ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143431 topics in this forum
-
மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப்பிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புகழிடகோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் ஆயரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வது இது முதல் தடவையல்ல. அகதிகள் நாடுகடத்தப்படுதல் தொடர்பில் அவரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார்; தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் இவ்வாண்டு 2822 புகழிடகோரிக்கையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புகழிடகோரிக்கைய…
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் குழு ஒன்று, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் வெலிக்கந்த முகாமுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றது. இந்தக் குழுவினருடன் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் சென்றிருந்தனர். இவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடியிரு…
-
- 0 replies
- 868 views
-
-
By Kavinthan Shanmugarajah 2012-12-27 16:01:18 இலங்iயில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என முன்னாள் இந்திய சிரேஸ்ட இராணுவ மேஜர் அசோக் மெத்தா தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசியல் நல்லிணகத்தை ஏற்படுத்துவதன் மூலமே, இராணுவ வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டதுடன், நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டு காலப்பகுதியில் வடக்கில் பாரியளவ…
-
- 3 replies
- 558 views
-
-
முள்ளிவாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்” என்று தாயகத்தில் சிங்களத்தின் இறுதி போர் என்ற பெயரில் நடந்த கருவறுப்பை நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளார் சாணக்கியன் என்ற ஈழத்தமிழன் தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் சென்னை ராஜீவ் காந்தி நகர் நெசப்பாக்கம் என்ற இடத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு தமிழ் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பாலகுரு தலைமையில் நேற்று மாலை எட்டு மணியளவில் ஆரம்பமானது தாயகத்தின் இன்றைய நிலை மற்றும் இறுதியாக நடைபெற்ற போர் என்ற பெயரில் சிங்களம் ஆடிய கொலைவெறியாட்டம் மற்றும் புலத்தமிழ் உறவுகள் என்று பல நிலைப்பாடுகளை விளக்கியதாக இந்த முள்ளிவாய்க்கலிலிருந்து ஒரு அவலக்குரல் வெள…
-
- 0 replies
- 469 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பபட்டுள்ளார். 27 டிசம்பர் 2012 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களது விடுதலைக்காக போராடி வரும் அமைப்பினது முக்கிய செயற்பாட்டாளரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பபட்டுள்ளார். எதிர்வரும் 29ம் திகதி காலை 11 மணியளவினிவில் நேரில் சமூகமளிக்குமாறு இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் அவர் தற்போது நாட்டினில் இல்லையென அவரது கட்சி தரப்புக்கள் தெரிவித்தன. ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதன் செயலாளருமான கஜேந்த…
-
- 1 reply
- 616 views
-
-
வன்னியில் பாரதி இராணுவ முகாமில் ஆவிகள் தொல்லை - இராணுவத்தில் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் தகவல்! தமிழ் யுவதிகள் மூவர் ஒரு மாதத்துக்கு முன் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் இவர்களில் 15 பேரை பேய்கள் பிடித்தன என்று சொல்லப்படுகின்றது. பாரதிபுரம் முகாமுக்கு கொண்டு வரப்பட்டமையில் இருந்துதான் 15 பேருக்கும் வித்தியாசமான அனுபவங்கள் நேர்ந்து இருக்கின்றன. ஆனால் கொக்காவில் முகாமுக்கு மாற்றப்பட்டமையில் இருந்து இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை, யுத்த நாட்களில் பாரதிபுரம் முகாமில் ஏராளமான மரணங்கள் இடம்பெற்று இருக்கின்றன, இவற்றை நாம் கேள்விப்பட்டோம், இங்கு சாகடிக்கப்பட்டவர்கள் பேய்களாக அலைந்து திரிகின்றனர் என்றும் அறிந்து இருந்தோம், எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று தமிழ்நாடு, கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறான கோரிக்கையை அவர் முன்வைத்தார். உலக பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக இந்த விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படைவீரருக்கு இந்தியாவில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைதி திரும்பியுள்ள இலங்கையில் இந்திய மாணவர்கள் சென்று கல்விகற்க நடவடிக்கைகளை இந்திய …
-
- 13 replies
- 1k views
-
-
தமிழ்த்தேசிய சக்திகளை கோபப்படுத்தியுள்ள சம்பந்தனின் பாராளுமன்ற உரை முத்துக்குமார் சம்பந்தன் டிசெம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தமிழ்த்தேசிய சக்திகளின் கோபத்தை நன்றாகவே கிளறிவிட்டிருக்கிறது. இதற்கான எதிர்வினைகள் புலம்பெயர் இணையத்தளங்களில் அதிகமாக வந்தன. உள்ளூர் பத்திரிகைகளில் ஆதரவாகவும், எதிராகவும் பல கட்டுரைகள் பதிவாகியிருக்கின்றன. அரசியல்கட்சிகள் என்றவகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதற்கு பலத்த கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் 'அது சம்பந்தனின் தனிப்பட்ட கருத்தேயொழிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது கருத்தல்ல' எனக் கூறியிருக்கின்றார். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சம்பந்…
