Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  'சந்தேகநபர்களின் பெயர்களை வெளியிடாது இரகசியம் காக்கவும்' வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. 'சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டாம்' எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆ…

  2. பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி ஆதாரத்தை வைத்துக்கொண்டு சிறிலங்கா மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரமுடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 422 views
  3. 'சனல் - 4' வெளியிட்ட காணொலி தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக சிறிலங்கா அரசின் மூத்த பிரதிநிதி ஒருவர் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்துவிட்ட பின்னர், இப்போது அந்த அமைப்பின் பிரச்சார இயந்திரத்தினால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய நிலைமையில் தாம் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரச்சார உத்திகளால் அனைத்துலக சமூகம் தவறான முறையில் வழிநடத்தப்படக்கூடாது எனவும் கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தகவல் தெரிவித்த அவர் வலியுறு…

    • 0 replies
    • 497 views
  4. சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் 'சனல்-4' காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறலங்காப் படையினர் நடத்தியபோது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் கைதான போராளிகளை கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு நிர்வாணமாக அவர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஜெனீவிவாவில் நேற்று வியாழக்கிழமை …

    • 0 replies
    • 515 views
  5. சிசிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஜெனீவாவில் நேற்று சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தமிழர்களை சிறிலங்காப் படையினர் விசாரணைகள் எதுவும் இன்றி சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் 'சனல்-4' காணொலிக் காட்சிகள் தொடர்பான விவகாரத்தையிட்டு பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்காப் படையினர் நடத்தியபோது இந்த வருடம் ஜனவரி மாதத்தில் கைதான போராளிகளை கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு நிர்வாணமாக அவர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் காணொலிக் காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. ஜெனீவிவாவில் நேற்று வியாழக்கிழ…

  6. 'சனல் - 4' வெளியிட்ட தமிழர் படுகொலை காணொலி குறித்து சிறிலங்கா அரசு நடத்திய விசாரணைகள் சுயாதீனமானவையோ பக்கச்சார்பு அற்றவையோ இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. ஈழத் தமிழர்களை சிறிலங்காப் படையினர் கோரமாக சுட்டுக்கொல்லும் 'சனல் - 4' ஒளிபரப்பிய காணொலிக்கு சிறிலங்கா அரசுக்கு இந்திய, தமிழ்நாட்டு அரசுகள் தமது எதிர்ப்பை தெரிவிக்காதது வியப்பை தருகிறது என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா, அய‌ல் நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு …

  8. சிங்களப் படையினரால் தமிழர்கள் விசாரணைகள் ஏதுமின்றி, மரண தண்டனைப் பாணியில் படுகொலை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொலியை வெளியிட்டதற்காக 'சனல் - 4' நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனையில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. 'சனல் - 4க்கு எதிராக சாட்சியமளிக்க 11,664 முன்னாள் போராளிகளும் தயார்' இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள சனல் - 4 தொலைக்காட்சிக்கு எதிராக சாட்சியமளித்து, இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள முன்னாள் போராளிகள் 11ஆயிரத்து 664பேரும் தயாராக உள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை சமூகத்தில் மீள்குடியேற்றவும் ஒன்றிணைக்கவுமான சமய சமூகத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று புனர்வாழ்வு ஆணையாளர் தலைமையதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரைய…

  10. பிரித்தானிய 'சனல் - 4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறிலங்காப் படையினரால் கைதிகள் சுட்டுக்கொல்லப்படுவதை வெளிப்படுத்தும் காணாலிக் காட்சியின் நம்பகத் தன்மையைக் கண்டறிவதற்காக சுயாதீனமான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் சிறிலங்கா அரசை வலியுறுத்தி கேட்டிருக்கின்றார். 'சனல் 4' ஒளிபரப்புச் செய்த காணாலி காட்சிகள் போலியானவை என சிறிலங்கா அரசு மறுத்திருந்தாலும், அது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என சட்டத்துக்குப் புறம்பான மற்றும் எழுந்தமானமான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் வலியுறுத்தியிருக்கின்றார். "இவ்வாறான விசாரணை ஒன்றின் மூலமாக அரசின் நிலைப்பாடு சரியானது என்பது உறுதிப்படுத்…

    • 0 replies
    • 453 views
  11. சிறிலங்காவின் தரைப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதைச் சித்தரிக்கும் வகையில் பிரித்தானிய 'சனல்-4' தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட காணொலி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தடயவியல் ரீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவின் முன்னணி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  12. சிறிலங்காவின் தரைப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதைச் சித்தரிக்கும் வகையில் பிரித்தானிய 'சனல்-4' தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட காணொலி தொடர்பாக சிறிலங்கா அரசு தடயவியல் ரீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்காவின் முன்னணி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 310 views
  13. சர்ச்சைக்குரிய ஒளிநாடாவை வெளியிட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை அரசு கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரச படைகளால் தமிழ் இளைஞர்கள் கைளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகளை 'சனல் - 4' தொலைக்காட்சி இரு வாரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பியது. அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தைப் பெற்றுள்ள இந்த ஒளிநாடா போலியானது என சிறிலங்கா அரசு அறிவித்திருக்கின்றது. இந்த ஒளிநாடா போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

    • 0 replies
    • 447 views
  14. விசாரணைகள் எதுவும் இன்றி மரண தண்டனை விதிக்கும் பாணியில் சிறிலங்கா தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் காணொலி ஒளிநாடா தொடர்பாக தம்முறை தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேலதிக தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது. "இந்தத் தகவல்கள் எம்மைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கின்றது" எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சுசன் றைஸ், "இது தொடர்பான எமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு எமக்கு மேலதிகமான தகவல்கள் தேவையாக இருக்கின்றன" எனவும் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங…

