ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
ஒஸ்லோவில் 3 ஆவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதம்: கொழும்பிலும் ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு By J.Stephan 2012-10-02 18:29:03 நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சிறுவர் நல காப்பகத்தினால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ள்ளும் வகையிலேயே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த இரு தாய்மார் குதித்துள்ளனர். ஒஸ்லோவில் அமைந்துள்ள பிரம்மாண்டமானதும் முதற்றரமானதுமான டொம் என்ற கிறிஸ்தவ தேவாலய்த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி உண்ணாவி…
-
- 0 replies
- 426 views
-
-
கீரிமலையில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் By Priyarasa 2012-10-03 11:18:26 கீரிமலை பிரதேசம் புனித பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மதுப்பிரியர்களின் அட்டகாசகங்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு அருகில் காணப்படும் சிதைவடைந்த சிறாப்பர் மடத்தில் இந்து மகா சபையின் சிவ மங்கையர்கள் சிரமதானப் பணியை மேற்கொண்ட போது அதிக எண்ணிக்கையான பியர் பேணிகள் மதுபானப் போத்தல்களை மீட்டு அகற்றியுள்ளார்கள். இந்த புனித பிரதேசத்தில் பொலிஸாரும் கடற்படையினரும் காவல் கடமையில் இருந்தும் மதுபிரியர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவ்விடயம் குறித்து பாதுகாப்புத் தரப்ப…
-
- 0 replies
- 481 views
-
-
கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் நோயாளர்களைப் பார்வையிடத் தினந்தோறும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையுள்ள மட்டக்களப்பு, கல்முனை, பொத்துவில், நித்தவூர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, திருக்கோவில் போன்ற தூர இடங்களிலிருந்து வரும் பார்வையாளர்களை வைத்தியசாலையில் அவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடத்துக்குச் செல்வதற்கு கடந்த சில வாரங்களாக அனுமதிக்கவில்லை என பார்வையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். காலங்காலமாக தங்குமிடத்தில் இருக்க அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் கடந்த சில மாதங்களாக வெளிநோயாளர் பிரிவுக்கு அருகில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர்கள் வைத்தியசாலைக்கு வெ…
-
- 0 replies
- 339 views
-
-
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க கோரி வாகனப் பேரணி: சரத்குமார் http://tamil.oneindia.in/news/2012/10/03/tamilnadu-sarath-kumar-hold-vehicle-rally-kudankulam-162495.html இந்த சர்ச்சைக்குரிய அணு உலை, தமிழீழத்தில் இருந்து 2௦ கி மீ மட்டுமே. ஆபத்து நிகழுமாயின் தென் தமிழகம் மட்டும்மல்ல, பாதி தமிழீமும் ஆபத்துக்குள்ளாகும்.
-
- 1 reply
- 577 views
-
-
எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்: ரணில் எச்சரிக்கை! [Wednesday, 2012-10-03 09:02:52] எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார். இலங்கை மக்கள் அனைவரும் இன்று கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் டீ. எஸ். பொன்சேகா மாவத்தையில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் வாசஸ்தலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்ற…
-
- 0 replies
- 359 views
-
-
பலஸ்தீனத்தை புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் - கேட்பது இலங்கை பலஸ்தீனத்த புதிய சுதந்திர தேசமாக அங்கீகரிக்க வேண்டுமென உலக நாடுகளிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஐநா பொதுச் சபையின் 67வது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். காலம் கடத்தாது பலஸ்தீனத்தை உலக நாடுகள் புதிய சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். இதன் மூலம் பலஸ்தீனத்தின் அவலங்களுக்கு உலக நாட்டுத் தலைவர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமெனவும் அந்த நாட்டின் மக்களின் உரிமைகளுக்காக இலங்கை தொடர்ந்தும் குரல் கொடுக்குமெனவும் பாலித கொஹண குறிப்பிட்டுள்ளார். 03 அக்டோபர…
-
- 0 replies
- 355 views
-
-
சென்னையில் இலங்கை அகதிகள் முகாமில் பெண் தீயில் கருகி சாவு சிறீலங்கா | ADMIN | OCTOBER 3, 2012 AT 10:16 சென்னை புழல் காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் இளம் குடும்பப் பெண்ணெருவர் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 21 வயதான கஜேந்திரன் ரம்யா என்ற இளம் குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சமையல் செய்வதற்காக மண்எண்ணெய் அடுப்பை பற்றவைத்த போது ரம்யா மீது தீ பரவியதாகவும் தீயில் கருகிய அவரை மீட்டு, மாதவரம் அருகே உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளை அங்கு அவர் சிகிச்சை பயனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இறந்த ரம்யாவின் உறவினர்கள், வைத்தியசாலையில் …
