Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம் திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 11:22 -சுமித்தி தங்கராசா யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலொலி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார். மூவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதலினால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-…

  2. இராஜபக்சவை போர்க்குற்றவாளியாக முன்னிறுத்துவதற்கான எந்தத் தடயமும் அந்தத் தீர்மானத்தில் காணப்படவில்லை: - தினமணி [Monday, 2013-03-11 09:40:40] ஐ.நா. மனித உரிமைகள் குழுமத்தில் இரு நாள்களுக்கு முன்பு அமெரிக்கா தாக்கல் செய்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. குழுமத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளுக்கும் வரைவுத் தீர்மானத்தின் நகல் வழங்கப்பட்டபோது, அதில் இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக முன்னிறுத்துவதற்கான எந்தத் தடயமும் அந்தத் தீர்மானத்தில் காணப்படவில்லை. இவை ஏற்கெனவே, சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட போது எவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினவோ, அதைப் போலவே இப்போதும் இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுகிறது.…

  3. ஜெனிவா தீர்மானத்தை தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம் இலங்கை தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த தீர்மானத்தில் கூட கடந்த தடவை அழுத்தங்களின் பேரில்தான் இந்தியா தீர்மானத்தை ஆதரித்ததே தவிர, அந்த தீர்மானத்தில் இருந்த வார்த்தைகளை தணிக்கும் வகையிலும் அது செயற்பட்டது என்றும் அவர் குறை கூறியுள்ளார். இந்திராகாந்தி போல ஒரு பலமான தலைமைத்துவம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், அங்கே அதிகாரவர்க்கத்தின் தகவல்களின் அடிப்படையில் பயந்தாங்கொள்ளி தனமான முடிவுகளை அது எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். …

  4. கனேடியத் தமிழர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகளை கைவிடும்படி அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை [ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 01:16 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த்தாகவும், கருவிகளை வாங்க முயற்சித்தாகவும் குற்றம்சாட்டி, கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடும் படி, அமெரிக்காவிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. இந்தத் தகவலை கனடாவின் நசனல் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற கனேடியத் தமிழர் மீது தீவிரவாத குற்றச்சாட்டின் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அசாதாரணமான இந்த வேண்டு…

  5. No change in Sampur coal power project: Ministry Monday, 11 March 2013 01:16 The Ministry of Power and Energy yesterday denied reports that the National Thermal Power Corporation (NTPC) of India had pulled out of the Sampur Coal Power Plant Project in Trincomalee. The Ministry said the differences of opinion on technical issues and the cost of operations and maintenance were being ironed out at the moment. Ministry Secretary M.M.C. Ferdinando said discussions between NTPC and Sri Lanka were ongoing and they hoped that the outcome would be positive. “The technical issue about the …

  6. எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஹலால் சான்றிதழ் நாட்டில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது. அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுபல சேனாவின் மாநாடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலபேயில் இடம்பெற்றபோதே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், ஹலால் சான்றிதழ் என்பது எமது நாட்டுக்குத் தேவையில்லாததொன்று. அதனை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும். இல்லையேல் மக்களை ஒன்று சேர்த்து இந்த அமைப்பினூடாக …

  7. அமெரிக்காவுடன் டீல் பேச பிரதிநிதிகளை அனுப்பிவைத்தது அரசு -ஜே.வி.பி. தாயக, இலங்கைச் செய்திகள்| 10. 03. 2013, ஞாயிற்றுக்கிழமை, தமிழீழ நேரம் 8:53 jvp_001ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் இலங்கை அதில் தோல்வியைத் தழுவும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. இலங்கை தொடர்பில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் பழங்குடி அரசாங்கங்களைப் போன்று செயற்படுகின்றது. இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவில்லை. நவநீதம்ப…

  8. இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, வரும், 21ம் தேதி, ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர்.சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க …

    • 1 reply
    • 453 views
  9. தரகு அரசியல் செய்யும் சுப்பிரமணிய சுவாமியின் பேச்சை கணக்கில் எடுக்காது அமெரிக்கா! - மனோ கணேசன் 'ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடுவதற்கு இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமிக்கு மக்கள் வழங்கிய ஆணை என்ன? தரகு அரசியல் செய்யும் இவரது பேச்சை அமெரிக்கா ஒரு பொருட்டாகக் கருதாது. அத்துடன், இலங்கை தொடர்பில் அமெரிக்கா தமது கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளாது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச…