    • 0 replies
    • 550 views
  15. தமிழ் இளைஞர்களை சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொல்வதாகச் சித்தரிக்கும் வகையில் பிரித்தானிய 'சனல் - 4' தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிடப்பட்ட காணொலி ஒளிநாடா திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான ஒன்று என சிறிலங்கா தரைப்படை தெரிவித்திருக்கின்றது. "இது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்பதில் நாம் 100 வீதம் உறுதியாக உள்ளோம். இது விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிகின்றது" என தரைப்படைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். "குறிப்பிட்ட காணொலி அதன் உண்மைத் தன்மையைப் பரிசீலிப்பதற்காக நிபுணர் ஒருவரிடம் அனுப்பப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்ட தரைப்படைப் பேச்சாளர், "இருந்தபோதிலும், இந்த காணொலி தயாரிக்கப்பட்ட ஒன்று என்பதை ந…

    • 0 replies
    • 642 views
  16. 'சமபாலுறவாளர்களை அவமதித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மன்னிப்புக் கோர வேண்டும்' (நா.தனுஜா, எம்.மனோசித்ரா) நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுடன், சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்காக மன்னிப்புக்கோர வேண்டும் என நாட்டிலுள்ள சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டல் மற்றும் சமபாலுறவாளர்கள், திருநங்கைகளின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி நாட்டிலுள்ள சமபாலுறவாளர்கள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பில் செயற்படும் அமைப்புக்கள், சிவில் சமூக அமை…

  17. சமயமொன்றை பரப்பும் வகையில் பாடசாலைகளில் புத்தங்களை கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவராலயம் விநியோகிப்பதாக பொதுபலசேன குற்றஞ்சாட்டியது. யாருடைய அதிகாரத்தினை பெற்று இந்த பிரசார நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் ஈடுபட்டுள்ளது எனவும் பொதுபலசேன கேள்வி எழுப்பியது. கல்வி அமைச்சின் அனுமதியின்றி சமயமொன்றை பரப்பும் நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாக பொதுபலசேனவின் முக்கியஸ்தரான தேரர் கலகொடத கனனசேகர தெரிவித்தார். கல்வி அமைச்சும் அமைச்சருமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இந்த நடவடிக்கையினை நிறுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன ஒருபோதும் செயற்படவில்லை. ஆனால் ஹலால் சான்றிதலுக்கு …

    • 2 replies
    • 355 views
  18. 'சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு' கூட்டமைப்பு வலியுறுத்தல் இலங்கையில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தக் கருத்து வந்துள்ளது. கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு, அதையும் உள்ளடக்கி அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகள் முன் வைக்கப்படும் என கூட்டமை…

  19. 'சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்க வட மாகாண சபைக்கு உரிமை உண்டு' -சொர்ணகுமார் சொரூபன் 'சமஸ்டி கோரிக்கையை முன்வைத்து பிரேரணை நிறைவேற்றுவதற்கு வடக்கு மாகாண சபைக்கு முழுமையான உரிமை உள்ளது. இதனை தவறு என்று கூற தெற்கில் யாருக்கும் உரிமை இல்லை' என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நல்லூரில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாண சபை நி…

  20. 'சமூக ஒற்றுமைக்கு ஒத்துழைப்பு நல்குவோம்' 'இலங்கை வாழ் தமிழ் இந்துக்களினதும் சிங்கள பௌத்தர்களிளதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இந்த இரு இனத்தவர்களும் தத்தமது கலாசார தனித்துவங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி, இப்பண்டிகையை கொண்டாடுவதே வழமையாகும்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இப்புத்தாண்டின் போது, ஒட்டுமொத்த சமூகமும், கு…

  21. 'சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 01: இது மதகுரு இராசதுரை கூறும் கதை [ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 10:48 GMT ] [ நித்தியபாரதி ] முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில்…

    • 0 replies
    • 547 views
  22. [ ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012, 10:48 GMT ] [ நித்தியபாரதி ] முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கு…

  23. 'சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 08: இது 'குட்டி' என்னும் காயம்பட்ட இளைஞனின் கதை [ திங்கட்கிழமை, 07 மே 2012, 06:19 GMT ] [ நித்தியபாரதி ] முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்த தொடரில் இது இறுதிக் கதையாகும். மே 19, அதிகாலை மூன்று மணி, சில நூறு மீற்ற…

  24. By General 2012-12-09 19:08:24 சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு 15 வருடமாக இருந்த வலிப்பு வியாதி 'சம்சம்" நீரினால் குணமானதை அடுத்து அவர் இஸ்லாத்தை தழுவியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜூ என்ற அப்பெண் தனது பெயரை பரீதா என மாற்றியுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. தனது வீட்டு எஜமானியின் ஆலோசனைப்படி இயன்ற அளவு சம்சம் நீரை அருந்தியதாகவும் இரு வாரங்களில் தனது நோய் நீங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமேல் சவூதியைச் சேர்ந்த ஹைல் நகரிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2024

  25.  'சம்பவம் நடந்தும் சமூகக்கட்டுப்பாட்டால் முறைப்பாடுகள் இல்லை' சொர்ணகுமார் சொரூபன் 'யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்ற போதிலும், பொலிஸ் முறைபாடுகள் குறைவடைந்தமைக்கு சமூகக் கட்டுப்பாடுகளே காரணம்' என யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் பார்னஸ் ஆன்லேக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட மேற்படி இராஜாங்க அமைச்சர், திங்கட்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, பண்ணையில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையத்துக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.