ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு, தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது. குறிப்பாக, சர்வதேச சமூகத்திடம் தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவாத் தொடரில் அபாயப் பொறி நிச்சயம் என்று அமெரிக்கா கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, சர்வதேச சமூகத்திடம் அளித்த உறுதிமொழிகளை நிறை வேற்றாமல் ஜனநாயக விரோத செயல்…
-
- 0 replies
- 683 views
-
-
13 ஆவது திருத்தத்தை நீக்கக் கூடாது, அதனடிப்படையில் தீர்வு வேண்டும்: இந்தியா வலியுறுத்தல் By General 2012-11-03 09:39:30 அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இந்தியாவின் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற இந்து சமுத்திர வலய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என பாதுக…
-
- 0 replies
- 430 views
-
-
தமக்கு உறுதியளித்தப்படி இலங்கையின் உயர்கல்வி அமைச்சு சுற்று நிருபங்கள் சிலவற்றை இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிகள் உட்பட்ட சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மூதவைகளுடன் பேசவேண்டும் என்று விரிவுரையாளர்களும் அரசாங்கமும் இணங்கியிருந்தன. இதன்படி தற்போதுள்ள கட்டாய தலைமைத்துவ பயிற்சி தொடர்பான சுற்றுநிருபத்தை விலக்கிக்கொள்வதென்று இலங்கையின் அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் உடன்பட்டிருந்தனர். எனினும் இதுவரை அந்த உடன்பாடு செயற்படுத்தப்படவில்லை என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க பேச்சாளர் மஹிம் மெண்டிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே தாம் அரசாங்கத…
-
- 1 reply
- 352 views
-
-
இன்னும் சில நாட்களில் மாவீரர் தினம் உலகத் தமிழர்களால் அனுசரிக்க இருக்கின்ற நிலையில் இந்த வார ஆனந்தவிகடனில் வெளிவந்திருக்கும் நேற்று நான் விடுதலைப் போராளி, இன்று நான் பாலியல் தொழிலாளி என்ற தலைப்பில் அருளினியன் என்பவர் எடுத்துள்ள பெண் போராளி ’யின் பேட்டி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது . ஒட்டு மொத்த போராளிகளின் உணர்வினையும் பிரதிபலிப்பதாக படிப்பவர் கருதும் வகையில் மிக திறமையாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பேட்டியை நாம் வெறுமனே கடந்து விட முடியாது. இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின் தமிழ்த் தேசிய இனம் தன்னகத்தே அடைந்திருக்கின்ற மாற்றங்கள் மகத்தானவை . ஈழம் என்கிற நாடு தமிழ்த் தேசிய இனத்தின் தணியாத தாகமாய் இன்ற…
-
- 0 replies
- 615 views
-
-
மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்க முடியாதென சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என அச்சபை கோரியுள்ளது. யுத்தத்தின் பின்னரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிதாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சில தசாப்தங்களாகவே மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. யுத்தம் நிறைவ…
-
- 0 replies
- 366 views
-
-
[size=4][/size] [size=4]By M.D.Lucias 2012-11-02 19:44:52[/size] [size=4]குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பழைமைவாய்ந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக் கொண்டு பிரிந்த சென்ற அணியினர் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுள்ளனர். பின்னர் நீதி மன்றத்தில் இரு சாராருக்கிடையே இது குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. …
-
- 9 replies
- 1k views
-
-
[size=4]சிறிலங்கா மீது அமெரிக்கப் பிரதிநிதி சுமத்திய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்[/size] [size=4][ வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2012, 03:36 GMT ] [ தா.அருணாசலம் ][/size] [size=4]ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி எலீன் சம்பர்லைன் டோனகே, “ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் சிறிலங்கா அரசு ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத் தான் இன்றும் முன்வைத்துள்ளது. புதிய யோசனைகளையோ திட்டங்களையோ முன்வைக்கவில்லை. சிறிலங்காவில் 18வது அரசியலமைப்புத் தி…
-
- 1 reply
- 430 views
-
-