  10. சிறிலங்கா மீதான அமெரிக்கப் பிரேரணையின் இறுதி வரைவு கடுமையானதாக இருக்கும்! - சுமந்திரன் கருத்து!! ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு வலுவானதாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 22வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீதான பிரேரணையின் நகல் அமெரிக்காவால் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்கு…

  11. 16000 மெற்றிக்தொன் தரக்குறைவான பெற்றோல் இறக்குமதி? 16000 மெற்றிக்தொன் தரக்குறைவான பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சேவைகள் சங்கம் மற்றும் சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன. லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே தரக்குறைவான பெற்றோலை இறக்குமதி செய்துள்ளதாகவும் அந்த பெற்றோல் திருகோணமலை துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. அந்த பெற்றோலின் மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவை தரக்குறைந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய சேவைகள் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60414-16000-.html

  12. தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் இன்று (08.03.2013) முதல் சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள தேசிய அய்க்கப் அரங்கத்தில் ஜோபிரிட்டோ, திலீபன், சாஜிபாய் ஆண்டனி, லியோ, சண்முகப்பிரியன், பிரசாத், அனிஷ், பால் ஆகிய 8 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது, இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உலகமே நினைத்துப்பார்க்க முடியாத அளவில் தமிழ் ஈழத்தில் தமிழின படுகொலை நடந்துள்ளது. இதற்கு பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 12 வயதான சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக்கொன்றுள்ளது இலங்கை ராணுவம். இந்த இனப்படுகொலையை தடுத்து…

    • 31 replies
    • 2.1k views
  13. இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் அண்மையில் லண்டன் வந்திருந்தார். அப்போது அவர் பிபிசி உலக சேவையின் அலுவலகத்துக்கும் விஜயம் செய்திருந்தார். அம்பாறை மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவும் அவருடன் கூட வந்திருந்தார். இலங்கையின் போருக்கு பின்னரான நிலைமைகள், தமிழர் அபிலாஷைகளுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், மற்றும் அங்கிருக்கும் ஏனைய பல விடயங்கள் குறித்து இங்கு சம்பந்தன் தமிழோசைக்கு ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். தமிழோசையின் ஆசிரியர் மணிவண்ணனுக்கு இரா. சம்பந்தன் அவர்கள் வழங்கிய அந்தச் செவ்வியின் முழுமையான வடிவத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc…

    • 0 replies
    • 526 views
  14. பிரித்தானியவிற்க்கு சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கடந்த வாரமளவில் பிரித்தானியா ஒலிபரப்பு கூட்டுத்தாபனதிற்க்கு (BBC) தமிழோசை பிரிவுக்கு சென்று நடு நிலைமையாக இயக்கிவருகின்ற தமிழோசைக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு லண்டன் கிளை தலைவர், உப தலைவர்களுடன் சந்திப்பும் இரவு போசனத்திலும் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும், அம்பாறை மாவட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இரா.சம்பந்தன் அவர்களும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களும் கலந்து கொண்டனர். …

  15. இலங்கையில் நெடுஞ்காலமாக இனவாத சிங்கள அரசால் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி அல்லலுற்று, அவதியுற்று, வாழ்கின்றனர். நடந்த உள்நாட்டு போரின் , போது ஒரே நேரத்தில் 70,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டவர்களில் முதியோர்கள், பெண்கள், சிறார்கள், போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதற்கு பதில், தமிழ்முகாம்களில் அடைத்து வைத்து தொடர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இதன் உச்சக்கட்டமாக 12 வயது பாலகன் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் எந்த குற்றச்சாட்டும் இன்றி கொடூரமான முறையில் கொல்லப்பட்டான். இராஜபக்சே அரசின் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் தொடராமல் …

  16. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள தீர்மான வரைபில், இலங்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரணமாகவே இன்னும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகார பகிர்வு தொடர்பில் வெற்றிகரமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாது போனது என்பதை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதற்காக தெரிவுக் குழு ஒன்று நாடாளுமன்றத்த…

  17. அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல்லினப் பெண்கள் பங்கெடுக்கும் மாபெரும் Million women Rise Walk பேரிணியில் தமிழீழத் தாயகப் பெண்களுக்கான குரல் ஓங்கி ஒலித்தது. போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகளினால் பல்வேறு நெருக்கடிகளையும் - சவால்களையும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ்பேசும் பெண்களின் சொல்லாணத் துயரங்களையும் அவர்கள் சந்திக்கின்ற சாவால்களையும் வெளிப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சு பேரிணியில் இணைந்து கொண்டிருந்தது. தமிழர் தாயகப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப்பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான பாலிய…