-
- 0 replies
- 303 views
-
-
[size=4]மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதொழிக்கும் சர்ச்சைக்குரிய 'திவிநெகும' சட்டமூலம் கிழக்குமாகாண சபையில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து வாக்களித்தமையால் இச்சட்டமூலம் 21-15 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர் தலைமையில் மாகாண சபை அமர்வுகள் ஆரம்பமாயின. இதனைத் தொடர்ந்து, மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலம் தொடர்பாக இன்று பகல் முழுவதும் விவாதம் இடம்பெற்று மாலை 4.30 மணியளவில் வாக்களிப்பு இடம்பெற்று, ஆளும் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து வாக்களித்ததால் சட்டமூலத்துக்கு ஆதரவாக 21 வாக்குகள் கிடைத்தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் பிக்கு ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணொருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் றுவான்வெல்ல ஏ.சோபித்த தேரருக்கும் மேலும் மூவருக்குமே 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. றுவான்வெல்ல சோபித்த தேரர் என அழைக்கப்பட்ட சுனில் சாந்த என்பவர் இன்று கேகாலை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறை வைக்கப்பட்டுள்ளார். மந்திர தந்திர வேலைகளின் பெயரால் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த இவர், கேகாலை மாவட்டத்தில் றுவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். மந்திர தந்திர வேலைகளில் கை தேர்ந்தவர் என்று மிகுந்த பிரபலம் அடைந்து இருந்தார். பல மில்லியன் ரூபா வரை ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
[size=4][/size] [size=4]பொத்துவில், கொட்டுக்கல் முஸ்லிம் மையவாடி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மையவாடியை மீட்டுத் தருமாறு பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஷித் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size] [size=4]கொட்டுக்கல் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த மையவாடியில் படையினருக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசம் எனப் பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளதுடன், எல்லைக்கான வேலியும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டுள்ளமை முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்.[/size] [size=4]2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து ஒருமாதம் கடந்த நிலையில் மு…
-
- 1 reply
- 706 views
-
-
தமிழகத்துடனான உறவு எமக்கு தேவை இல்லை; ஏன் இந்தியா கூட சூழ்ச்சி செய்கின்றது அவர்களது உறவினையும் அறுத்தெறிய வேண்டும் என மஹிந்த அமைச்சரவையில் உள்ள அரசியல் கட்சி ஒன்று கூறியுள்ளது.தமிழ் நாட்டுடனான உறவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதை நாம் நிராகரிக்கின்றோம். தமிழகம் என்பது ஒரு நாடு அல்ல. எனவே, அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. இன்று இந்திய மத்திய அரசு தமிழகத்தைக் காரணங்காட்டி எமது நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றது. இந்தியாவின் சூழ்ச்சியை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். “டெசோ’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐ.நாவுக்குச் செல்வதன் பின்னணியிலும் இந்திய மத்திய அரசுதான் இரகசியமாகச் செயற்பட்டு வருகின்றது. தி.ம…
-
- 0 replies
- 781 views
-
-
தாம் வாழ்ந்த காணிகளை தமக்கு வழங்குமாறு போராட்டம் நடத்தியதன் காரணமாகவே தமிழ் மக்களை காடுகளில் கைவிட்டு அரசாங்கம் வஞ்சம் தீர்த்துக் கொண்டுள்ளது ௭ன்று நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சாட்டினார். வட பகுதி தமிழ் மக்களின் இந்த அவல நிலை தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கைகள் ௭டுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில், மெனிக்பாம் அகதி முகாம் மூடப்பட்டு இலங்கையில் அகதி முகாம்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கான நாடகத்தை அரங்கேற்றியது. ஆனால் முகாமில் வாழ்ந்த வட பகுதி தமிழ் மக்க…
-
- 0 replies
- 793 views
-
-
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட ஒரு சில பாடசாலைகளில் இந்து மாணவர்கள் தமது சமய சின்னங்களை அணிந்து செல்வதற்க்கு பாடசாலை நிர்வாகங்கள் தடை விதித்துள்ளமை தொடர்பில் இந்து மாகாசபை கவலை வெறியிட்டுள்ளது. இது மாணவர்களினது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதுடன் சமய வழிபாட்டிற்க்கும் பங்கம் உண்டாக்கும் ஒரு செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ள இந்து மகாசபை இத்தகைய செயலகள் நிறுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற இந்து மகாசபையின் கலந்துரையாடலிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது. இவ் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, ஒவ்வொரு மனிதாகளுக்குத் தமது மத சுதந்திரத்தைப் பேணவும் பாதுகாக்கவும் அரசியல் யாப்பின் பிரச…