காணவில்லை! காயத்திரி வைத்திலிங்கம் கடைசியாக மோர்னிங்சைட் செப்பேர்ட் பகுதியில் காணப்பட்டுள்ளார்.தகவல் தெரிந்தவர்கள் கீழுள்ள இலக்கங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும் Broadcast time: 10:41 Friday, November 2, 2012 41 Division 416−808−4100 The Toronto Police Service is requesting the public’s assistance locating a missing girl. Kayathiri Vaithilingam, 16, was last seen on Thursday, November 1, 2012, at 3 p.m., in the Neilson Road/Ellesmere Road area She is described as brown, 5’5”, 150 lbs., with brown eyes and long, black wavy hair. Police are concerned for her safety. Anyone with information is asked to contact police at 416−808−4100, Crime St…
-
- 0 replies
- 648 views
-
-
[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று சீன அரசின் அழைப்பின் பேரில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை பத்து நாள் சுற்றுப்பயணமாக சீனா புறப்படுகின்றது. இந்தக் குழுவில் தமிழரசுக் கட்சியின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணபிள்ளை சேயோன் ஆகியோர் அடங்குகின்றனர். அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு ஆகியன தொடர்பான கொள்கை மற்றும் வழிமுறைகள்| என்ற தலைப்பில் - சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள பல்வேறு அரசிய…
-
- 0 replies
- 511 views
-
-
ராதிகா சிற்சபைஈசன் 2012ன் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரியப்பட்டார். ஸ்காபரோ � புதிய ஜனநாயகக்கட்சி பா. உ. ராதிகா சிற்சபைஈசன் (ஸ்காபரோ - ரூஜ் ரிவர்) 'நௌ' (NOW) சஞ்சிகையால் இன்று 2012ன் 'சிறந்த உள்ஊர்பாராளுமன்ற உறுப்பினர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பெற்றார். 'இந்த விருது பெறுவதையிட்டு நான் மிகுந்த பெருமையடைவதோடு ஆழ்ந்த நன்றியையும் தெரிவிக்கிறேன்" என தெரிவித்த ராதிகா சிற்சபைஈசன், "அதற்கு முக்கிய காரணம் இந்த விருதுக்காக எனக்கு வாக்களித்தவர்கள் ஸ்காபரோ மற்றும் ரொரன்ரோ பெரும்பாக மக்களே" என கூறினார். ரொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் 'நௌ' சஞ்சிகை, 'ரொரன்ரோவில் சிறந்தது' (Best of Toronto) என்ற பட்டியலை வருடாந்தம் வெளியிடுகிறது. அதிலே ரொரன்ரோ பெரும…
-
- 1 reply
- 669 views
-
-
சிறீலங்கா சிங்கள பௌத்த குடியரசு என்பது மகிந்தவின் நீண்ட காலத்திட்டம். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் -மனோ கணேசன் என்ற தலைப்புச் செய்தியுடன் அக்கினீஸ்வரனின் 13ம் சீர்திருத்தச்சட்டம் வரமா சாபமா, தீபச்செல்வனின் நிலத்திற்காக போராட வேண்டிய காலம், இதயசந்திரனின் கொடுத்ததையும் பறிக்கிறதா இலங்கை இந்திய ஒப்பந்தம், சாந்தி. கே. பிள்ளையின் உலக அரசியல் சீனா வச... மா?, வன்னியில் ஊடகவெளி போன்ற தலைப்பிலான கட்டுரைகளுடன் தரிசனங்கள் என்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் யூனியர் வரணியூரானின் தமிழ் பௌத்தன் சிறுகதை, நடுத்தெரு நமசிவாயம் என்பவற்றுடன் பொன்.காந்தனின் சாமகானம் என்ற நெடுங்கவிதை பகுதியும் உள்ளடங்கி தேசத்தின் குரலின் கன்னி இதழ் வீச்சுடன் கார்த்திகை மாத புனித நினைவுகளையும் சுமந்து வெளிவந்துள்…
-
- 13 replies
- 1.5k views
-
-
பிச்சைகாரரின் நாடாகும் தமிழீழம்: [Thursday, 2012-11-01 23:01:17] 2009 ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னர் எம் தமிழீழத்தில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்று தமிழீழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு,திருகோணமலை, மன்னார், அம்பாறை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, 2009 மே மாதம் யுத்தம் முடிவடைய முன்னர் வன்னியில் தலைவர் பிரபாகரனின் காலத்தில் எவருமே பிச்சை எடுக்க முடியாத நிலைமை இருந்தது. அதனையும் மீறி யாராவது பிச்சை எடுத்தால் உடனே விடுதலைப்புலிகளின் முதியோர் காப்பக பிரிவினர் அவர்களை மீது தமது முதியோர…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளரிடம் டெசோ தீர்மானங்கள் கையளிப்பு இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலு எம்.பி.யும் நியூயோர்க் நகரில் ஐ.நா. சபை துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவையும், ‘டெசோ’ மாநாட்டு தீர்மானங்களையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோரிக்கை மனுவினையும், சென்னையில் நடைபெற்ற ‘டெசோ’ மாநாட்டின் தீர்மானங்களையும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் வழங்கப்பட உள்ள மனுவினையும்,…
-
- 4 replies
- 813 views
-
-
