ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
13 ஐ ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் : ஹெல உறுமய 13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். மஹரகமவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யும் தேசிய ஒருங்கிணைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான சட்டமூலத்தை ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான பலத்தை நாம் பாராளு…
-
- 0 replies
- 299 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அழிவை ஏற்படுத்துவதற்காக கொண்டுவந்து, மறைத்துவைக்கப்பட்ட சுமார் ஆயிரம் கிலோகிராம் எடை கொண்ட ஆயுதங்கள் அவிசாவளை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/archives/19928
-
- 2 replies
- 884 views
-
-
பௌத்த பேரினவாதத்தை தோலுரிக்கும் ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைப்பு [ சனிக்கிழமை, 29 யூன் 2013, 00:55 GMT ] [ தா.அருணாசலம் ] மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தலைமை தாங்கும்,பௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்புடன் பொதுபல சேனாவை ஒப்பிடும் கட்டுரை தாங்கிய ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. மியான்மாரில், முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த பிக்குகள் தலைமையில் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், பௌத்த தீவிரவாதத்தின் முகம் என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை. இந்தக் கட்டுரை…
-
- 9 replies
- 830 views
-
-
2014 முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல்; தீவிர ஆலோசனையில் மஹிந்த அரசு ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருட முற்பகுதியில் நடத்துவது தொடர்பில் அரசு தீவிர ஆலோசனை நடத்திவருகின்றது என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. இவ்விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆலோசகர்களுடன் அண்மையில் மந்திராலோசனையில் ஈடுபட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் வடக்கு, வடமத்திய, மத்திய மாகா ணங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அடுத்ததாக அரசு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, 2014இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என முன்னதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையிலான முக்கிய சில தகவல்கள் அரச உ…
-
- 0 replies
- 303 views
-
-
கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவை பகிஷ்கரித்ததை வரவேற்கின்றேன்! - அரசுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என்கிறார் விக்னேஸ்வரன்! '13வது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கப் போவதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள முடிவை மனதார வரவேற்கின்றேன். இதுவே எனது விருப்பமாகவும் இருந்தது' என உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'தெரிவுக்குழுவுக்கு வாருங்கள்;. நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்; ஆனால், நாம் நினைப்பதையே செய்து முடிப்போம்' என்ற திமிருடன் இருந்த இந்த அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தக்க பதிலை வழங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்ப…
-
- 0 replies
- 375 views
-
-
முல்லைத்தீவு முள்ளியவலை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது. முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது காலாற்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார (வயது 22) என்ற இராணுவ வீரருக்கும், மேரி தெரேசா (வயது 20) என்ற தமிழ் யுவதிக்குமே திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்பினையடுத்து, வீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவு 23வது காலாற்படை முகாமின் தளபதி கேணல் சஷிந்திர விஜேவர்தன தெரிவித்தார். …
-
- 29 replies
- 2.8k views
-
-
சவுத் புளொக்கில் முக்கிய மாற்றம் – சிறிலங்காவுடன் தொடர்பில்லாதவர் வெளிவிவகாரச் செயலராகிறார் [ செவ்வாய்க்கிழமை, 02 யூலை 2013, 12:18 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக, சுஜாதா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ஜேர்மனிக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் சுஜாதா சிங், அடுத்தமாதம் 1ம் நாள் தொடக்கம் இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயின் பதவிக்காலம், இம்மாதம் 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே, சுஜாதாசிங்கை புதிய வெளிவிவகாரச் செயலராக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நியமித்துள்ளார். 59 வயதான சுஜாதா சிங் இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த அதிகாரியாக உள்ளவர். இவருக்கும், இவருக…
-
- 0 replies
- 370 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நிறுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழரசுக் கட்சியின் யாழ்.கிளைக் கூட்டத்திலேயே, மாவை சேனாதிராசாவை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் யாழ்.கிளை பிரதி பொதுச்செயலர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இன்னமும் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள…
