுப்பான உறுப்பினர் சுதர்ஷன் விஜயகாந்தன் இன்று கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21362
-
- 3 replies
- 418 views
-
-
இந்தியாவின் நிபந்தனைகள் குறித்து பசில் ராஜபக்ஷ மௌனம் 07 ஜூலை 2013 இந்தியாவின் நிபந்தனைகள் குறித்து பெருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்து அந்நாட்டு அரசியல் தலைவர்களையும் ராஜதந்திரிகளையும் அமைச்சர் ராஜபக்ஷ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிர…
-
- 40 replies
- 2.4k views
-
-
TNAயை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க வைக்க இந்தியா உதவ வேண்டும் - ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வைக்க இந்தியா உதவியளிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடனான பேச்சுவார்த்தையின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் சரியான இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்வதனால் ஏற்படக் கூடிய நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி, ஷிவ் சங்கர் மேனனுக்கு விளக்கமளித்துள்ளார்.…
-
- 2 replies
- 486 views
-
-
இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து பிரித்தானிய குடிவரவு நீதிமன்றம் தீர்ப்பு 09 ஜூலை 2013 இலங்கை மனித உரிமை விவகாரம் குறிது பிரித்தானிய குடிவரவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் மனித உரிமை நிலைமைகள் மேம்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப் புலி என சந்தேகிக்கப்பட்டவர்களின் புகலிடக் கோரிக்கைகள் குறித்து சரியான முறையில் ஆராய வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரித்தானிய குடிவரவு நீதிமன்றம், புகலிடம் வழங்குவது தொடர்பில் புதிய சில வகையீடுகளை அறிமுகம் செய்துள்ளது. புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், ஊடகவியலாளர்க…
-
- 0 replies
- 433 views
-
-
ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்திற்கு பக்கபலமாக செயற்பட்டனர் – இராணுவத் தளபதி 09 ஜூலை 2013 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் இராணுவத்திற்கு பக்கபலகமாக செயற்பட்டதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்களை முறியடிக்க உதவியளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எந்தத் தரப்பினருக்கும் அஞ்சாது இராணுவத்திற்கு குறித்த இருவரும் பக்கபலமாக செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு எதிராக பாரியளவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக இலங்கை இராணுவத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் பாரியளவில் குற்றச்சாட்டுக்…
-
- 0 replies
- 247 views
-
-
வட மாகாணசபைத் தேர்தலுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றது – ஐ.தே.க வட மாகாணசபைத் தேர்தலுக்கு அரசாங்கம் அஞ்சுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. வட மாகாணசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என அரசாங்கம் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வடக்கு தேர்தல் தோல்வியை சமாளிக்கும் நோக்கிலேயே இந்த இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளை அவசரமாக கலைத்து தேர்தல் நடாத்த வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என அவ…
-
- 0 replies
- 736 views
-
-
பிரித்தானிய பிரஜை ஒருவரை இளவாலை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர். குடிவரவு சட்டங்களை மீறியமை மற்றும் விஸா முடிவடைந்த நிலையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இச்சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, 2 சரீரப் பிணைகளுடன் கூடிய ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையில் சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=87055&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 647 views
-
-
இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வாக்குறுதி அளித்தபடி, 13வது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய தேசிய பாதகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21372
-
- 5 replies
- 578 views
-
-
ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி காதலர்களின் களியாட்ட இடமாக மாறி வருவதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள். தொடர்ந்துவாசிக்க,. http://tamilworldtoday.com/?p=21207
-
- 1 reply
- 704 views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் நஞ்சு அருந்திய நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தன்னைக் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய நிலையில் தான் மனமுடைந்து நஞ்சு அருந்தியதாக குறித்த பெண் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது நான் எனது உறவினர்களுடன் கொழும்பு சென்று யாழ்ப்பாணத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் (2010 ஆண்டு) பஸ்ஸில் இந்த இராணுவ சிப்பாயை சந்தித்தேன். அவர் எனது தொலைபேசியை வாங்கி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் பழகி வந்தோம். அவர் என்னை திருமணம் செய்வதாகக் க…
-
- 0 replies
- 515 views
-
-
13 ஆவது அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அடுத்தக்கட்ட அமர்வு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21384
-
- 0 replies
- 337 views
-
-
ஆடி அசைந்து வந்தாலும் வருவது யானையானால் அதன் கழுத்திலுள்ள மணியோசை அதன் வரவைப் பகிரங்கப்படுத்துவதுபோல தனது அடுத்தமாத இலங்கைப் பயணத்துக்கு முன்னர் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை என்ற மணியை நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ளார். நவிபிள்ளை ஒலிக்கவிட்டுள்ள இந்த மணி நிச்சயமாக கொழும்பு அதிகார மையத்துக்கு ஒரு நாராச காண்டாமணியாக ஒலித்திருப்பதை அங்கிருந்து வெளிவரும் காட்டுக்கத்தல்கள் புலப்படுத்துகின்றன. செய்தி வீச்சு... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21319
