Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. பெலரஸ், வட கொரியா, ஈரான், துருக்கி, சீனா, கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவான கருத்து வெளியிட்டுள்ளன. இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துவதனை விடவும் சிரிய நிலைமைகள் குறித்து உலக நாடுகள் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டுமென கட்டார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடுநிலையாக செயற்படவில்லை என பெலரஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கம் நவனீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுத்த போதிலும் இதுவரையில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளது. நில…

  2. [size=4][/size] [size=4]தமிழ் கட்சிகளினால் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியான புலிக் கொடி இனம் தெரியாத நபர்களால் காட்டப்பட்டது. இவ்சம்பவமானது நடைபெற்று பல மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை புலிக் கொடியினைக் காட்டியவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் யாழ் பொலீஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் மாநாட்டில் நெல்லியடியில் நடத்தப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது காட்டப்பட்ட புலிக் கொடி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதாக யாழ் மாவட்ட பிரதி பொலீஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவ…

  3. தமிழ் அரசியல் கட்சிகள் மரண அச்சுறுத்தல் விடுப்பதாக மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மங்களராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.தமிழீழ அரசியல் கட்சிகளினால் தமக்கும் சிங்கள மக்களும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமக்கும் பிரதேச சிங்கள மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுமனரத்ன தேரர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.மட்டக்களப்பு சிட்டிமடு மற்றும் கெவிலியா மடுவ ஆகிய பிரதேசங்களில் 90 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டது முதல் இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு சுதந்திரமடைந்துள்ள நிலை…

  4. யாழ்ப்பாணத் தில் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்க நடவடிக்கை 02 நவம்பர் 2012 யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்மிட்ட போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளை தடுத்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்தியர்களின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாண குடாநாட்டில் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் இந்தியர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹெரோயின், கஞ்சா மற்றும் புகையிலையுடன் தொடர்புடைய …

  5. தமிழர் தாயகத்தை அழிக்க ஒருபோதும் இடமளியோம்! - பேரினவாதப் பிடியிலிருந்து எமது நிலத்தை மீட்டே தீருவோம்!! - இராஜேஸ்வரன் 'தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது வளங்களை அபகரித்து, சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இதனூடாக தமிழர் தாயகத்தை இல்லாதொழித்து சிங்கள மயமாக்கப்பட்ட பகுதிகளாக எமது மாகாணங்களை சித்திரிக்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகின்றது. இதற்கு தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்காது.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் தெரிவித்முள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து …

  6. திவிநெகும சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணாக இருப்பதாலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது - TNA 02 நவம்பர் 2012 திவிநெகும சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணாக இருப்பதாலேயே அதற்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மக்களைப் பாதிக்கின்ற, சமுர்த்திப் பயனாளிகளைப் பாதிக்கின்ற எந்தவொரு விடயத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடந்தையாக இருக்க மாட்டாது. வழக்கைத் தாக்கல் செய்த என்னிடம் தேவையான விளக்கத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு அரச தரப்பு உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலன்ரின…

  7. மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதி மொழிகளை ஏற்க முடியாது – ஏ.ஐ. 02 நவம்பர் 2012 மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான இலங்கையின் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளை தொடர்ந்தும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தத்தின் பின்னரான குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிதாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. சில தசாப…

  8. சுதந்திரமும் இறைமையும் உள்ள தனித் தமிழீழ அரசே எமது நிலைப்பாடு ! பிரதமர் வி.உருத்திரகுமாரன் தாயகம் தேசிய தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையான சுதந்திரமும் இறைமையும் உள்ள தனித் தமிழீழ அரசே எமது நிலைப்பாடு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28-10-2012) இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் கருத்தாடற்களத்தில் இணைவழி பரிவர்த்தனையூடாக இணைந்து கொண்டு உரையாற்றும் பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலுக்கு பிந்திய இலங்கைத்தீவின் இன்றைய சூழலில் தமிழர்கள் தங்களின் அரசியல் அபிலாசையினை வென்றெ…

    • 12 replies
    • 1.1k views
  9. கழுகு மோதி தரையிறக்கப்பட்ட விமானம் By General 2012-11-02 11:32:19 திருச்சியிலிருந்து இலங்கை நோக்கி வந்த விமானமொன்றின் மீது கழுகு ஒன்று மோதி விமானத்தின் கண்ணாடி உடைந்தமையால் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 110 பயணிகளுடன் நேற்று இலங்கைக்கு பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்திலிருந்த 80 பயணிகள் வேறு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். கழுகு மோதியதால் தரையிறக்கப்பட்ட விமானம் சீர் செய்யப்பட்ட பின்னர் நேற்று இரவு பயணிகள் இன்றி இலங்கையை வந்தடைந்ததுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=1424

  10. இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலில் இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக விசனம் தெரிவித்துள்ள சர்வதேச வழக்குரைஞர்கள் சங்கத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பகம், சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை உயரதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வந்த அறிக்கைகளைத் தொடர்ந்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது விசனத்தை தெரிவித்துள்ளது. நீதித்துறையை பயமுறுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த தாக்குதலைக் கருதுவதாக அவ்வமைப்பு விடுத்துள்ள கடித…