  18. 'ஜெனிவா தீர்மானத்தை தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 மார்ச், 2013 - 16:21 ஜிஎம்டி இலங்கை தமிழர் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த தீர்மானத்தில் கூட கடந்த தடவை அழுத்தங்களின் பேரில்தான் இந்தியா தீர்மானத்தை ஆதரித்ததே தவிர, அந்த தீர்மானத்தில் இருந்த வார்த்தைகளை தணிக்கும் வகையிலும் அது செயற்பட்டது என்றும் அவர் குறை கூறியுள்ளார். இந்திராகாந்தி போல ஒரு பலமான தலைமைத்துவம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், அங்கே அதிகாரவர்க்கத்தின் தகவல்களின் அடிப்படையில் பயந்தாங்க…

    • 0 replies
    • 454 views
  19. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதும், சின்னஞ்சிறு சிறார்கள் கூட விட்டு வைக்கப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டதும் படக் காட்சிகளாக அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றை கண்டு நெஞ்சு பதறாமல் யாராலும் இருக்க முடியாது. குறிப்பாக விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலச்சந்திரன் அப்பாவித்தனமாக இருப்பதும், பிறகு அவன் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதும் மனித உள்ளம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணை குழுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சிங்…

  20. மூலம்: http://amudhavan.blogspot.de/2013/03/blog-post.html மீண்டும் டெசோ ஆரம்பிக்கப்பட்டு சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியப் பாராளுமன்றத்தில் இதுபற்றிய விவாதம் நடைபெற்று எல்லாக்கட்சிகளையும் சார்ந்த எம்பிக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர். தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரைத் தொடர்ந்து பிரதமரும் இந்திய அரசின் நிலைகுறித்து விளக்கியிருக்கிறார்கள். இவர்களின் விளக்கெண்ணெய் விளக்கம் என்னவென்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இனப்படுகொலைக்குத் துணையாக நின்றவர்கள் இப்போது உலக அரங்கின் முன் தங்கள் சுயரூபம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்டை நாடு, வெளியுறவுக்கொள்கை, இறையாண்மை, பேச்சுவார்த்தை நடத்துவோம், விசாரணை நடத்த வ…

  21. முஸ்லிம் சமூகத்தை காட்டிகொடுக்கும் தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி கட்ட வேண்டும்: அப்துல் மஜீத் மாநகர சபை அமர்வுகளுக்கு கறுப்பு பட்டி அணிந்து வருவதை விட பதவிகளுக்கு வாலாட்டும் தமது தலைவர்களுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிப்பதற்கு இவர்கள் முன்வர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே கண்டிராத அளவு இனத்துவேசம் இந்த ஆட்சியில் பகிரங்கமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது பூனைக்கு மணி கட்டுவது யார், எப்படி என்று தெரியாமல் முஸ்லிம் கட்சித் தலைமைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. தங்களது சுய நல பதவிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்ற அச்சத்திலேய…

  22. மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு செல்ல முயன்ற தங்கபாலு விரட்டியடிப்பு .[படங்கள்] இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், சர்வதேச விசாரணை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் 3 வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு பட்ட அரசியல் தலைவர்கள் , தமிழ் மக்கள் , சமூக ஆவலர்கள் , மாணவர்கள் , நிறுவனங்கள் வந்து சந்தித்து வரும் நிலையில் சற்று முன்னர் அங்கு சென்ற காங்கிரஸ் முன்னால் தமிழக தலைவர் தங்கபாலு மாணவர்களால் விரட்டியடிக்கபட்டனர். Share this post http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13270:congress-2day-ii&catid=36:ta…

    • 5 replies
    • 762 views
  23. பாலச்சந்திரன் படுகொலை மனதை பாதித்துவிட்டது: ராகுல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என்று இந்திய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைவர்களை டெல்லியில் சந்தித்த அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே எனது மனதையும் பாதித்து விட்டது என உருகிப் போய் சொன்னாராம். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். சுதந்…

  24. மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு டெசோ அமைப்பு சென்றதால் தள்ளுமுள்ளு கைகலப்பு. [ Video & Photo ] இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-ஆவது நாளாக தொடர்கிறது இன்று சற்று சோர்வடைந்த நிலையில் மாணவர்கள் உள்ளனர். இன்று பல்லயிரக்கனக்கான மக்கள் மாணவர்கள் , தொழில்சங்கங்கள் அங்கு சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்து கொண்டுள்ளனர் . மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் …

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசத் துரோக செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஜெனீவா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தரப்பினர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் நேரும் வகையில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.