ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
[Thursday, 2011-07-07 11:03:53] எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக்கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது. தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார். இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழ…
-
- 6 replies
- 841 views
-
-
கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/139922#sthash.BSx7J8Mv.dpuf
-
- 0 replies
- 251 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஐபக்ஷ இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது புதிய அமைச்சரவை நாளை (அக்டோபர் 29) நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதனிடையே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், பெரும்பான்மையை நிரூபிக்க நாடாள…
-
- 0 replies
- 286 views
-
-
இலங்கையை மீண்டும் சுபீட்சமான பொருளாதார வளமிக்க நாடாக மாற்றுவதை நோக்காக் கொண்டு கனடாவிலுள்ள முதலீட்டாளர்களை இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால், கனடா - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமிக்கப்பட்டார். இந்த நியமன வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (18) கொழும்பிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது . கனடா - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமனம் | Virakesari.lk
-
- 0 replies
- 513 views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓரே இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் உள்ளன என்று யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மாற்றம் அமைப்பின் தலைவர் உரையாற்றும் போது இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப முடியும். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் தற்போது நாட்டில் சிங்கள தேசம், தமிழ் தேசம் என்று இரண்டு தேசங்கள் உள்ளன. இந்ந…
-
- 0 replies
- 944 views
-
-
வவுனியாவில் ஊடகவியலாளர் கைது November 3, 2018 வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கும் பிராந்திய பத்திரிகை ஒன்றில் பிரதான செய்தியாளராக பணிபுரியும் ஒருவர் நேற்று மாலை வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை குறிப்பிட்ட ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்த வவுனியா காவல்துறையினர் அங்கு சென்ற அவரை கைது செய்து வாக்குமூலத்தை பதிவுசெய்துவிட்டு தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்ற வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் , சக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் உள்ளிட்டவர்களையும் தடுத்து வைக்…
-
- 0 replies
- 471 views
-
-
சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளது. அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.c…
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
''சிறிலங்காவின் நிகழ்ச்சிநிரலை குழப்பியுள்ள வான்புலிகள்'' -வேனில்- விடுதலைப்புலிகளின் வான்படை சிறிலங்காவிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுமார் ஒரு மாதத்தில் (33 நாட்களில்) மூன்று தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் வானூர்திகள் சிறிலங்காவின் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளன. வன்னி வான்பரப்பில் வட்டமிட்டு தாக்குதல் நடாத்த முற்பட்ட வேளையில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக குண்டு வீச்சு விமானம் ஒன்றும் விடுதலைப்புலிகளின் வான் எதிர்ப்பு அணிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது முதற் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனை சிறிலங்கா படைத்துறை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அதன்பி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை மீது கடும் அழுத்தங்களை முன்வைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை September 7, 2023 இலங்கைக்கு உதவி வழங்கும் ஐக்கிநாடுகள் சபை அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வெண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் நாள் ஜெனீவாவில் கூடவுள்ள 54 ஆவது மனித உரிமைகள் சபையின் சமர்ப்பிக்கவுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை அரசு இனநல்லிணக்கப்பாடுகள் மற்றும்உண்மைகளை கண்டறிதல் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மாக…
-
- 3 replies
- 382 views
- 1 follower
-
-
16 SEP, 2023 | 01:38 PM நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து, நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகத்திற்காக இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர். அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். அதன் போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தீர்த்த திருவிழாவின் போது காணாமல் போயுள்ளது. தமது குழந்தை காணாமல் போனது குறித்து , பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் வெள்ள…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை MAR 12, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனமே இந்த எச்சரிக்கையை நேற்று விடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தினால் மார்ச் 6ம் நாள் இந்த திட்டப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதில் இருந்து, இன்று வரை 2.33 மில்லியன் டொலர் இழப்பு தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. “இறுதியான முடிவ…
-
- 0 replies
- 439 views
-
-
வித்தியா கொலை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா உடனடி இடமாற்றம்! மகிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை,லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டுக்கொண்டிருந்தார். நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளால் மேற்கொள்…
-
- 0 replies
- 1k views
-
-
Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:23 PM (நா.தனுஜா) விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூல வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளது. மேற்குறிப்பிட்டவாறு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: விசேட தேவையுடையோரின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலத்தின் வரைபு கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதி உங்களது அமைச்சினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டவரைபைத் தயாரிப்பதற்கான முயற்சிகள…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்திக்குமாம் – மஹிந்த அணி ஆருடம்! பொதுத்தேர்தல் ஒன்று வந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் பின்னடைவை எதிர்நோக்கும் என அரசாங்கம் ஆருடம் கூறியுள்ளது. கண்டியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு ஆருடம் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், ” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இன்னும் ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய உறுப்பினர்கள் எம்முடன் இணையவுள்ளனர். உரிய நேரத்தில், உரிய வகையில் அந்த சம்பவம் நடைபெறும். பொதுத்தேர்தலொன்று நடத்தப்பட்டால் எமக்கே வெற்றி நிச்சயம். 120…
-
- 1 reply
- 607 views
-
-