-
- 4 replies
- 622 views
-
-
சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்! வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இது அவரின் உரையை திரிவுபடுத்தும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இனப்படுகொலை இராணுவத்திற்கும் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கும…
-
- 4 replies
- 976 views
-
-
தமிழ் இளைஞர்களை மிகவும் திட்டமிட்ட முறையில் வன்முறையில் தள்ளி அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் காட்டுவதற்கு இந்த அரசு முயல்கிறது. தமிழ் இளைஞர்கள் எவரும் இந்த அரசின் சதி வலையில் சிக்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று கொழும்பில் முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கில் சுயாதீனமாக வாழ்வதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அங்குள்ள தமிழ் மக்களின் சனத்தொகைப் பரம்பலை மாற்றி அமைக்கும் வகையில் அரசால் திட்டமிட்ட அடிப்படையில் சட்டவிரோதக் க…
-
- 0 replies
- 386 views
-
-
சுப்ரீம் சட் செய்மதி தமிழருக்கு சொந்தமானது – திரு.மணிவண்ணன் செவ்வி December 27, 2012 செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதென்பது பலமுக்கிய அரசாங்கங்களுக்கே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தச் சாதனையைச் செய்திருப்பது உலகெங்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரிம் நிறுவனமானது இலங்கைத் தமிழ் வணிகரான மணிவண்ணனுக்குச் சொந்தமானதாகும். இலங்கையின் மிக முக்கிய தமிழ் வணிகர் என்று விக்கிபீடியாவில் விபரிக்கப்படும் மணிவண்ணன் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். சுப்ரிம்சட் இன் வெற்றிகரமான ஏவுதலின்பின் அவர் வழங்கிய செவ்வி. செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது உங்களுக்கு நிம்மதியை அளிக்கிறதா? ஆம். கடைசி சில தினங்கள் மு…
-
- 5 replies
- 1k views
-
-
கூகுள் இணைய தளத்தில் பாலியல் தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபடுவோர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கூகுள் இணைய தேடு தளத்தில் 'செக்ஸ்' (Sex) என்ற பதத்தை அதிகளவில் தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முதனிலை வகிப்பதாக 2012ம் ஆண்டின் கூகுல் புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் இந்தத்த கவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் படி இந்தியா இரண்டாம் நிலை வகிப்பதுடன், பபுவா நியு கினியா மூன்றாம் இடத்தை வகிக்கின்றது. எதியோப்பியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே நான்காம் ஐந்தாம் இடங்களை வகிக்கின்றன. http://onlineuthayan.com/News_More.php?id=221811730027361969
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளை தூதுக்குழுவொன்று நாளை வெள்ளிக்கிழமை சென்று பார்வையிடவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, தம்பர அமில தேரர் மற்றும் மன்னார் ஆயர் வண. ராயப்பு ஜோசப் ஆகியோரே வெலிக்கடை சிறைச்சாலைக்கு நாளை செல்லவுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை அவர்களுடைய குடும்ப உறவினர்களினால் பண்டிகை காலத்திலும் சென்று பார்வையிடமுடியாதிருந்தது. சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களுடைய உறவினர்களுக்கு நத்தார் பெருநாள் மற்றும் வெசாக் ஆகிய தினங்களில் அனுமதியளிக்கப்படும். இந்த கைதிகள் யாழ்ப்பாணம்,முல்லைத…
-
- 0 replies
- 512 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் கவனமாக கையாளத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும் என்று பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்செஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். “தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார். துப்பாக்கிகள் மௌனமாகி விட்ட போதிலும், அச்சம், அவமானம், பெளதீக ரீதியான பாதுகாப்பின்மை, சட்டத்தின் ஆட்சியின் குறைபாடு, இராணுவ மயமாக்கல், வடக்கில் சிங்கள மாயமாக்கல், சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் பகிரப்படாத நிலையே அங்கு காணப்படுகிறது. குறைந்தபட்சம் விடுதலைப் புலிகள் சிறிலங்கா இராணுவத்தின் பலத்துக்கு ஈடு செய்யும் நிலையிலேனும் இருந்தார்கள் என்று தமிழர்கள்…
-
- 1 reply
- 680 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது By Nirshan Ramanujam 2012-11-28 13:22:18 யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமான நேற்று யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டதாகக் குற்றம் சுமத்தி இராணுவத்தினர் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து மாணவர்களைத் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தில் நேற்று பதற்றம் நிலவியது. இதனைக் கண்டித்து இராணுவத்தினருக்கு எதிராக பல்கல…
-
- 110 replies
- 7.6k views
-
-