-
- 0 replies
- 710 views
-
-
[size=4]மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் கிராமத்திலுள்ள தனது வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி நேற்று திங்கட்கிழமை அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் திட்டமிட்ட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினரான கே.கருணாகரன் (ஜனா) தெரிவித்தார். தன்னையும் தனது குடும்பத்தவரையும் அச்சுறுத்துவதற்காகவே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'என்னுடைய வீட்டில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால்; தேடுதல் நடத்தவேண்டுமெனக்…
-
- 0 replies
- 611 views
-
-
இலங்கையில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு Human-Rights-Commission-of-Sri-Lanka-60-60 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக ஆவர்தன பரிசீலனையின் போது ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில், ‘இலங்கையில் மரண தண்டனையை நீக்க வேண்டும்’ என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில மாற்றங்களுடன் தகவல் பெறும் உரிமை சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வெண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகளின் நிலைமை பற்றி வெளிவிவகார அமைச்சும் தனியாக ஓர் அறிக்கையை தயாரித்துள்ளது. இவற்றைவிட, மாற்றுக…
-
- 2 replies
- 700 views
-
-
[size=4][/size] [size=4]வெளிநாடுகளில் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் எஞ்சிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை இல்லாதொழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size] [size=4]நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை சீர் குலைக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.[/size] [size=4]30 ஆண்டுகளாக நீடித்த யுத்தம் காரணமாக நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாரியளவிலான மனித உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்ததாகக் க…
-
- 2 replies
- 751 views
-
-
[size=3][size=1][size=4]மகாத்மா காந்தியின் 143 வயது ஜனன தினத்தை முன்னிட்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் காந்தி ஜனன தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாப்பட்டன.[/size][/size] [size=1][size=4]யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று காலை 9.30 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.[/size][/size] [size=1][size=4]தொடர்ந்து அவ்விடத்தின் கூடிய யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் நினைவு அஞ்சலி செலுத்தினர்.[/size][/size] [size=1][size=4]இந் நிகழ்வுகளில் அகில இலங்கை காந்தி சேவா சங்கதின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்த…
-
- 1 reply
- 702 views
-
-
வெட்டிச் சாய்க்கப்பட்டது 300 வயதான இலுப்பை அச்சுவேலியில் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த இலுப்பை மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தொண்டமானாறு வீதி அச்சுவேலி பருத்தித்துறை வீதிச் சந்தியில் வீதியோரத்தில் நின்ற மிகப் பெரிய இலுப்பை மரமே இவ்வாறு தறித்து வீழ்த்தப்பட்டுள்ளது. 300 வருடங்களுக்கு மேற்பட்ட வயது கொண்ட அந்த மரம் நின்றமையால் இலுப்பையடிச்சந்தி என இந்தப் பகுதி அழைக்கப்பட்டு வந்தது. இலுப்பை மரத்தைத் தறித்து வீழ்த்தும் போது அதற்குக் கீழ் இருந்த சைவக் கோயிலும் சேதமடைந்துள்ளது. ஆனால் இலுப்பைமரத்துக்கு அருகில் நின்ற புதிய அரசமரம் ஒன்று பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றது. வீதி அபிவிருத்தியின் பெயரால் வீதியோரங்களில் நிற்கும் பெர…
-
- 7 replies
- 2k views
-
-
[size=4]தமிழ் நாட்டின் ௭திர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ௭திர்ப்புகளுக்கு அஞ்சி, இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை கைவிட முடியாது. வரும் டிசம்பர் மாதத்தில் விசேட படையணியை சார்ந்த 45 உயரதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர் ௭ன்று இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.[/size] [size=4]இலங்கை இராணுவத்தின் 63 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் 143 படையணிகளைச் சார்ந்த கொடிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராணுவ தளபதி மேற்கண்டவாறு கூறினார்.[/size] [size=4]இவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,[/size] [size=4]உள்நாட்டு யுத்தம் ம…