கொழும்பு துறைமுக நகரின் பணிகள் மீண்டும் ஆரம்பம் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகளில் ஒரு பகுதியின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டத்தின் விசேட பிரதி முகாமையாளர் சந்தன குணவர்தன தெரிவித்துள்ளார். பருவக்காலம் என்பதால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிர்மாணிப்புகளுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால், மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு கடந்த 18 ஆம் திகதி இது குறித்து எழுத்து மூலம் அறிவித்திருந்தது. கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 764 views
-
-
இன்று காலை கோப்பாய் இராஜவீதி பொலிஸ் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள ஒரு வீதியில் பனையில் கயிறு போட்டுத் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் மற்றும் ஆணொருவரின் சடலமும் ஜோடியாக தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேலும் http://www.youtube.com/user/jaffnatv#p/u/0/xfyMx2rZv9c கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையிலேயே கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த (வயது 24) என்பவரினதும் சடலங்களே தூக்கில் த…
-
- 3 replies
- 1.6k views
-
-
சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவாகவே, இந்த மானியக் கொடைகள் கிடைத்துள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான எந்த நிபந்தனைகளுமின்றியே, இந்த மானியக் கொடைகளை வழங்க சீனக் குழுவினர் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “பீஜிங்கில் நடந்த பேச்சுக்களின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்ற…
-
- 1 reply
- 567 views
-
-
அரச பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் கட்டத்தொகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்றால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த பகுதியை சுற்றி பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. http://athavannews.com/லேக்-ஹவுஸ்-கட்டத்தொகுதிய/
-
- 1 reply
- 517 views
-
-
‘சிங்கள பௌத்தர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர் கோட்டாபய’ Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 11:55 Comments - 0 கோட்டாபய இந்நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். அவர் கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள மத்திய வகுப்பினர் மற்றும் தொழில் வல்லுனர்களின் விருப்பங்களை வெற்றிக்கொண்டுள்ளார். அது தொடர்ந்து இருக்க வேண்டும். எமது புதிய கூட்டமைப்புக்கு அது மிகப் பெரிய இலாபம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு சிங்கள செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்பட்ட தடங்கள்களை நீக்கி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தற்போது தெளிவான பாதையை உருவாக்கிய…
-
- 2 replies
- 672 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக விசாரணை? முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அரசாங்கத்தின் விசாரணையை எதிர்நோக்க நேரிடலாம் எனக் கருதப்படுகிறது.சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவி வகித்த காலத்தில் தாம் முறையற்ற வகையில் ஓய்வில் அனுப்பப்பட்டதாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறையிட்டுள்ளமையே இதற்கான காரணம். ஓய்வுபெற்ற பிரதம நீதியரசரான சரத் என் சில்வா, கடந்த சில மாதங்களாக தற்போதைய ஆட்சியாளர்களை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். அண்மையில் ஜனநாயகத்திற்கான மக்கள் மன்றம் எனும் அமைப்பின் சந்திப்பொன்றில் நிறைவேற்றதிகாரம் மக்களின் இறைமைக்கு சவாலானதா? எனும் தலைப்பில் உரையாற்றினார். கடந்த வாரம் மக்கள் விடுத…
-
- 1 reply
- 449 views
-
-
Published By: VISHNU 27 NOV, 2023 | 03:13 PM மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது திங்கட்கிழமை (27) ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று நினைவேந்தல் செய்வதை தடைசெய்ய கோரி வாழைச்சேனை, வவுணதீவு, சந்திவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, பொலிசார் இன்நாள் முன்னாள் நா.உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உட்பட ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தலா 20 பேருக்கு எதிராக மட்டக்களப்ப…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
ஜூலை இறுதியிலேயே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை – மங்கள சமரவீர தகவல் APR 24, 2015 | 5:06by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களைக் கையாள்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை வரும் ஜூலை மாத பிற்பகுதியில் உருவாக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். “இந்த உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நிறைய வேலைகளை செய்து வருகிறது. இந்த உள்நாட்டுப் பொறிமுறைக்கான வரையறைகளை தீர்மானிக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று நான்கு தெரிவுகள் உள்ளன. இவற்றில் எமக்கு எது சிறந்த்து என்று நாம் முடிவு செய்வோம். வரும் செப்ரெம்பர் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடர…
-
- 0 replies
- 297 views
-
-
(நா.தனஜா) எம்முடைய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற வருடமாக இவ்வருடம் அமையவுள்ளது. இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதுடன், நாட்டை சீரமைக்கும் பொறுப்பும் எமக்குள்ளது. கட்சியென்ற வகையில் ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட அதிகளவில் உழைக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனைய அனைத்துக் கட்சிகளையும் விட மக்கள் மயப்படுத்தப்பட்ட சேவையினை எம்மிடமிருந்து இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை வழங்குவதற்கான இயலுமை எம்மிடம் உள்ளது என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 ஆம் ஆண்டுக்கான கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஸ்த…
-
- 0 replies
- 536 views
-
-
08 DEC, 2023 | 12:14 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணம் நெடுந்தீவுக்கு வருகை தருவதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிடுவது முக்கியமானது. அவ்வாறு வருகை தரும் போது அவர் கடற்படையின் படகை பயன்படுத்த கூடாது. பொதுமக்கள் பயன்படுத்தும் படகை பயன்படுத்த வேண்டும். அதேபோல் நெடுந்தீவுக்கு சென்றதன் பின்னர் முச்சக்கர வண்டியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உண்மை பிரச்சினை அவருக்கு விளங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் போக்குவரத்து அமைச்சரிடம் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எஸ்.ஸ்ரீதரன் முன்வ…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை காலத்தை வீணடிக்கும் முயற்சி: இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டில் கருத்து வெளியீடு இலங்கை இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராயும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையின் தீர்வு யோசனைகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என இணைத்தலைமை நாடுகளின் மகாநாட்டில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு பற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து தெளிவு படுத்துவதற்கு வாய்பளிக்கப்படாமை குறித்து அமெரிக்கா நோர்வே ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன விசனம் தெரிவித்துள்ளன. வடக்கு கிழக்கு மக்களின் அபிலாசைகளை உள்வாங்காத தீர்வு திட்டத்தை தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் பு…
-
- 1 reply
- 1.1k views
-