  11. 26 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர் 02 நவம்பர் 2012 26 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. விசேட விமானமொன்றின் மூலம் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் கிறிஸ்மஸ் மற்றும் கொகோஸ் தீவுகளைச் சென்றடைந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் கிறிஸ் பொவுன் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தும் நடவடிக்கையானது சர்வதேச நியதிகளுக்கு முரணான வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய பயண ஆவணங்கள் இன்றி அவுஸ்திரேலியாவில் குறித்த இலங்கையர்கள் தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதிக்க முடியாது எ…

  12. [size=3] [/size][size=3] பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழ் அரசியல் திட்ட கழகம் ஆகிய அமைப்புக்களின் கூட்டறிக்கை. சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு சிறிலங்கா கட்டுப்பட வேண்டும் Nov 01 2012 01:21:53[/size] [size=3] [size=3]சிறிலங்காவில் போரின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை பரிசீலனை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது. 2008 க்குப் பிறகு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட பரிசீலனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை …

  13. கனடாவில் இடம்பெறுவதாக இருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். நேற்று மாலை ஸ்காபுறோ அஞ்சப்பர் செட்டிநாட் உணவகத்தில் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த நிகழ்வை ஏற்பாடுசெய்த டிரினிட்டி ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான டான்டன் பீற்றர் மற்றும் கிசான் நித்தி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு, எமது சக்திக்கும் இசைஞானி இளையராஜா குழுவினரின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் இந்த இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து விட்டது. எதிர்பாராத விதமாக சென்னையைத் தாக்கிய ‘நீலம்’ என்ற கடும் புயலின் காரணத்தினாலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும் அழிவை ஏற்படுத்திய ‘சாண்…

  14. 2013ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்குள் வர அனுமதிக்கப்படுவர்: - கனடா அறிவிப்பு [Thursday, 2012-11-01 22:38:14] எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் வழக்கம் போல் புலம்பெயர்ந்த மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. இது குறித்து புலம்பெயர்வு துறை அமைச்சர் ஜேசன் கென்னி கூறுகையில், வழக்கம் போல் 2013ஆம் ஆண்டு சுமார் இரண்டரை லட்சம் பேர் கனடாவுக்கு வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். மேலும் பணியாளர் திட்டத்தில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தும், அனுபவ பிரிவு திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் மக்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர புலம்பெயர்ந்த மாணவர் மற்றும் பணியாளருக்கு நிரந்தர குடியிருப்பு வசதியை ஏற்பாடு செய்யவும் தி…

  15. அரேபியன் குடாக் கடல் பகுதியில் இருந்து டுபாய் பாதுகாப்பு கடலோரப் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட அவுஸ்றேலியா நோக்கிப் சென்று கொண்டிருந்த 24 தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்றேலியா நோக்கிப் சென்று கொண்டிருந்த இவர்களின் கப்பல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அரேபியன் குடாக்கடற்பகுதிக்கு அண்டிய பெருங்கடலில் பழுதடைந்திருந்த நிலையில் டுபாய் கடலோர பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது. இந்நிலையில் இக்கப்பலில் இருந்த 24 தமிழர்களையும் டுபாய் கடலோரக்காவல் படையினர் மீட்டிருந்த நிலையில் இவர்களின் தற்போதைய நிலைய அறிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நா.த…

  16. திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள் மாணவர்கள் தாக்குதல். சிறீலங்கா | ADMIN | NOVEMBER 2, 2012 AT 00:10 கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் கல்வி பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட சித்தமருத்துவ தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல். கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் சிறுபான்மையாக 25 இருக்கும் தமிழ் மாணவர்கள் மீது பெரும்பான்மை இன 200- 240 மாணவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்ட வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக வளாக நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கைகளையும“ எடுக்க முன்வரவில்லை எனத் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 27.10.2012 அன்று இரு தமிழ் மாணவர்கள் தாக்குதல்களுககு உள்ளான நிலையில் திருகோணமலை பொது …

  17. சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு சிறிலங்கா கட்டுப்பட வேண்டும் சிறிலங்காவில் போரின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை பரிசீலனை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது. 2008 க்குப் பிறகு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட பரிசீலனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை ஒட்டுமொத்தமாக 46 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே சமர்பித்திருந்தன. ஐ நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் நிலைமைகளை ஆய்வு செய்யும் பணி நான்கு ஆண்டுக…

  18. இலங்கைத் தீவில் �ஈழத்தமிழர் மீது நடந்தேறுவது ஒர் இன அழிப்பே� என பிரான்சின் முக்கியதொரு உயர்கல்வி மாணவ சமூகத்தின் கருத்துருவாக்கச் சிந்தனை மையமொன்று கருத்தினை வெளியிட்டுள்ளது. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை நோக்குவதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. பிரென்சு தேசத்தின் உள்ளக விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பில் பிரான்சின் அரச மற்றும் அரசியல் உயர்மட்டங்களுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி வருகின்ற உயர்கல்வியாளர்களை பிரதிநிதிகளாக் கொண்ட கருத்துருவாக்கச் சிந்தனைமை மையமொன்று கடந்த சனிக்கிழமை பிரென்சு பாராளுமன்ற வளாகக் கூடமொன்றில் கருத்தரங்கொன்றினை நடாத்தியிருந்தது. சர்வதேச விவகாரம் தொடர்…