-
- 2 replies
- 478 views
-
-
11 வயது இலங்கைச் சிறுவன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் : 09 ஜூலை 2013 11 வயதான இலங்கைச் சிறுவன் ஒருவன் அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியதனால் இவ்வாறு சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஸ்மானியா ஹோபார்ட் முகாமிற்கு அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி புர்க்கே விஜயம் செய்துள்ளார். குறித்த தடுப்பு முகாம் சிறுவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார். 11 வயதான இலங்கைச் சிறுவனை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறி…
-
- 0 replies
- 275 views
-
-
க்லம் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய ஆர்வம் 09 ஜூலை 2013 சர்ச்சைக்குரிய செனல்4 ஆவணப்படத்தின் இயக்குனர் க்லம் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கை அரசாங்கம் தமக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்குமா என்பது சந்தேகமே என மக்ரே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் என்ற ரீதியில் குறித்த அமர்வுகள் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட அனுமதியளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட சர்வதேச ஊ…
-
- 0 replies
- 362 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிவ்சங்கர் மேனன் சந்திப்பு- 09 ஜூலை 2013 வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு சர்வதேச கண் காணிப்பாளர்கள் தேர்தல் முடியும்வரை கடமையில் ஈடுபட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்…
-
- 0 replies
- 401 views
-
-
இந்திய - சிறிலங்கா உடன்பாடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் இராணுவத் தலையீடுகளின்றி சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா உறுதியுடன் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில் கூறியிருப்பதாவது- இந்திய – சிறிலங்கா உடன்பாடு தான், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிரதேசங்களை, தமிழ…
-
- 0 replies
- 393 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று கைது செய்யப்பட்டுள்ள அராஜகம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். தற்போது 21 மீனவர்களும் 19.7.2013 வரை இலங்கை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி சட்டவிரோதமாக கடத்தி கைது செய்வது பற்றி மீண்டும், மீண்டும் நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து கடிதம் எழுதி வருகிறேன…
-
- 1 reply
- 284 views
-
-
சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களுக்கு பணியாற்ற செல்லவேண்டும் என்று மஹிந்த பணித்துள்ளார். ஏற்கனவே ராணுவத்தினர் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தினை நடத்திவருகின்றனர். இவர்களில் அடக்குமுறை ஒருபக்கம் இருக்க இப்போது சிங்கள அதிகாரிகளும் வந்தால் எப்படி இருக்கும். . ராணுவ குடியிருப்புக்களை நிறுவியதுபோல இப்போது சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கு என மேலும் சிங்கள குடியேற்றஅங்களை அமைக்கும் ஒரு நடவடிக்கையே மஹிந்தவின் இந்த திட்டமாகும். . மேற்படி நடவடிக்கைக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இனங்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முதன்மையான அமைச்சாக இருக்க வேண்டும் எனவும் ஜனாத…
-
- 0 replies
- 508 views
-
-
சிங்கள இனவெறி ராணுவம் கொடியது என அறிந்தும் அதனை நம்பி இறுதியில் தன்னைத்தானே அழிக்க முற்பட்டுள்ளார் யாழ் யுவதி ஒருவர். . யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் நஞ்சு அருந்திய நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தன்னைக் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய நிலையில் தான் மனமுடைந்து நஞ்சு அருந்தியுள்ளார். . இது குறித்து குறித்த யுவதி தெரிவிக்கையில் ; நான் எனது உறவினர்களுடன் கொழும்பு சென்று யாழ்ப்பாணத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம் (2010 ஆண்டு) பஸ்ஸில் இந்த இராணுவ சிப்பாயை சந்தித்தேன். அவர் எனது தொலைபேசியை வாங்கி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். . பின்னர்…
-
- 9 replies
- 656 views
-
-
13ஆம் அரசமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்குத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21342
-
- 0 replies
- 320 views
-
-
"தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தக்கூடிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும். தமிழ் மக்களையும், இந்தியாவையும் ஏமாற்ற நினைப்போர் நிச்சயம் ஏமாறுவார்கள் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர் வேட்பாளராக பல்சார் திறமை கொண்ட ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்த வேண்டும். பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நிறுத்தப்படுவார்களேயானால் அது பின்னர் பாரிய பின்னடைவுகளை கொண்டுவரும்" இவ்வாறு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடியுடன் கூடிய வடக்கு மாகாண தேர்தல் பற்றி கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியென்பது சர்வதேசமளவில் தமிழர் பிரச…
-
- 10 replies
- 679 views
-
-
கொழும்பு வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21242
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு கனேடியப் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம், கனடாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21232
-
- 0 replies
- 504 views
-
-
இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வீடுகளை கையளிப்பதற்கு வீட்டு உரிமையாளர்களை இராணுவத்தினர் தேடித்திரியும் நிலமை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21204
-
- 0 replies
- 387 views
-