-
- 1 reply
- 407 views
-
-
தேவையென்றால் 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றலாம் - சரத் பொன்சேகா 02 ஜூலை 2013 தேவையென்றால் 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றலாம் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டுக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடிய அதிகாரங்கள் இருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சருக்கு மோசமான அதிகாரங்கள் காணப்பட்டால் அதனை மாற்றியமைப்பது சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சகல இன மக்களினதும் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமேன அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய சூழ்நிலையில் 13ம் திருத்தச் சட்த்தில் மாற்றங்களைச் செய்வது ஏற்றுக்கொள்ளக…
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை 02 ஜூலை 2013 இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாம் எனக் கோரி பொதுபல சேனா அமைப்பு, இந்திய உயர்ஸ்தானிகரலயத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். ஆயிரத்திற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் இந்திய உயர்ஸ்தானியராலயத்திற்கு நடந்து சென்று இந்த மகஜரை சமர்ப்பித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். இதன் காரணமாகவே யுத்தம் 30 ஆண்டுகளாக நீடித்தது எனவும், இனி வரும…
-
- 0 replies
- 283 views
-
-
முஸ்லீம் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் முளைத்த புத்தர் சிலையால் சர்ச்சை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஜூலை, 2013 - 11:13 ஜிஎம்டி தொடரும் புத்தர் சிலை சர்ச்சைகள்..... மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள…
-
- 0 replies
- 339 views
-
-
13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடுமையான செய்தி ஒன்றை கொழும்புக்கு தெரியப்படுத்தவே இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ச டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விபரங்களுக்கு... http://tamilworldtoday.com/?p=19834
-
- 9 replies
- 1.2k views
-
-
யுத்தத்தின் பின்னரான இலங்கைக்கு சர்வதேச சமூகம் போதியளவு ஆதரவினை வழங்க வேண்டுமென பொதுநலவாய நாடுகள் உள்ளுராட்சி அமைப்பின் செயலாளர் நாயகம் கார்ல் ரைட் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளியிட்டு போதியளவு உதவிகளை வழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல தசாப்த யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள வடுக்களை ஆற்றுவதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டுவதில் தவறில்லை என்ற போதிலும், இலங்கையை புறக்கணிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ht…
-
- 0 replies
- 359 views
-
-
சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை கடும் அவமானத்தை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஜுன் 25ம் திகதி முதல் லண்டனில் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் நிறைவேற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடர்களின் அட்டவணை மற்றும் போட்டிகளை நடத்தும் இடங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதன் போது கிரிக்கட்டில் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கும் பங்களாதேஷ் நாட்டுக்குக் கூட சில போட்டிகள் விட்டுக் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த எட்டு வருட கால கிரிக்கட் போட்டித் தொடர் அட்டவணையில் ஒரு போட்டி கூட இலங்கையில் நடத்தப்படுவதற்கு ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் நிறைவேற்றுக்குழுவானது, சர்வதேச மட்ட…
-
- 6 replies
- 801 views
-
-
ரொவின் பக் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. ஒரு நாட்டின் புலனாய்வுச் சேவையின் வெளிநாட்டு விசாரணை சட்டத்தின் கீழ் மாத்திரமே இதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/19945
-
- 0 replies
- 603 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18233
-
- 8 replies
- 901 views
-
-
அமெரிக்காவில் புதிய பதில் உதவி சட்டமாஅதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய, ஏ.தர்மரத்தினத்தின் மகளும், இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார். மைதிலி ராமனின் பெற்றோர் யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்தவர்களாவர். அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் மைதிலி ராமன் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Yale பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம்பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன், அமெரிக்கா முழுவதிலும் உள்ள சமஸ்டி குற்றவியல்…
-
- 5 replies
- 501 views
-
-
13ஆவது அரசமைப்பு குறித்து அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு கேலிக்கூத்தானது என சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19899