    • 3 replies
    • 1.2k views
  19. சர்வதேச தண்டனைத் தடைகள்! இலங்கை தேயிலையின் ஏற்றுமதியில் பாதிப்பு ஈரான் மீது விதிக்கபட்டுள்ள சர்வதேச தண்டனைத் தடைகள் இலங்கை தேயிலையின் ஏற்றுமதி விலையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக இலங்கையின் தேயிலை வர்த்தகர்கள் கூறுகின்றனர். இலங்கையிடம் இருந்து மிக அதிகமாக தேயிலை வாங்கும் நாடுகளில் ஒன்று ஈரான் ஆகும். ரானுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி தொழிலில் தற்போது நிலவரம் சரியில்லை என்று இவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் இந்த வாரம் நடந்த தேயிலை ஏல விற்பனையில், சிலோன் டீயில் இரானியர்கள் காட்டிவந்த ஆர்வம் கடுமையான சரிவைக் கண்டுள்ளது என்று இலங்கையில் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபடும் தொழில் குழுமங்களில் ஒன்றான ஜான் கீல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கூறி…

    • 2 replies
    • 682 views
  20. சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆட்லறிகள் புலிகளுக்கு எப்படி கிடைத்தன? :அதிர்ச்சியில் இலங்கை இராணுவம்! [Thursday, 2012-11-01 08:07:16] முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகள் சீனத் தயாரிப்புக்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.நீலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் நேற்று மீட்டுள்ளனர்.இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டத…

  21. நாடுகடத்தப்படவிருந்த தமிழ் அகதி துணிகரமான போராட்டத்தின் பலனாக தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டார். சிறீலங்கா | ADMIN | NOVEMBER 1, 2012 AT 10:58 நான்கு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய தமிழ் புகலிடக் கோரிக்கையாளனை சிறிலங்காவுக்கு நாடுகடத்துவதை எதிர்த்து செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிமுதல் புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நோக்கம் வெற்றிபெறும்வரை அவரைத் தடுத்துவைத்திருந்த Maribyrnong தடுப்புமுகாமின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவரை புதன்கிழமை சிறிலங்காவுக்கு நாடுகடத்தும் அறிவித்தலை அவுஸ்திரேலியக் குடிவரவு / குடியகல்வுத் திணைக்களம் கடந்த கிழமை அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்த இடைக்காலத் தடைமீதான வழக்கு செவ்வாயக்கிழமை மாலை 6.30 அளவி…

  22. [size=3][size=4]இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் குர்சித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசை நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியா கரிசனை கொண்டுள்ள சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு விரைவாக அரசியல்தீர்வு காணும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. அதேவேளை, போரினால், இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இன்…

  23. [size=3][size=4]மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமில்லை என்று ஜெனிவாவைத் தளமாகக் கொண்டு செயற்படும், சட்ட விவகாரங்களைக் கண்காணிக்கும் மனிதஉரிமை அமைப்பான அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது. உலகில் முக்கியமான 60 நீதியாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள 150 பக்க அறிக்கையில், சிறிலங்காவில் நீதிச்சேவை மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும், நீதிச் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரதானமான மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியோருக்கு நீதி கிடைப்பதில்லை, குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படு…

  24. [size=4][/size] [size=4]யாழ் பல்கலைக்கழக சூழலினைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்லா முடியாத சூழ்நிலை தற்போது நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. காலை வேளைகளில் மாணவிகள் தமது கல்விச் செயற்பாடுகளுக்கு வருகை தரும் போது குறிப்பிட்ட சில சந்திகளில் கூடி நிற்கும் இளைஞர்கள் தீய வார்த்தைகளால் பேசுவதும் அவர்கள் செல்லும் போது பின்னால் வந்து இடித்துவிட்டு செல்லும் செயற்ப்பாடுகளுகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது. இதேவேளை மாலை 5 மணிக்கு பின்னர் குறிப்பிட்ட சில சந்திகளான தபாற்பொட்டிச் சந்தி,பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு முன்னால் உள்ள சந்தி மற்றும் கலட்டிச் சந்தி போன்ற பகுதிகளில் கூ…

  25. [size=4]வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் அறங்காவல் குழுவும் இணைந்து நடத்திய பண்டாரவன்னியன் நினைவு தினம் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கருகிலும் நகரசபை கலாசார மண்டபத்திலும் இடம்பெற்றது. நகரசபை தலைவர் ஐ.கனகையா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை மாலை அணிவித்தனர். இதனைதொடர்ந்து நகரசபை மண்டபத்தில் 'பண்டாரவன்னியனின் வரலாற்று பார்வை' என்னும் தலைப்பிலான உரை அருணா செல்லத்துரையினால் வழங்கப்பட்டதுடன் பிரமுகர்களின் உரைகளும் இடம்பெறறன.[/size] http://tamilmirror.lk/--main/51638-2012-10-31-08-19-17.html

    • 6 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.