மெனிக்பாம் முகாமில் தங்கிருந்த மக்கள் காடுகளில் குடியேற்றப்பட்டு உள்ளனர் –அசாத் சாலி 02 நவம்பர் 2012 மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த மக்களை அரசாங்கம் காடுகளில் குடியேற்றியுள்ளதாக முன்னாள் கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளுக்கு அஞ்சியே அரசாங்கம் இவ்வாறு மக்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அகற்றிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைள் முற்று முழுதாக பூர்த்தியாகியுள்ளன என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு காண்பிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். கூடாரங்களிலும், பொலித்தீன் கூரைகளிலும் மீள்குடியேற்றப்பட்ட மக…
-
- 0 replies
- 561 views
-
-
கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காசோலை மோசடி தொடர்பில் 6 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒரு இலட்சத்து தொள்ளாயிரத்து 93 ரூபா 91 சதம் பெறுமதியுடைய காசோலை மோசடி தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 28 ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் 3 இலட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபா தொடர்பிலான முறைப்பாடு ஒன்றும், ஒரு இலட்சம் ரூபா தொடர்பில் முறைப்பாடு ஒன்றும், அதேவேளை ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா மோசடி தொடர்பாகவும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா மோசடி என…
-
- 0 replies
- 805 views
-
-
"வடக்கில் இராணுவப் பிரசன்னைத்தை குறைத்து உடனே தேர்தலை நடத்த வேண்டும்" என ஜெனீவாவில் நேற்று இடம் பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் கனடா வலியுறுத்தியது. இலங்கை 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. கடந்த முறை மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு அமெரிக்காவோ இலங்கை செய்ய வேண்டியதை மீண்டும் பட்டியலிட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமையன்று ஆரம்பித்த சர்வதேச காலக்கிரம ஆய்வு என்ற பொறிமுறையின் கீழான இலங்கை குறித்த விவாதத்தின் போதே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும் பல மேற்கத்திய நாடுகள் இலங்கை அரிசின்…
-
- 0 replies
- 507 views
-
-
13வது திருத்த சட்டத்தை அரசாங்கம் அகற்ற முற்பட்டால் அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என அவர்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 13வது திருத்த சட்டத்தை ஆதரிக்கும் இடதுசாரி அமைச்சர்களான திஸ்ஸ விதாரன, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென ஹெல உறுமய கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, யுத்தம் முடிவுற்ற பின்பு சிங்கள மக்கள் தமிழ் பேசும் மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து அவர்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்க தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், 13வது…
-
- 0 replies
- 492 views
-
-
ராஜீவ் காந்தி கொலையுடன் வைகோ, கருணாநிதிக்கு தொடர்பு? இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் கட்டளைப்படி தி.மு.க.தலைவர் கருணாநிதி மற்றும் வைகோவிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை என இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரி கே.ரகோத்தமன் குற்றம் சாட்டி உள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முதன்மை விசாரணை அதிகாரி ரகோத்தமன், “ராஜீவ் காந்தி கொலைக்கான கூட்டுச் சதி - சிபிஐ கோப்புகளிலிருந்து´´ என்ற பெயரில் ஒரு நூல் எழுதி உள்ளார். விசாரணையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் புகலிடமான யாழ்ப்பாணத்திற்கு வைகோ சென்று வந்தது தொடர்பான ´இன் டைகர்´ஸ் கேவ்´ உள்ளிட்ட 500 விடியோ கேசட்கள் பறிமுதல் செய்…
-
- 1 reply
- 942 views
-
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழ் உறவுகள் நிவாரண உதவி தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு கனடாவின் உறங்கா விழிகள் அமைப்பு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. மெனிக்பாம் முகாமிலிருந்து அவசர அவரசமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியோற்றப்பட்ட மக்கள் அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் காலநிலையும் அவர்களை விட்டு வைக்கவில்லை இதனால் அவர்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் பொதுநோக்கு மண்டபங்களிலும் குடியோறினார்கள். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை, மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம், முள்ளிவாக்…
