ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஸ்கரித்துள்ளனர். ஊர் மக்களும் கூடி, பாடசாலையைத் திறக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றச்சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, கூடியிருந்த பொதுமக்களைக் கலைந்து போகச் செய்துள்ளனர். இந்தப் போராட்டம் காலை 3 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், போராட்டம் காரணமாகவும், மாணவர்களின் பகிஸ்கரிப்பு காரணமாகவும் பாடசாலை வியாழனன்று செயற்படவில்லை என்றும் தெரியவருகிறது. செவ்வ…
-
- 1 reply
- 500 views
-
-
பாதுகாப்பு வவிகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் நிலைநிறுத்தப்படும் நடவடிக்கையானது இன்றியமையாதது எனவும் சில தரப்பினர் இதனை தங்கள் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டதாகவும் அதே தவறை தாமும் செய்ய விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கிலும் வன்னியிலும் இராணுவத்தினரின் எண்ணிக…
-
- 0 replies
- 333 views
-
-
நோர்வேயின் முன்hன்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார். இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம் என தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பு நடத்தியமை பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91826/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 298 views
-
-
விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா, இலங்கைக்கு எச்சரிக்கை 16 மே 2013 விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேசத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை உதாசீனம் செய்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் கெலக் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். பிரி;த்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் ஹக்ஸ் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரம் தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் தருணத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்பத…
-
- 2 replies
- 481 views
-
-
பசிலின் தலையீட்டால் கிழக்கில் இந்திய வீட்டுத்திட்டம் பெறவேண்டிய மக்களுக்கு ஏமாற்றம்!? கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு அவசர கடிதமொன்றையும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட வட – கிழக்கு மாகாணங்களில் இந்திய உதவி வீட்டுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 4,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. குறித்த வீடுகள் தொடர்பாக இறுதியாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினபடி மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,000 வீடுகளும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில…
-
- 0 replies
- 261 views
-
-
வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடும் என்று நம்பவில்லை – மனோ அறிக்கை! பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று தான் நம்பவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் கூப்பாடு போடுவதை காட்டி, வட மாகாணசபை தேர்தலை நடத்தும் முன்னர் 19ம் திருத்தத்தை கொண்டு வந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. ஆனால், காணி, போலிஸ் அதிகாரங்கள் இல்லாமல்…
-
- 0 replies
- 223 views
-
-
பொதுநலவாய மாநாட்டின் பெயரில் வாகனங்கள் இறக்குமதி செய்து, ஊழல் செய்வதற்கு மோசடியாளர்கள் சிலர் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ஹர்ஷ டி சில்வா இதுகுறித்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். நாடாளுமன்றத்தில் மேலும் கருத்துரைத்த ஹர்ஷ டி சில்வா, ''பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு 200 வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய மாநாடு 2007ஆம் ஆண்டு உகண்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவில் மிகப் பாரிய பிரச்சினையொன்று கிளப்பப்பட்டது. இதனால் அந்நாட்டு உப ஜனாதிபதியாக இருந்த பேராசிரியர் கில்பட் புகேன்யா பதவி விலக நேரிட்…
-
- 1 reply
- 442 views
-
-
மன்னாரில் 1500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்! மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 1500 சிங்கள குடும்பங்கள் அங்கு அழைத்து வரப்பட்டு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சுமார் 5 ஆயிரம் க…
-
- 0 replies
- 274 views
-
-
2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக் காலகட்டத்தில் பலியானவர்களை நினைவுகூருகின்ற ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்.மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சகல தமிழர்களையும், தமிழின உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார். மே 18ஆம் திகதி ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு அஞ்சலியில் கலந்துகொள்ளுமாறு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழின விடுதலைக்காக இற்றைவரை இலட்சக்கணக்கானவர்கள் தம்முயிரைத் தியாகம் செய்துள்ளனர். குறிப்பாக நடைபெற்ற போரின் இறுதிக்கட…