-
- 0 replies
- 519 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கையில் தாமதமின்றி உடனடியாக அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் வைத்து, இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஷை சந்தித்த வேளையில் அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.[/size] [size=4]நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கையின் யுத்ததுக்கு பின்னரான நிலைமைகள் குறித்து ஜீ.எல்.பீரிஷ் பான் கீ மூனிடம் விளக்கமளித்துள்ளார்.இதன் போது ,பான் கீ மூன், இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு மேற்கொள்கின்ற முன்னெடுப்புகள் தொடர்பில் அ…
-
- 0 replies
- 355 views
-
-
இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்தை வென்ற சந்தோசத்தில் நாட்டு மக்கள் திளைத்திருந்த ஆரவாரத்தை பயன்படுத்துக்கொண்டு இந்த அரசாங்கம், இரவோடு இரவாக டீசல் விலையை உயர்த்தி விட்டது. இனி, அடுத்து நாம் இந்தியாவை வென்றால், பெட்ரோல் விலையையும், உலக கிண்ணத்தை வென்றால், மண்ணெண்ணெய், பால்மா, காஸ், சீனி விலைகளையும் இந்த அரசாங்கம் உயர்த்தலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். டீசல் விலையுயர்வு தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, கிரிக்கட் போட்டியில் பெற்ற வெற்றி ஆரவாரத்தில் மக்கள் மூழ்கி இருக்கும் போது இந்த அரசாங்கம் சந்தடி சாக்கில் இந்த விலையுயர்வுகளை செய்கிறது. இது தேரோட்டங்களின் போது சங்கிலி அறுப்பதை போன்ற திருட்டு செயலாகும். கொழும்…
-
- 1 reply
- 764 views
-
-
டெசோ தீர்மானம் ஐ.நாவுக்கு இந்திய அரசு பின்னணியில் டில்லியை உடன் கைகழுவ வேண்டும் என்கிறது தேசப்பற்று இயக்கம் "டெசோ'மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்வதன் பின்னணியில் இந்திய மத்திய அரசே இரகசியமாகச் செயற்பட்டு வருகின்றது. இந்த உண்மையைக் காலப் போக்கில் இலங்கை அரசு உணர்ந்துகொள்ளும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் இந்தியாவை இலங்கை உடன் கைகழுவ வேண்டும். இல்லையேல், நாட்டின் எதிர்காலம் சூனியமாகவே அமையும் என்றும் அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. எதிர்வரும் 06ஆம் திகதி ஐ.நாவிடம் கையளிக்க வு…
-
- 1 reply
- 431 views
-
-
கடந்த மாதத்தில் மட்டும் அவுஸ்ரேலியா நோக்கி சென்ற 695 பேர் கடற்படையினரிடம் சிக்கினர் கடந்த மாதத்தில் மட்டும் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த 695 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் வடக்குக் கிழக்கு பகுதிகளான வவுனியா மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி பகுதியினர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://onlineuthayan.com/News_More.php?id=495051481202295431
-
- 0 replies
- 373 views
-
-
பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தாம் பங்கேற்று அதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பது தொடர்பில் இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே பாராளும்னறத் தெரிவுக் குழுவில் அங்கம் பெற முடியும் என்றும் அது கூறியுள்ளது. தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனை மேற்கோள் காட்டி ” கொழும்பு பேஜ்” இணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து நாம் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தெரிவித்துள்ளோம். அத்துடன இலங்கைக்கு முன்னர் வருகை தந்திருந்த இந்திய பாராளுமன்ற அனைத்துக் கட்சி எம்.பிக்களிடமும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம…
-
- 12 replies
- 906 views
- 1 follower
-
-
சீக்கியர்களின் சிறுநீரை குடிக்க வேண்டுமா தமிழர்கள்..? அப்படியெல்லாம் கூடாது என்கிறது ஈழதேசம்..! பொற்கோவிலில் தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ தளபதிக்கு லண்டனில் கத்திக் குத்து..? இந்திரா காந்தி காலத்தில் ஆபரேசன் 'புளு ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கையில் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். சீக்கியர்களின் தானைத் தலைவர் பிந்தரன் வால கொல்லப்பட்டார். பிந்தரன் வால என்ற சீக்கியர்களின் முன் மாதிரியை இங்குள்ள தறுதலைகள் தீவிரவாதி பயங்கரவாதி என்று இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் சீக்கிய நண்பர் ஒருவர். ஆமாம்...அப்படியென்ன செய்தார்..? பிந்தரன் வாலே அவர்கள். சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டார். அதனால் அவர் தீவிரவாதியாம். பயங்கரவாதியாம். இந்திய பார்ப்பனிய ஆட்ச…
-
- 1 reply
- 1.5k views
-