-
- 1 reply
- 471 views
-
-
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணை அவசியம்: ஜ.நாவில் வலியுறுத்தியது இந்தியா! [Friday, 2012-11-02 08:50:18] ஜெனிவாவில் நடந்து வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மறுஆய்வு கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக மனித உரிமை மீறல்கள் குறி்த்து நம்பத்தகுந்த விசாரணை தேவை.மேலும் இலங்கை தமிழர் பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு தேவை.இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்.வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை விரைவில் விலக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன. இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துவதனை விடவும் சிரிய நிலைமைகள் குறித்து உலக நாடுகள் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டுமென கட்டார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடுநிலையாக செயற்படவில்லை என பெலரஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கம் நவனீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுத்த போதிலும் இதுவரையில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளது. நில…
-
- 0 replies
- 595 views
-
-
[size=4][/size] [size=4]தமிழ் கட்சிகளினால் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியான புலிக் கொடி இனம் தெரியாத நபர்களால் காட்டப்பட்டது. இவ்சம்பவமானது நடைபெற்று பல மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை புலிக் கொடியினைக் காட்டியவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் யாழ் பொலீஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் மாநாட்டில் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது காட்டப்பட்ட புலிக் கொடி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக யாழ் மாவட்ட பிரதி பொலீஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவ…
-
- 0 replies
- 547 views
-
-
தமிழ் அரசியல் கட்சிகள் மரண அச்சுறுத்தல் விடுப்பதாக மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மங்களராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.தமிழீழ அரசியல் கட்சிகளினால் தமக்கும் சிங்கள மக்களும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமக்கும் பிரதேச சிங்கள மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுமனரத்ன தேரர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.மட்டக்களப்பு சிட்டிமடு மற்றும் கெவிலியா மடுவ ஆகிய பிரதேசங்களில் 90 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டது முதல் இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு சுதந்திரமடைந்துள்ள நிலை…
-
- 0 replies
- 440 views
-
-
யாழ்ப்பாணத் தில் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க நடவடிக்கை 02 நவம்பர் 2012 யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்மிட்ட போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை தடுத்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்தியர்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண குடாநாட்டில் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் இந்தியர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், கஞ்சா மற்றும் புகையிலையுடன் தொடர்புடைய …
-
- 1 reply
- 502 views
-
-
தமிழர் தாயகத்தை அழிக்க ஒருபோதும் இடமளியோம்! - பேரினவாதப் பிடியிலிருந்து எமது நிலத்தை மீட்டே தீருவோம்!! - இராஜேஸ்வரன் 'தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது வளங்களை அபகரித்து, சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதனூடாக தமிழர் தாயகத்தை இல்லாதொழித்து சிங்கள மயமாக்கப்பட்ட பகுதிகளாக எமது மாகாணங்களை சித்திரிக்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகின்றது. இதற்கு தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்காது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்முள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து …
-
- 0 replies
- 535 views
-