-
- 1 reply
- 355 views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வெற்றிவிழா அணிவகுப்பில் 11 ஆயிரம் படையினர் பங்கேற்கவுள்ளனர் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடலில் நடக்கவுள்ள விழாவில், இலங்கையின் படைப்பலத்தை வெளிப்படுத்தும் வகையிலான இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. அதில், 6,350 இராணுவத்தினர், 1,300 கடற்படையினர், 1,300 விமானப்படையினர், 1400 பொலிஸார், 676 சிவில் பாதுகாப்புப் படையினர் என மொத்தமாக 11 ஆயிரம் பங்கேற்கவுள்ளனர். இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பில், ஆட்டிலறிகள், பல்குழல் ரொக்கட் செலுத்திகள், பொறியியல் வாகனங்கள், டாங்கிகள் உள்ளிட்ட 100 கவச …
-
- 6 replies
- 1.1k views
-
-
காணி சுவீகரிப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 1474 பேர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். சட்ட விரோதமாகவும் நீதிக்குப் புறம்பான வகையிலும் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் 2000 பேர் மேன்முறையீடு செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தின் சில பகுதிகளில் காணி சுவீகரிப்பு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள இரண்டு அறிவிப்புக்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயம் என்ற அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் சு…
-
- 2 replies
- 434 views
-
-
முன்னாள் போராளிகளுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 1,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் 3,500 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன், இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 2500 பேரின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதேவேளை, முன்னாள் போராளிகளின் நல வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ். சுயதொழில் கடனுதவிக்கு 1000 பேர் விண்ணப்பித்த நிலையில், தற்போது 500 பேருக்கு சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலகு வட்டி வீத அடிப்படையில், வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு மூன்றாம் கட்டமாக அவர்கள் விரும்பிய தொகை கடனுதவிகள் வழங்க…
-
- 1 reply
- 344 views
-
-
13வது திருத்தத்தை ரத்துச்செய்வதில் ஹெல உறுமய மும்முரம்! [Wednesday, 2013-05-15 16:05:27] அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய ஒரு சட்டமூலத்தை அடுத்த இரண்டு வாரங்களில் கொண்டுவரவுள்ளது. தீர்மானம் தொடர்பில் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று மாலை எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய வாக்களிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுகொள்ள வேண்டும் எனும் ஒரு தீர்மானத்தை மத்திய குழு எடுத்துள்ளது. சட்டமூலத்தை சமர்பித்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றில் உள்ள சகல கட்சிகளையும் சந்தித்து இந்த சட்டமூலத்தின் நோக்கத்தை விளக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.seithy.com/listAllNe…
-
- 0 replies
- 404 views
-
-
வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளது - பசில் தெரிவிப்பு! [Wednesday, 2013-05-15 15:27:55] வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால், பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களை சந்தித்து, வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு பொய்யான உறுதிமொழிகளை வழங்குவர். வெளிநாடுகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதியின் 85 சதவீதமானவை வடக்கின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை வடக்கு மக்கள் மறக்கக்கூடாது. இதன் காரணமாக வடக்கு ம…
-
- 0 replies
- 357 views
-
-
இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு ! [Wednesday, 2013-05-15 22:32:43] முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் நான்காம் ஆண்டு கூட்டுநினைவு நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாட்டில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் பங்கெடுக்கின்றார். டெல்லி தமிழ்வழங்கறிஞர் சங்கத்தின் செயலராகவும் உள்ள வழக்கறிஞர் வே.ராம் சங்கர், இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவாகவுள்ளார். எதிர்வரும் மே-18ம் நாள் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு, இன்று புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சி…
-
- 0 replies
- 574 views
-
-
காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் நடத்தப்படும் வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடும் என நான் நம்பவில்லை. நாம் அப்படி ஒரு நிலைமையை வரவேற்கப்போவதும் இல்லை. இந் நிலையில் கூட்டமைப்பு இல்லாமல், வடக்கில் அரசாங்கம் மாகாணசபை தேர்தல் நடத்துமானால், அது மணமக்கள் இல்லாமல் திருமணம் நடத்துவது போன்றதாகும். இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இதேவேளை, அரசுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் கூப்பாடு போடுவதைக் காட்டி, வட மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முன்னர் 19ஆம் திருத்தத்தை கொண்டு வந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று புதன்கிழ…
-
- 2 replies
- 680 views
-
-
குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குமுதினிப்படுகொலை வரலாற்றுப் பதிவு குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படு…
-
- 2 replies
- 421 views
-
-
உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உகண்டாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்த உதவுமாறு உகண்டா கிரிக்கெட் விளையாட்டுக் கழகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கினார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளார். அக்குழுவினரின் விளையாட்டுத் திறமைகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடியதுடன் கிரிக்கெட் வீரர்களுக்கு சீருடைகளையும் வழங்கிவைத்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67168-2013-05-14-11-18-41.html
-
- 12 replies
- 971 views
-
-
-
- 8 replies
- 1.4k views
-
-
இரும்புச் சப்பாத்தைக் கொண்டே வட மாகாண சபை நிர்வாகத்தை அரசாங்கம் நடத்துவதாக ஜே.வி.பி. குற்றஞ்சுமத்தியுள்ளது. நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்குவதே அரசியல் பிரச்சினைக்கு ஒரே தீர்வு எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றிய அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அநுரகுமார திஸாநாயக்க... வடக்கில் உள்ள மக்களின் மரண வீடாகட்டும், வேறு ஏதாவது நிகழ்வாகட்டும், வேறு ஏதாவது வைபவமாகட்டும், இவை அனைத்தும் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள…
-
- 0 replies
- 532 views
-
-
விடுதலைக்கான இன்றைய கனவும்..நாளைய வெற்றியும்....! தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு இன்று அமெரிக்காவில் அங்குராப்பணம் ! தமிழீழ விடுதலையில் அக்கறைக் கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவில் தொடங்குகின்றது. முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு அமைகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகத் தமிழர்களின் முரறைவாக தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே-18 நாள் அமெரிக்க நேரம் மதியம் 12மணிக்கு முரசறையப்படவிருக்கின்றது. இந்நிலையி…
-
- 0 replies
- 452 views
-
-
அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமுகமாக அரச தரப்பு கட்சிகள் மற்றும் அரச தரப்பு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை கொழும்பில் ஆதரவுப் பேரணியில் ஈடுபட்டன. இவ் ஆதரவுப் பேரணி லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை சென்றது. (pics by: j.sujeewakumar) http://www.virakesari.lk/article/local.php?vid=4593
-
- 0 replies
- 550 views
-
-
மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டன. இவ் எதிர்ப்புப் பேரணி பொரளை கெம்பல் பாக்கில் இருந்து ஆரம்பமாகி மருதானை ஊடாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை சென்றது. (pics by : j. sujeewakumar) http://www.virakesari.lk/article/local.php?vid=4594
-
- 0 replies
- 241 views
-
-
அதிக கடன் கொடுத்து ஏமாந்த குடும்பஸ்தர் வீட்டில்யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ் நாவாந்துறையில் இடம் பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாவாந்துறை கடற்கரை வீதியை சேர்ந்த பி.யோகராசா (வயது-41) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தூக்குப் போட்டு பரிதாபமாக இறந்தவராவார். நேற்று மாலை 6 மணியளவில் தூக்கில் தொங்கிய இவரது சடலம் மீட்கப்பட்டு இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது . http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20928:2013-05-15-15-41-41&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 267 views
-
-
முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மே 18ஆம் திகதி அனைத்து தமிழ் மக்களும் தமது வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வன்னியில் இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள அரசு, மே18 ஆம் திகதி யுத்த வெற்றிவிழாவாகக் கொண்டாடுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் அன்றைய தினத்தை தமிழின விடுதலையை வென்றெடுக்க உறுதி கொள்ளும் நாளாக பிரகடனப்படுத்தி யுத்தத்தில் மரணித்த தமது உறவுகளை நினைவுகூருவார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவாட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் யுத்தவெற்றிவிழா இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் கருத்…
-
- 0 replies
- 219 views
-