-
- 0 replies
- 675 views
-
-
தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றோம். மோதல்களுக்கு பின்னர் எங்களுக்கு சவால்கள் இல்லாமல் இல்லை. ஆகையினால் எங்களுக்கு இன்னும் நேரம் தேவைப்படுகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச சமூகமானது தமது ஒருமைப்பாட்டு செயன்முறைகளை இந்தநேரத்தில் இலங்கைக்கு கொடுக்கமுடியும். அவ்வாறு செய்தால் அதுவே சிறந்த உதவியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீசெல்ஸுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், லங்கைக்கு இந்த ச…
-
- 1 reply
- 893 views
-
-
இராணுவப் பயிற்சியை நிறுத்தவும்: இலங்கை ஆசிரியர் சங்கம் அரசிடம் கோரிக்கை பாடசாலை அதிபர்களுக்கான இராணுவப் பயிற்சியை நிறுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று காலை உயிரிழந்த நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கான இராணுவப் பயிற்சி ரந்தம்பையில் நடைபெற்று வருகின்றது. இந்த பயிற்சியின் போது காலையில் 2 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் நேற்று காலை நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் திடீர் சுகவீனமுற்று வைத்தியாசலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார். எனினும் பயிற்சியின் போது…
-
- 1 reply
- 462 views
-
-
சிங்கள பௌத்த மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வரும் மதமாற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ' நாடளாவிய ரீதியில் உள்ள சிங்கள மக்களை மதம் மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிகவும் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே பொலிஸ் மா அதிபர் தலையிட்டு அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் புத்தசாசனம் என்ன என்பதை விளக்கி கூற கூட முடியாத, நாட்டின் புத்தசாசன அமைச்சினால், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதன்படி ஹங்வெல்ல, கந்தானை, பேருவ…
-
- 0 replies
- 498 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்து எனக் கோரி வவுனியா நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளுக்கு சகோதரத்துவத்தின் மக்கள் அரண் எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்து, மக்களின் எரியும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கு ஆகிய வசனங்கள் இந்த சுவரொட்டியில் தமிழ் மற்றும் சிங்கள ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/73147-2013-07-01-10-42-31.html
-
- 0 replies
- 379 views
-
-
மட்டக்களப்பு வாகனேரியில் தமிழ் விவசாயிகள் மீது முஸ்லீம் காடையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலில் 22தமிழ் விவசாயிகள் காயமடைந்துள்ளதுடன் ஐந்து தமிழர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனேரி பொத்தானைப்பகுதியில் உள்ள கொழுவாமடு விவசாய கண்டப்பகுதியில் பல காலமாக தமிழர்கள் விவசாயம் செய்துவருகின்றனர். இந்த நிலையில் யுத்தம் நிறைவுபெற்ற பின்னர் இப்பகுதியில் உள்ள காணிகளை பிடித்தும் பலரிடம் ஆசை வார்த்தை காட்டி காணிகளை வாங்கியுள்ள முஸ்லிம்கள் காடையர்கள் சிலர் இப்பகுதியில் தமிழர்களின் விவசாய நடவடிக்கைகக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதுடன் அவர்களுக்கான நீர் விநியோக நடவடிக்கைகளையும் தடுத்து வந்தனர். இது தொடர்பில் கடந்த ஆ…
-
- 4 replies
- 756 views
-
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே சிசன், இலங்கை வெளியுறவு அமைச்சினால் விளக்கம் கோரலுக்காக அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை தொடர்பில் விளக்கம் கோரலுக்காகவே சிசன் அழைக்கப்பட்டுள்ளார். இதன்போது மிச்செல் சிசனிடம், குறித்த எச்சரிக்கை விடுத்தமை தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சை கோடிட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்கள், வாய்மூலமாக, உடல் ரீதியாக பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே வெளிநாட்டவர்கள் குறிப்பாக பெண்கள், இலங்கையின் ஏனைய பயணிகளுடன் பஸ்களில் பயணம் செய்யும் போது கவனமாக …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட பிரதேச செயலாளரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி! [Wednesday, 2013-05-15 09:07:12] யாழ். நீதிமன்றிற்கு அருகில் தனியார் விடுதியொன்றினால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி தொடர்பாக கலாசார சீரழிவுகளை தடுத்து நிறுத்திய யாழ்.பிரதேச செயலரைக் கைது செய்ய பொலிஸார் முயற்சித்துள்ளனர். குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய யாழ். பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்யாது அவர்களுக்கு இசைவாக செயற்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா நேற்று காலை யாழ்.பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரத்தை அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்ய முயற்சித்துள்ளார். இதன்பின்னர் இச்சம்பவம் தொடர்பில் விபச்சார வ…
-
- 3 replies
- 901 views
-