மழையால் வன்னியின் இயல்புநிலை முற்றாகப் பாதிப்பு -குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் 27 டிசம்பர் 2012 வன்னியில் கடந்த சில நாட்களாக அதிகரித்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை என்றுமில்லாதவாறு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வசிக்கும் தற்காலிகக் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக குளோபல் தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் நுழைந்ததையடுத்து பாடசாலை போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். வீதிகளிலும் காணிகளிலும் மழை வெள்ளம் நிரம்பியுள்ளது. இதனால் மக்களின் இயல்பான வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளக்காடாக காட்சிய…
-
- 0 replies
- 572 views
-
-
இன்னும் கைது செய்வோம் : இலங்கை காவல்துறை இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்துவந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதை நிச்சயமாக உறுதிசெய்த…
-
- 0 replies
- 696 views
-
-
The Sri Lankan military is advertising a newly constructed hotel in the heart of the killing fields in the north of the island, where tens of thousands of minority Tamils were killed in 2009. The holiday resort, called Lagoon's Edge, caters for Sinhala war tourists who want to see the last bastion of the defeated Tamil Tiger rebels. read More
-
- 2 replies
- 834 views
-
-
"தமிழ் இளைஞர்களை மிகவும் திட்டமிட்ட முறையில் வன்முறையில் தள்ளி அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் காட்டுவதற்கு இந்த அரசு முயல்கிறது. இளைஞர்கள் எவரும் இந்தச் சதி வலையில் சிக்கி வன்முறையில் இறங்கிவிடக்கூடாது. நாம் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டத்தில் மாத்திரமே இளைஞர்கள் இணையவேண்டும்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நேற்று கொழும்பில் முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கில் சுயாதீனமாக வாழ்வதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அங்குள்ள தமிழ் மக்களின் சனத்தொகைப் பரம்பலை மாற்றி அமைக்கும் வகையில் அரசால் திட்டமிட்ட அடி…
-
- 0 replies
- 510 views
-
-
தேர்தல் மேடைகளில் வீறாப்பு பேசிய ஹக்கீம் இன்று சோரம் போய் விட்டார் ;அசாத்சாலி திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும் என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மறைந்த தலைவர் அஷ்ரஃப் இன்று உயிருடன் இருந்திருந்தால் இச்சட்ட மூலத்தை எதிர்த்திருப்பார். தனது பேரம் பேசும் சக்தியை, அரசியல் பலத்தை வெளிக்காட்டியிருப்பார். சமூக நலனுக்காக தனது பதவியை தூக்கி எறிந்திருப்பார். ஆனால் இன்றுள்ள தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் மேடைகளில் வீறாப்பு பேசி விட்டு பேரம் பேசாமல் சோரம் போய் விட்டார். ஒ…
-
- 0 replies
- 299 views
-
-
தமிழ், முஸ்லிம் மக்களை சுட்டிக்காட்டி கோத்தபாய கருத்து தெரிவிப்பது நல்லிணக்கத்துக்கு எதிரான செயல்!- மனோ கணேசன் தமிழ், முஸ்லிம் மக்களை சுட்டிக்காட்டி கோத்தபாய கருத்து தெரிவிப்பது நல்லிணக்கத்துக்கு எதிரான செயல்!- மனோ கணேசன் எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் தலைநகரம், அந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானது. நாட்டின் தலைநகரில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கின்றவர்கள் சொல்ல வருவதுதான் என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை வடக்கிலும், கிழக்கிலும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா? தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவி…
-
- 0 replies
- 277 views
-
-
வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். புற்றுநோய்க்கான சத்திரசிகிச்சையின் பின்னர் கியூபா வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துவரும் வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷுக்கு இலங்கையிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வழங்குவதற்கு விரும்புவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எனது நாட்டிலிருந்து உங்களுக்காக வைத்திய நிபுணர் ஒருவரை வழங்க விரும்புகின்றேன். உங்கள் தேக ஆரோக்கியம் விரைவில் குணமடைவதற்கு இது உதவியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.…
-
- 8 replies
- 689 views
-
-
(கைதுசெய்யப்பட்டவர்கள் படையினரிடம் சரணடையாத விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்று காவல்துறை கூறுகிறது.) இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்துவந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 557 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்டகாலமாக மறைந்திருந்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்படுமானால் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்…
-
- 1 reply
- 684 views
-
-
(எஸ்.கே.பிரசாத்) முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன. இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/…
-
- 2 replies
- 497 views
-